என் மலர்
நீங்கள் தேடியது "Bastar division"
- அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்தது.
- நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.
சத்தீஸ்கரின் மாவோயிட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் பகுதியில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று 19 பெண்கள் உட்பட 28 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர்.
அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SLR, INSAS மற்றும் .303 ரைபிள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

2025 ஆம் ஆண்டில் இதுவரை நாராயண்பூர் மாவட்டத்தில் மொத்தம் 287 மாவோயிஸ்ட் போராளிகள் சரணடைந்துள்ளனர் என்று நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.
பஸ்தர் பகுதியில் கடந்த 50 நாட்களில் 512 மாவோயிஸ்ட் போராளிகள் வன்முறையைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக பஸ்தார் ரேஞ்ச் ஐஜி சுந்தர்ராஜ் பதிலிங்கம் தெரிவித்தார்.
சத்திஸ்கர் மாநிலத்தில் ரிசர்வ் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 19 நக்சலைட்கள் கைது செய்யப்பட்டனர். #Chhattisgarhnaxalitesheld
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் ஒன்றாக இணைந்து நாராயண்பூர் மாவட்டத்தில் தீவிர தேடுதல் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையின்போது முஸ்நார், டொயாமெடா, புகர்பால், இர்பானார் பகுதிகளில் பதுங்கி இருந்த 16 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசாரை தாக்கியது உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல பிஜாபூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடிதல் வேட்டையின் போது 3 நக்சலைட்கள் பிடிபட்டனர். இதில் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இரண்டு பேர் தலைக்கு போலீசார் தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarhnaxalitesheld






