search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Student Dead"

    • பாலாற்று தரைப்பாலத்தில் சென்ற போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்து விழுந்தது.
    • நெரும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்தார்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் ஆகாஷ், (வயது.13) நெரும்பூர் மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நண்பர் விஜய் (வயது.15) என்பவருடன், பைக்கில் அப்பகுதி பாலாற்று தரைப்பாலத்தில் சென்ற போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்து விழுந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு நெரும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×