search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "security force"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் 2 வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகிறது. தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது, டிக்கெட் பெறக்கூடிய கவுண்டர், உள்ளே நுழையக் கூடிய பகுதியில் நீண்ட வரிசையும் காணப்படுகிறது.

    ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் 4 பெட்டிகள் உள்ளன. அதில் 3 பெட்டிகள் பொதுவானவை. ஒரு பெட்டி மட்டும் பெண்கள் பயணம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் பெண்கள் பெட்டியில் பயணம் செய்து இடையூறு செய்வதாக புகார்கள் வருகின்றன.

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணத்தின் போது மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிக்கக்கூடாது என அறிவிப்பையும் வெளியிடுகிறது.

    ஆனாலும் சிலர் தெரியாமலும் ஒரு சிலர் தெரிந்தே அதில் பயணம் செய்வதால் பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், ஆண்-பெண் ஒன்றாக மகளிர் பெட்டி யில் பயணம் செய்கின்றனர். இதனால் தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.

    மேலும் ரெயில் நிலையங்களிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக நின்று பேசுவது, உட்கார்ந்து இருப்பது போன்றவை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்பு படை (பிங்க் ஸ்குவாட்) தொடங்கப்பட்டு உள்ளது.

    பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இளஞ்சிவப்பு படையில் கராத்தே தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 25 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தற்காப்பு கலைகளில் பிரவுன் பெல்ட் பெற்றவர்கள். பெண் பயணிகளின் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் ஒவ்வொரு ரெயில் மற்றும் நிலையத்திலும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த ஆய்வின் அடிப்படையில் இளஞ்சிவப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பெண் பயணிகளிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான பெண்கள் மெட்ரோ ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

    ஆனாலும் சில இடையூறுகள் இருப்பதாக ஆய்வில் உறுதியானது. இந்த இளஞ் சிவப்பு படையிடம், பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த புகார்களை தெரிவிக்கலாம். அவற்றை அவர்கள் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.

    நந்தனத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இளஞ்சிவப்பு பாதுகாப்பு படையை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார்.

    • காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
    • அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.

    காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த இந்த ஆயுதங்கள் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டன.
    • காஷ்மீரில் வெடிபொருட்கள் வீசப்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    பஞ்சாப் மாநிலம் அட்டாரி பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே டிரோன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த டிரோனில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. வெடிகுண்டுடன் வந்த அந்த டிரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்தனர்.

    இதையடுத்து அவர்கள் வெடிகுண்டு டிரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த டிரோனை தீவிரவாதிகள் அனுப்பியது தெரியவந்தது. பாதுகாப்பு படையினர் சுட்டு விரட்டியதால் அந்த டிரோன் பாகிஸ்தானுக்கு திரும்பி சென்றுவிட்டது. இதற்கிடையே டிரோன் வந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் ஆயுதங்களை வீசி வந்தது. இந்த டிரோன்கள் மூலம் ஜம்மு, ஸ்ரீநகர், கதுவா, சம்பா மற்றும் தோடா ஆகிய 5 மாவட்டங்களில் ஆயுதங்கள், வெடி மருந்துகள், வெடிபொருட்கள் வீசப்பட்டன.

    லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் காஷ்மீரில் இந்த ஆயுதங்களை பெற்று வந்தது தெரியவந்தது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த இந்த ஆயுதங்கள் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டன.

    இதுதொடர்பாக கதுவாவில் உள்ள ராஜ்பாக் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் 29-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு ஜூலை 30-ந்தேதி என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் காஷ்மீரில் வெடிபொருட்கள் வீசப்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஜம்மு, ஸ்ரீநகர், கதுவா, சம்பா, தோடா ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 இடங்களில் நேற்று இந்த சோதனை நடத்தப்பட்டது.

    கதுவா மாவட்டத்தில் மர்ஹூன் பகுதியில் 4 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மேலும் தோடா மண்டலத்தின் கரோவா பல்லா பகுதியில் உள்ள ஒரு வீடு, ஜம்முவில் உள்ள தலாப் காதிகான் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    • ஆய்வு கூட்டம் கமிஷனர் தலைமையில் நடப்பதும் வழக்கம்.
    • தலா ஒருவர் வீதம், 8 நிலையங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    குற்ற சம்பவம், அதன் பின்னணி, அவற்றின் மீதான போலீசார் நடவடிக்கை என்ன, அரசியல் மற்றும் பிற அமைப்பினரின் நடவடிக்கை, சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்.,) போலீசார் கண்காணிப்பது வழக்கம். திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் ஐ.எஸ்., போலீசார், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் மற்ற போலீசாரின் நடவடிக்கை, நிலைய எல்லைக்குள் நடக்கும் லாட்டரி, கஞ்சா, மதுவிற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை கண்காணித்து முன்கூட்டியே ஐ.எஸ்., போலீஸ் உதவி கமிஷனரிடம் தெரிவித்து பின்னர் கமிஷனருக்கு தகவல் செல்வது வழக்கம்.

    இந்த பிரிவு முற்றிலும் கமிஷனரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாதந்தோறும் இரண்டு, மூன்று முறை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கமிஷனர் தலைமையில் நடப்பதும் வழக்கம்.இந்நிலையில் மாநகரில் உள்ள, 8 போலீஸ் நிலையங்களுக்கு தலா ஒரு ஐ.எஸ்., போலீசார் வீதம் பணியாற்றி வருகின்றனர்.

    இன்னும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், தகவல்களை சேகரிக்கும் விதமாக கூடுதல் ஐ.எஸ்., போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தலா ஒருவர் வீதம், 8 நிலையங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.போலீசார் கூறுகையில், ஒருவர் வழக்கு, ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றையும், மற்றொருவர், போலீஸ் நிலைய நிலவரங்கள், போலீஸ் ரோந்து வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்கும் வகையில் பணி நியமிக்கப்பட்டுள்ளனர்என்றனர்.

    பாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். இதைப் பார்த்த ஓட்டல் காவலாளி அவர்களை தடுக்க முயன்றார். உடனே பயங்கரவாதிகள் அந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.



    அதன்பின், ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.

    தகவலறிந்து வந்த போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஓட்டலில் நுழைந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தால் குவாதர் நகர் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகார் மாகாணத்தில் இன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் அம்மாகாண கவர்னர் மயிரிழையில் உயிர் தப்பினார். அவரது பாதுகாவலர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். #Carbombattack #Afghanistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகார் மாகாண கவர்னரின் கார் பாதுகாப்பு வாகனங்களுடன் முஹம்மது அகா மாவட்டம் வழியாக இன்று சென்றுக் கொண்டிருந்தது.

    அப்போது தலிபான் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் நடத்திய கார்குண்டு தாக்குதலில் கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி உள்பட 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலில் கவர்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக சில ஊடகங்களும், காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வேறுசில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. #Carbombattack #Afghanistan 
    ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 28 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #ISMilitantskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் உளவுப்பிரிவின் பொறுப்பாளரான செதிக் யர் உள்பட 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #ISMilitantskilled
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் உள்ள அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #PulwamaEncounter
    பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் ஆயுதப்படையினர், போலீசார், சிறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். #PapuaNewGuinea #SecurityForces #ParliamentAttack
    போர்ட் மோரஸ்பி:

    வறுமையில் வாடும் பப்புவா நியூகினியா நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பியில், சமீபத்தில் ‘அபெக்’ என்று அழைக்கப்படுகிற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட 21 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



    இந்த உச்சி மாநாட்டின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு துணையாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாதுகாப்பு படையினர் வந்திருந்தனர்.

    இந்த நிலையில், உள்நாட்டு படையினருக்கும், போலீசாருக்கும் உரிய அலவன்சினை (படி) அந்த நாட்டு அரசு வழங்க வில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், போர்ட் மோரஸ்பி நகரில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். மேஜை, நாற்காலி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தெறிந்தனர். இந்த தாக்குதலை நூற்றுக்கணக்கானோர் நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

    ஆலன் பேர்டு என்ற எம்.பி. கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்துக்குள் ஆயுதப்படையினர், போலீசார், சிறை அதிகாரிகள் என அனைவரும் நுழைந்து கிடைத்ததையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள்” என கூறினார்.

    இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #PapuaNewGuinea #SecurityForces #ParliamentAttack
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்டனர். #JammuKashmir #MillitantsGunnedDown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதையும் மீறி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சஃப்னாக்ரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    அப்போது பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்புவதற்காக பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #MillitantsGunnedDown
    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. #Afghanistan #SecurityForce #TalibanAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் ஆளும் அரசை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் போரிட்டு வருகின்றனர். நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது.

    ஆப்கானிஸ்தானின் கஜ்னி மாகாணத்தில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பாதுகாப்பு படையினர் பலியாகி உள்ளனர்.

    இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அந்த மாகாணத்தின் செய்தித்தொடர்பாளர் ஆரிப் நூரி, தலிபான்களின் இந்த தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 4 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். #Afghanistan #SecurityForce #TalibanAttack
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JammuKashmir #MillitantGunnedDown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா நகரில் பாதுகாப்பு படையினர் மீது நவீன ரக துப்பாக்கி மூலம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.

    பலமணி நேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அலாரின் மருமகன் உஸ்மான் ஹைதர் என்பவனும் ஒருவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட நவீன ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி பலியாகி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் அவனது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #JammuKashmir #MillitantGunnedDown
    ×