என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதம்"

    • காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று கோரினார்.
    • பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் ஒடுக்குமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐநா சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

    நேற்று ஐ.நா.வின் 80வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள்ளும் ஜனநாயக மரபுகளின்படியும் தங்கள் அடிப்படை உரிமைகளைப் அனுபவிக்கின்றனர். இருப்பினும், இந்த அரசியலமைப்பு, ஜனநாயகம் உள்ளிட்ட கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு முற்றிலும் பரிச்சயமற்றவை என்பதை நாங்கள் அறிவோம்.

    பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாகிஸ்தானின் இராணுவ ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை மற்றும் வளங்களை சுரண்டுவதற்கு எதிராக அங்குள்ள மக்கள் வெளிப்படையாக கிளர்ச்சி செய்து வருகின்றனர்" என்று தெரிவித்தார். 

    கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, 1948 ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய பாகிஸ்தான் பிரதிநிதி கோரினார்.

    இதற்கு பதிலளித்த இந்திய பிரதிநிதி ஹரிஷ், அந்த தீர்மானத்தின்படி பொது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன், பாகிஸ்தான் முதலில் காஷ்மீரின் தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து தன்னுடைய இராணுவத்தையும், பொதுமக்களையும் முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும்.

    ஆனால் அந்த நிபந்தனையை இதுவரை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. எனவே பொது வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் பற்றி இப்போது பேசுவது காலாவதியாகிவிட்டது." என்று தெரிவித்தார்.

    முன்னதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று டெல்லியில் நடந்த ஐ.நா.வின் 80வது ஆண்டு நினைவு முத்திரை வெளியீட்டு விழாவில் பேசுகையில், பயங்கரவாதத்தை ஊக்குவித்து பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

    • சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுகின்றன.
    • பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.

    காலிஸ்தான் பிரிவினைவாதிகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் கனடாவில் நிதி உதவி பெறுவது அம்பலமாகி உள்ளது.

    கனடா நிதி அமைச்சகம் 'கனடாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி மதிப்பீடு-2025' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில், "கனடிய குற்றவியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுவதாக உளவுத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.

    கிரிப்டோகரன்சி மற்றும் வங்கிகள் மூலம் இந்த நிதி திரட்டல் நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான பஞ்சாபில் ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்காக காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை கூறுகிறது.

    மேலும், பயங்கரவாத குழுக்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பெறப்பட்ட நிதியை பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது.

    பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.

    முன்னதாக, இந்திய அரசாங்கம் கனேடிய அரசாங்கம் காலிஸ்தானியர்களை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆபேரஷன் சந்தூர் நடவடிக்கையின்போது இந்திய படைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
    • இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக இருக்கிறது.

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான இந்திய அரசின் நடவடிக்கைகளை சந்தேகிக்காதீர் என எதிர்கட்சிகளிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.

    மக்களவையில் ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது:-

    பாகிஸ்தான், இந்தியாவின் பதில் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு கெஞ்சியது.

    பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, தாக்குதலை நிறுத்த கோரிக்கை வைத்தது.

    பஹல்காமில் இந்திய பெண்களின் குங்குமத்தை பறித்த பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை. பஹல்காம் தாக்குதலில் குங்குமத்தை இழந்த சகோதரிகளுக்கு வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

    ஆபேரஷன் சந்தூர் நடவடிக்கையின்போது இந்திய படைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய விமானப்படையின் வலிமையை உலகமே பார்த்து வியந்தது. இந்திய படைகள் எல்லையை மட்டுமல்ல, நாட்டின் தன்மானத்தையும் காப்பாற்றியுள்ளன. பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகளை நமது விமானப் படை தகர்த்தது.

    பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை இந்தியா முழுவதுமாக முறியடித்தது. அணு ஆயுதத்தை வைத்து பாகிஸ்தான் மிரட்டியது. இந்திய முப்படைகள் எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லை.

    எதிரியின் எத்தனை தளங்களை அழித்தோம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவில்லை. நமக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டது என்பது தொடர்பாக மட்டுமே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பன.

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாக உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் நம் தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளின் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டார்கள்.

    பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் பாகிஸ்தான் அவர்களுக்கு புரியும் மொழியிலேயே பதிலளிக்கப்படும். இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக இருக்கிறது. தோழமை நடவடிக்கைகளை தான் முதலில் முன்னெடுக்கும்.

    ஆனால், இந்தியாவை தாக்க நினைத்தால் அவர்களின் கையை முறித்துவிடுவோம். பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்.

    ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்துகிறது.
    • காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும்

    ஜம்மு காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதம் ஒரு சட்டபூர்வமான போராட்டம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தெரிவித்துள்ளார்.

    கராச்சியில் உள்ள கடற்படை அகாடமியில் நடந்த விழாவில் பேசிய முனீர் "இந்தியா பயங்கரவாதம் என்று அழைப்பது உண்மையில் ஒரு சட்டபூர்வமான சுதந்திரப் போராட்டமாகும்.

    சர்வதேச சட்டம் அதை அங்கீகரிக்கிறது. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்தும் முயற்சிகள் இந்த இயக்கத்தை மேலும் முக்கியத்துவப்படுத்த மட்டுமே உதவும்" என்று கூறினார்.

    காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்றும் முனீர் கூறினார். இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்ப்பதன் மூலம் பாகிஸ்தான் தன்னை நிரூபித்துள்ளதாகவும் முனீர் தனது உரையில் கூறினார்.

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 2019 பாலகோட் தாக்குதலையும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூரையும் முனீர் குறிப்பிட்டார்.

    • பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைமையில் பாகிஸ்தானுக்கு இடம்.
    • அமெரிக்காவில் 9/11 இரட்டை தாக்குதலின் மூளையாக இருந்தவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது.

    பயங்கரவாதம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) சில முடிவுகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    நேற்று டேராடூனில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தானின் பயங்கரவாத நிலைப்பாட்டையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் பாகிஸ்தானுக்கு துணை இருக்கை அளித்ததையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

    " அமெரிக்காவில் 9/11 இரட்டை தாக்குதலின் மூளையாக இருந்தவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது அனைவருக்கும் தெரியும்," என்று கூறிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை "பயங்கரவாதத்தின் தந்தை" என்று தெரிவித்தார். எனவே "இது பாலை பாதுகாக்க பூனையை காவல் வைப்பது போன்றது" என்று கூறினார். 

    பயங்கரவாதத்திற்கு நிதி அளித்து, புகலிடம் அளிக்கும் நாடுகளை அம்பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐ.நா. உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும், சமீபத்திய ஆண்டுகளில் ஐ.நா. எடுத்த பல முடிவுகள் கேள்விக்குறியாகிவிட்டன என்றும் அவர் கூறினார். 

    • இந்தியாவின் வெற்றிகளில் சிறந்தது ஆபரேஷன் சிந்தூர்.
    • ஆபரேஷன் சிந்தூர் பெண்கள் சக்திகளின் உதாரணமாகும்.

    போபால்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய பிரதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலை 11.30 மணியளவில் அவர் போபாலில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் லோக மாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    விழா நடைபெறும் இடத்துக்கு மோடி காரில் ஊர்வலமாக வந்தார். அங்கு திரண்டு இருந்த மக்கள் தேசிய கொடியுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குங்குமப்பூ கலர் சேலை அணிந்த 15 ஆயிரம் பெண்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மோடிக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    அஹில்யா பாய் நினைவு அஞ்சல் தலையையும், சிறப்பு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். ரூ.300 மதிப்புள்ள அந்த நாணயம் ஹோல்கரின் உருவப்படத்தை கொண்டது.

    பழங்குடியினர், நாட்டுப்புறக்கலை, பாரம்பரிய கலைகள் ஆகியவற்றின் பங்களிப்புக்காக பெண் கலைஞர் ஒருவருக்கு தேவி அஹில்யா பாய் தேசிய விருதினையும் மோடி வழங்கினார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மத்திய பிரதேசத்தில் இன்று பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மாநிலத்தின் வசதிகளை அதிகரிக்கும். வளர்ச்சியை துரிதப்படுத்தும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

    அஹில்யா பாய் எங்களுக்கு எல்லாம் உத்வேகம் அளித்தார். இந்தியாவின் சக்தி பெண்கள். நான் அவர்களை மதிக்கிறேன்.

    அஹில்யாபாய் பழங்குடி சமூகத்திற்காக காலி நிலத்தில் விவசாயம் செய்வதற்கான கொள்கையை உருவாக்கினார். இந்தியாவின் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு பழங்குடி மகளின் வழிகாட்டுதலின் கீழ் எனது பழங்குடி சகோதர-சகோதரிகளுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்.

    ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அதிகாரத்துக்கான அடையாளமாகும். அது தற்போது வீரத்துக்கான அடையாளமாக மாறி விட்டது. தீவிரவாதிகளுக்கு பெண்கள் சக்தி சவாலாக இருந்தது.

    இந்தியாவின் வெற்றிகளில் சிறந்தது ஆபரேஷன் சிந்தூர். ஆபரேஷன் சிந்தூர் பெண்கள் சக்திகளின் உதாரணமாகும். தீவிரவாதிகள் இந்தியாவை துண்டாக்க முயற்சி செய்தனர். இதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது.

    எங்களை காயப்படுத்த முயற்சிப்பவர்கள் பாதிப்புகளை சந்திப்பார்கள். எங்கள் மீது தோட்டாக்களை வீசினால், நாங்கள் தோட்டாக்களால் பதிலடி கொடுப்போம் என்று 140 கோடி இந்தியர்கள் கர்ஜிக்கிறார்கள்.

    நீங்கள் ஒரு தோட்டாவை வீசினால் அதற்கு பீரங்கி குண்டு மூலம் பதிலடி கொடுப்போம். ஆபரேஷன் சிந்தூர் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாகும். பயங்கரவாத எதிர்ப்புக்கு மிகப்பெரிய வெற்றிகரமான நடவடிக்கையாகும்.

    பயங்கரவாதிகள் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்கள் இனி பொறுத்துக் கொள்ளப்படாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் சத்தமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியுள்ளது. இப்போது அவர்களின் (பயங்கரவாதிகள்) மறைவிடங்களுக்குள்ளும் கூட நாங்கள் தாக்குவோம். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

    ஜம்முவில் இருந்து குஜராத் எல்லை வரை பல பெண் பி.எஸ்.எப் (எல்லை பாதுகாப்பு படை) வீராங்கனைகள் எல்லையை பாதுகாப்பதில் முன்னணியில் இருந்தனர். எல்லைக்கு அப்பால் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அவர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

    இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    மேலும் பிரதமர் மோடி தாத்தியா, சத்னா விமான நிலையங்களையும் , இந்தூர் மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் உயர் முன்னுரிமை சேவைகளையும் தொடங்கி வைத்தார். ரூ.480 கோடி மதிப்பில் 1271 அடல் கிராம நல் ஆளுமை பவன்கள் கட்டுவதற்கான முதல் தவணைத் தொகையையும் வழங்கினார்.

    இந்தக் கட்டிடங்கள் கிராம பஞ்சாயத்துகளுக்கு நிரந்தர கட்டுமானங்களாக இருக்கும். இந்த வசதியானது நிர்வாக செயல்பாடுகள், கூட்டங்கள் நடத்துதல், ஆவணங்களைப் பாதுகாத்தல் போன்றவற்றுக்கு பஞ்சாயத்துகளுக்கு உதவியாக இருக்கும்.



    • கிழக்கு என்றால் அதிகாரம் அளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றம் என்று பொருள்.
    • கடந்த10 ஆண்டுகளில் வடகிழக்கில் கல்வித்துறையில் ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று முன்னேறி வரும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வடகிழக்கு நமது நாட்டின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாகும். வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, வடகிழக்கின் பன்முகத்தன்மை அதன் பலமாக இருந்து வருகிறது.

    வடகிழக்கு என்றால் உயிரியல் பொருளாதாரம், மூங்கில், தேயிலை உற்பத்தி, பெட்ரோலியம், விளையாட்டு, திறன், சுற்றுச்சூழல் சுற்றுலாவின் வளர்ந்து வரும் மையம் மற்றும் கரிமப் பொருட்களுக்கான புதிய உலகம் ஆகும்.

    அது ஆற்றலின் சக்தி மையமாக உள்ளது. வடகிழக்கு நமக்கு அஷ்டலட்சுமி போன்றது.

    எங்களுக்கு கிழக்கு என்பது வெறும் திசையல்ல. கிழக்கு என்றால் அதிகாரம் அளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றம் என்று பொருள்.

    ஒரு காலத்தில் வடகிழக்கு ஒரு எல்லைப் பகுதி மட்டுமே என்று அழைக்கப்பட்டது. இன்று அது வளர்ச்சியின் முன்னணியில் மாறி வருகிறது. அங்கு சிறந்த உள்கட்டமைப்பு சுற்றுலாவை கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது.

    வடகிழக்கில் ஒரு உள்கட்டமைப்பு புரட்சியை நாங்கள் தொடங்கினோம். அது இப்போது வாய்ப்புகளின் பூமியாக மாறி வருகிறது. வடகிழக்கு பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

    அதன் வளர்ச்சியை விரைவுபடுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த10 ஆண்டுகளில் வடகிழக்கில் கல்வித்துறையில் ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, நக்சலிசமாக இருந்தாலும் சரி, எங்கள் அரசு சகித்து கொள்ளாது. வடகிழக்கு முன்பு குண்டுகள், துப்பாக்கிகள், ராக்கெட்டுகளுக்கு இடையே இருந்தது. அவை அங்குள்ள இளைஞர்களிடமிருந்து பல வாய்ப்புகளைப் பறித்தன. கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வன்முறையை கைவிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நமது நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.
    • நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்கும் வகையில் திமுக எப்போதும் பாடுபடும்.

    பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில், ஈடுபட 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

    அதன்படி, பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துரைக்க கனிமொழி தலைமையில் குழு ரஷ்யா, ஸ்பெயின் செல்ல உள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க. எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நமது நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.

    நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்கும் வகையில் திமுக எப்போதும் பாடுபடும்.

    ஒத்துழைப்பு நல்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொறுப்பு தந்த பிரதமர் மோடி, அமைச்ர் உள்ளிட்டோருக்கு நன்றி.

    நாட்டின் நலனை பொறுத்தவரை நாங்கள் ஒற்றுமையாக, உறுதியாக, தெளிவாக, அசைக்க முடியாதவர்களாக நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
    • சண்டடை நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

    பின்னர், இருநாடுகளும் சண்டையை கைவிடுவதாக அறிவித்தன.

    இந்நிலையில், சண்டை நிறுத்தம் குறித்து மத்திய வௌியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ தாக்குதல்களை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

    பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இந்தியா சமரசமின்றி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது இனியும் தொடரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமெரிக்க-இந்திய கூட்டறிக்கையில் தவறான குறிப்புகள் இருப்பதாக அதிருப்தி குறித்து தெரிவிக்கப்பட்டது.
    • இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக மாற்றியுள்ளது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சென்ற வாரம் அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டார். அப்பொது அவரும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத ஆதரவிற்கு எதிராக ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

    நேற்று மாலை அமெரிக்க துணைத் தூதர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஜூன் 22ம் தேதி அமெரிக்க-இந்திய கூட்டறிக்கையில், தேவையற்ற, ஒருதலைப்பட்சமான மற்றும் தவறான குறிப்புகள் இருப்பதாகவும், அதுகுறித்து பாகிஸ்தானின் கவலைகள் மற்றும் அதிருப்தி குறித்து தெரிவிக்கப்பட்டது என பாகிஸ்தான் தெரிவித்தது.

    பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு நன்றாக முன்னேறி வருவதாகவும், பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த, பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை மையமாகக் கொண்ட சூழலை உருவாக்குவது அவசியம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையானது, பாகிஸ்தானை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக சித்தரித்துள்ளது என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

    வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் இன்று 4 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    வடமேற்கு பாகிஸ்தானில் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜிரிஸ்தான், தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் பஜவுர் பழங்குடியின மாவட்டங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தது.

    இதில், வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரஸ்மாக் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானா என்கிற பகுதியில், பழங்குடியின முதியவர் அஸ்லாம் நூர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் உள்ளூர் கடைக்காரர் ஒருடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

    பஜவுர் பழங்குடியினர் மாவட்டத்தில், இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உள்ளூர் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவரின் தந்தை உள்பட மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதில், பெரும்பாலும் பொதுமக்களும் அவர்களின் இலக்குகளாக மாறியுள்ளனர்.

    • பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம்மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தப்பிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் டிரோன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மூன்று நாட்களில் 3-வது முறையாக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, கதுவாவில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மற்றொரு சம்பவத்தில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாதவரை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது என தெரிவித்தார்.

    ×