search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்கவுண்டர்"

    நடிகை கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்பு படையினர் வேட்டையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பட்கம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிரபல டி.வி. நடிகை அம்ரீன்பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    பாதுகாப்பு படையினர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் நடிகையை சுட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த 2 பயங்கரவாதிகளையும் கண்டுபிடிக்க நேற்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது 2 பயங்கரவாதிகளும் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா என்ற பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். நேற்று மாலை முதல் அந்த 2 பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    நீண்ட துப்பாக்கி சண்டைக்கு பிறகு அந்த 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் தான் டி.வி. நடிகையை சுட்டுக்கொன்றது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நடிகை கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்பு படையினர் வேட்டையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று ஸ்ரீநகர் அருகே சவுரா என்ற இடத்திலும் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை முற்றுகையிட்டு 2 பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர்.

    காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் நடந்த சண்டையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 பேர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
    என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏகே47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    பாரமுல்லா:

    ஐம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நஜிபத் பகுதியில் உள்ளூர் போலீசார், பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். 

    பாதுகாப்பு படையின நடத்திய பதில் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அலி பாய், ஹனீப் பாய் மற்றும் ஷா வாலி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. 

    இந்த சண்டையில் முதாசிர் அகமது ஷேக் என்ற காவலரும் உயிரிழந்தார்.  அவரது இழப்பால் வேதனை அடைந்தாலும் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றது மிகப்பெரிய வெற்றி என்று காஷ்மீர் மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல்  விஜய் குமார் தெரிவித்தார். 

    மூன்று பயங்கரவாதிகளும் பெரிய தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் ஸ்ரீநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாகவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகள், ஐந்து சீன கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×