search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naxal killed"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு நக்சலைட்டை சுட்டுக் கொன்றனர். #Encounter
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்தும் ஆர்ச்சா காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலில் ஒரு நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டான் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். #Encounter
    ஜார்க்கண்டில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் இன்று சுட்டுக் கொல்லப்பட்டான். #NaxalKilled
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ளூர் போலீசாரும், மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் டலா டா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிட இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய டலா டா தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

    நக்சலைட்களின் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #NaxalKilled
    சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைக்கு தலா ரூ.8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட இரு நக்சலைட்களை சிறப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். #naxalkilled
    ராய்ப்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின் மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டம், பலேபேடா காட்டுப் பகுதிக்குள் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பலேபேடா, படாபேன்டா, கங்காலி, பார்பேடா ஆகிய காட்டுப் பகுதிகளிலும் அருகாமையில் உள்ள சில கிராமங்களிலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

    நக்சல் ஒழிப்பு படையை சேர்ந்த நான்கு தனிப்பிரிவினர் கடந்த 2-ம் தேதியில் இருந்து அப்பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இன்று காலை சுமார் 6 மணியளவில் பலேபேடா காட்டுப்பகுதியில் தனிப்படையினர் மீது சுமார் 30 நக்சலைட்கள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடி தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தலைக்கு தலா ரூ.8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட இரு நக்சலைட்களை சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள் வைத்திருந்த நவீனரக வெளிநாட்டு தயாரிப்பான தானியங்கி துப்பாக்கி உள்பட 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கொல்லப்பட்டவர்களில் ஒருவன் நாராயண்பூர் மாவட்ட நக்சல் பிரிவின் கமாண்டர் என தெரியவந்துள்ளது. #tamilnews #naxalkilled
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற சண்டையில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள சின்ஜோ பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் மாநில போலீசை சேர்ந்த சிறப்புப்படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது. அதோடு மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு சிறப்புப்படை போலீசார் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. கார்வா மற்றும் லேட்கார் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பாதுகாப்பு படையினர், கோப்ரா படையுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

    இந்த சண்டையில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து அங்கு சண்டை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×