என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி படுகாயம்
- கம்பியை அப்புறப்படுத்தியபோது மின்சாரம் பாய்ந்தது
- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சோளிங்கர்:
சோளிங்கர் அருகே கீழாண்டமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத், கூலிதொழிலாளி. இவரது இரண்டா வது மகள் நிவேதா (வயது 15) அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நிவேதா நேற்று மாலை வீட்டின் மாடியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சென்று போடும் போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின் வயர் மீதுபட்டது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த நிவே தாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






