என் மலர்
நீங்கள் தேடியது "India Pakistan Conflict"
- ஒவ்வொருவரும் நான் இந்த சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் நோபல் அமைதிப் பரிசு பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
- ஐக்கிய நாடுகள் சபை இதைச் செய்யாததால் நான் இந்த விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தது மிகவும் வருத்தமானது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "வெறும் ஏழு மாத காலப்பகுதியில், நான் ஏழு முடிவற்ற போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
இதில் கம்போடியா மற்றும் தாய்லாந்து, கொசோவோ மற்றும் செர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, மற்றும் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவை அடங்கும்.
எந்த அதிபரும், பிரதமரும், அல்லது வேறு எந்த நாடும் இதைப் போல் எதையும் செய்ததில்லை. நான் இதை வெறும் ஏழு மாதங்களில் செய்தேன். இது இதற்கு முன் நடந்ததில்லை.
இதைச் செய்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஐக்கிய நாடுகள் சபை இதைச் செய்யாததால் நான் இந்த விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தது மிகவும் வருத்தமானது.
ஒவ்வொருவரும் நான் இந்த சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் நோபல் அமைதிப் பரிசு பெற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் எனக்கு, உண்மையான பரிசு, முடிவில்லாத போர்களில் கொல்லப்படுவதற்கு பதிலாக தங்கள் தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுடன் வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் தான்"என்று தெரிவித்தார்.
- இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படாமல் போர் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
- கடந்த காலத்தில் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களால் தங்கள் நாடு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தது என்று தெரிவித்தார்.
கஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணப்படாமல், இந்தியாவுடனான இயல்பான உறவு பகல் கனவாகவே இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக லண்டனில் சென்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் , வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களிடையே நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, "இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் சேர்ந்து வாழ வேண்டும். ஆனால் காஷ்மீர் மக்களின் தியாகங்கள் வீணாகக் கூடாது. அவர்களின் இரத்தம் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் வரை அமைதி சாத்தியமில்லை. இந்தியா ஒத்துழைப்புடன் செயல்படாமல் போர் மனப்பான்மையுடன் செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த காலத்தில் இந்தியாவுடன் நடந்த நான்கு போர்களால் தங்கள் நாடு பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தது என்று குறிப்பிட்ட ஷெபாஸ் ஷெரீப், அந்தப் பணத்தை பாகிஸ்தான் மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக செலவழித்திருந்தால், நாடு அதிகம் வளர்ந்திருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அன்புடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டுமா அல்லது சண்டையிலேயே தொடர வேண்டுமா என்பது நம் கைகளில்தான் உள்ளது.
காஷ்மீர் மற்றும் காசா ஆகிய இரண்டு பிரச்சினைகளிலும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
- சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் செய்யப்பட்டது.
- ஐ. நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் எழுப்பி இருந்தது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் இவ்விவகாரத்தை அடிக்கடி ஐ.நா.சபையில் பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது.
இந்த நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து விவகாரத்தை ஜெனீவாவில் உள்ள ஐ. நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் எழுப்பி இருந்தது.
இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து இருக்கிறது. இதுதொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்திய தூதர் அனுபமா சிங் பேசியதாவது:-
மனித உரிமைகள் கவுன்சிலின் நடவடிக்கைகளை அரசியலாக்க ஒரு குறிப்பிட்ட நாடு தொடர்ச்சியாகவும் வேண்டுமென்றே முயற்சிப்பதில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
இதுபோன்ற நடவடிக்கைகள் இந்த கவுன்சிலின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதாகவும் உள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் முக்கிய கொள்கைகளை வேண்டுமென்றே மீறுகிறது. பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் கூடிய எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாகவே சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
நீடித்த ஒத்துழைப்பு என்பதுபயங்கரவாதத்தில் இல்லை. அது நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. எனவே இந்த கவுன்சில் தன்னை திசைதிருப்பல் மற்றும் திரிபுபடுத்தலுக்கான தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. சிந்து நதி நீர் ஒப்பந்த பிரச்சினையை எழுப்புவதன் மூலம் இந்த மன்றத்தை பாகிஸ்தான் அரசியலாக்க முயற்சிக்கிறது. ஐ.நா.சபையை தவறாக பயன்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவர்கள் போர் வேண்டாம் என்று கைவிட்டார்கள்.
- 7 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தின.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போர் உட்பட ஏழு போர்களை தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த ஏழு போர்களில் நான்கு போர்களை, வரி விதிப்பு மற்றும் வர்த்தகத்தைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
டிரம்ப் பேசுகையில், "நான் அவர்களிடம்வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து போரிட்டால், உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்ய மாட்டோம், மேலும் 100% வரி விதிப்போம் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அனைவரும் போர் வேண்டாம் என்று கைவிட்டார்கள்" என்று கூறினார்.
மேலும், "நான் இந்த எல்லாப் போர்களையும் நிறுத்தியுள்ளேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பெரிய போர் ஏற்பட்டிருக்க வேண்டியது!
அது அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும். இரு நாடுகளும் 7 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தின. 24 மணி நேரத்திற்குள் சண்டையை நிறுத்தவில்லை என்றால் வர்த்தகம் நிறுத்தப்படும் என்று நான் எச்சரித்ததால்தான் போர் நின்றது" என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் எந்த நாட்டு ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது என்று அவர் குறிப்பிடவில்லை.
- உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இந்திய எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம்.
- அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் இந்தியாவுடன் மட்டும் நிற்கவில்லை.
டெல்லியில் நடந்த 'எகனாமிக் டைம்ஸ் வேர்ல்ட் லீடர்ஸ் ஃபோரம் 2025' நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு குறித்து பேசிய ஜெய்சங்கர், "நாட்டின் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் நலன்கள் தான் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்.
விவசாயிகளின் நலன்களில் சமரசத்திற்கு இடமில்லை. இந்திய தயாரிப்புகளை வாங்க அமெரிக்காவை யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இந்திய எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் மோதலை சமரசம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கூற்றையும் ஜெய்சங்கர் நிராகரித்தார். 1971 இந்தோ-பாக் போர் முதல் கடந்த 50 வருடங்களாக இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று அவர் கூறினார்.
மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து விமர்சித்த ஜெய்சங்கர், அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் இந்தியாவுடன் மட்டும் நிற்கவில்லை. அதிபர் டிரம்ப் உலகைக் கையாளும் விதம், தனது சொந்த நாட்டைக் கையாளும் விதம் கூட, பாரம்பரிய மரபுவழியில் இருந்து மிகப் பெரிய அளவில் விலகிச் செல்வதாக தெரிவித்தார்.
- ஒருவேளை இது எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
- ஈரானின் எதிர்கால அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம்
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் 7 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போர் எப்போது முடிவடையும் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் போர் முடிவடையும். புதின் அதை முடிக்க விரும்புகிறார். முழு உலகமும் இதனால் சோர்வடைந்துவிட்டது.
நான் 6 போர்களை நிறுத்தியுள்ளேன். ஒருவேளை இது எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இது எளிதான ஒன்றல்ல. இது இருப்பதிலேயே கடினமானது. இந்தியா-பாகிஸ்தான்-ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெரிய இடங்களைப் பற்றிப் பேசுகிறோம்.
இந்தப் போர்களில் சிலவற்றைப் பாருங்கள். நீங்கள் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அதைப் பாருங்கள். ரூவாண்டா மற்றும் காங்கோ இடையே இந்த மோதல் 31 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஈரானின் எதிர்கால அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம் என்பதைத் தவிர்த்து, மொத்தம் 6 போர்களைச் முடித்துள்ளோம்.
இந்த (ரஷியா - உக்ரைன்) போரையும் நாங்கள் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன்" என்று கூறினார். அப்போது அவர் அருகில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இருந்தார்.
கடந்த ஏப்ரல் 22 ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட மோதல் மே 9 அன்று போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த போர் நிறுத்தத்தை வர்த்தக தடைகளை வைத்து மிரட்டி இரு நாட்டு தலைவர்களையும் சம்மதிக்க வைத்து தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 25 முறைக்கும் மேலாக கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.
- பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.
அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பயன்படுத்த முடியாதபடி அதன் வான்வெளியை மூடியது.
இந்திய விமானங்கள் இயக்கப்படாததால் ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பாகிஸ்தான் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.
பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இழப்புகள் இருந்த போதிலும் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019 இல் 508,000 டாலரிலிருந்து 2025 இல் 760,000 டாலராக அதிகரித்துள்ளது.
- இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தினார்.
- டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 22 இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் பைசரன் புல்வெளி சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர்.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்ததாக கூறி மே 7 ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயும் ஏற்பட்ட மோதல் 3 நாட்களுக்கு பின் மே 9 அன்று மாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இரு நாட்டு தலைவர்களையும் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவேன் என அழுத்தம் கொடுத்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார். ஆனால் பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில்தான் மோதலை நிறுத்தியதாக இந்தியா தெரிவித்தது.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போர் வெடித்தபோது அமெரிக்கா நேரடியாக தலையிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரூபியோ, டிரம்ப் 'அமைதியின் அதிபர் '. "அதனால், இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குச் சென்றபோது, நாங்கள் நேரடியாக தலையிட்டோம். அதிபரால் அங்கு அமைதியை நிலைநாட்ட முடிந்தது" என்று கூறினார்.
மேலும் கம்போடியா-தாய்லாந்து, அஜர்பைஜான்-ஆர்மீனியா மற்றும் காங்கோ-ருவாண்டாவில் ஏற்பட்ட மோதல்களுக்கு அமைதியைக் கொண்டுவந்தது அமெரிக்காதான் என்றும் ரூபியோ கூறினார்.
மேலும் டிரம்ப் நிறுத்தும் போர்களில் உக்ரைன் - ரஷியா போர் மிகப்பெரியதாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக மாதத்திற்கு ஒரு போரை நிறுத்தி வரும் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெள்ளை மாளிகை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- இந்த தாக்குதல் சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் கூறப்பட்டது.
- இந்திய ராணுவம் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
இதன்மூலம் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு ஏற்பட்ட போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறியதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல் சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய ராணுவம் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "பூஞ்ச் பகுதியில் போர்நிறுத்த மீறல்கள் குறித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் எந்த போர்நிறுத்த விதிமீறலும் நடக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஏற்பட்ட போர் நிறுத்தத்தை ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது.
- பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஏற்பட்ட போர் நிறுத்தத்தை ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியளவில் இந்தியப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. கட்டுப்பாட்டுக் கோட்டில் துப்பாக்கிச் சூடு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானின் இந்த தாக்குதலானது நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒட்டுமொத்த தேசத்திற்கும் சீனா பாகிஸ்தானுக்கு அனைத்து வகையிலும் உதவியது தெரியும்.
- பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் தங்கள் உரைகளில் எங்கும் சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை.
பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து இன்று மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
ராணுவ நடவடிக்கை பற்றி பிரதமர் மோடி விளக்கம் கொடுத்தார். பின்னர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
கூட்டம் முடித்து பாராளுமன்ற அவை வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பிரதமர் தனது உரையில் சீனா பற்றி ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.
ஒட்டுமொத்த தேசத்திற்கும் சீனா பாகிஸ்தானுக்கு அனைத்து வகையிலும் உதவியது தெரியும். ஆனால் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் தங்கள் உரைகளில் எங்கும் சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிய கூற்றை பிரதமர் மோடி நேரடியாக மறுக்கவில்லை என்பதையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
"டிரம்ப் பொய் சொல்கிறார் என்று அவர் (மோடி) ஒருபோதும் தெளிவாகக் கூறவில்லை" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீனாவின் பங்கு குறித்து அரசு கவனிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
- தான் தலையிடாவிட்டால், இரு நாடுகளும் இந்நேரம் போரில் ஈடுபட்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
- இந்தியா-பாகிஸ்தான் அவற்றில் மிகப்பெரியது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் எழுந்தபோது சரியான நேரத்தில் தான் தலையிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
தான் தலையிடாவிட்டால், இரு நாடுகளும் இந்நேரம் போரில் ஈடுபட்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் ஸ்காட்லாந்தில் ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், சமீப காலங்களில் உலகம் முழுவதும் ஆறு போர்களைத் தடுத்ததாகக் கூறினார்.
"நான் இல்லையென்றால், ஆறு பெரிய போர்கள் நடந்திருக்கும். இந்தியா-பாகிஸ்தான் அவற்றில் மிகப்பெரியது. ஏனென்றால் இவை இரண்டும் அணு ஆயுதம் ஏந்திய நாடுகள்.
அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், போர் அதிகரிப்பு மற்றும் அணு ஆயுத வீழ்ச்சி போன்ற பயங்கரமான சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்களை நான் நன்கு அறிவேன். போருக்குச் செல்ல விரும்பினால் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட மாட்டேன் என்பதை நான் தெளிவுபடுத்தியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாக டிரம்ப் ஏற்கனவே பலமுறை கருத்து தெரிவித்துள்ளதும் அதை மத்திய அரசு மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.






