search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி
    X

    உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி

    • அமிர்தலிங்கம் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார்.
    • ஓடிவந்த பெற்றோர் அறிவழகனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நல்லாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 40). இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் அமிர்தலிங்கம் வீடு கட்டும் போது கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவரது மனைவி அஞ்சலாட்சம் இவர்களுக்கு அன்பரசன் (9) அறிவழகன் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அமிர்தலிங்கம் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    அந்த வீட்டிற்கு தற்சமயம் மின்சார வயர் மூலம் மின் பல்ப் போட்டுள்ளார். இன்று காலை அந்த வீட்டிற்குள் அவரது பையன் அறிவழகன் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அறிவழகன் மின்சார வயர் மீது மிதித்தான். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். அவனது சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அறிவழகனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அறிவழகனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறிவழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அமிர்தலிங்கம் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புது வீட்டில் மகன் மின்சாரம் தாக்கி பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×