என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எத்தியோப்பியாவில் சிமெண்ட் ஆலையின் இந்திய உயர் அதிகாரி சுட்டுக்கொலை
Byமாலை மலர்17 May 2018 9:47 AM GMT (Updated: 17 May 2018 9:47 AM GMT)
எத்தியோப்பியாவில் சிமெண்ட் ஆலையில் பணியாற்றும் இந்திய உயர் அதிகாரி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #EthiopiaViolence #IndianExecutiveKilled
அடிஸ் அபாபா:
நைஜீரியாவை தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனமான டாங்கோட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலை எத்தியோப்பியாவில் உள்ளது. இதன் மேலாளராக இந்தியாவைச் சேர்ந்த தீப் கம்ரா பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை அடிஸ் அபாபாவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து தீப் கம்ரா, இரண்டு ஊழியர்களுடன் வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் தீப் கர்மா, அவரது உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உதவியாளர் மற்றும் கார் டிரைவர் இருவரும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
அடிஸ் அபாபா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. பிப்ரவரி மாதம் பிரதமர் ராஜினாமா செய்ததையடுத்து நாட்டில் அவசர நிலையும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #EthiopiaViolence #IndianExecutiveKilled
நைஜீரியாவை தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனமான டாங்கோட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலை எத்தியோப்பியாவில் உள்ளது. இதன் மேலாளராக இந்தியாவைச் சேர்ந்த தீப் கம்ரா பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை அடிஸ் அபாபாவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து தீப் கம்ரா, இரண்டு ஊழியர்களுடன் வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் தீப் கர்மா, அவரது உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உதவியாளர் மற்றும் கார் டிரைவர் இருவரும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
அடிஸ் அபாபா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. பிப்ரவரி மாதம் பிரதமர் ராஜினாமா செய்ததையடுத்து நாட்டில் அவசர நிலையும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #EthiopiaViolence #IndianExecutiveKilled
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X