என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்புப்படை"

    • பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் பெரிய நக்சல் முகாம்களை வெற்றிகரமாக அழித்தனர்.
    • இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கரில் உள்ள கர்ரேகுட்டா மலையில் ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக பாதுகாப்பு படையினர், சத்தீஸ்கர் மாநில போலீசாரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைத்து நக்சல்களும் சரணடையும் வரையும், ஒழிக்கப்படும் வரையும் பா.ஜ.க. அரசு ஓயாது.

    இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

    ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினர் காட்டிய துணிச்சலும், வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயமாக நினைவுகூரப்படும்.

    ஒவ்வொரு மலைப்பகுதிகளிலும் நக்சலைட்டுகள் ஐஇடி வகை குண்டுகளை மறைத்து வைத்திருந்த போதும், பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு பெரிய நக்சல் முகாம்களை வெற்றிகரமாக அழித்தனர்.

    கரேகுட்டா மலையில் நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்தை பாதுாப்பு படையினர் துல்லியமாக அழித்தனர்.

    பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை நக்சலைட்டுகள் சீர்குலைத்தனர். அரசு நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தனர்.

    நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது படுகாயம் அடைந்த பாதுகாப்புப் பணியாளர்களை ஆதரிக்கவும், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை உறுதிசெய்யவும் பா.ஜ.க. அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்.

    அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என தெரிவித்தார்.

    • ரகசிய தகவல் அடிப்படையில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை.
    • பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் வீரர்கள் பதிலுக்கு தாக்குதல்.

    ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசார் உதவியுடன், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததும், அந்த இடத்திற்கு சென்று, அப்பகுதியை சுற்றிவளைத்து அவர்களை முடிக்க முயற்சி செய்வார்கள். இப்போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

    இந்த வகையில் தெற்கு காஷ்மீர் மாவட்டமான ஷோபியானின் சோட்டிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

    அந்த பகுதியில் தீவிரவாதிகள் இருக்கிறார்களா? என வீரர்கள் தேடிப்பார்க்கும்போது பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதனால் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகின்ற நிலையில், உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ×