search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிரா - பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பெண் நக்சலைட்கள் சுட்டுக்கொலை
    X

    மகாராஷ்டிரா - பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பெண் நக்சலைட்கள் சுட்டுக்கொலை

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி பகுதியில் பாதுகாப்பு படை இன்று நடத்திய என்கவுண்டரில் 2 பெண் நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #naxalkilled
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் பாம்ரகாட் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுனட்ரில் 2 பெண் நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    #naxalkilled
    Next Story
    ×