search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy dies"

    • பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற நோய்க்கு மேலும் ஒரு சிறுவனும் பலியாகி உள்ளான்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவைச் சேர்ந்த குருதத் என்ற 15 வயது சிறுவன் நோய் தாக்கி பலியானான்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவது அம்மாநில மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், அமீபாவால் பரவும் பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற அபூர்வ நோய் தாக்குதல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தேங்கி நிற்கும் மாசுப்பட்ட தண்ணீரில் இருக்கும் அமீபா தாக்குதலுக்கு உள்ளாபவர்கள் இந்த நோய் தாக்கி பலியாகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவைச் சேர்ந்த குருதத் என்ற 15 வயது சிறுவன் இந்த நோய் தாக்கி பலியானான்.

    தேங்கி நிற்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பவர்கள் மற்றும் முகம் கழுவுபவர்களின் மூக்கு வழியாக அமீபா சென்று மூளையை தாக்குவதால் அந்த அறிய நோய் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே தேங்கி கிடக்கும் அசுத்தமான நீரில் குளிப்பதையும், முகம் கழுவதையும் தவிர்க்க வேண்டும் என கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இந்த நிலையில் பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற நோய்க்கு மேலும் ஒரு சிறுவனும் பலியாகி உள்ளான். காசர்கோடு படனகாடு பகுதியைச் சேர்ந்த பலேஷ்-அஸ்வதி தம்பதியின் இரட்டை குழந்தைகளில் ஒருவனான ஸ்ரீபாலு(3) என்ற சிறுவன் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதித்து அவதிப்பட்டுள்ளான்.

    காஞ்சங்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவனது உடல்நிலை மோசமானதால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டான். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் ஸ்ரீபாலு பரிதாபமாக இறந்தார்.

    அமீபாவால் வரும் அபூர்வ மூளை தாக்குதல் நோய்க்கு மேலும் ஒரு சிறுவன் பலியாகி இருப்பது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • பிரனேசுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
    • வீட்டில் இருந்த சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.

    கோவை,

    கோவை சுந்தராபுரம் குறிச்சி ஆண்டாள் தோட்டத்தை சேர்ந்தவர் மனோவா. ஆட்டோ டிரைவர். இவரது மகன் பிரனேஷ் (வயது 12). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரனேஷ் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அமிர்தலிங்கம் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார்.
    • ஓடிவந்த பெற்றோர் அறிவழகனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நல்லாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 40). இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் அமிர்தலிங்கம் வீடு கட்டும் போது கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவரது மனைவி அஞ்சலாட்சம் இவர்களுக்கு அன்பரசன் (9) அறிவழகன் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அமிர்தலிங்கம் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    அந்த வீட்டிற்கு தற்சமயம் மின்சார வயர் மூலம் மின் பல்ப் போட்டுள்ளார். இன்று காலை அந்த வீட்டிற்குள் அவரது பையன் அறிவழகன் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அறிவழகன் மின்சார வயர் மீது மிதித்தான். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். அவனது சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அறிவழகனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அறிவழகனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறிவழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அமிர்தலிங்கம் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புது வீட்டில் மகன் மின்சாரம் தாக்கி பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
    • எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55) செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் ஆடுகளை நாய்கள் கடித்து விடுவதால் ஆட்டுக் கொட்டகையைச் சுற்றி மின்வேலி அமைப்பது வழக்கம் எனக்கூறப்படுகிறது.

    இந்நிலையில் அவரிடம் வேலை பார்த்து வந்த கீழ குவாகம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அருண்குமார் (17) நேற்று அதிகாலை எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து குவாகம் போலீசார் சென்று அருண்குமார் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    சோழிங்கநல்லூர் அருகே கை கழுவ சென்ற போது கோவில் குளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த பொன்னியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது 5 வயது மகன் குகன். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை ரமேஷ், மனைவி மற்றும் மகன் குகனுடன் பொன்னியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    கோவிலில் கொடுத்த பிரசாதத்தை அனைவரும் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் சிறுவன் குகன் மட்டும் கைகழுவுவதற்காக கோவில் குளத்துக்கு சென்றான். அப்போது அவன் நிலை தடுமாறி குளத்துக்குள் விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குகனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குகன் பரிதாபமாக இறந்தான்.
    கரூர் அருகே இன்று காலை பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர்:

    கரூர் வாங்கல் சங்கரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பரணிதா(வயது5), மகன் பிரவீன் (2). பரணிதா அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறாள்.

    வீட்டின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பரணிதா தினமும் பள்ளி பஸ்சில் ஏறி செல்வது வழக்கம். அப்போது பரணிதாவை அவரது தாய் விட்டு செல்வார். அது போல் இன்று காலை பள்ளி பஸ்சில் ஏற்றி விடுவதற்காக பரணிதாவை அவரது தாய் அழைத்து சென்றார்.

    பள்ளி பஸ் வந்ததும் மகளை ஏற்றி விட்டு வீட்டிற்கு திரும்பினார். அதற்கு முன்பு பிரவீன், தனது தாயின் பின்னால் ஓடியுள்ளான். இதனை யாரும் கவனிக்கவில்லை.

    இந்தநிலையில் பரணிதாவை ஏற்றி விட்டு திரும்பும் போது, அங்கு வந்த பிரவீன் பஸ் முன்பு சென்றுவிட்டான். டிரைவர் இதை கவனிக்காமல் பஸ்சை இயக்கவே, முன்பக்க சக்கரத்தில் சிக்கி பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதைப்பார்த்த அவனது தாய் கதறி துடித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆத்தூரில் இன்று தாமிரபரணி புஷ்கர விழாவில் நீராடிய சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆறுமுகநேரி:

    மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் உள்ள படித்துறைகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பாதுகாப்பு கருதி சில படித்துறைகளில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

    அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நீராட அனுமதி வழங்கப்படாத படித்துறையில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தான்.

    இன்று நடந்த அந்த பரிதாப சம்பவம் பற்றி விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழி பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ரெங்கநாதன் தனது மனைவி பிச்சம்மாள் மற்றும் 2 மகன்களுடன் சுவாமி தரிசனம் செய்ய திருச்செந்தூருக்கு பஸ்சில் வந்தார். அந்த பஸ் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூருக்கு வந்தபோது புஷ்கர விழா நடப்பதால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க ரெங்கநாதன் முடிவு செய்தார்.

    அதன்படி ஆத்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது மனைவி மற்றும் மகன்களுடன் அரசமரத்தடி படித்துறைக்கு சென்றார். அங்கு ஆற்றில் இறங்கி 4 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவரது மூத்த மகனான அமுத சுகந்தன் (வயது 11) திடீரென தண்ணீரில் மூழ்கினான்.

    இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த சிறுவனை மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த அவனை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சிறுவன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாமிரபரணியில் புனித நீராடிய சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    நாமக்கல் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலாயுதபாளையம் பகுதியை சேர்ந்தவர் மதுபாலன். இவர் பொட்டலாபுரத்தில் வி.ஏ.ஓவாக உள்ளார். இவரது மனைவி கோசலை. இவர்களுக்கு வைணவ ரோசன் (4) என்ற மகனும், தமிழினி (2) என்ற மகளும் உள்ளனர். மதுபாலன் இன்று காலை குடும்பத்துடன் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் மனைவியின் ஊரான துத்திக்குளத்திற்கு பை-பாஸ் ரோட்டில் சென்றனர். அப்போது சென்னையில் இருந்து கரூரை நோக்கி சென்ற கார் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மதுபாலன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்து குறித்து அருகில் உள்ளவர்கள் பார்த்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது 4 வயது சிறுவன் வைணவ ரோசன் பலியானது தெரியவந்தது. காயமடைந்த மற்றவர்களை மீட்டு நாமக்கலில் உள்ள தனியார் ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    வைணவ ரோசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த கங்காசலத்தை பிடித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×