என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்கவுண்டர்"

    • சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா 8 நாட்களுக்கு முன்பு ஹித்மாவின் தாயாருடன் மதிய உணவு சாப்பிட்டார்.
    • மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே கொல்லப்பட்டனர்.

    ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அல்லுரி சீதாராமராஜ் மாவட்ட காட்டுப்குதியில் மாவோயிஸ்டுகள் நேற்று காலை 6:30 மணி முதல் 7:00 மணி வரை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    இந்த நடவடிக்கையில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே மற்றும் நான்கு மாவோயிட்டுகள் கொல்லப்பட்டதாக ஆந்திரப் பிரதேச உளவுத்துறை கூடுதல் டிஜி மகேஷ் சந்திர லட்டா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

    இந்த என்கவுண்டருக்கு 8 நாட்களுக்கு முன்பு நவம்பர் 10 அன்று, சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா மாவோயிஸ்ட் கோட்டையான சுக்மா மாவட்டத்தில் உள்ள பூவர்த்தி கிராமத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்றார்.

    அங்கு, அவர் ஹித்மாவின் தாயாரைச் சந்தித்து அவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அவரது மகனை சரணடையச் செய்யுமாறு ஹித்மா தாயிடம் கேட்டுக் கொண்டார். மறுபுறம், ஹித்மாவின் நடமாட்டத்தை உளவுத்துறை  உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது.

    சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஹித்மா உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் ஆந்திராவிற்குள் நுழைந்து அங்கு இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்து வந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.

    என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக டிஜி மகேஷ் சந்திர லட்டா தெரிவித்தார். 

    • அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
    • 2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

    சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான், "மாவோயிஸ்டுகள் இருப்பது குறித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் இதுவரை மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்" என்றார்.

    2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளை அழிக்க 2026 மார்ச் மாதத்தை இலக்காக த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார். 

    • பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டு நடமாட்டம் இருந்ததை தொடர்ந்து தேடுதல் வேட்டை.
    • பாதுகாப்புப்படை வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால், பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது. இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டு அதிகமான இடங்களில் பாதுகாப்புப்படையினர், போலீசார் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சத்தீஸ்கர் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

    • கொல்லப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சுட்டுக்கொல்லப்பட்ட 4 குற்றவாளிகளும் பீகார் தேர்தலில் பெரிய அளவில் வன்முறையை கட்டவிழ்க்க திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    டெல்லி ரோஹினி பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    டெல்லி, பீகார் போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சன் பதக், பிம்லேஷ், மகோட்டா, மணீஷ் பதக், அமன் தாக்கூர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட 4 குற்றவாளிகளும் பீகார் தேர்தலில் பெரிய அளவில் வன்முறையை கட்டவிழ்க்க திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 



    • கடந்த 22 மாதங்களில் சத்தீஸ்கரில் 477 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
    • அபுஜ்மத்தின் பெரும்பகுதி நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது.

    நாடு முழுவதும் மார்ச் 2026க்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    நக்சலைட்டுகள் அதிக நடமாட்டம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபகாலமாக அவர்களின் தாக்குதலை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். உயர்மட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து தலைமறைவாக இருக்கும் நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று சத்தீஸ்கர் மாநிலம் ஜத்தல்பூரில் நக்சலைட்டுகள் 208 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

    அவர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட 153 ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் அபுஜ்மத்தின் பெரும்பகுதி நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. 

    கடந்த 22 மாதங்களில் சத்தீஸ்கரில் 477 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 2,110 பேர் சரணடைந்தனர். 1,785 பேர் கைது செய்யப்பட்டனர் என்று முதலமைச்சர் எடுத்துரைத்தார்.

    என்று பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
    • பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரு முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், அபூஜ்மாட் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றபோது அவர்கள் கொல்லப்பட்டனர்.

    அவர்களின் உடல்களும், ஏகே-47 துப்பாக்கி, இன்சாஸ் துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    கொல்லப்பட்டவர்கள், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ராஜு தாடா என்கிற கட்டா ராமச்சந்திர ரெட்டி மற்றும் கோசா தாடா என்கிற காதரி சத்யநாராயணா ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.

    சத்தீஷ்கரின் பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.

    இவர்கள் இருவர் மீதும் தலா ரூ.40 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

    சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் போரில் இது ஒரு முக்கிய வெற்றி என்று முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தார். 

    • காவல்துறையினர் காட்டைச் சுற்றி வளைத்துத் தேடும்போது, மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • ஸ்குவாட் தலைவர் சுமித்ரா என்கிற சுனிதா வேலடி, மற்றும் கமிட்டி உறுப்பினர் லலிதா என்கிற லட்டோ கோர்சா என அடையாளம் காணப்பட்டனர்.

    மகாராஷ்டிர காவல்துறை நடத்திய என்கவுன்ட்டரில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கட்சிரோலி மாவட்டத்தில் எடாபள்ளி தாலுகாவில் உள்ள மோடாஸ்கே கிராமத்திற்கு அருகில் காட்டிற்குள் மாவோயிஸ்டுகளின் குழு முகாமிட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில், நேற்று (புதன்கிழமை) காலை காவல்துறையினர், சிஆர்பிஎஃப் மற்றும் நக்சல் ஒழிப்பு கமாண்டோ படைப்பிரிவினர் ஐந்து குழுக்களாகச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்

    காவல்துறையினர் காட்டைச் சுற்றி வளைத்துத் தேடும்போது, மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

    துப்பாக்கிச் சண்டை ஓய்ந்த பிறகு, தேடுதல் வேட்டையில் இரண்டு பெண் நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

    அவர்கள் உடல்களில் இருந்து ஏகே-47 துப்பாக்கி, பிஸ்டல், வெடிபொருட்கள், நக்சலைட் புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    இறந்தவர்கள், உள்ளூர் ஸ்குவாட் தலைவர் சுமித்ரா என்கிற சுனிதா வேலடி, மற்றும் கமிட்டி உறுப்பினர் லலிதா என்கிற லட்டோ கோர்சா என அடையாளம் காணப்பட்டனர்.

    அவர்களின் தலைக்கு முறையே ரூ.8 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் மகாராஷ்டிரா காவல்துறை வெகுமதி அறிவித்திருந்தது. 

    2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை கட்சிரோலியில் 93 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர், 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 75 பேர் சரணடைந்துள்ளனர் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினருடனான மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    • கடந்த 12ஆம் தேதி நடிகை திஷா படானி வீட்டில் துப்பாக்கிசூடு.

    பாலிவுட் நடிகை திஷா படானிக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரில் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன் கடந்த 12ஆம் தேதி அதிகாலை இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், வானத்தை நோக்கியும் சுட்டுள்ளனர். அப்போது திஷா படானியின் தந்தை ஜெக்திஷ் சிங் படானி (ஓய்வு பெற்ற டிஎஸ்பி), அவரது தாய் மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

    துப்பாக்கியால் சுட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிடப்பட்டது.

    இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தியதற்காக திஷா படானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்திபப்ட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "வீரேந்திர சரண், மகேந்திர சரண் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாங்கள் அதை செய்தோம். எங்களுடைய மதிற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றார். எங்களுடைய தெய்வங்ளை இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த பதிவை கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் பதிவிட்டிருந்தார். இவருக்கு கிரிமினல் அமைப்பு நெட்வொர்க் உடன் தொடர்பு உள்ளது. இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரையும் தேடிவந்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படையின் நொய்டா குழு மற்றும் டெல்லி போலீசின் குற்ற புலனாய்வுத்துறை குழு ஆகியவை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.

    அப்போது காசியாபாத்தில் இருவரும் இருப்பதை கண்டறிந்து அங்கு சென்றனர். அப்போது போலீசார் நோக்கி இருவரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் போலீசாரும் தாக்கல் நடத்த இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து, மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

    • நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது.
    • நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கணவர் குடும்பத்தினர் கொளுத்தியுள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கும் நிக்கி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இதே குடும்பத்தில்தான் நிக்கியின் சகோதரியும் மருகளாக உள்ளார். விபினின் சசோதரனை அவர் திருமணம் செய்துள்ளார்.

    நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி தகராறு முற்றியுள்ளது. நிக்கியின் கணவன் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    விபின் தனது மனைவியின் தலைமுடியை இழுத்து கடுமையாக தாக்கும் போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீரவில்லை. நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் உடல்கருகி நிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நிக்கி தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

    நிக்கியின் மகன் "எனது தாயார் மீது எதையோ ஊற்றினர். அதன்பின் கடுமையாக தாக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர்" என கண்ணீர் மல்க அந்த சிறுவன் தெரிவித்தார்.

    இதனையடுத்து போலீசார் கணவனை கைது செய்தனர். கணவரின் பெற்றோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வரதட்சணை கொடுமையால் தன்னுடைய மகள் உயிரிழந்தது குறித்து பேசிய நிக்கியின் தந்தை, "என் மகளை கொன்றவர்களை என்கவுண்டரில் சுட்டு கொல்ல வேண்டும். அவர்களுடைய வீடு இடிக்கப்பட வேண்டும். உத்தரபிரதேச போலீசார் பிக்பாக்கெட் திருடர்களின் காலில் சுடுவார்கள், இந்தக் கொலைகாரர்களை என்கவுண்டரில் கொல்ல மாட்டார்களா? இது பாஜக அரசு" என்று கோபத்துடன் தெரிவித்தார்.

    • அரசு மரியாதையுடன் எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.
    • மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் /

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் சென்றுள்ளனர். மோதலை தடுத்து எஸ்.ஐ. சண்முகவேல் சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் சண்முகவேல் வெட்டி கொன்றுள்ளனர்.

    படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.

    இந்நிலையில், தங்கப்பாண்டி, நீதிமன்றத்தில் இருந்து தற்போது வெளியே கூட்டி வரப்பட்டபோது "எங்கள் உயிருக்கு காவல்துறையால் ஆபத்து உள்ளது. எங்க அண்ணனை கொலை செஞ்சிட்டாங்க... கண்ண கட்டி கூட்டிட்டு போய் சுடறதுக்கு நாங்கதான் கிடச்சோமா?..." என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    முன்னதாக தங்கபாண்டியின் சகோதரரும், கொலையில் சம்பந்தம் உள்ளவர் என சொல்லப்படுபவருமான மணிகண்டன் இன்று காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உப்பாரு அணை ஓடை அருகே ஆயுதத்தை மறைத்து வைத்ததாக மணிகண்டன் கூறினான்.
    • அரிவாளுடன் துரத்தி வந்து என்னை கையில் மணிகண்டன் வெட்டினான்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் நேற்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று சரண் அடைந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்த போலீசார் அவனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார்.

    மணிகண்டன் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

    இந்நிலையில் என்கவுண்டர் நடந்தபோது என்ன நிகழ்ந்தது என்பது குறித்து காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உப்பாரு அணை ஓடை அருகே ஆயுதத்தை மறைத்து வைத்ததாக மணிகண்டன் கூறினான். ஆயுதத்தை எடுப்பதற்காக மணிகண்டனை அங்கு அழைத்து சென்றோம்.

    அரிவாளை எடுத்து எங்களை மணிகண்டன் துரத்த ஆரம்பித்தான். ஆயுதத்தை கீழே போடுமாறு இன்ஸ்பெக்டர் எச்சரித்தும் மணிகண்டன் கேட்கவில்லை.

    அரிவாளுடன் துரத்தி வந்து என்னை கையில் மணிகண்டன் வெட்டினான். என் மீது தாக்குதல் நடத்திய பின்னர் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர்தான் சுட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சண்முகவேல் கொலை வழக்கில் 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.
    • தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் சிக்கனூத்தில் மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்த தொழிலாளர்களான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாயக்கனூரை சேர்ந்த மூர்த்தி (60), அவரது மகன்கள் மணிகண்டன்(30), தங்கபாண்டி(25), ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் குடிமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல்(57) மற்றும் போலீஸ்காரர் அழகுராஜா ஆகியோர் தோட்டத்திற்கு விரைந்து சென்று, தந்தை-மகன்கள் இடையே ஏற்பட்ட தகராறை தீர்த்து வைக்க முயன்றனர்.

    அப்போது ஆத்திரமடைந்த தந்தை-மகன்கள் 3 பேரும், எங்களிடையே ஏற்பட்ட தகராறை தீர்த்து வைக்க நீங்கள் யார்? என்று கேட்டு சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அரிவாளால் வெட்ட முயற்சிக்கவே, போலீஸ்காரர் அழகுராஜா அங்கிருந்து தப்பியோடி விட்டார். சண்முகவேல் தப்பியோட முயன்றபோது அவரை சரமாரி அரிவாளால் வெட்டினர். கழுத்தில் வெட்டியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வேல் உயிரிழந்தார்.

    இதையடுத்து தந்தை-மகன்கள் 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து அழகுராஜா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் தோட்டத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்ட கிடந்த சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தப்பியோடிய மூர்த்தி, மணிகண்டன், தங்கபாண்டி ஆகியோரை பிடிக்க திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை.

    இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கொலையாளிகளின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் என்று எண்ணி தனிப்படையினர் வேடசந்தூர் பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் உடுமலை, குடிமங்கலம் பகுதியிலும் வலைவீசி தேடினர்.

    இந்தநிலையில் மூர்த்தி, தங்கபாண்டி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான மணிகண்டன் எங்கு பதுங்கி உள்ளான் என்று விசாரணை நடத்தினர். அப்போது உடுமலை பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்றிரவு அங்கு சென்ற தனிப்படையினர் மணிகண்டனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை குடிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விசாரணை நடத்தினர். அவரிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று விசாரணை நடத்தியபோது குடிமங்கலம் சிக்கனூத்து உப்பாறு ஓடை பகுதியில் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தான்.

    இதைத்தொடர்ந்து ஆயுதத்தை பறிமுதல் செய்வதற்காக மணிகண்டனை, குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம், சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார் மற்றும் போலீசார் வேனில் உப்பாறு ஓடை பகுதிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

    அங்கு சென்றதும் போலீசார் மணிகண்டனை வேனில் இருந்து இறக்கி, அரிவாளை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்து சென்று அதனை மீட்க முயன்றனர். அப்போது அரிவாளை எடுத்த மணிகண்டன், போலீசாரிடம் இருந்து தப்பிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமாரின் வலது கையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்றான்.

    அவரை பிடிக்க முயன்ற போலீசாரையும் வெட்ட முயன்றான். இதையடுத்து பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் தற்காப்புக்காக மணிகண்டனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது உடலில் குண்டு பாய்ந்தது.

    இதையடுத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆஸ்ப த்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,கிரிஷ் யாதவ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் துப்பாக்கிசூடு நடந்த உப்பாறு ஓடை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

    ×