என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சலைட்டு"

    • தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) அன்று பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

    தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். 

    இந்தச் சண்டையில், மாவட்ட ரிசர்வ் கார்டை சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றபட்டன.  

    • அவர்களில் 27 பேருக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டது.
    • தண்டேவாடா மாவட்டத்தில் தலை க்கு விலை வைக்கப்பட்ட 165 மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் 508 பேர் சரணடைந்துள்ளனர்.

    சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் தண்டேவாடா மாவட்டத்தில் 37 மாவோயிஸ்டுகள் இன்று சரணடைந்தனர். அவர்களில் 12 பேர் பெண்கள் ஆவர்.

    தண்டேவாடாவில் உள்ள டிஆர்ஜி அலுவலகத்தில் மூத்த காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் சரணடைந்தனர்.

    அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர்களில் 27 பேருக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டது.

    கடந்த 20 மாதங்களில் தண்டேவாடா மாவட்டத்தில் தலை க்கு விலை வைக்கப்பட்ட 165 மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் 508 பேர் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அரசின் மறுவாழ்வு திட்டத்தின்படி, சரணடைபவர்களுக்கு ரூ. 50,000 நிதி உதவியும், திறன் மேம்பாடு மற்றும் விவசாய நிலத்தில் பயிற்சி போன்ற சலுகைகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்தது.
    • நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.

    சத்தீஸ்கரின் மாவோயிட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் பகுதியில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று 19 பெண்கள் உட்பட 28 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர்.

    அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    SLR, INSAS மற்றும் .303 ரைபிள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

     2025 ஆம் ஆண்டில் இதுவரை நாராயண்பூர் மாவட்டத்தில் மொத்தம் 287 மாவோயிஸ்ட் போராளிகள் சரணடைந்துள்ளனர் என்று நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.

    பஸ்தர் பகுதியில் கடந்த 50 நாட்களில் 512 மாவோயிஸ்ட் போராளிகள் வன்முறையைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக பஸ்தார் ரேஞ்ச் ஐஜி சுந்தர்ராஜ் பதிலிங்கம் தெரிவித்தார்.

    • சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா 8 நாட்களுக்கு முன்பு ஹித்மாவின் தாயாருடன் மதிய உணவு சாப்பிட்டார்.
    • மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே கொல்லப்பட்டனர்.

    ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அல்லுரி சீதாராமராஜ் மாவட்ட காட்டுப்குதியில் மாவோயிஸ்டுகள் நேற்று காலை 6:30 மணி முதல் 7:00 மணி வரை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    இந்த நடவடிக்கையில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே மற்றும் நான்கு மாவோயிட்டுகள் கொல்லப்பட்டதாக ஆந்திரப் பிரதேச உளவுத்துறை கூடுதல் டிஜி மகேஷ் சந்திர லட்டா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

    இந்த என்கவுண்டருக்கு 8 நாட்களுக்கு முன்பு நவம்பர் 10 அன்று, சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா மாவோயிஸ்ட் கோட்டையான சுக்மா மாவட்டத்தில் உள்ள பூவர்த்தி கிராமத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்றார்.

    அங்கு, அவர் ஹித்மாவின் தாயாரைச் சந்தித்து அவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அவரது மகனை சரணடையச் செய்யுமாறு ஹித்மா தாயிடம் கேட்டுக் கொண்டார். மறுபுறம், ஹித்மாவின் நடமாட்டத்தை உளவுத்துறை  உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது.

    சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஹித்மா உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் ஆந்திராவிற்குள் நுழைந்து அங்கு இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்து வந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.

    என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக டிஜி மகேஷ் சந்திர லட்டா தெரிவித்தார். 

    • கடந்த 22 மாதங்களில் சத்தீஸ்கரில் 477 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
    • அபுஜ்மத்தின் பெரும்பகுதி நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது.

    நாடு முழுவதும் மார்ச் 2026க்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    நக்சலைட்டுகள் அதிக நடமாட்டம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபகாலமாக அவர்களின் தாக்குதலை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். உயர்மட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து தலைமறைவாக இருக்கும் நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று சத்தீஸ்கர் மாநிலம் ஜத்தல்பூரில் நக்சலைட்டுகள் 208 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

    அவர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட 153 ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் அபுஜ்மத்தின் பெரும்பகுதி நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. 

    கடந்த 22 மாதங்களில் சத்தீஸ்கரில் 477 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 2,110 பேர் சரணடைந்தனர். 1,785 பேர் கைது செய்யப்பட்டனர் என்று முதலமைச்சர் எடுத்துரைத்தார்.

    என்று பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • மகாராஷ்டிராவில், நேற்று 61 பேர் மீண்டும் மைய நீரோட்டத்திற்கு திரும்பினர்.
    • மார்ச் 31, 2026 க்கு முன்பு நக்சலிசத்தை வேரோடு அகற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நக்சலைட்டுகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முக்கிய நாள்.

    இன்று, சத்தீஸ்கரில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். நேற்று சத்தீஸ்கரில் 27 பேர் ஆயுதங்களை கீழே போட்டனர். மகாராஷ்டிராவில், நேற்று 61 பேர் மீண்டும் மைய நீரோட்டத்திற்கு திரும்பினர்.

    மொத்தத்தில், கடந்த இரண்டு நாட்களில் 258 இடதுசாரி பயங்கரவாதிகள் வன்முறையை கைவிட்டனர்.

    இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, வன்முறையை கைவிடுவதற்கான அவர்களின் முடிவை நான் பாராட்டுகிறேன்.

    பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் இடைவிடாத முயற்சிகளால் நக்சலைட்டு அதன் இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

    எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது: சரணடைய விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள், மேலும் துப்பாக்கியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் எங்கள் படைகளின் கோபத்தை சந்திப்பார்கள்.

    நக்சலைட் பாதையில் இன்னும் இருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மைய நீரோட்டத்தில் சேருமாறு நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    மார்ச் 31, 2026 க்கு முன்பு நக்சலிசத்தை வேரோடு அகற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.  

    • காவல்துறையினர் காட்டைச் சுற்றி வளைத்துத் தேடும்போது, மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • ஸ்குவாட் தலைவர் சுமித்ரா என்கிற சுனிதா வேலடி, மற்றும் கமிட்டி உறுப்பினர் லலிதா என்கிற லட்டோ கோர்சா என அடையாளம் காணப்பட்டனர்.

    மகாராஷ்டிர காவல்துறை நடத்திய என்கவுன்ட்டரில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கட்சிரோலி மாவட்டத்தில் எடாபள்ளி தாலுகாவில் உள்ள மோடாஸ்கே கிராமத்திற்கு அருகில் காட்டிற்குள் மாவோயிஸ்டுகளின் குழு முகாமிட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில், நேற்று (புதன்கிழமை) காலை காவல்துறையினர், சிஆர்பிஎஃப் மற்றும் நக்சல் ஒழிப்பு கமாண்டோ படைப்பிரிவினர் ஐந்து குழுக்களாகச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்

    காவல்துறையினர் காட்டைச் சுற்றி வளைத்துத் தேடும்போது, மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

    துப்பாக்கிச் சண்டை ஓய்ந்த பிறகு, தேடுதல் வேட்டையில் இரண்டு பெண் நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

    அவர்கள் உடல்களில் இருந்து ஏகே-47 துப்பாக்கி, பிஸ்டல், வெடிபொருட்கள், நக்சலைட் புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    இறந்தவர்கள், உள்ளூர் ஸ்குவாட் தலைவர் சுமித்ரா என்கிற சுனிதா வேலடி, மற்றும் கமிட்டி உறுப்பினர் லலிதா என்கிற லட்டோ கோர்சா என அடையாளம் காணப்பட்டனர்.

    அவர்களின் தலைக்கு முறையே ரூ.8 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் மகாராஷ்டிரா காவல்துறை வெகுமதி அறிவித்திருந்தது. 

    2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை கட்சிரோலியில் 93 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர், 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 75 பேர் சரணடைந்துள்ளனர் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினருடனான மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    • சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.
    • சல்வா ஜூடும் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.

    செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். என்டிஏ கூட்டணி சார்பில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிற்கிறார்.

    இதற்கிடையே கேரளாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, " இந்தியா கூட்டணி, நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

    சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிராகப் போராட பழங்குடி இளைஞர்களைக் கொண்டு அரசாங்கம் உருவாக்கிய 'சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.

    அந்தத் தீர்ப்பை அவர் வழங்கியிருக்காவிட்டால், சல்வா ஜூடும் நடைமுறையில் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.

    இடதுசாரிகளின் அழுத்தத்தின் பேரில்தான் காங்கிரஸ் கட்சி நீதிபதி சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

    அமித் ஷாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த சுதர்சன் ரெட்டி, "அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது, என்னால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது அல்ல. விவாதத்தில் கண்ணியம் இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சருடன் விவாதிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற 18 நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை கண்ணியத்துடன் விமர்சிக்க வேண்டும் என 18 முன்னாள் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • கிழக்கு என்றால் அதிகாரம் அளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றம் என்று பொருள்.
    • கடந்த10 ஆண்டுகளில் வடகிழக்கில் கல்வித்துறையில் ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று முன்னேறி வரும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வடகிழக்கு நமது நாட்டின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாகும். வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, வடகிழக்கின் பன்முகத்தன்மை அதன் பலமாக இருந்து வருகிறது.

    வடகிழக்கு என்றால் உயிரியல் பொருளாதாரம், மூங்கில், தேயிலை உற்பத்தி, பெட்ரோலியம், விளையாட்டு, திறன், சுற்றுச்சூழல் சுற்றுலாவின் வளர்ந்து வரும் மையம் மற்றும் கரிமப் பொருட்களுக்கான புதிய உலகம் ஆகும்.

    அது ஆற்றலின் சக்தி மையமாக உள்ளது. வடகிழக்கு நமக்கு அஷ்டலட்சுமி போன்றது.

    எங்களுக்கு கிழக்கு என்பது வெறும் திசையல்ல. கிழக்கு என்றால் அதிகாரம் அளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றம் என்று பொருள்.

    ஒரு காலத்தில் வடகிழக்கு ஒரு எல்லைப் பகுதி மட்டுமே என்று அழைக்கப்பட்டது. இன்று அது வளர்ச்சியின் முன்னணியில் மாறி வருகிறது. அங்கு சிறந்த உள்கட்டமைப்பு சுற்றுலாவை கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது.

    வடகிழக்கில் ஒரு உள்கட்டமைப்பு புரட்சியை நாங்கள் தொடங்கினோம். அது இப்போது வாய்ப்புகளின் பூமியாக மாறி வருகிறது. வடகிழக்கு பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

    அதன் வளர்ச்சியை விரைவுபடுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த10 ஆண்டுகளில் வடகிழக்கில் கல்வித்துறையில் ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, நக்சலிசமாக இருந்தாலும் சரி, எங்கள் அரசு சகித்து கொள்ளாது. வடகிழக்கு முன்பு குண்டுகள், துப்பாக்கிகள், ராக்கெட்டுகளுக்கு இடையே இருந்தது. அவை அங்குள்ள இளைஞர்களிடமிருந்து பல வாய்ப்புகளைப் பறித்தன. கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வன்முறையை கைவிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே அவ்வப்போது என்கவுன்டர் நடைபெறுகிறது.
    • இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.

    சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள கேர்லாபால் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. 

    • மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
    • நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் தேகமேடா மலைப் பகுதி அருகே இன்று காலை 10.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    நக்சலைட்டுகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 2 ராணுவ வீரர்களும் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    • பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
    • ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

    திருப்பதி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பந்த் நடைபெறும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆனால் மாநில அரசு வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் வாகனங்கள் இயங்கும் என அறிவித்தது. இதனால் நக்சலைட்டுகள் தங்களது பலத்தைக் காட்ட முடிவு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம், கன்னவரம் பகுதியில் ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்தீஸ்கர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது 20-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பஸ்சை தடுத்து நிறுத்தினா்.

    பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

    இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், ஆசிரி கூடேம், குந்தா என்ற இடத்தில் ஜக்தல்பூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற அரசு பஸ்சை மடக்கினர். பயணிகளை இறக்கி விட்டு தீ வைத்து எரித்தனர்.

    அந்த வழியாக வந்த மேலும் 2 லாரிகள், 1 காரையும் தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

    ×