சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தன. அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
சங்கராபுரம் அருகே  மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பிரம்ம குண்டம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்காந்தி அவரது மகன் தர்ஷன் (வயது 7). சஞ்சீவ்காந்தியின் வீட்டின் அருகே நடந்த திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தன. அங்கு தர்ஷன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவன் பரிதாபமாக இறந்தான். இதை அறிந்து ஓடி வந்த அவனது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து வடபொ ன்பரப்பி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com