என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணம்"

    • தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கும்!
    • பயணம், மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகப்படுத்தி, படைப்பாற்றால் திறனை அதிகரிக்கும்.

    நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் சென்று மனது கொஞ்சம் கவலையாக இருக்கிறது எனக்கூறினால், பலரின் அறிவுரை "வெளியே சென்று வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்" என்பதுதான். பலரும் இவ்வாறு கூறுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? நீண்ட தொலைவு பயணம் செய்வது மனதுக்கும், உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்தவகையில், ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் அடிக்கடி பயணம் செல்வது அவர்களுக்கு நல்ல ஆறுதலையும், ஆரோக்கியத்தையும் தருமாம். தொலைதூர பயணம் மனதை இதப்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாம். தொலைதூர பயணத்தால் நாம் பெறும் பலன்கள் குறித்து பார்ப்போம். 

    குறையும் மன அழுத்தம்

    வேலைக்கு செல்வோர் அல்லது குடும்பத்தை விட்டு வெளியூர்களில் இருப்போர், நகரத்தில் வாழ்பவர்களுக்கு அதிகளவு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. காரணம் அவர்களின் வாழ்க்கைச்சூழல்... ஒரே இடத்தில் அதிக நேரம் இருப்பது, வெளியில் அதிகம் செல்லாதது, வேலையைவிட்டு வந்தால் வீடு, வீட்டைவிட்டால் அலுவலகம், மற்ற வேலைகளை பார்ப்பது, சாப்பிடுவது இதற்கே நேரம் சரியாக இருக்கும். மனிதர்களிடம் அதிகம் பேச நேரம் இருக்காது. ஒருவரிடம் பேசும்போது நம் மனதில் இருக்கும் எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். பேசாதபோது அந்த உணர்ச்சிகள் உள்ளுக்குள்ளே இருக்கும். மேலும் சோகமான நிகழ்வு என்றால் அதை மீண்டும் மீண்டும் நினைத்து நம்மை நாமே அழுத்தத்திற்கு உள்ளாக்கி கொள்வோம். உணர்ச்சி ரீதியான அதிகப்படியான சுமையை சுமப்போம். இதன் விளைவாக பதற்றம் மற்றும் மன சோர்வு ஏற்படலாம்.

    மேலும் அதிகப்படியான தனிமை ஒருவித வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும். எதன்மீதும் ஆர்வம் இருக்காது. இந்த மனநிலையில் இருந்து மாற்றம் தேவை என்றால், இந்த அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டுமென்றால் ஒரு பயணம் அவசியம். அது சொந்த ஊர்களுக்கு செல்வதாக இருக்கலாம், செல்லாத ஊர்களுக்கு செல்வதாக இருக்கலாம் அல்லது நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்வதாகவும் இருக்கலாம். பயணத்தில் மனிதர்கள் இல்லையென்றாலும் நாம் இயற்கையில் இருக்கும் எதையாவது வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வோம். இயற்கை சூழலில் நமது மனமும், உடலும் ஓய்வெடுக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் மன அழுத்தம் குறையும். மேலும் பயணம் மகிழ்ச்சியான உணர்ச்சிகளை அதிகரிக்கும். இது வேலையில் கவனம் செலுத்த உதவும். 

    படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும்

    அனுபவங்களைப் போலவே இயற்கையும் நிறைய பாடங்களை கற்றுக்கொடுக்கும். நீங்கள் கவனித்திருப்பீர்களா? என தெரியவில்லை. பூங்காவிற்கோ அல்லது பசுமையான, பசுமை நிறைந்த இடத்திற்கோ நாம் சென்றால் மனதில் என்ன கவலைகள் இருந்தாலும் அது நினைவில் வராது. அதாவது எந்த எண்ண ஓட்டமும் மனதில் இருக்காது. வெற்றிடமாக எதுவும் தோன்றாது. அமைதியாக உட்கார்ந்திருப்போம். வெளியில் இருப்பது நம் மனதில் நிம்மதியான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். ஒரு தெளிவு கிடைக்கும். மனம் தெளிவாக, அமைதியாக இருக்கும்போது பிரச்சனைகளுக்கான தீர்வு எளிதில் கிடைக்கும். நிறைய தோன்றும். படைப்பாற்றால் அதிகரிக்கும். எழுத்தாளர்கள் பலரும் அமைதியான, பசுமையான சூழலைத்தான் விரும்புவார்கள். 

    உடல்நலன் மேம்படும்

    இயற்கை சூழலில் இருக்கும்போது கார்டிசோல் அளவு குறைகிறது. கார்டிசோல் அளவு குறைந்தால் மனஅழுத்தம் குறையும். அடிக்கடி வெளியே இருப்பது இதய நோய் விகிதங்களைக் குறைக்க வழிவகுக்கும். மேலும் எலும்புகள், இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமான வைட்டமின் டி அளவு சூரிய ஒளியால் அதிகரிக்கும். 

    மன ஆரோக்கியம்

    இயற்கை, மன அழுத்தம் மற்றும் கோப உணர்வுகளைக் குறைக்க உதவும். உடற்பயிற்சியும் இதற்கு உதவும், ஆனால் நீங்கள் வெளியில் இருக்கும்போது இது இன்னும் சிறந்தது. பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. வெளியில் இருப்பது சமூகத்தோடு இணங்கச்செய்யும். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமென்றால், ஒரு பூங்காவுக்கு செல்கிறோம் என்றால் அங்கு நமக்கு தெரியாதவர்கள் சிலரை பார்ப்போம். இரண்டு, மூன்று நாட்கள் பூங்காவிற்கு சென்றால் அவர்களுடன் ஒன்றிணைவோம். வெளியூர்களுக்கு செல்லும்போது முகம் தெரியாதவர்களோடு பேசுவோம்.


    பல கவலைகளுக்கு ஒரேமருந்து பயணம்

    இது மனிதர்களிடம் எளிதில் ஒன்றாக உதவும். கூடுதலாக, நீங்கள் தொடர்ந்து வெளியே இருக்கும்போது நன்றாக தூங்குவதைக் காணலாம். இயற்கை ஒளியில் தினமும் படுவது தூக்கம்/விழிப்பு சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் சூரிய ஒளியில் வெளியே செல்வதை உறுதி செய்வதன் மூலம், இரவில் தூங்கும் திறனை மேம்படுத்தலாம். பூங்காக்கள் மற்றும் பசுமையான இடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறைவான மன உளைச்சலைக் கொண்டுள்ளனர். அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகின்றனர்.  மேலும் நீண்ட ஆயுட்காலத்தை கொண்டுள்ளனர். இயற்கையின் மீதான வெளிப்பாடு நாள்பட்ட நோயால் ஏற்படும் இறப்பைக் குறைக்கும்.

    பயணம் செல்லவில்லையென்றால், என்ன செய்யலாம்?

    ஒருநாளைக்கு குறைந்தது 5 நிமிடமாவது சூரிய ஒளியில்படுங்கள். காலில் இருக்கும் செருப்பை கழற்றிவிட்டு கொஞ்சநேரம் புல்வெளியில் நடந்து செல்லுங்கள். பூங்காக்கள் அல்லது வெளியில் மதிய உணவை சாப்பிடுங்கள். தொலைபேசியில் பேசினால் வெளியே நின்று பேசுங்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடியாவிட்டாலும், பூங்காவிற்கு செல்லுங்கள். உங்கள் சைக்கிளில் தூசியைத் தட்டிவிட்டு, அக்கம் பக்கத்தைச் சுற்றி வாருங்கள். ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ஒரு நிழல் தரும் மரத்தடியில் உட்காருங்கள். வீட்டு முற்றத்திலோ, முன்புறமோ செடி, கொடிகளை நடுங்கள். வாரத்திற்கு ஒருமுறையாவது மனதுக்கு நெருக்கமானவரிடம், யாராக இருந்தாலும் சரி மனம்விட்டு பேசுங்கள். 

    • இந்தியாவில் பாலியல் குற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
    • இந்தியா வரும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

    வாஷிங்டன்:

    தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்தியா வரும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்தியாவில் பாலியல் குற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

    சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதால், மிகவும் கவனமாக அமெரிக்கர்கள் இருக்கவேண்டும் என அமெரிக்க அரசு கூறியுள்ளது.

    நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் மகாராஷ்டிர மாநிலத்தின் கிழக்கு, தெலுங்கானாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பயங்கரவாத தாக்குதல் அபாயம் இருப்பதால் மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளுக்கும், காஷ்மீருக்கும், மணிப்பூருக்கும் செல்வதை அமெரிக்கர்கள் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காசிக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை காசி தமிழ் சங்கம எக்ஸ்பிரஸ்களாக ரயில்வே நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது. காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, சேலத்தில் இருந்து காசி தமிழ் சங்கம விழாவிற்கு ஆன்மீகவாதிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செல்ல வசதியாக எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரசில் (22669) சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில், கோவையில் இருந்து 81 பயணிகளும், சேலத்தில் இருந்து 51 பயணிகளும் என 132 பேர் புறப்பட்டு சென்றனர். சேலம் ஜங்ஷன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு இன்று காலை 7.20 மணிக்கு காசி தமிழ் சங்கம சிறப்பு எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து 51 பேர் புறப்பட்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
    • இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் உள்ளன. இதன் காரணமாக வெளி மாநி லங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ''ஹைவே பேட்ரோல்'' போலீசார் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த வழியாக செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது. செக் போஸ்ட்டில் போலீசார் இல்லாதால் விபத்துகளை ஏற்படுத்தும் டிரைவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடுகின்றனர்.

    இரவில் நடந்து செல்ப வர்கள் மீது வாகனம் மோதுவதும், அதி வேகத்தில் செல்லும் வாகனங்கள் தலை குப்புற கவிழ்வதும், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதும், இந்த சாலையில் தொடர்கதையாக உள்ளது. நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ரோந்து போலீசார் தலை காட்டுவதே கிடையாது.

    இதனால் இந்த பகுதியில் உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை 262 வாகன விபத்துகள் ஏற்பட்டு, அதன் மூலம் 281 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 பேர் உயிரிழந்துள்ளனர். கண் துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு என்ற பெயரில் இரண்டொரு வழக்குப் பதிவு செய்து 'சாதனை' செய்கின்றனர்.

    இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். 

    • புவி வெப்பமாவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்
    • கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை தொடங்கினார்

    கன்னியாகுமரி:

    பீகார் மாநிலம் கயா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹசன் இமாம் (வயது 25).

    போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத இவர் டெல்லி யில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற வர்.

    இவர் மத நல்லிணக்க த்தை வலியுறுத்தியும் புவி வெப்பமாதல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப டுத்தும் வகையிலும் கன்னியாகுமரி யில்இருந்து காஷ்மீர் வரை பேட்டரி இரு சக்கர வாகனத்தில் பிரச்சார பயணம் மேற்கொள்ள திட்ட மிட்டார். இதற்காக தொண்டு நிறுவனம் மூலம் பிரத்யேகமாக வடிவமை க்கப்பட்ட பேட்டரி இரு சக்கர வாகனம் மூலம் ஹசன் இமாம் இன்று காலை பயணத்தை தொடங்கினார். இந்த பயணம் பற்றி அவர் கூறும் போது, தினமும் 25 கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொள்ள இருப்ப தாகவும் கன்னியாகுமரி யிலிருந்து காஷ்மீர் சியாச்சின் பகுதி வரையிலான தூரத்தை 100 நாட்களில் சென்றடைய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

    வழிநெடுகிலும் மக்களை சந்தித்து புவி வெப்ப மயமாதலின் ஆபத்தை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவரது இந்த சாதனை பயணத்திற்கு சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களால் வடிவமைக்கப் பட்ட பேட்டரி சைக்கிள் ஒன்றினை தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கி உள்ளது.

    • பொதுமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும்.
    • கடந்த 8-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றேன்.

    கும்பகோணம்:

    சென்னை வில்லிவா க்கத்தை சேர்ந்தவர் பழனிசாமி.

    இவர் கும்பகோணம் அருகே சாலையில் இருமுடி தலையில் வைத்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அவரிடம் பொதுமக்கள் விசாரித்தபோது, நான் தினக்கூலி அடிப்படையில் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறேன்.

    சபரிமலை ஐயப்பன் துணையாலேயே நல்ல விதமாக எனது குடும்பத்தை நடத்தி வருகின்றேன்.

    17-வது வருடமாக சபரிமலை செல்லும் நான் பொதுமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதற்காக சுமார் 650 கிலோமீட்டர் வரை சைக்கிளில் செல்ல முடிவு செய்து கடந்த 8-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றேன் என்றார்.

    நேற்று இரவு உணவை சோழபுரத்தில் முடித்துவிட்டு சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார். இன்று காலை தஞ்சாவூர், திருச்சி, கரூர், திண்டுக்கல் வழியாக சபரிமலை செல்கிறார்.

    • சீனாவின் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9% அதிகமாகும்.
    • 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2% மட்டுமே இருந்தது.

    கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்ததை அடுத்து, சீனா தளர்வுகளை அறிவித்தது. சீனாவிற்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்தது.

    இந்நிலையில், சீனாவில் ஜனவரி 8ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கு இடையில் மட்டும் தினமும் சுமார் 4,90,000 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றப் பணியகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இது சீனாவின் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9% அதிகமாகும். ஆனால் 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2% மட்டுமே இருந்தது.

    அதாவது 4,90,000 எண்ணிக்கையில், 2,50,000 பயணிகள் சீனாவிற்குள் நுழைந்ததாகவும், 2,40,000 பயணிகள் சீனாவில் இருந்து வெளியேறியதாகவும் அதிகாரி கூறினார்.

    • கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது.
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    சீனாவில் மீண்டும் கொேரானா பரவல் அதிக ரித்து உள்ள நிலையில் தமிழ கத்தில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாடு களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகி றார்கள். குமரி மாவட்டத்தை ஓட்டியுள்ள கேரளாவில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவ னந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து பஸ்களிலும் டிரைவர் கண்டக்டர்கள் முககவசம் அணிந்து பஸ் களை இயக்கி வருகிறார்கள். பஸ் பயணி களும் கட்டா யம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து திருவனந்த புரத்திலிருந்து நாகர்கோவி லுக்கு வந்த அனைத்து பஸ் களிலும் பயணிகள் முக கவசம் அணிந்து இருந்தனர்.

    இதே போல் வடசேரி யில் இருந்து திருவனந்த புரத்திற்கு செல்லும் பஸ்களிலும் டிரைவர், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து இருந்தனர். களியக்கா விளையை தாண்டி திருவனந்த புரத்திற்கு செல்லும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரி கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் பெரும்பா லான ஆஸ்பத்திரிகளிலும் முககவசம் கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. ஆஸ்பத்தி ரிக்கு வரும் பொதுமக்கள் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிய தொடங்கி உள்ளனர்.குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் கடந்த சில நாட்க ளாக கொரோனா பாதிப்பு எதுவும்

    இல்லை. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சளி தொல்லை, மூச்சு திணறல் இருந்தால் உடனடியாக பக்கத்தில் உள்ள சுகாதார மையத்தில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்

    கொரோனாவை கட்டுப் படுத்தும் வகையில் தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப் பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா பரவல் அதிக ரிக்க தொடங்கியதை யடுத்து தடுப்பூசி செலுத்துவதற்காக அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு சென்றனர்.

    ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது.

    • பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி பொங்கல் பண்டிகையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்பட பல இடங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் கடந்த 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இயக்கப்பட்டது.

    சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி

    பேர் பயணம் செய்துள்ள தாகவும், 2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 12 ஆயிரத்து 830 கிலோ மீட்டர் தூரத்தை 14 மாதத்தில் கடந்து வந்தார்
    • இளைஞர்களை சந்தித்து பாகுபாட்டை தவிர்த்து தேச ஒற்றுமையை கடைபிடிக்க வலியுறுத்தி பேசி வருவதாக தெரிவித்தார்.

    கன்னியாகுமரி:

    பீகார் மாநிலம் ஜெகானா பாத் மாவட்டத்தை சேர்ந்த வர் தீரஜ்குமார் (வயது 30). இவர் எம். பில். பட்டதாரி ஆவார். இவர் மக்கள் மத்தியில் நிலவும் பாகுபாட்டை களைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந்தேதி பஞ்சாப் மாநிலத்திலிருந்து தனது தேசிய அளவிலான சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.

    இவர் இமாச்சலப்பிர தேசம், அரியானா, டெல்லி, உத்திரப்பிரதேசம், பீகார், உத்ரகாண்ட், சிக்கீம், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டிஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக கடந்த ஜனவரி மாதம் கும்மிடிப்பூண்டி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களை கடந்து நேற்றுகன்னியாகுமரி வந்தார். இவர் 22 மாநிலங்கள் வழியாக 12 ஆயிரத்து830 கிலோ மீட்டர் தூரத்தை1வருடம்2 மாதம் 29 நாட்களில் கடந்து வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது சைக்கிள் பயணத்தின் போது அந்தந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்களை சந்தித்து பாகுபாட்டை தவிர்த்து தேச ஒற்றுமையை கடைபிடிக்க வலியுறுத்தி பேசி வருவதாக தெரிவித்தார்.

    கன்னியாகுமரி வந்த அவருக்குகன்னியாகுமரி முக்கடல்சங்கமம்கடற்கரை யில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூரா ட்சி தலைவர் குமரி ஸ்டீபன் அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில்கன்னி யாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ், சினிமா நடிகர் ராஜ்குமார், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், ரூபின், ஷியாம் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசையா?
    • தக்கலையில் இன்று காலை பரபரப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

    இன்று காலை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷைஜாராணி (வயது 42), அவரது மகள் ஆதிரா (8) மற்றும் பத்மலதா(55), பிரியா (45), சாந்தா (65) ஆகியோர் பஸ்சில் புறப்பட்டு வந்தனர்.

    அவர்கள் தக்கலை பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மண்டைக்காடு செல்லும் பஸ்சில் ஏறினர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஷைஜாராணி கையில் யாரோ பிளேடால் கீறி உள்ளனர். இதனால் அவர் வலியால் கத்தினார்.

    மேலும் அவரது மகள் ஆதிராவுக்கும் அதேபோல் காயம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்படவே, பஸ்சை தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பிக்பாக்கெட் திருடர்கள் யாராவது, பேக்கை கிழிக்கும் போது தாய்-மகள் கைகளை தெரியாமல் கிழித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பஸ்சில் வந்த ஓருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ஷைஜாராணி, அவரது மகள் ஆதிரா சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் திருநங்கைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

    கன்னியாகுமரி, பிப்.26-

    மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் ஒரே பாரதம், உண்மையான பாரதம் மற்றும் பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

    கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார். பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    சைக்கிள் பயண வீராங்கனை மிஸ்கான்ரகுவன்சி கூறுகையில், தான் தினமும் 100 முதல் 150 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகவும், நாட்டில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழுந்து உள்ளதால் அதனை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நர்மதை நதிக்கரையில் 3200 கிலோமீட்டர் தூரத்தை 19 நாட்களில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

    ×