search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் நடிகையை சுட்டுகொன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    X
    காஷ்மீரில் நடிகையை சுட்டுகொன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    காஷ்மீரில் நடிகையை சுட்டுகொன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    நடிகை கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்பு படையினர் வேட்டையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பட்கம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிரபல டி.வி. நடிகை அம்ரீன்பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    பாதுகாப்பு படையினர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் நடிகையை சுட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த 2 பயங்கரவாதிகளையும் கண்டுபிடிக்க நேற்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது 2 பயங்கரவாதிகளும் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா என்ற பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். நேற்று மாலை முதல் அந்த 2 பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    நீண்ட துப்பாக்கி சண்டைக்கு பிறகு அந்த 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் தான் டி.வி. நடிகையை சுட்டுக்கொன்றது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நடிகை கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்பு படையினர் வேட்டையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று ஸ்ரீநகர் அருகே சவுரா என்ற இடத்திலும் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை முற்றுகையிட்டு 2 பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர்.

    காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் நடந்த சண்டையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 பேர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
    Next Story
    ×