என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு
- மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
- எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55) செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் ஆடுகளை நாய்கள் கடித்து விடுவதால் ஆட்டுக் கொட்டகையைச் சுற்றி மின்வேலி அமைப்பது வழக்கம் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரிடம் வேலை பார்த்து வந்த கீழ குவாகம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகன் அருண்குமார் (17) நேற்று அதிகாலை எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து குவாகம் போலீசார் சென்று அருண்குமார் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






