என் மலர்
நீங்கள் தேடியது "boy dead"
- சிறுவனுக்கு கயிறு மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
- சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அகமத்நகர்:
மத்திய பிரதேச மாநிலம் புர்கன்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி. ஒருவர் தனது மனைவியுடன் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் சோபரா கிராமத்தில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவர்களுடன் இருந்த 5 வயது மகன் சாகர் புத்தா பரலோ நேற்று மதியம் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அவன் திடீரென மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 200 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் பாதியில் சிக்கி கொண்டான். உயிர் பயத்தில் அவன் கதறி அழுதான்.
இதைக்கேட்டு அருகில் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்த அவனது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர். இது பற்றி உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. சிறுவனை உயிருடன் மீட்க ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. சிறுவனுக்கு கயிறு மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று நள்ளிரவு வரை மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. இரவு நேரம் என்பதால் விளக்கு வெளிச்சத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனை காப்பாற்ற போராடினார்கள். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை. சிறிது நேரம் சிறுவன் அழுதுகொண்டே இருந்தான். ஆனால் அதன் பிறகு அவனிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.
இன்று அதிகாலை சாகர் புத்தா பரேலா பிணமாக தான் மீட்கப்பட்டான். மகன் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு திரண்டு இருந்த கிராம மக்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே உயிருடன் மீட்கப்படுகின்றனர்.
- யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.
- அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா்.
அவினாசி :
சேவூா் அருகே ஆலத்தூா் சங்கம்பாளையத்தை சோ்ந்த குருசாமி- ரேவதி தம்பதியின் மகன் யோகேஷ் ( வயது 12).ஆலத்தூா் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தாா். யோகேஷை நாய் கடித்தால் வீட்டில் இருந்துள்ளாா்.
சம்பவத்தன்று மதியம் இவரது தாய் வெளியே சென்று விட்டு, மாலை வந்து பாா்த்த போது யோகேஷ் வீட்டில் இல்லாததால் தேடியுள்ளாா். பிறகு வீட்டிற்கு அருகே உள்ள குட்டைப் பகுதிக்கு சென்று பாா்த்தபோது அங்கு யோகேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீரில் மூழ்கி கிடந்த யோகேஷ் உடலை மீட்டனா். இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். தந்தை குருசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், மகன் யோகேஷ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- புளியங்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள கோவிந்தபேரி குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- உடனடியாக போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது குளத்தில் இறந்துகிடந்தது காணாமல் போன சிறுவன் முகமது ரஷீத் என்பது தெரியவந்தது.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி புதுமனை 1-வது தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முகமது ரஷீத்(வயது 8). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்து வெளியே விளையாட சென்ற முகமது ரஷீத் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.
ஆனால் எங்கு தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து புளியங்குடி போலீஸ் நிலையத்தில் அப்துல் காதர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று புளியங்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள கோவிந்தபேரி குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது குளத்தில் இறந்துகிடந்தது காணாமல் போன சிறுவன் முகமது ரஷீத் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காணாமல் போன முகமது ரஷீத் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்ற இடத்தில் குளத்தில் தவறி விழுந்து மூழ்கி இறந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியபிள்ளை வலசை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் குணசேகரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் சூர்யா ஆகிய இருவர் மீதும் கார் ஏறி இறங்கியது.
- பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தென்காசி:
வருகிற 5-ந்தேதி தைப்பூசத்தையொட்டி மாலை அணிந்து விரதம் இருந்து வரும் முருக பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லத் தொடங்கி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் நேற்று மாலையில் தங்களது ஊரில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர்.
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே நேற்றிரவு சுமார் 10.45 மணியளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
இதில் பெரியபிள்ளை வலசை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் குணசேகரன்(வயது 16) மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் சூர்யா(18) ஆகிய இருவர் மீதும் கார் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் தலையில் பலத்த ரத்தக்காயம் அடைந்த குணசேகரன் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சூர்யாவிற்கு தலையில் காயமும், கால் முறிவும் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் இரவு நேரத்தில் மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி விவேகானந்தர் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஜெயக்குமார் (24)என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- சிறுவன் கவி தேவநாதனுக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. அருகில் இருந்த கம்பவுண்டரிடம் ஊசி போட்டு வந்துள்ளனர்.
- பிரேத பரிசோதனைக்கு பிறகு காய்ச்சலுக்கு ஊசி போட்டதால் சிறுவன் இறந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் மகேசுவரன். இவரது மனைவி கற்பகவள்ளி. இந்த தம்பதியினருக்கு யூவஸ்ரீ என்ற 10 வயது மகளும், கவிதேவநாதன் என்ற 5 வயது மகனும் உள்ளனர் .
மகேசுவரனின் மனைவி கற்பகவள்ளி உடல் நலக்குறைவால் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். 2 குழந்தைகளையும் மகேசுவரனின் தாயார் வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் சிறுவன் கவி தேவநாதனுக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. அருகில் இருந்த கம்பவுண்டரிடம் ஊசி போட்டு வந்துள்ளனர். இருப்பினும் காய்ச்சல் குறையாததால் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சம்பந்தபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வருவதை அறிந்து அவரிடம் ஊசி போட சென்றுள்ளனர். அங்கு சிறுவன் கவி தேவநாதனுக்கு ஊசி போட்டு வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்த அரை மணி நேரத்தில் சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்தான்.
உடனடியாக அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்க மறுத்ததை தொடர்ந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ப்ரீத்தி, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோர் சிறுவனின் உறவினர்களிடம் சமாதானம் செய்து உடலை விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு காய்ச்சலுக்கு ஊசி போட்டதால் சிறுவன் இறந்தானா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.
காய்ச்சலுக்காக ஊசி போட்டு சிறுவனை இழந்த குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பகத்சிங்கை தூக்கிலிடும் காட்சியை சஞ்சய் நடித்தான்.
- முகத்தை துணியால் மூடி கழுத்தில் கயிறை கட்டி சோபாவில் இருந்து குதித்துள்ளான்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா டவுன் கவுளகோட் பேரங்கானை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பாக்யலட்சுமி. இவர்கள் அங்குள்ள டி.சி. அலுவலகம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
இவர்களது மகன் சஞ்சய்(வயது 12). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளியில் கர்நாடக உதய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சஞ்சய், பகத்சிங் வேடம் அணிந்து நடிக்க இருந்தான். இதற்காக சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தான்.
அப்போது பகத்சிங்கை தூக்கிலிடும் காட்சியை சஞ்சய் நடித்தான். முகத்தை துணியால் மூடி கழுத்தில் கயிறை கட்டி சோபாவில் இருந்து குதித்துள்ளான். அந்த சமயத்தில், அவனது கழுத்தை கயிறு இறுக்கியது.
இந்த வேளையில் வீட்டில் யாரும் இல்லாததால், சஞ்சய் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். வெளியே சென்றிருந்த அவனது பெற்றோர், வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது, சஞ்சய் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சஞ்சயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பரங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து சஞ்சயின் தந்தை நாகராஜ் கூறும்போது, "எனது மகன் படிப்பு மட்டுமின்றி பாடம் சாராத விஷயங்களிலும் தீவிரமாக இருந்தான். நாடகத்தில் பகத்சிங்கின் வேடத்தில் நடிக்க தானே உடை மற்றும் பிற தேவைகளை செய்துகொண்டான். நாடக ஒத்திகை பார்த்தபோது அவன் இறந்துவிட்டான்.
வழக்கமாக பள்ளி முடிந்ததும் எங்கள் டீக்கடைக்கு சஞ்சய் வருவது வழக்கம். ஆனால் சம்பவத்தன்று அவன் வரவில்லை. இரவில் அவன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதைக் கண்டோம். உடனே அவனை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவனை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என கூறி கதறி அழுதார்.
சஞ்சய் படிக்கும் பள்ளி முதல்வர் கோட்டுரேஷ் கே.டி கூறுகையில், "சஞ்சய் சிறந்த மாணவர், வகுப்பறை மற்றும் கூடுதல் பாடநெறி நடவடிக்கைகளில் முதலிடம் பிடித்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த பள்ளியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக தினத்தன்று கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் குழந்தைகளின் ஆர்வத்தை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவிக்குமாறு பெற்றோர்களிடம் கூறினோம். பகத்சிங் நாடகம் தொடர்பாக சஞ்சய் தானே பயிற்சி செய்திருக்கலாம் என்றார்.
- கடலில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து கீழக்கரை கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தந்தையுடன் செல்லும் ஆசையில் சென்ற சிறுவன் கடலில் மூழ்கி பலியான சம்பவம் கீழக்கரை பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்னமாயாக்குளம் பாரதி நகரை சேர்ந்த மீனவர் உமையராஜ். இவரது மகன் சுமித்திரன் (வயது8). மனநிலை பாதித்த அவனால் வாய் பேசவும் முடியாது.
இந்த நிலையில் இன்று காலை உமையராஜ் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். வீட்டில் இருந்து கடற்கரையை நோக்கி நடந்து சென்ற தனது தந்தையை பின் தொடர்ந்து சிறுவன் சுமித்திரன் சென்றிருக்கிறான்.
மகன் வருவதை கவனிக்காமல் உமையராஜ் கடற்கரையில் நின்ற நாட்டுப்படகில் ஏறினார். தந்தையுடன் செல்லும் ஆசையில் சிறுவன் சுமித்திரன் கடலுக்குள் நடந்து சென்றான். அப்போது அவன் கடல் அலையில் சிக்கி மூழ்கினான்.
இதனை அந்த பகுதியில் நின்றவர்கள் உமையராஜிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கடலுக்குள் குதித்து தண்ணீரில் மூழ்கி கிடந்த தனது மகனை மீட்டு கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவன் சுமித்திரனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடலில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து கீழக்கரை கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையுடன் செல்லும் ஆசையில் சென்ற சிறுவன் கடலில் மூழ்கி பலியான சம்பவம் கீழக்கரை பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 8 குழந்தைகளும் தூக்கி வீசப்பட்டனர்.
- மாணவன் செல்வ நவீன் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.
செய்துங்கநல்லூர்:
நெல்லையை அடுத்த செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பயிலும் 8 மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை ஒரு ஆட்டோ பள்ளிக்கு சென்றது.
இந்த ஆட்டோவில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை வெட்டியம்பந்தி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் செல்வநவீன் ( வயது 5), முத்தாலங்குறிச்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் நவீன்குமார் ( 5), மகள்கள் முகிலா ( 11), ராகவி ( 6), பார்வதி நாதன் என்பவரது மகள் குணவதி ( 4), நல்லத்தம்பி மகன் இசக்கிராஜா( 5), ஆறுமுககுமார் என்பவரது மகள் அபிராமி, மகன் அரிவரதன் ஆகிய 8 பேரும் சென்றனர்.
ஆட்டோ அனவரத நல்லூர் - வசவப்பபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 8 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
மாணவன் செல்வ நவீன் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். செல்வநவீன் எல்.கே.ஜி. மாணவர் ஆவார். மற்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த 7 மாணவர்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் பலியான மாணவன் செல்வ நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேல நாட்டார்குளத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவது தெரியவந்தது.
இன்று சரவணன் தன்னுடைய மற்றொரு ஆட்டோவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற நிலையில் விபத்துக்குள்ளான ஆட்டோவை மேல நாட்டார்குளத்தை சேர்ந்த ராஜூ என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவர் செல்போன் பேசியபடி ஆட்டோவை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி அருகே உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல்(வயது 6). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாணவன் சக்திவேல் பின்னர் விளையாட சென்றான். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவனது பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான 10 அடி ஆழமுள்ள கிணற்றில் சிறுவன் கிடந்துள்ளான். விளையாடி கொண்டிருந்த போது சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். இதனையடுத்து அவனது பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா பகுதியில் தாய் இறந்து 10 மாதங்கள் ஆன நிலையில், 2 சிறுவர்கள் தாயின் இரண்டாவது கணவன் அருண் ஆனந்த்(36) உடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 28ம் தேதி, 4 வயது சிறுவன் அதிகாலையில் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அருண், அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளான்.
இதை தடுக்க அந்த சிறுவனின் அண்ணன் (வயது 7) முயற்சித்தான். இதையடுத்து ஆத்திரமடைந்த அருண், 7 வயது சிறுவனை அலமாரியில் மோதி, பின்னர் அருகிலிருந்த வாக்கிங் ஸ்டிக் கொண்டு பலமாக தாக்கினான். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் உடல் முழுவதும் காயங்கள், இரத்தப்போக்கு மற்றும் நுரையீரல் கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 2 சிறுவர்களையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அருண் ஆனந்தை போலீசார் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சிறுவர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த திங்கள் அன்று சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது. #KeralaBoyDead