என் மலர்
நீங்கள் தேடியது "Army jawan"
- சுங்கச்சாவடியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், ராணுவ வீரர் காரில் இருந்து இறங்கிய விசாரித்துள்ளார்.
- அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் ராணுவ வீரர் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருபவர் கபில் கவாத். இவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீநகரில் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். விடுமுறை முடிந்த நிலையில் டெல்லிக்கு வாகனம் மூலம் சென்று அங்கிருந்து ஸ்ரீநகருக்கு விமானத்தில் செல்ல முடிவு செய்தார்.
தனது உறவினர் உடன் காரில் சென்றபோது, மீரட்டில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்கள் அதிகமாக நின்றுள்ளது. விமான நிலையத்திற்கு செல்ல தாமதம் ஏற்பட்டதால் கபில் கவாத் கீழே இறங்கி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேசியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அவரை தாக்கினர். அத்துடன் அங்கிருந்து ஒரு கம்பியில் கட்டிவைத்து கடுமையாக அடித்து உதைத்தனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலா ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் உள்ள ராணுவ வீரர்களில் ஒருவர் இன்று அதிகாலை துப்பாக்கியால் தனது இரு சக ராணுவ நண்பர்களை சுட்டுக்கொலை செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டு அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்த ராணுவ வீரரும் தம்மை தாமே சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இறந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகவும், ராணுவ வீரரின் இந்த நடவடிக்கைக்கான காரணம் தொடர்பாகவும் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #HimachalPradesh #ArmyJawanSuicide
காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அக்னூர் என்ற இடத்தில், எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டதில், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு அந்த பகுதியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக உதாம்பூரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எல்லைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர்கள் படுகாயம் அடைவது இது 2-வது தடவை ஆகும். கடந்த 7-ந் தேதி இதே மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் இந்திய வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். #tamilnews
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் நீரஜ் குமார் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான சலாரி பாதல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அவரது வீட்டின் அருகே நீரஜ் குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறுகையில், ராணுவ அதிகாரியின் மர்ம மரணம் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர் நீரஜ் குமாரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.
சமீபத்தில் இதேபோல் விடுமுறைக்குச் சென்ற ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.#ArmyManDead

அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இது குறித்து பாதுகாப்பு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “பனார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்த முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என கூறினார். #JKEncounter






