search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுதாகர் தலைமை தபால் நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார்.
    • இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து ஆட்டோ டிரைவர் சுதாகர் (44) தலைமை தபால் நிலையம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஜீப் மோதி ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சுதாகர் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பாபு (42), அமுதா (50) , சங்கர் ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிங்காநல்லூர், சூலூர் பஸ் நிலையங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
    • பஸ்,ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

    கோவை,

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி திங்கள்கிழமை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் கோவையில் இருந்து நேற்று மாலை முதல் பஸ்கள், ரெயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.

    இதனால் பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிக ளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை, தேனி, மார்க்கமாக செல்லும் பஸ்கள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்தும். கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் சூலூர் பஸ் நிலையத்தில் இருந்தும். ஈரோடு, சேலம், நாமக்கல் மார்க்கமாக செல்லும் பஸ்கள் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும். ஊட்டி, கூடலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்த தற்காலிக பஸ் நிலையங்க ளுக்கு காந்திபுரம், உக்க டத்தில் இருந்து இணைப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் மாலை முதல் மதுரைக்கு 100 பஸ்களும், திருச்சிக்கு 80, தேனிக்கு 50, சேலத்துக்கு 60 என மொத்தம் 290 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நேற்று மாலை முதல் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் பஸ்களின் இயக்கம் குறித்து பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்புகள் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் ரோந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு பஸ்கள், ரெயில்கள், கார்கள் மற்றும் விமானம் மூலமாக 4 லட்சம் பேர் வரை சென்றது தெரிய வந்துள்ளது. இது அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், சூலூர் பஸ் நிலையங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    இன்று பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் கூடுதலாக பஸ்கள் இயக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்போது திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது.
    • இந்த விமானத்தில் வியட்நாமில் இருந்து 50 பயணிகள் வந்தனர்.

    கே.கே. நகர்

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதனை தொடர்ந்து தற்போது திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு நேரடி விமான சேவையை வியட் ஜெட் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவையானது வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருச்சியில் இருந்தும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வியட்நாமில் இருந்தும் விமான சேவைகள் இயக்கப்படுகிறது.

    விமான சேவை தொடங்கியதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11.27 மணிக்கு வியடாமில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் வந்தது. இந்த விமானத்தில் வியட்நாமில் இருந்து 50 பயணிகள் வந்தனர்.

    பின்னர் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்பட்டது. வியட்நாமுக்கு முன்பதிவு செய்து இருந்த 100 பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக விமான சேவை துவக்க நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை பொது மேலாளர் ஜலால் மற்றும் விமான நிறுவன பொறுப்பாளர் ஹேமசேகர், அதிகாரி இளவரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மே லும் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை விமான நிறுவனத்தின் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

    விழாவில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி குத்து விளக்கு ஏற்றி விமான சேவையை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிற தடங்களில் 75 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக இணைய முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் இன்று முதல் 4 நாள்களுக்கு 175 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    இதுகுறித்து போக்குவ ரத்துக் கழகத்தின் கும்பகோ ணம் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை ( சனிக்கிழமை), நாளை மறுநாள் ( ஞாயிற்றுக்கிழமை ) வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னை க்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதேபோல் சென்னை யிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கு 100 பஸ்களும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய ஊா்களுக்கும், அந்த ஊா்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 75 பஸ்கள் என மொத்தம் 175 சிறப்புப் பஸ்கள் இன்றும், நாளையும் இயக்கப்பட உள்ளன.

    விடுமுறைக்கு வந்த பயணிகள் அவரவா் ஊா்களுக்கு திரும்பிச் செல்ல வரும் 29, 30 ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 100 சிறப்புப் பஸ்களும், பிற தடங்களில் 75 சிறப்புப் பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூா், ஜெயங்கொ ண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறை ப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூா், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை ஆகிய ஊா்களில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊா்களில் இருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை, ஞாயிற்றுக்கி ழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வசதியாக இணைய முகவரியில் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதற்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.
    • கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்கின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ,திருவோணம், நம்பிவயல், ஊரணிபுரம், கரம்பக்குடி, உள்ளிட்ட பகுதியிலிருந்து தினந்தோறும் கல்லூரி, மற்றும் பள்ளி, மாணவ, மாணவிகள், கல்லாக்கோட்டை அரசு கல்லூரி, செவந்தான்பட்டி கல்லூரிகளில் படிப்பதற்கு பஸ்சில் பயணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கல்லூரி செல்ல மற்றும் மாலை வீடு திரும்பும் நேரத்தில் மாணவர்கள் கூட்டம் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் உள்ளதால் பஸ் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    மேலும் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

    இதனால் அவர்கள் ஆபத்தில் சிக்கி கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.எனவே பட்டுக்கோட்டையில் இருந்து நம்பிவயல், திருவோணம், ஊரணிபுரம், வழியாக கந்தர்வகோட்டைக்கு, மற்றும் திருவோணத்தில் இருந்து ஒரத்தநாடு கல்லூரிக்கு மாணவ மாணவிகள் செல்ல காலை மாலை நேரங்களில்

    கூடுதலாக பேருந்து இயக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீன்களை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது.
    • ஆட்டோவில் பயணம் செய்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    பேராவூரணி:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஓலைக்குன்னம் தெற்கு தெருவை சேர்ந்த சேகர் ( வயது 52), காடந்தங்குடி பகுதியை சேர்ந்த தங்கராசு (60), நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் மனைவி மல்லிகா (60), மன்னங்காடு பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (55), துவரங்குறிச்சியை சேர்ந்த அசோகன்(48), ஒட்டங்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்,(50) பரவத்துார் பகுதியை சேர்ந்த சக்திவேல்(49) இவர்கள் அனைவரும் மீன் வியாபாரிகள்,

    இவர்கள் ஒன்றாக சேர்ந்து சரக்கு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து மல்லிப்பட்டினம் ,சேதுபாவாசத்திரம், கட்டுமாவடி ,ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுக பகுதிகளில் மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து, மதுக்கூர், துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சில்லறையாக விற்பனை செய்வார்கள்.

    இந்நிலையில் வழக்கம் போல நேற்றுமுன்தினம் காலை ஜெகதாப்பட்டினத்தில் மீன்களை வாங்கி லோடு ஆட்டோவில் மீன்களை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

    அப்போது சேதுபாவாசத்திரம் அருகே அம்மணிசத்திரத்தில் லோடு ஆட்டோ விபத்தில் சிக்கி சாலையின் வலதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்காட்டை பாலசுப்பிரமணியன் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    உடனடியாக அருகில் உள்ளவர்கள் சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் தங்கராஜ் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். சேகர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு இரவு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ரஷ்யா பயணம் குறித்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டான்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே பெரியக்கோட்டையை சேர்ந்தவர் வீரையன்.

    இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 17).

    இவர் மதுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த நிலையில், பிரம்மோஸ் மைய நிறுவனரும், மூத்த விஞ்ஞானியுமான சிவதானுப்பிள்ளை, அரசு பள்ளி மாணவர்கள் ராக்கெட் அறிவியில் தொழில்நுட்பத்தை இணைய வழி வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இணைய வழி தேர்வு செய்யப்பட்டது.

    அதில் மதுக்கூர் அரசு பள்ளி மாணவன் சந்தோஷ் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் தேர்ந்தெ டுக்கப்பட்ட 40 பேரில் சந்தோஷ் ஒருவர் ஆவார்.

    இந்நிலையில் ரஷ்யாவுக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிய மாணவர் சந்தோஷ்க்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், ராக்கெட் சயின்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஒவியரசன், உதவி தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜ், பாலகுமார், ஆசிரியைகள் மதுக்கூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து மாலை அணிவித்து வெடி வெடித்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

    மேலும் அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    பள்ளி உதவித்தலைமை யாசிரியர்கள் பாலகுமார், கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவருக்குப் பயிற்சியும் ஊக்கம் அளித்த ஒருங்கிணைப்பாளர்.

    ஓவியரசன் தலைமை ஆசிரியரால் கௌர விக்கப்பட்டார்.

    மேலும் மாணவர் சந்தோஷ் தனது ரஷ்யா பயணம் பற்றிய அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து நீங்களும் என்னைப்போல் பயணம் மேற்கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மலேசியா பல்கலைக்கழகத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்
    • சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மலேசியா செல்கின்றனர்

    பெரம்பலூர்,

    சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்களை வாழ்த்தி, வழியனுப்பும் விழா நடைபெற்றது.பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து, மாணவர்களை வாழ்த்தி, சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார்.சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் நமது தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயிலும் 17 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகளும் கல்லூரி முதல்வர் இளங்கோவன், புல முதல்வர் அன்பரசன் ஆகியோர் மலேசியா மல்டி மீடியா பல்கலைக் கழகத்திற்கு செல்கின்றனர்.இவர்கள் அனைவரும் வருகின்ற 14 -ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மலேசியாவில் இந்த திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

    இந்த் திட்டத்தின் கீழ் செல்லும் மாணவர்களுக்கு செய்முறை அறிவு மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்க உதவும், உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்க உதவும்.தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிக்கும் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே வருகின்ற 16-ந் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. என தெரிவித்தார்.நிகழ்ச்சியின் போது கல்லூரி முதல்வர் இளங்கோவன், திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, டீன்கள் அன்பரசன், சிவராமன், சண்முகசுந்தரம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டிரைவர், கண்டக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
    • நாகரில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி நகைகளை பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. வெளியூர்களில் இருந்து டிப்-டாப் உடையில் வரும் பெண்கள் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விடுகிறார்கள்.

    சமீபகாலமாக நடந்து வரும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடி க்கைகளை மேற்கொண்டார். வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் பகுதிகளில் பெண் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறா ர்கள்.

    மேலும் சந்தேகப்ப டும்படியாக பஸ்களில் பெண்கள் யாராவது பயணம் செய்தால் தகவல் தெரிவிக்குமாறு டிரைவர், கண்டக்டருக்கு அறிவுறுத்த ப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார். டிரைவர், கண்டக்டரிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பஸ்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது இருந்தால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டுஅறை அல்லது ஹெல்ப் லைன் நம்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பஸ்களில் அதிகமான கூட்டங்களை ஏற்றி செல்லக்கூடாது. படிக்க ட்டில் யாரையும் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என்று அறிவுரைகளை வழங்கினார். இதை த்தொடர்ந்து அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்ததுடன் அறிவு ரைகளை வழங்கினார். விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கி ஓட்டும்போது நமது உயிரை பாதுகாக்க கூடிய ஹெல்மெட்டை கட்டாயம் அணிய வேண்டும் என்று வாலிபர்களுக்கு அறிவுரை களை கூறினார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களிடம் கூறியதா வது:-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளது. ஆனால் ஓடும் பஸ்சில் நகை பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

    இது தொடர்பான குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு வியூகங்கள் வகுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பஸ் டிரைவர், கண்டக்டர்க ளுக்கும் பல்வேறு அறிவு ரைகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பஸ்சில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடும் பெண்கள் கைது செய்யப்படுவார்கள்.

    இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான மக்கள் ஹெல்மட் அணிய தொடங்கி விட்டனர். சுமார் 80 சதவீதத்திற்கும் மேற்ப ட்டவர்கள் ஹெல்மெட் அணிந்து வருகிறார்கள்.

    ஒரு சிலர் ஹெல்ெமட்டை மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்து ஓட்டி செல்கிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன் ஹெல்மெட்டை அணிந்து வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும்.

    ஹெல்மெட் அணியாத வர்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செல்போனில் பேசிக்கொண்டு வாகன ங்கள் ஓட்டக்கூடாது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும். ஒரே மோட்டார் சைக்கிள்களில் 3 பேரை ஏற்றி செல்வதும் குற்றமாகும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்காணிக்க நவீன எந்திரம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் சப்-டிவி ஷனுக்குட்பட்ட பகுதியில் அந்த நவீன எந்திரம் மூலமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதில் நாம் வாகனத்தை எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுகிறோம் என்ற விவரம் தெரிந்துவிடும். ஒரு சாலையில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் செல்ல வேண்டுமோ அந்த வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

    கூடுதல் வேகமாக செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதியிலும் இந்த நவீன எந்திரத்தை வாங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். கார்களை ஓட்டும்போது கட்டாயம் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். முன் இருக்கையில் இருப்பவ ர்களும் சீட் பெல்ட் அணி வது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.
    • பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவ மாண விகள் படித்து வருகிறார்கள்.

    பெரும்பாலும் இவர்கள் அரசு பஸ்களில் வந்து செல்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் இருந்து மானாம்பதி, கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.

    இதனால் பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.