search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pulwama"

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர்.



    இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் சந்தீப் வீர மரணம் அடைந்தார். மேலும் ஒருவர் இறந்துள்ளார் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் காயமடைந்தார். #JammuKashmir #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

    இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் பலியானார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir #MilitantsAttack
    தெற்கு காஷ்மீரில் உள்ள ரெஷிபோரா பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். #JammuKashmir #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம், ரெஷிபோரா பகுதியில் வசித்து வந்தவர் மோஷின் வானி. இன்று தன்து வீட்டின் அருகே மோஷின் வானி நின்று கொண்டிருந்தார். அப்போது, துப்பாக்கிகளுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MilitantsAttack
    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பிற்பகல் ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Pulwama #Armymanshotdead
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் தெற்கில் அமைந்துள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லீனா கிராமத்தில் வசித்து வருபவர் மொகமது யூசுப் நாயக். இவரது மகன் ஆஷிக் உசைன். ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், இன்று மதியம் ஆஷிக் உசைனை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    தகவலறிந்து ராணுவமும், மாநில போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் ஆஷிக் உசைன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



    அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா என ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவ வீரரை அவரது வீட்டின் அருகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Pulwama #Armymanshotdead
    பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. #IshaFoundation #PulwamaAttack
    சென்னை

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 14-ம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த அவர்களின் குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து, உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வகையில், உயிர் தியாகம் செய்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்ப நலனுக்காக ஈஷா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளது.

    இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களின் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து செயலாற்றி வருவதாகவும், குறிப்பாக, பல்வேறு படை பிரிவுகளில் உள்ள வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு சத்குருவால் வடிவகைப்பட்ட சிறப்பு யோகா பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    தேசத்தை பாதுகாக்கும் பணியில் தைரியம் மற்றும் தியாக உணர்வுடன் ஈடுபட்டு வரும் இளம் வீரர், வீராங்கணைகள் குறித்து சத்குரு கூறும்போது, “நம்முடைய அனைத்து செயல்கள் மற்றும் சாதனைகளுக்கு, தைரியமிக்க நம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் சேவையே அடித்தளமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். #IshaFoundation #PulwamaAttack

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக சுடத் தொடங்கினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #PulwamaEncounter
    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகரில் உள்ள குல்ஷன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினரும் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.



    இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார் என பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. #PulwamaEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறப்பு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் ராஜ்போரா பகுதியில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பணியில் இருந்த போலீசார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சமீர் அகமது மிர் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார். சக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனை  கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.  
     
    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #MilitantsAttack
    காஷ்மீரில் குண்டு வெடித்ததில் சிறுவன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தான். #Pulwama #Bomb #BoyKilled
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரிப் அகமது (வயது 10). இவன் அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, தரையில் வெடிக்காமல் கிடந்த குண்டு ஒன்றை ஏதோ பொருள் என்று நினைத்து கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த குண்டு வெடித்ததில் ஆரிப் அகமது படுகாயம் அடைந்தான்.

    இதைத்தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுவன், அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தான். 
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் உள்ள அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #PulwamaEncounter
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படைவீரர் ஒருவர் பலியானார். #Pulwama #MilitantsSAttack #CRPFcamp
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காகபோரா பகுதியில் சிஆர்பிஎப் முகாம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்த சிஆர்பிஎப் முகாமுக்குள் இன்று மாலை நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். தங்களிடம் இருந்த கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் படைவீரர் ஒருவர் பலியானார். மேலும், இரு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #Pulwama #MilitantsSAttack #CRPFcamp
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். #Pulwama #HizbulMilitants
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் இருவரும் ஜன் மொகமது ஷேக் மற்றும் நசிர் உல் இஸ்லாம் என்ற ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 



    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
    #Pulwama #HizbulMilitants
    ×