என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Pakistan Conflict"

    • இந்தியாயாவும் பாகிஸ்தானும் இப்போது ஒன்றாக ஒரு நல்ல இரவு உணவை அனுபவிக்கலாம்.
    • மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும்.

    மத்திய கிழக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் உரையாற்றினார்.

    அப்போது "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது" என்று அவர் கூறினார். ஏற்கனவே 2 முறை டிரம்ப் இவ்வாறு பேசியது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தற்போது மீண்டும் இதுபற்றி பேசிய டிரம்ப், "நாம் வர்த்தகம் செய்வோம் என்று நான் சொன்னேன். இரு நாடுகளிலும் வலுவான, செல்வாக்கு மிக்க புத்திசாலி தலைவர்கள் உள்ளனர்.

    எல்லாம் நின்றுவிட்டது, நிலைமை அமைதியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் இப்போது ஒன்றாக ஒரு நல்ல இரவு உணவை அனுபவிக்கலாம். அவர்கள் ஏவுகணைகளுக்குப் பதிலாக பொருட்களை வர்த்தகம் செய்ய வேண்டும். பதற்றம் மேலும் அதிகரித்திருந்தால், மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக வர்த்தகத்தில் கை வைப்பேன் என்று மிரட்டி டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் குறித்து எதுவும் பேசவில்லை என இந்தியா மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    • துருக்கிய ஆப்பிள்களின் பருவகால வர்த்தகம் ரூ.1,000 முதல் ரூ.1,200 கோடி வரை இருக்கும்.
    • சில்லறை விற்பனை மட்டத்தில் தடையை வலுப்படுத்துகின்றனர்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களுக்கு மத்தியில் துருக்கிக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன. ஆயுதங்கள் வழங்குவது உட்பட பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படுவதால் 'துருக்கியைத் தடை செய்' என்ற ஹஷ்டேக் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது. 

    இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை கைவிட்டுள்ளனர். இதன் விளைவாக துருக்கிய ஆப்பிள்கள் புனே சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன.

    துருக்கிய ஆப்பிள்களைப் புறக்கணிப்பது புனேவின் பழச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    பொதுவாக, துருக்கிய ஆப்பிள்களின் பருவகால வர்த்தகம் ரூ.1,000 முதல் ரூ.1,200 கோடி வரை இருக்கும், ஆனால் இந்த புறக்கணிப்பு இந்த வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.

    புனேவின் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (APMC) ஆப்பிள் வர்த்தகரான சுயோக் ஜெண்டே, "துருக்கியிலிருந்து ஆப்பிள்களை வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம், அதற்கு பதிலாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஈரான் மற்றும் பிற பகுதிகளிலிருந்து ஆப்பிள்களை வாங்க முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.

    வணிகர்களுக்கு மட்டுமல்ல, நுகர்வோரும் இந்தப் புறக்கணிப்பில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். துருக்கிய ஆப்பிள்களுக்கான தேவை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரி ஒருவர் தெரிவித்தார். "நுகர்வோர் துருக்கிய தயாரிப்புகளைத் தீவிரமாகத் தவிர்த்து வருகின்றனர், சில்லறை விற்பனை மட்டத்தில் தடையை வலுப்படுத்துகின்றனர்" என்று அவர் மேலும் கூறினார்.

    • ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப்பை பயன்படுத்தி தாக்கியது.
    • போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

    இதற்கிடையே கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை தாக்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு கூறுகிறது.

    முப்படைகள் இணைந்து நடத்திய இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் வான்படை சார்பில் ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

     இதற்கிடையே பாகிஸ்தான் கூற்றுப்படி, அந்நாட்டு ராணுவம், 3 ரஃபேல் விமானங்களையும், 2 ஜெட் ரக விமானங்களையும் தாக்கி அழித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் பார்தி, சண்டையில் இழப்புகள் சகஜம் என்று பொத்தாம்பொதுவாக பதில் கூறினார். மேலும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதலில் இறங்கியது. தொடர்ந்து சர்வதேச தலையீட்டின் பின் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது என்று கூறப்படுவதன் காரணமாக அவ்விமானங்களை தயாரிக்கும் பிரான்ஸை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த நாள், மே 8 அன்று, ஐரோப்பிய பங்குச்சந்தையில் டசால்ட் பங்குகள் 1.75 சதவீதம் உயர்ந்தன.

    ஆனால் அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் ரஃபேலை வீழ்த்தியதாக கூறப்படுவதன் காரணமாக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. குறிப்பாக திங்களன்று(மே 12 அன்று) , இந்த நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் சரிவைக் கண்டன. அன்றைய தினம் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் சுமார் 292 யூரோக்களாக இருந்தது. நாள் முழுவதும் அது 291 யூரோக்களுக்கும் 295 யூரோக்களுக்கும் இடையில் ஏற்ற இறக்கமாக இருந்தது.

    ஒருபுறம், ரஃபேல் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்ட அதே நேரத்தில், J-10 போர் விமானங்களை தயாரிக்கும் சீன நிறுவனமான செங்டு விமானக் கார்ப்பரேஷன் (CAC) பங்கு விலை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.

    திங்களன்று (மே 12 அன்று) CAC நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தன. நிறுவனத்தின் பங்கு மதிப்பு 95.86 சீன யுவானை எட்டியது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் அதிகமாகும். சீனாவின் இந்த J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது. இந்த J-10 மூலமே 3 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியதாக கூறப்படுகிறது.  

    • காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
    • அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம்.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    முன்னதாக இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது. இந்த கருத்தை பாகிஸ்தான் மந்திரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், அணு ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிடவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து தற்காப்புக்காக தாக்குதல்களைத் தொடங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் வழக்கமான திறன்கள் போதுமான அளவு வலுவாக இருப்பதால், தாக்குதலை வான்வழியாகவும் தரைவழியாகவும் முறியடிப்போம் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். இந்தியாவைத் தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை பாகிஸ்தான் பரிசீலிக்கவில்லை.

    இந்தியாவின் தாக்குதல்கள் ஒரு போர் ஆகும். நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியா அதன் மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான நீண்டகால பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதில் முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இரு தரப்பினருக்கும் கண்ணியத்தை வழங்கும் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பாதையை நிறுவ பாகிஸ்தான் ஆவலுடன் இருக்கிறது. காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை. அனைத்து வடிவங்களிலும் அனைத்து வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை நாங்கள் கண்டித்து வருகிறோம். வரவிருக்கும் பேச்சு வார்த்தைகளில் நீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்றார்.

    • ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • மோடி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின் நடந்ததாக கூறப்பட்டது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் (DGMO) இடையேயான பேச்சுவார்த்தை நேற்று மாலை நடந்தது.

    அதில், இரு தரப்பிலும் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்து பேசப்பட்டு, இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

    எல்லைகளில் படை வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவில் ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற டிரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    டிரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் வெடிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில் டிரோன்கள் ஊடுவருவல் முயற்சியில் ஈடுப்பட்டதாக பரபரப்பு கிளம்பியது.

    இந்நிலையில் இந்திய எல்லைக்குள் தற்போது பாகிஸ்தான் டிரோன்கள் எதுவும் தாக்கவில்லை என்றும், நிலைமை அமைதியாகவும் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

    • நீங்கள் பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்கப் போகிறீர்களா?
    • 19 நாட்களாக பாகிஸ்தானின் காவலில் இருக்கும் நமது BSF ஜவான் பூர்ணம் சாஹுவை எப்போது திரும்ப அழைத்து வருவோம்?

    26 பொதுமக்கள் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் மேற்கொண்ட  ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று இரவு உரையாற்றினார்.

    இதில்," இந்தியாவின் தாக்குதலை தாங்க முடியாமல் உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அணுகுமுறையைப் பொறுத்து அடுத்த முடிவு இருக்கும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக இருக்க முடியாது, இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது" என்று மோடி பேசினார்.

    இந்நிலையில் மோடியின் உரையில் இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    மோடியின் உரை குறித்து காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் தனது எக்ஸ் பதவில், "பிரதமர் மோடி தனது 22 நிமிட உரையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது விவாதிக்காத விஷயங்கள் இவைதான்.

    ▪️அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்டதாக டிரம்ப் ஏன் திரும்பத் திரும்பக் கூறுகிறார்; இன்று அவர் வர்த்தகத்தை காரணம் காட்டி உங்களை மிரட்டியதாகக் கூடச் சொன்னார். இது உண்மையா?

    ▪️இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தபோது, நமது ராணுவத்தின் ஆக்ரோஷமான நடவடிக்கையால் பாகிஸ்தான் பதறிப்போனதாக நீங்களே சொன்னீர்கள், பிறகு ஏன் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டீர்கள்?

    ▪️காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது குறித்து நீங்கள் எதுவும் கூறவில்லை. அமெரிக்க தலையீட்டை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

    ▪️இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களின் சந்திப்பு, பேச்சுவார்த்தை மூன்றாவது நாட்டில் நிகழும் என்ற அமெரிக்க அறிக்கை குறித்தும் நீங்கள் அமைதியாக இருந்தீர்கள். நீங்கள் பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்கப் போகிறீர்களா? பாகிஸ்தானுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தப் போகிறீர்களா?

    ▪️பாகிஸ்தானில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்களை நமது இராணுவம் நிச்சயமாக அழித்துவிட்டது. ஆனால் பஹல்காமில் கொடூரமான கொலையைச் செய்த பயங்கரவாதிகள் எங்கே?

    ▪️முழு நாடும் எதிர்க்கட்சியும் உங்களுடன் இருந்தபோது, நீங்கள் ஏன் பாகிஸ்தானை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) இருந்து விரட்டவில்லை?

    ▪️ 19 நாட்களாக பாகிஸ்தானின் காவலில் இருக்கும் நமது BSF ஜவான் பூர்ணம் சாஹுவை எப்போது திரும்ப அழைத்து வருவோம்?

    ▪️கடைசியாக ஒரு கேள்வி, பஹல்காமில் இவ்வளவு பெரிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடு எப்படி ஏற்பட்டது? இதற்கு நீங்க பொறுப்பா அல்லது உள்துறை அமைச்சரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும் பிரதமர் உரையில் இடம்பெற்ற மற்ற அனைத்தும் அர்த்தமற்றவை என்றும் தெரிவித்துள்ளார். 

    • பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவுக்கும், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே கையெழுத்தானது.
    • ஒரு அமெரிக்கத் தலைவர் பகிரங்கமாக முன்வந்து இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை.

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி(எஸ்.பி.) தலைவர் சரத் பவார் சந்தேகங்களை முன்வைத்துள்ளார்.

    அவர் கூறியதாவது, சிம்லா ஒப்பந்தம் (1972 இந்தோ - பாக் போர் நிறுத்த ஒப்பந்தம்) அப்போதைய பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவுக்கும், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தம் மூன்றாம் தரப்பு தலையீட்டை தெளிவாக நிராகரித்தது. ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இல்லாமல் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.

    பிறகு ஏன் மற்றவர்கள் தலையிட வேண்டும்?. இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஏன் அனுமதிக்கப்பட்டது? இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.  ஒரு அமெரிக்கத் தலைவர் பகிரங்கமாக முன்வந்து இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை. இது சரியான அணுகுமுறை அல்ல" என்று தெரிவித்தார்.

    மேலும் ராணுவ தாக்குதல் என்பது சாதாரண விஷயம் அல்ல. அனைத்து தகவல்களையும் ஊடகங்களில் வெளியிட முடியாது. சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை விட அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவது சிறந்தது என்பதே என் கருத்து" என்று தெரிவித்தார். 

    • போர் என்பது காதல் சார்ந்த விஷயம் அல்ல.
    • இது 'போஸ்ட் டிராமாடிக் ஸ்ட்ரெஸ் கோளாறு' (PTSD) என்று அழைக்கப்படுகிறது.

    3 நாட்கள் தொடர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடவையிலான சண்டை நேற்று முன் தினம் (சனிக்கிழமை) மாலை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு முன்னாள் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நேற்று புனேவில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு அவர் பேசியது வைரலாகி வருகிறது.

    மனோஜ் முகுந்த் பேசுகையில், "பயங்கரவாதப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கான விலை மிக அதிகமாக இருக்கும் என்பதைப் பாகிஸ்தானுக்கு நாங்கள் நிரூபித்துள்ளோம் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    போர் மற்றும் அதன் விளைவுகள் குறித்து பேசிய அவர், "இரவில் குண்டுகள் விழும்போது, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பாக குழந்தைகள், தங்குமிடங்களை நோக்கி ஓட வேண்டியிருக்கும் போது, அந்த அனுபவம் அவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    எந்தக் குழந்தையால்தான் பெற்றோரை இழந்த வலியையும், இதுபோன்ற அழிவையும் மறக்க முடியும் என்று அவர் கூறினார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு, அந்த வலி வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

    அதை அவர்களால் ஒருபோதும் மறக்க முடியாது . இது 'போஸ்ட் டிராமாடிக் ஸ்ட்ரெஸ் கோளாறு' (PTSD) என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற கொடூரமான காட்சிகளைக் காணும் மக்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் தூக்கத்தில் இருந்து பயத்துடன் விழைகின்றனர்.

    போர் என்பது காதல் சார்ந்த விஷயம் அல்ல. இது உங்களின் வழக்கமான பாலிவுட் படம் இல்ல. இது ஒரு தீவிரமான விஷயம். போர் அல்லது வன்முறை கடைசி ஆப்ஷனாக இருக்க வேண்டும். பகுத்தறிவற்ற மக்கள் நம் மீது போரை திணித்தாலும், நாம் அதை வரவேற்கக்கூடாது.

    ராஜதந்திரம், உரையாடல் மூலம் வேறுபாடுகளைத் தீர்ப்பதும், ஆயுத மோதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதும் அவசியம். நாடுகளுக்கு இடையே மட்டுமல்ல, நமக்குள்ளும், நமது குடும்பங்கள், மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களுக்குள்ளும் உள்ள வேறுபாடுகளை உரையாடல் மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது" என்று அவர் கூறினார். 

    • ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ட்ரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் (DGMO) இடையேயான பேச்சுவார்த்தை இன்று மாலை நடந்தது.

    அதில், இரு தரப்பிலும் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்து பேசப்பட்டு, இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

    எல்லைகளில் படை வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ட்ரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் வெடிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில் ட்ரோன்கள் ஊடுவருவல் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது.
    • இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர்கள் (DGMO) மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புதல்.

    இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

    ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.

    4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.

    தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது,

    இந்நிலையில், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை தொடங்கியது.

    இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே 2வது முறையாக ராணுவ இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது, இந்திய - பாக். எல்லையில் வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்ய, உடனடி நடவடிக்கைகளை பரிசீலிக்க இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர்கள் (DGMO) மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரு தரப்பிலும், ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்தும் இன்றைய பேச்சுவார்த்தையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம் என டிரம்ப் கூறினார்.
    • பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

    இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய பல கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரதமர் மோடி தனது இன்றைய உரையில் அது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.

    இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    மேலும் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு, காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என ட்ரம்ப் கூறியது தொடர்பாக பிரதமர் தனது உரையில் எதுவும் பேசவில்லை.

    மூன்றாம் தரப்பின் தலையீடு கூடாது என்ற இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாட்டை மோடி வெளிப்படையாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக மூச்சு கூட காட்டவில்லை. 

    • இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம்.
    • இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம்.

    இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்த் அவர் கூறியதாவது:-

    இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்த போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோவுக்கு நன்றி.

    இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம். வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை.

    இந்தியாவுடன் தற்போது வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை மற்றும் சக்தி வாய்ந்தவை. உண்மையில் இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.

    ×