search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ethiopia"

    எத்தியோப்பியா நாட்டில் சாலையில் சென்ற பஸ் கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணித்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #EthiopiaBusAccident
    அடிஸ் அபாபா:

    ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

    மேலும், 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    எத்தியோப்பியா நாட்டில் சாலைகளை முறையாக பராமரிக்கப்படாததாலும், வாகனங்களை முறையான பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வருவதாலும் விபத்துக்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    #EthiopiaBusAccident
    எத்தியோப்பியாவில் இந்திய பிணைக்கைதிகள் இருவரின் உடல் நிலையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதின் காரணமாக அவர்கள் இருவரையும் உள்ளூர் தொழிலாளர்கள் நேற்று விடுவித்தனர். #Ethiopia #IndianEmployees #Released
    மும்பை:

    ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ‘இன்பிராஸ்டிரக்சர் லீசிங் அண்ட் பினான்சியல் சர்வீசஸ்’ என்ற இந்திய நிறுவனம் அந்நாட்டில் பல்வேறு கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனம் திடீரென நலிந்து போனதால் அதன் துணை நிறுவனங்களில் பணிபுரியும் எத்தியோப்பிய தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஒரோமியா மற்றும் அம்ஹாரா ஆகிய மாகாணங்களில் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் 7 பேரை உள்ளூர் தொழிலாளர்கள் பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டனர். தங்களுக்கு சம்பளம் கிடைத்தால் மட்டுமே அவர்களை விடுவோம் என்றும் கூறி வருகின்றனர்.

    இதனிடையே இந்திய தொழிலாளர்கள் 7 பேரும் போதிய உணவு வழங்கப்படாததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதில் ஹரிஷ் பாந்தி, பாஸ்கர் ரெட்டி என்னும் இருவரின் உடல் நிலையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் உள்ளூர் தொழிலாளர்கள் நேற்று விடுவித்தனர். இருவரும் சிகிச்சைக்காக தலைநகர் அடிஸ் அபாபா நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதுபற்றி எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஹரிஷ் பாந்தி, பாஸ்கர் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் மற்ற 5 பேரும் தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். 
    எத்தியோப்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த படைவீரர்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டைர் டிவா நகரில் இருந்து பிஷோவ்ட் நகர் நோக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 15 படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 18 பேர் பயணம் செய்தனர்.

    ஒரோமியா பகுதியில் வந்தபோது, ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 18 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    ஹெலிகாப்டர் விபத்து குறித்து அந்நாட்டு ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. #Accident
    எத்தியோப்பியாவில் சிமெண்ட் ஆலையில் பணியாற்றும் இந்திய உயர் அதிகாரி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #EthiopiaViolence #IndianExecutiveKilled
    அடிஸ் அபாபா:

    நைஜீரியாவை தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனமான டாங்கோட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலை எத்தியோப்பியாவில் உள்ளது. இதன் மேலாளராக இந்தியாவைச் சேர்ந்த தீப் கம்ரா பணியாற்றி வந்தார்.

    நேற்று மாலை அடிஸ் அபாபாவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து தீப் கம்ரா, இரண்டு ஊழியர்களுடன் வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் தீப் கர்மா, அவரது உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உதவியாளர் மற்றும் கார் டிரைவர் இருவரும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

    அடிஸ் அபாபா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. பிப்ரவரி மாதம் பிரதமர் ராஜினாமா செய்ததையடுத்து நாட்டில் அவசர நிலையும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  #EthiopiaViolence #IndianExecutiveKilled
     
    ×