எத்தியோப்பியாவின் உயரிய விருது வாங்கிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் மோடியே.
எத்தியோப்பியாவின் உயரிய விருது வாங்கிய பிரதமர் மோடி
Published on

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்கு சென்றவர் அங்கிருந்து நேற்று எத்தியோப்பியா சென்றைடைந்தார். அங்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி அவரை வரவேற்றார்.

பின்னர் ஒருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதாரம், தொழில் நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை குறித்து நீண்டது பேச்சு. எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க இந்தியா முடிவு செய்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின், தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் இந்த விருதை மோடிக்கு அளித்தார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் மோடியே ஆவார். 

X

Maalai Malar
www.maalaimalar.com