என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் பலி"

    • நேற்று இரவு சிறுவன் சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
    • சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.

    ஈரோடு:

    ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகன் இருந்தான்.

    நேற்று இரவு சிறுவன் சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் சாய்சரண் மூச்சு விட சிரமப்பட்டு திணறினான்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாய்சரணின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவி உடன் சிறுவனை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவனின் மூச்சு குழாயில் வாழைப்பழம் அடைத்திருப்பதாக கூறினார். மேலும் சிறுவனின் நிலைமை மோசமாக உள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். இதை அடுத்து சிறுவனை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். அதன் பின்னர் சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நந்தலால். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு மூன்றரை வயது சிறுவன் சத்யா.

    இவர்கள் மாசி நாயக்கன பள்ளி கிராமத்தில் ராம மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பசுமை குடிலில் அங்கேயே தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி சிறுவன் விளையாடி கொண்டிருந்த பொழுது தெருநாய் முகம், கை ஆகிய பகுதிகளில் அவனை கடித்து குதறியதால் காயங்கள் ஏற்பட்டது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை யில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை கழிவறைக்கு செல்லும் போது சிறுவன் மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு மருத்து வமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். 21 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

    கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, தங்களது ஊரில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தீவலூரை சேர்ந்தவர் பொன்னரசன். இவரது மகன் முத்தமிழ் நிலவன் (வயது12). இந்த ஊரில் சிலருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்தபோது சிறுவன் முத்தமிழ் நிலவன், அவனது தாய் முத்தழகி, 2 சகோதரிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது தெரிய வந்தது.

    இதில் சிறுவன் முத்தமிழ் நிலவன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அவனது தாய், அக்காள் ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, தங்களது ஊரில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இங்குள்ள குடிநீர் தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    எனவே தீவலூர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • பெற்றோர் மகனை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • அஸ்வித் ரெட்டியின் தலையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது ரத்தக்கசிவு இருந்தது தெரிய வந்தது.

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம், ரங்காராவ் பள்ளியை சேர்ந்தவர் சீனிவாஸ் ரெட்டி. இவரது மகன் அஸ்வித் ரெட்டி (வயது 9). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது ஒரு சிறுவன் வீசிய பந்து அஸ்வித் ரெட்டியின் தலையில் பலமாக தாக்கியது.

    அஸ்வித் ரெட்டி மறுநாள் பள்ளிக்கு சென்றார். அப்போது அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மகனை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அஸ்வித் ரெட்டியின் தலையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது ரத்தக்கசிவு இருந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அஸ்வித் ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

    • திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தன.
    • அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பிரம்ம குண்டம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்காந்தி அவரது மகன் தர்ஷன் (வயது 7). சஞ்சீவ்காந்தியின் வீட்டின் அருகே நடந்த திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தன. அங்கு தர்ஷன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவன் பரிதாபமாக இறந்தான். இதை அறிந்து ஓடி வந்த அவனது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து வடபொ ன்பரப்பி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருவரும் மோட்டார் சைக்கிளில் முகல்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
    • அவ்வழியாக வந்த ஒரு டிராக்டர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேம்குமார் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி

    ஓசூர் அருகேயுள்ள குன்னகானபள்ளி பகுதியை சேர்ந்த ராஜப்பா என்பவரது மகன் பிரேம்குமார் (வயது 15).அதே பகுதியை சேர்ந்த முனிரெட்டி என்பவரது மகன் ராகவேந்திரா (18).

    இருவரும் மோட்டார் சைக்கிளில் முகல்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேம்குமார் உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த ராகவேந்திரா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிரனேசுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
    • வீட்டில் இருந்த சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.

    கோவை,

    கோவை சுந்தராபுரம் குறிச்சி ஆண்டாள் தோட்டத்தை சேர்ந்தவர் மனோவா. ஆட்டோ டிரைவர். இவரது மகன் பிரனேஷ் (வயது 12). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரனேஷ் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மோதி சிறுவன் பலியானார்.
    • பொதுமக்கள் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர் கோட்டை அருகே உள்ள ஏப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் வசந்த் (வயது 4). இவர் வீட்டு ஓரத்தில் விளையாடிக் கொண்டி ருந்த போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டர் குழந்தை மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். சம்பவம் குறித்து பொதுமக்கள் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பெயரில் வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் உருண்டது.
    • விபத்தில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.

    நியூயார்க்:

    கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஆரவ் முதல்யா, 2 வயதான இவன் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். சம்பவத்தன்று இவன் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் நேவாடா என்ற மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான பாலைவன பகுதிக்கு சென்றார்.

    தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் உருண்டது. இந்த விபத்தில் சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் இறந்தான். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • விடுதியில் இருந்த காம்பவுண்டின் இரும்பு கேட் கண்ணிமைக்கும் நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த நித்திஷ் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது.
    • விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் குடும்பத்தினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

    பெரியபாளையம்:

    சென்னை அயனாவரத்தில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆவார். இவரது குடும்பம் மற்றும் உறவினர்களின் குடும்பம் என மொத்தம் நான்கு குடும்பத்தினர் சனிக்கிழமை மாலை பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த வந்தனர். இவர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தங்கினர். ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

    அன்று மாலை அவர்கள் தங்கியிருந்த விடுதியின் காம்பவுண்ட் சுவர் அருகே ரமேஷ் குடும்பத்தைச்சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த விடுதியில் இருந்த காம்பவுண்டின் இரும்பு கேட் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவரான நித்திஷ் (10) என்பவன் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் நித்திஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் குடும்பத்தினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். திங்கட்கிழமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சாலை ரமேஷ் குடும்பத்தினர் நித்திஷ் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் தனியார் விடுதியை குத்தகைக்கு எடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் பெரியப்பாளையம், அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜசேகர் (45) என்பவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து செய்தனர். மேலும் அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    • மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்த பிள்ளையை பறிகொடுத்து விட்டோமே என்ற பெற்றோரின் கதறல் கண்போர் கண்களை குளமாக்கியது.
    • குடும்பத்துடன் ஜல்லிக்கட்டு பார்க்க செல்லும் பெற்றோர் குழந்தைகளை தங்களது கவனத்திலிருந்து தவறவிட்டால் என்ன மாதிரியான துயரங்கள் நேரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அதியமான் தலைமை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 2-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடங்கம் தனியார் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறி பாய்ந்தபடி வந்தன. காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். பல காளைகள் தங்களை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களுக்கு சவால் விட்டு பிடிபடாமல் அசுர வேகத்தில் ஓடின.

    காளைகள் முட்டியதில் 68 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 10 பேர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்நிலையில் பாலக்கோடு திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூக்கடை வியாபாரி சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் ஜல்லிக்கட்டை பார்க்க வந்துள்ளார்.

    அவரது மகன் கோகுல் (வயது 14) பார்வையாளர் கேலரியில் நின்று காளைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் காளைகளை அருகில் சென்று பார்க்கும் ஆர்வத்தில் பார்வையாளர் கேலரியிலிருந்து இறங்கிய கோகுல் காளைகளை வாகனத்தில் ஏற்றும் இடத்திற்கு சென்று வேடிக்கை பார்த்தார்.

    அப்போது திடீரென ஒரு மாடு மிரண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கோகுலை முட்டியது. இதில் வயிற்றில் கொம்பு குத்தி படுகாயம் அடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவனது உடலை பார்த்து தந்தை சீனிவாசன், தாய் கவுரம்மாள் ஆகியோர் கதறி அழுதனர். மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்த பிள்ளையை பறிகொடுத்து விட்டோமே என்ற அவர்களது கதறல் கண்போர் கண்களை குளமாக்கியது.

    இந்நிலையில் சிறுவனின் தந்தை சீனிவாசன் கூறுகையில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் கூட அங்கு இல்லை.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 1 மணி நேரம் தாமதமானதால் எனது மகனை இழந்துவிட்டேன். முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படாமல் இந்த போட்டி நடத்தப்பட்டதால் எனது மகன் உயிர் பறிபோனது என கூறினார்.

    இதையடுத்து கனத்த இதயத்துடன் சிறுவன் கோகுலின் கண்களை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.

    குடும்பத்துடன் ஜல்லிக்கட்டு பார்க்க செல்லும் பெற்றோர் குழந்தைகளை தங்களது கவனத்திலிருந்து தவறவிட்டால் என்ன மாதிரியான துயரங்கள் நேரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

    • 6 வயது சிறுவன் தண்ணீர் பிடிக்க தந்தையுடன் சென்றான்.
    • அப்போது செப்டிக் டேங்கில் தவறி விழுந்த சிறுவன் பலியானான்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35), லாரி டிரைவரான இவர் நேற்று மாலை 5 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் தனது 6 வயது மகனை அழைத்துக் கொண்டு வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் குழாயில் வீட்டிற்கு தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றார்.

    தந்தை மணிகண்டன் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் கவனம் செலுத்திய நிலையில், விளையாடிக் கொண்டிருந்த மகன் திடீரென காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்த குடிநீர் குழாய் அருகே மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கை பார்த்தபோது அதில் தவறி விழுந்து மயங்கிய நிலையில் கிடந்த தனது மகனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    தகவலறிந்த பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிநீர் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×