என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana Accident"

    • அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்

    தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய மூன்று சகோதரிகள் உடல்கள் நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் மூன்று பேர் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த இளைய சகோதரிகள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் விகாபாரபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியை சேர்ந்த எல்லையா என்பவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.

    அவர்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே உள்ள தாண்டூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மூத்த மகளின் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்று இருந்தனர்.

    திருமணம் முடிந்தபின் நேற்று காலை தாண்டூரிலிருந்து இளைய சகோதரிகளான இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் நந்தினி, இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் சாய்பிரியா, பிளஸ் டூ படிக்கும் தனுஷா ஆகியோர் விபத்தில் சிக்கிய பேருந்தில் ஹைதராபாத் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

    எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் சகோதரிகள் மூன்று பேரும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் உடல்கள் நசுங்கி மரணம் அடைந்து விட்டனர்.

    இதனால் நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய குடும்பம் தற்போது கடும் சோகத்தில் மூழ்கியது.

    இந்த நிலையில் விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆகியோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது

    • விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சப்படுகிறது.

    விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 



    • தெருநாய்கள் கையில் வைத்திருந்த பிஸ்கட்டை பார்த்து, சிறுவனை துரத்தியது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கமலாபூர் மண்டலத்திற்கு உட்பட்ட மாரிப்பள்ளிகுடம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்.

    இவரது மகன் தனுஷ் (வயது 11). சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவையொட்டி பள்ளியில் கல்வி தினப் பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொள்ள தனுஷ் சென்றான். பேரணி முடிந்த பிறகு அங்குள்ள பேக்கரியில் பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்றான்.

    தெருநாய்கள் கையில் வைத்திருந்த பிஸ்கட்டை பார்த்து, சிறுவனை துரத்தியது. இதனால் அச்சமடைந்த தனுஷ் சாலையில் வேகமாக ஓடினான்.

    அப்போது எதிர் திசையில் வந்த டிராக்டர் சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கமலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாரங்கல் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் வந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், சின்ன எல்லாபுரம், அமுதண்டாவை சேர்ந்தவர் இஸ்லாவத் ஸ்ரீனு (வயது 40). ஆட்டோ டிரைவர்.

    இவரது தாய் பாப்பா (60), மகள் ரித்விக் (6), ரித்விகா (4). அவரது அத்தை சாந்தி, மைத்துனர் சர்தார் ஆகியோருடன் தனது மகன் ரித்விக்கிற்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக நல்கொண்டா மாவட்டம், நாகார்ஜுன சாகர் அருகே உள்ள கோவிலுக்கு ஆட்டோவில் சென்றனர்.

    இரவு மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது மஹபூபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஸ்ரீனு அவரது தாய் பாப்பா, மகன் ரித்விக், மகள் ரித்விகா ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    சாந்தி, மைத்துனர் சர்தார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் காரில் வந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.
    • இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு கோதாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 8 பேர் இன்று அதிகாலை விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    சூர்யா பேட்டை, கோதாடா அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தை உள்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு கோதாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டா மட்டும் காரின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து அலறி கூச்சலிட்டார்.
    • காரின் கதவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பேரும் மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹயாத் நகரை சேர்ந்தவர்கள் ஹர்ஷா, தினேஷ், வம்சி, பாலு, வினய், மணிகண்டா. நண்பர்களான இவர்கள் 6 பேரும் இன்று அதிகாலை நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக காரில் சென்று கொண்டு இருந்தனர்.

    போச்சம்பள்ளி, ஜலால்பூர் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த குளத்தில் பாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. மணிகண்டா மட்டும் காரின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து அலறி கூச்சலிட்டார்.

    அப்பகுதியினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கிய காரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காரின் கதவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பேரும் மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது. உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தரை தளத்தில் சுற்றிலும் ரத்த வெள்ளத்தில் ஷங்கர் கிடந்துள்ளார்.
    • ஆனால் சிகிச்சை பலனின்றி மாலையில் அவர் உயிரிழந்தார்.

    இந்திய ராணுவதின் மருதுவப் படை [AMC] -இல் கேப்டாக பணிபுரிந்து வந்தவர் ஷங்கர் ராஜ் குமார் [30 வயது]. புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி மதியம் 12.45 மணிக்கு அல்காபுரி காலனியில் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள அவரது வீட்டு பால்கனியில் நின்றுகொண்டிருந்த ஷங்கர் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். சத்தம் கேட்டதும் அவரது மனைவியும் பணிப்பெண்ணும் ஓடி வந்து பார்த்தபோது, தரை தளத்தில் சுற்றிலும் ரத்த வெள்ளத்தில் ஷங்கர் கிடந்துள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஷங்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாலையில் அவர் உயிரிழந்தார். ஷங்கர் வழுக்கி விழுந்திருக்கலாம் என்றும் அவரது மரணத்தில் வேறு சந்தேகம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×