search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jaundice"

    • உடல் உறுப்புகளில் தோன்றும் நோய்களின் வெளிப்பாடே அரிப்பு.
    • நோய் வருவதற்கு முன்பே அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.

    பெரும்பாலானவர்கள் `அரிப்பு' என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரிப்பு என்பது நோயல்ல என்னும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளில் தோன்றும் பலவகையான நோய்களின் வெளிப்பாடே அரிப்பு. உதாரணமாக, எந்த இடத்தில் உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் ஏதோ நோய் தோன்றப் போகிறது என தெரிந்து கொள்ளலாம். அதாவது நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.

    பெரும்பான்மையான பெண்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குவது பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு. சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக வெள்ளைபடும். அது பிறப்புறுப்பில் உள்ள உதட்டு பகுதியில் படிவதால், அந்த வெள்ளையில் உள்ள நுண்ணுயிரிகள் உதடுகளைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. சில வகையான பூஞ்சைக் காளான்கள் அதிகமாக பெருகி வளரும்போது தாங்க முடியாத அரிப்பை உண்டாக்குகின்றன.

    கருவுற்ற காலங்களில் கர்பப்பை வாசல், பிறப்புறுப்பு போன்றவற்றில் அளவுக்கு அதிகமான சுரப்பிகள் சுரக்கின்றன. இவை பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும்போது அரிப்பு ஏற்படுகிறது. வயதாகும்போது பெண்களின் பிறப்புறுப்பில் சிதைவு மாற்றம் நிகழ்வதாலும் அரிப்பு உண்டாகும். மஞ்சள் காமாலை, ரத்தசோகை, வைட்டமின் சத்து குறைபாட்டினால் உடலின் பிற பகுதிகளில் மட்டுமின்றி, பிறப்புறுப்பிலும் அரிப்பு ஏற்படுவதுண்டு.

     குண்டாக இருக்கும் பெண்களின் வயிறு, தொண்டை போன்ற இடங்களில் உள்ள மடிப்புகளில் அழுக்குகள் தேங்குகின்றன. இவற்றில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அடைந்து அரிப்பு ஏற்படுகிறது. உடல் அழுத்தம் காரணமாக பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கசிவதாலும் பிறப்புறுப்பில் அரிப்பு உண்டாகும். இவ்வாறு இருக்கும்போது சில பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே பலவகையான மருந்துகள், களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். இது தவறு. அரிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
    • அதிமதுரம் ஒரு `நிதானமான’ மலமிளக்கி.

    * அதிமதுரவேரை சுவைக்க வித்தியாசமான இனிப்பு தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

    * புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும். தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

    * அதிமதுரத்துடன் இம்பூரல் கலந்து பொடித்துக் கொண்டு காலை, மாலை 1-2 கிராம் அளவு சாப்பிட சளியுடன் கலந்து வரும் ரத்தம் நிற்கும்.

    * அதிமதுரம், சீரகம் இரண்டும் சமஅளவு எடுத்து எட்டு பங்கு நீரிலிட்டு ஒரு பங்காகக் காய்ச்சிய குடிநீரை, சூல் கொண்ட பெண்களின் வாந்தியைப் போக்கத் தரலாம்.

    * அதிமதுர வேர் பொடியைத் தேனுடன் கலந்து மஞ்சள் காமாலைக்குத் தரலாம்.

    * அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து குடிநீரிட்டு குடித்துவர சூல் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு தீரும்.

    * குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை `அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்' எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

    * அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத்தொடங்கியிருக்கின்றன.

    * சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம்.

    * சைனஸ் பிரச்சினை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தை சிறிதளவு சேர்க்கலாம்.

    * அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது.

    * பொதுவாக அதிமதுரம் ஒரு `நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும்.  ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக்.

    * அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும்.

    * அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

    * வயிற்றுப்புண்களுக்கு – அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறு கோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • விருத்தாசலத்தில் அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அறுவடை செய்யாத நோய் தாக்கிய கரும்புகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர், காவனூர், வல்லியம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்புகளை மஞ்சள் நோய் தாக்கியதால், கரும்பு வளர்ச்சி அடையாமல் அழிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கரும்பு முற்றிலும் அழிவதற்குள், தங்களது கரும்புகளை வெட்டி தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி உள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள், விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புகளை லாரிகள் மற்றும் டிராக்டர்களில் இருந்து இறக்க கூடாது என்று கூறி விவசாயிகளை தடுத்தனர். இதனால் கரும்புகள் கடந்த 3 நாட்களாக வெயிலால் வாகனங்களில் இருந்தே காய்ந்து வருகிறது. மேலும் அறுவடை செய்யாத நோய் தாக்கிய கரும்புகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர், கரும்பு கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை பின்னர் விவசாயிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காத அதிகாரிகளை அலுவலகத்திற்குள் சிறை வைத்து, அலுவலகத்தின் முன்பக்க, பின்பக்க உள்ள கதவுகளை பூட்டி சீல் வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அலுவலகத்தின் பூட்டை திறந்து அலுவலர்களை விடுவித்தனர். இந்நிலையில் இன்று காலை விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், கருவேப்பிலங்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அதிகாரிகளை அலுவலகத்திற்குள் சிறை வைத்து பூட்டிய விவசாயிகளான ராஜ வன்னியன் (வயது 47), செல்வ வளவன் (37), ராஜீவ் காந்தி (47) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டவுன் பெரிய தெருவில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு டவுன் பெரியதெரு உள்பட ஏராளமான இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் முகாம்கள் நடத்தி வருகின்றனர்

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் குறிப்பாக டவுன் பகுதியில் கடந்த சில நாட்களாக மஞ்சள்காமாலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெரிய தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி ஸ்ரீநிதி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    டவுன் பெரிய தெருவில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சாக்கடையை தூர்வாருதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததன் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளார் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் குடிநீரில் சாக்கடை கலப்பது தொடர்கதை ஆகிவிட்டது. தொண்டர் சன்னதியில் தொடங்கி நயினார்குளம் வரையிலும் கழிவு நீர் ஓடைகள் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

    மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியவுடன் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் வந்து அங்குள்ள மக்கள் பருகும் குடிநீரை மாதிரி எடுத்து ஆய்வுக்கு சென்னைக்கு அனுப்பி உள்ளனர்.

    அதன் முடிவில் சாக்கடை நீர் குடிநீருடன் கலந்திருப்பது தெரிய வந்தது. ஆனாலும் இதுவரை எவ்வித தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதுதொடர்பாக 2 மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மட்டுமல்லாது மேயர் துணை மேயரிடமும் மனு கொடுத்து வருகிறோம்.

    ஆனால் மனுவை அவர்கள் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிப்பதோடு எல்லாம் முடிந்து விடுகிறது.

    தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகளின் அலட்சியமான நடவடிக்கைகளின் காரணமாக நாங்கள் ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று ஆதங்கத்துடன் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

    இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு டவுன் பெரியதெரு உள்பட ஏராளமான இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் முகாம்கள் நடத்தி வருகின்றனர். அங்கே சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

    கர்ப்ப காலங்களில் உணவின் மேல் நாட்டம் கொண்டு அதிகம் சாப்பிடுவதால் செரியாமை, ஏற்பட்டு அதானால் பித்த நீர் மிகுந்து, காமாலை நோய் தோன்றுகிறது.
    அதிக தூக்கமின்மை, வயிற்றில் புண், இரத்த அழுத்தம், அதிகம் வெயிலில் அலைந்து திரிவது, வேளாவேளைக்கு உணவு அருந்தாமை, மற்றும் பலவித மனக் கவலை போன்றவற்றாலும், முக்குற்றங்களான வாத, பித்த, கபம் என்ற மூன்று நிலைகளில் பித்த நீரானது அதிகப்படும்போது அது இரத்தத்தில் கலந்து காமாலை நோயாக மாறுகிறது.

    உஷ்ணச்சூடு இவைகளாலும் பித்தம் அதிகரித்து காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது. மேலும் மலச்சிக்கல், மன அமைதியின்மை, வீண்பயம், திடீர் உணர்ச்சிவசப்படுதல், கோபம் இவைகளாலும் பித்தம் அதிகரித்து காமாலை நோய் உண்டாவதற்கு வாய்ப்பாகிறது.

    அதோடு கர்ப்ப காலங்களில் உணவின் மேல் நாட்டம் கொண்டு அதிகம் சாப்பிடுவதால் செரியாமை, ஏற்பட்டு அதானால் பித்த நீர் மிகுந்து, காமாலை நோய் தோன்றுகிறது. இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் பித்தம் அதிகரிப்பதோடு இரத்த அணுக்களும் குறைந்து உடலை மஞ்சள் காமாலை நோய் தொற்றுகிறது.



    மேற்கண்ட காரணங்களால் கர்ப்பிணிப் பெண்களுக்கு காமாலை நோய் ஏற்பட்டு தாயையும், சேயையும் பாதிக்கிறது. பித்த நீர் மிகுவதற்கு முக்கியக் காரணம் ஈரல்தான். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈரல் பாதிப்புற்றால் குழந்தைகள் நலமின்றி பிறக்க வாய்ப்புள்ளது. இந்த ஈரல் பாதிப்பை ஈரல் உணக்கநோய் என்று கூறுவர்.

    பொதுவாக மஞ்சள் காமாலை நோய்க்கு ஈரலைப் பலப்படுத்துவதற்கான மருந்துகள் உட்கொள்ளும் போது மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பிலிருந்து விடுபட வைக்கிறது. பிற மருத்துவ முறைகளிலும் ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்துகள் இல்லாததால் ஈரல் உணக்க நோயை குணப்படுத்த வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

    ஈரலைப் பலப்படுத்தினாலே மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பழ வகைகளை சாறு எடுத்து அதிகமாக உட்கொள்வது நல்லது. அதிக காரம், புளிப்பு, இனிப்பு போன்றவற்றை தவிர்த்து மிதமான காரம், புளிப்பு, இனிப்பு கலந்து சாப்பிட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஓய்வு அவசியம்.

    மெதுவான நடைப்பயிற்சி, அதனுடன் முடிந்த அளவுக்கு வீட்டு வேலைகள் செய்து வந்தால், காமாலை நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான குழந்தையை சுகப் பிரசவமாக பெற்றுக்கொள்ளலாம். உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்த்து பித்தநீர் அதிகரிப்பைத் தடுத்துவிடலாம். 
    ×