என் மலர்

    நீங்கள் தேடியது "Electric Shock"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்சாரம் தாக்கிய பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
    • போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை கே.கே. நகர் ராணி அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தி (47). இவர் நேற்று மாலை வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொாண்டிருந்தார்.

    அப்போது மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சுவிட்ச் ஆப் செய்ய சென்ற வசந்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் தாக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதை தொடர்ந்து கே.கே. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாகிருஷ்ணன்-வசந்தி தம்பதிக்கு யுவஸ்ரீ(20) என்ற மகளும், விக்னேஷ் (18) என்ற மகனும் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள்.
    • வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே மேலக்கோட்டை நான்கு வழிச்சாலை பகுதியில் மதுரை சுப்ரமணியபுரம் பகுதியைச் ராஜாசந்திரசே கர் என்பவருக்கு சொந்த மான புதிய பட்டாசு கடை அமைக்கும் பணி நடை பெற்று வந்தது.

    ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த முத்து சங்கையா, நல்லூரைச் சேர்ந்த முத்துக் குமார், மூவரசன் ஆகிய மூன்று பேரும் கடையின் அருகே சோலார் மின்வி ளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் வயரில் இரும்பு கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முத்து சங்கையா (வயது 35) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மற்ற இரண்டு பேரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீசார் இறந்த முத்துசங்கையா உட லைக் கைப்பற்றி திரு–மங்கலம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து திருமங்க லம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அதே போல் திருமங்கலம் தாலுகா போலம்பட்டி பகு தியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 35). இவருக்கு திருமணமாகி ராஜலெட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கண்டித்தே வன்பட்டி பகுதியில் மின்கம் பத்தில் ஏறி வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கிய தில் கீழே விழுந்தவர் மின் சார கம்பத்தின் கீழே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் வைக்கப்பட்டி ருந்த இரும்பு கம்பியில் தலை அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    உடலைக் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆதிமூலம் குளித்துவிட்டு மின்விசிறியை போடுவதற்காக சுவிட்சை போட்ட பொழுது மின்சாரம் தாக்கியது.
    • காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது58) கொத்தனார். இவர் தண்டையார்பேட்டை விநாயகபுரம் 9-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் 2 ஆண்டுகளாக மனைவி, மகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஆதிமூலம் குளித்துவிட்டு மின்விசிறியை போடுவதற்காக சுவிட்சை போட்ட பொழுது மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார். வீட்டில் இருந்த அவரது மகள் அவரை உடனடியாக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆதிமூலம் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இது பற்றி காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வளர்மதி தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாரில் குழாயை பொருத்தியுள்ளார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக திடீர் என வளர்மதியை மின்சாரம் தாக்கியது.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள புலியூர்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி வளர்மதி (வயது23). நேற்று வளர்மதி தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாரில் குழாயை பொருத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீர் என வளர்மதியை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுபற்றி அவரது தாயார் ஆவுடைதங்கம் (47) ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான வளர்மதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் சுரேஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின் கம்பி அறுந்து கொடி கம்பியில் விழுந்ததை தனம் கவனிக்காததால் அவரை மின்சாரம் தாக்கியது.
    • அவரது மகள் பிரியதர்ஷினி மற்றும் காந்தலட்சுமி ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு அருகே கரசூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வீரம்மாள் (வயது 43) கணவன்-மனைவி இருவரும் சேதராப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று வீரம்மாள் குடியிருக்கும் பகுதியில் வசிக்கும் தனம் என்பவர் கொடியில் துணி காயவைக்க முயன்றார்.அப்போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து கொடி கம்பியில் விழுந்ததை தனம் கவனிக்காததால் அவரை மின்சாரம் தாக்கியது.

    இதனால் தனம் அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு அவரது மகள் பிரியதர்ஷினி ஓடி வந்து தாயை காப்பாற்ற முயன்ற போது அவரையும் மின் சாரம் தாக்கியது.

    இதனை பார்த்த வீரம்மாள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த காந்தலட்சுமி ஆகியோர் பதறியடித்து ஓடிவந்த போது அவர்கள் மீது அறுந்து கிடந்த மின் கம்பி விழுந்ததில் அவர்களையும் மின்சாரம் தாக்கியது.

    இதில் படுகாயமடைந்த 4 பேரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தனம் அவரது மகள் பிரியதர்ஷினி மற்றும் காந்தலட்சுமி ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். வீரம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி  வீரம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது கணவர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு.
    • பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன்கள் முகேஷ், ரூபேஷ் (வயது15). இவர்களில் ரூபேஷ் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை ரூபேஷ், வீட்டின் அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து இருந்தது.

    இதனை அறியாமல் ரூபேஷ் மின்கம்பத்தை தொட்டார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே ரூபேஷ் இறந்து போனார்.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பலியான ரூபேசின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி மாணவன் பலியானது பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி மீஞ்சூர் -திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மின்கம்பம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சாக்‌ஷி அகுஜா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • மின்வயர் அறுந்து மழை நீரில் விழுந்து கிடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    புதுடெல்லி:

    கிழக்கு டெல்லியில் உள்ள பரீத் விஹார் பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி அகுஜா (வயது 34). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் சண்டிகர் செல்வதற்காக புதுடெல்லி ரெயில் நிலையம் வந்தார்.

    டெல்லியில் கடந்த சனிக்கிழமை இரவு முதலே கனமழை பெய்ததன் காரணமாக பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. ரெயில் நிலையத்திலும் தண்ணீர் தேங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெயில் நிலையம் வந்த சாக்ஷி அகுஜா மழை நீரில் மிதிக்காமல் இருக்க அதன் அருகே உள்ள மின்கம்பத்தை பிடித்துள்ளார்.

    அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சாக்ஷி அகுஜா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்வயர் அறுந்து மழை நீரில் விழுந்து கிடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில் பலியான சாக்ஷி அகுஜாவின் தந்தை லோகேஷ் குமார் ஜோப்ரா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் நிலையங்களில் போதிய வசதி இல்லை. ஆனால் வந்தே பாரத் ரெயில்கள் விடுவதில் மட்டும் அரசு கவனம் செலுத்துகிறது. டெல்லி ரெயில் நிலையத்தில் எனது மகளுக்கு முதலுதவி எதுவும் அளிக்கப்படவில்லை. எந்த ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. மருத்துவர்களோ, போலீசாரோ அங்கு இல்லை. 40 நிமிடங்கள் கழித்தே ரெயில் நிலையத்தை விட்டு வெளியேற முடிந்தது.

    ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் எனது மகள் இறந்து விட்டாள். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நமது அமைப்புகள் எதுவும் மேம்படவில்லை. ஆனால் வந்தே பாரத் போன்ற உயர்தர ரெயில்களை உருவாக்கி வருகிறோம். அதே நேரம் ரெயில் நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியவில்லை. எங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். இதற்காக சட்டப் போராட்டத்திற்கு தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 38). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், நேற்று கந்தசாமி அவரது வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் மின்விளக்கு எரியவில்லை என்பதால், பிளக் பாயிண்டில் இருந்து பிளக்கை பிடுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    மயங்கிய நிலையில் கிடந்த அவரை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுபற்றி ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்தசாமிக்கு யோகலட்சுமி என்ற மனைவியும், மதன் (3) மற்றும் 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடோனின் முன்பகுதியில் உள்ள பெயர் பலகையை சரி செய்தார்.
    • மின்கம்பி வயரில் உரசியதில் ஷேக்சம்சுதீன் மீது மின்சாரம் தாக்கியது.

    கோவிலம்பாக்கம்:

    பள்ளிக்கரணை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் குடோனில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் ஷேக் சம்சுதீன்(வயது28). மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்.

    இவர் குடோனின் முன்பகுதியில் உள்ள பெயர் பலகையை சரி செய்தார். அப்போது அருகில் இருந்த மின்கம்பி வயரில் உரசியதில் ஷேக்சம்சுதீன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெய கணேஷ் சிலையின் அருகே சாய்ந்து நின்றபடி கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் மீது திடீரென்று சிலையோரம் சென்ற மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்தது.
    • படுகாயம் அடைந்த ஜெயகணேஷ் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய கணேஷ் (வயது46). கீரை வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் அண்ணா சிலை அருகில் நின்று கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது சிலையின் அருகே சாய்ந்து நின்றபடி கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் மீது திடீரென்று சிலையோரம் சென்ற மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ஜெயகணேஷ் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print