என் மலர்
நீங்கள் தேடியது "Maoist"
- தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) அன்று பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
இந்தச் சண்டையில், மாவட்ட ரிசர்வ் கார்டை சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றபட்டன.
- அவர்களில் 27 பேருக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டது.
- தண்டேவாடா மாவட்டத்தில் தலை க்கு விலை வைக்கப்பட்ட 165 மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் 508 பேர் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் தண்டேவாடா மாவட்டத்தில் 37 மாவோயிஸ்டுகள் இன்று சரணடைந்தனர். அவர்களில் 12 பேர் பெண்கள் ஆவர்.
தண்டேவாடாவில் உள்ள டிஆர்ஜி அலுவலகத்தில் மூத்த காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் சரணடைந்தனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களில் 27 பேருக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டது.
கடந்த 20 மாதங்களில் தண்டேவாடா மாவட்டத்தில் தலை க்கு விலை வைக்கப்பட்ட 165 மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் 508 பேர் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் மறுவாழ்வு திட்டத்தின்படி, சரணடைபவர்களுக்கு ரூ. 50,000 நிதி உதவியும், திறன் மேம்பாடு மற்றும் விவசாய நிலத்தில் பயிற்சி போன்ற சலுகைகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்தது.
- நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.
சத்தீஸ்கரின் மாவோயிட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் பகுதியில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று 19 பெண்கள் உட்பட 28 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர்.
அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SLR, INSAS மற்றும் .303 ரைபிள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

2025 ஆம் ஆண்டில் இதுவரை நாராயண்பூர் மாவட்டத்தில் மொத்தம் 287 மாவோயிஸ்ட் போராளிகள் சரணடைந்துள்ளனர் என்று நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.
பஸ்தர் பகுதியில் கடந்த 50 நாட்களில் 512 மாவோயிஸ்ட் போராளிகள் வன்முறையைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக பஸ்தார் ரேஞ்ச் ஐஜி சுந்தர்ராஜ் பதிலிங்கம் தெரிவித்தார்.
- சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா 8 நாட்களுக்கு முன்பு ஹித்மாவின் தாயாருடன் மதிய உணவு சாப்பிட்டார்.
- மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே கொல்லப்பட்டனர்.
ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அல்லுரி சீதாராமராஜ் மாவட்ட காட்டுப்குதியில் மாவோயிஸ்டுகள் நேற்று காலை 6:30 மணி முதல் 7:00 மணி வரை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த நடவடிக்கையில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே மற்றும் நான்கு மாவோயிட்டுகள் கொல்லப்பட்டதாக ஆந்திரப் பிரதேச உளவுத்துறை கூடுதல் டிஜி மகேஷ் சந்திர லட்டா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த என்கவுண்டருக்கு 8 நாட்களுக்கு முன்பு நவம்பர் 10 அன்று, சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா மாவோயிஸ்ட் கோட்டையான சுக்மா மாவட்டத்தில் உள்ள பூவர்த்தி கிராமத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்றார்.
அங்கு, அவர் ஹித்மாவின் தாயாரைச் சந்தித்து அவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அவரது மகனை சரணடையச் செய்யுமாறு ஹித்மா தாயிடம் கேட்டுக் கொண்டார். மறுபுறம், ஹித்மாவின் நடமாட்டத்தை உளவுத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஹித்மா உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் ஆந்திராவிற்குள் நுழைந்து அங்கு இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்து வந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.
என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக டிஜி மகேஷ் சந்திர லட்டா தெரிவித்தார்.
- அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
- 2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான், "மாவோயிஸ்டுகள் இருப்பது குறித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் இதுவரை மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்" என்றார்.
2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளை அழிக்க 2026 மார்ச் மாதத்தை இலக்காக த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார்.
- நக்சல் பயங்கரவாதம் காரணமாக சத்தீஸ்கர் மக்கள் தாங்க முடியாத வலியை அனுபவித்தனர்.
- மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து இந்தியா விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் உருவானதன் 25-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 'சத்தீஸ்கர் ரஜத் மஹோத்சவ்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் 14,260 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
சுமார் 50 ஆண்டாக நக்சல் பயங்கரவாதம் காரணமாக சத்தீஸ்கர் மக்கள் தாங்க முடியாத வலியை அனுபவித்தனர்.
அரசியலமைப்பை காட்டிக் கொண்டு, சமூக நீதி என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், சுயநலத்திற்காக உங்களுக்கு அநீதி இழைத்துள்ளனர்.
பல ஆண்டாக பழங்குடி கிராமங்களில் சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இல்லை. ஏற்கனவே இருந்தவை குண்டுகளால் தகர்க்கப்பட்டன. மருத்துவர்களும் ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
நாட்டை ஆண்டவர்கள், தங்கள் குளிர்சாதன வசதி கொண்ட அலுவலகங்களில் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு, உங்களை கைவிட்டனர்.
2014-ம் ஆண்டு நீங்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்தபோது இந்தியாவை மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க நாங்கள் உறுதிபூண்டோம். இன்று அதன் விளைவுகளை இந்த நாடு காண்கிறது.
11 ஆண்டுக்கு முன் இந்தியா முழுவதும் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது.
மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து இந்தியாவும், சத்தீஸ்கரும் முற்றிலும் விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.
- நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- இதனால் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.
மும்பை:
இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார்.
நக்சலைட்கள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள் இயக்க தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து சரணடைந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கட்ச்ரோலி மாவட்டத்தில் அந்த அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் சோனு என்ற மல்லோஜூல வேணுகோபால ராவ் தலைமையில் 60 மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.
- சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்
- சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 71 மாவோயிஸ்டுகள் காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.
இதில், 30 மாவோயிஸ்டுகள் மொத்தமாக ரூ. 64 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்கள் ஆவர்.
சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்.
பஸ்தர் சரக காவல்துறை அறிமுகப்படுத்திய மறுவாழ்வுத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இவர்கள் சரணடைந்துள்ளதாக தாந்தேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் ராய் தெரிவித்தார்.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
நாராயண்பூர் மாவட்டத்தில் திங்களன்று நடந்த மோதலில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர்களான ராஜு தாதா மற்றும் கோசா தாதா இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
- பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரு முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், அபூஜ்மாட் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றபோது அவர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்களும், ஏகே-47 துப்பாக்கி, இன்சாஸ் துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கொல்லப்பட்டவர்கள், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ராஜு தாடா என்கிற கட்டா ராமச்சந்திர ரெட்டி மற்றும் கோசா தாடா என்கிற காதரி சத்யநாராயணா ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
சத்தீஷ்கரின் பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் தலா ரூ.40 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் போரில் இது ஒரு முக்கிய வெற்றி என்று முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தார்.
- துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
- துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சரண்டா காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் மாவோயிஸ்ட் இயக்க மண்டலத் தளபதி அமித் ஹன்ஸ்தா என்கிற அப்தான் என்பது தெரியவந்தது. இவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
மோதல் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
துப்பாக்கி சண்டையின்போது மற்ற மாவோயிஸ்டுக்கள் அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்றனர். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
- வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலங்களுக்கு முன்னால் ஆயுதங்களுடன் நடனமாடி புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
- இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமம்.
நக்சலிசத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மேடைதோறும் இதேயே முழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வரம்பற்ற என்கவுன்டர்கள் குறித்து கவலை தெரிவித்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் அமைப்புகள் கூட்டாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், இந்தியாவில் கல்வி சுதந்திரத்திற்கான சர்வதேச ஒற்றுமை (InSAF India), SOAS Bla(c)k Panthers, இந்திய தொழிலாளர் சங்கம் GB, இந்திய தொழிலாளர் ஒற்றுமை (UK) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த மாதம் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் காட்டில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் நம்பலா கேசவ ராவ் மற்றும் 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 12 பெண்களும் அடங்குவர்.
நக்சல்கள் பேசுவார்த்தைக்கு சம்மதித்தும் மத்திய அரசு அதை ஏற்காமல் பாசிச போக்குடன் நடந்து கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த என்கவுன்டர்களை மையப்படுத்தி கண்டன அறிக்கை வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் என்கவுன்டர்கள்
அந்த அறிக்கையில், "சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் பிரிவின் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மத் பகுதியில் கடந்த மே 21, 2025 அன்று 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட, ஆதிவாசி பகுதிகளில் மாநில மற்றும் மத்தியப் படைகள் தொடர்ந்து கொலைகளை செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே அளவில், சத்தீஸ்கர் காவல்துறையினர், கொல்லப்பட்ட எட்டு பேரின் உடல்களை சட்டவிரோதமாக எரித்ததையும் கண்டிக்கிறோம்"
"ஆரம்பத்திலிருந்தே அரசின் நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின்படி இல்லாமல், திட்டமிட்ட கொடுமையின் வடிவமாகவே இருந்துள்ளன. கொலைகளைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பொதுவெளியில் அதை கொண்டாடினர்.
வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலங்களுக்கு முன்னால் ஆயுதங்களுடன் நடனமாடி புகைப்படங்களை எடுத்துள்ளனர். எந்த ஒரு முறையான நடைமுறையும் இல்லாமல் தனது சொந்த குடிமக்களைக் கொல்வதில் அரசின் வெற்றியை இது வெளிப்படுத்துகிறது" என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உடல்கள் முறையாக பாதுகாக்கப்படாமல் சிதைக்க விடப்பட்டதாகவும், உடல்களைப் பெற வந்த குடும்பத்தினர் துன்புறுத்தப்பட்டு வாய்மொழியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆதாரங்களை அழித்து நீதித்துறை ஆய்வைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, வாழ்க்கையிலும் இறப்பிலும் கண்ணியத்திற்கான உரிமையை உத்தரவாதம் செய்யும் இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கடுமையான மீறல் என்று அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
"சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனை, உடல்களை வலுக்கட்டாயமாக எரித்தல், குடும்பங்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் உடல்களை வேண்டுமென்றே மறைத்தல் ஆகியவை மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாகும். இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சிபிஐ (மாவோயிஸ்ட்) மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான பல கோரிக்கைகள் இருந்தபோதிலும், அரசாங்கம் இந்தப் படுகொலையை நடத்தியது மற்றும் சொந்த குடிமக்களை பொதுவில் சட்டவிரோதமாக எரித்தது வருத்தமளிக்கிறது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"சர்வதேச சமூகமும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த அநீதிக்கு எதிராக அவசரமாகவும், வலுவாகவும், சமரசமில்லாமலும் பதிலளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
நாராயண்பூரில் நடந்தது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. இது ஒரு திருப்புமுனை. இந்த மோதல் தீர்க்கப்படாவிட்டால் இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்" என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இலங்கை தமிழீழ விடுதலை புலிகளிடம் பசவராஜு பயிற்சி பெற்றவர்.
- அவருடைய கூர்மையான திட்டமிடல், தாக்கும் திறன் மற்றும் பயிற்சி அளித்து படைகளை மேம்படுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் பசவராஜு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இலங்கை தமிழீழ விடுதலை புலிகளிடம் பயிற்சி பெற்ற பசவராஜு திறமை மிக்க வலிமையான தலைவராக விளங்கினார். அவருடைய கூர்மையான திட்டமிடல், தாக்கும் திறன் மற்றும் பயிற்சி அளித்து படைகளை மேம்படுத்தியது மாவோயிஸ்டு அமைப்புக்கு பெரும் வலிமையாக இருந்தது.
பசவராஜை குறிவைத்த பாதுகாப்பு படையினர் அவரை கடந்த 6 மாதங்களாக திட்டமிட்டு பிடிக்க முடிவு செய்தனர். முதற்கட்டமாக பசவராஜு அமைப்பில் நெருங்கிய தொடர்புடையவர்களை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர்.
பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டை காரணமாக தெலுங்கானா சத்தீஸ்கர் எல்லையில் உள்ள மலை காடுகளில் மாவோயிஸ்டுகள் தஞ்சமடைந்தனர்
மேலும் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்களும் அதிகரித்தன. இதனால் பசவராஜுன் பாதுகாப்பு பிரிவில் இருந்த ஒரு முக்கிய தளபதி உட்பட 6 பேர் சரணடைந்தனர். இது பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் பசவராஜு அடுத்த கட்டமாக எங்கு செல்வார். எப்படிப்பட்ட இடங்களில் மறைந்து இருப்பார்கள் என்பது போன்ற தகவல்களை அவர்களிடம் இருந்து பாதுகாப்பு படையினர் பெற்றுக்கொண்டனர்.
ஜனவரி மாதம் ஒரே இடத்தில் 60 மாவோயிஸ்டுகள் தங்கி இருந்தனர். பாதுகாப்பு படை நெருங்குவதை தொடர்ந்து அவர்கள் குழுக்களாக பிரிந்து செல்ல வேண்டும் என பசவராஜு உத்தரவிட்டுள்ளார்.
அப்போது சில மூத்த உறுப்பினர்கள் பசவராஜை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் தனக்காக கவலைப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் மூலம் பல்வேறு தகவல்களை பெற்றுக்கொண்ட பாதுகாப்பு படையினர் துல்லிய தாக்குதல் நடத்தி பசவராஜு உள்ளிட்ட 27 மாவோயிஸ்டு களை என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.
மேலும் பசவராஜு உள்ளிட்ட 7 பேர் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் உடல்களை அடக்கம் செய்தனர்.
இன்னும் 3 ஆண்டுகள் வரை பசவராஜு தலைமை பொறுப்பு வகிக்க இருந்தார். சரணடைந்த அவருடைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்து காட்டிக் கொடுத்ததால் தான் அவர் எளிதில் வீழ்த்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பசவராஜுன் பாதுகாவலராக இருந்த பாபு கவுசி என்பவர் கூறுகையில்:-
காடுகளில் தற்போது போதிய பாதுகாப்பு இல்லை. மேலும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் நான் எனது மனைவியுடன் சரணடைந்து விட்டேன்.
பசவராஜு சரணடைந்திருந்தால், அவர் உயிருடன் இருந்திருப்பார். நாம் முன்பே புரிந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மாவோயிஸ்டு இயக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்காக, தங்கள் சொந்த எதிர்காலத்திற்காக வெளியே வருமாறு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றார்.
பசவராஜை உயிரோடு பிடித்த பிறகு சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.






