விருத்தாசலம் அருகே மஞ்சள் காமாலைக்கு சிறுவன் பலி: தாய்-சகோதரிகளுக்கு சிகிச்சை

அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, தங்களது ஊரில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம் அருகே மஞ்சள் காமாலைக்கு சிறுவன் பலி: தாய்-சகோதரிகளுக்கு சிகிச்சை
Published on

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தீவலூரை சேர்ந்தவர் பொன்னரசன். இவரது மகன் முத்தமிழ் நிலவன் (வயது12). இந்த ஊரில் சிலருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்தபோது சிறுவன் முத்தமிழ் நிலவன், அவனது தாய் முத்தழகி, 2 சகோதரிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது தெரிய வந்தது.

இதில் சிறுவன் முத்தமிழ் நிலவன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அவனது தாய், அக்காள் ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, தங்களது ஊரில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இங்குள்ள குடிநீர் தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

எனவே தீவலூர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com