search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kasi"

    • எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு பைரவர் என்று பெயர்.
    • கால பைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்குவதுடன், எதிரிகளின் பயமும் விலகும்.

    எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு பைரவர் என்று பெயர்.

    படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் "பைரவர்" என்று அழைக்கப்படுகிறார்.

    பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது.

    படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.

    பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சி அளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன.

    அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது.

    இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.

    சனீஸ்வரர் பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார்.

    ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்.

    காசியே பைரவரின் பிரதான தலமாகும்.

    சிவபெருமானின் தலைமைக் காவலரான பைரவரின் தலைமையிடம் காசியில் விசுவநாதர் ஆலயத்தின் வடக்கில் உள்ள பைரவநாத் என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீகால பைரவர் சன்னதியாகும்.

    பிரம்மாவும் திருமாலும் திருவண்ணாமலையில் அடிமுடி தேடியதில் பிரம்மன் பொய்யுரைத்தபடியால் கோபம் கொண்ட சிவனது புருவத்திலிருந்து தோன்றியவரே இந்த ஸ்ரீகால பைரவர்.

    கார்த்திகை மாதத் தேய்பிறை அஷ்டமியில் இந்தக் காலபைரவர் அவதாரம் செய்ததால் அந்நாளில் மக்கள் விரதம் இருந்து காலாஷ்டமியாகக் கொண்டாடுகிறார்கள்.

    கால பைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்குவதுடன், எதிரிகளின் பயமும் விலகும்.

    இவருடைய சன்னதியில் மிருத்யுஞ்ச மந்திரத்தை ஓதுபவர்களையும் கேட்பவர்களையும் கண்டு யமன் அஞ்சி நிற்பானாம்.

    அச்சரப் பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் கால பைரவர் வித்தியாசமான கோலத்தில் காணப்படுகிறார்.

    மிகச்சிறிய உருவமாக இருந்தாலும் அவர் கழுத்தில் கபால மாலை அணிந்து காணப்படுகிறார்.

    அவரது காதில் கடுக்கன் அணிவிக்கப்பட்டு உள்ளது.

    இத்தகைய அலங்காரத்தில் தமிழகத்தில் வேறு எங்கும் கால பைரவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரை வழி பட்டால் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

    தொழில் தொடங்கும் முன்பும் இவரை வழிபட வேண்டும்.

    எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் இவரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    தேய்பிறை, அஷ்டமி தினத்தன்று இந்த கால பைரவரை வழிபடுவது மிகவும் நல்லது.

    பூசனிக்காய் தீபம் ஏற்றியும் இவரை வழிபடலாம்.

    • மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
    • விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், "ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 200 நபர்கள் அரசு நிதியில் காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, 2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் "ஆன்மிகப் பயணமாக ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு கடந்த ஆண்டு 200 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதைப் போல, பக்தர்கள் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு 300 நபர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசு ஏற்கும்" என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 15 நபர்கள் வீதம் 300 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.

    மேலும் ஆன்மிக பயணம் குறித்த விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகம் அல்லது www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.
    • இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய 'ஸ்ரீவாஞ்சியம்'

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத்தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்".

    காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத்தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம்.

    ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும்.

    இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

    ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும்.

    இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும்.

    ஸ்ரீயாகிய திருவை (மகாலட்சுமி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

    • மிகச்சிறிய கருவறையில் இரண்டு மூன்று பூசாரிகள் நின்றுகொண்டு ஆரத்தி காட்டுகிறார்கள்.
    • ‘ஜெய் விஸ்வநாத் ஜி’ என்ற பக்தர்களின் கோஷம் காதுகளை நிறைக்கிறது.

    இந்துக்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வர விரும்பும் புண்ணியத் தலங்களுள் முக்கியமானவை, காசியும் ராமேஸ்வரமும். தெற்கே இருக்கும் ராமேஸ்வரமும், வடக்கே இருக்கும் காசியும் புனிதத் தலங்கள் மட்டுமல்லாமல், மோட்சத்துக்கான வழிபாட்டுத் தலங்களாகவும் கருதப்படுகின்றன. இப்போது காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி தமிழகத்திலிருந்து ஆன்மிகவாதிகள், இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் காசிக்குச் சென்று வருகிறார்கள். காசிக்குப் போனால் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன? எத்தனை நாட்களுக்குள் அவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத் திரும்புவது சாத்தியம் என்பவர்களுக்காக இக்கட்டுரை…

    காசி எனப்படும் வாராணசி பாரதத்தின் தொன்மை வாய்ந்த பழைமையான நகரம். வாரணாசி என்ற பெயர் வந்ததற்குப் பின்னணியில் இரண்டு ஆறுகள் இருக்கின்றன. வருணா மற்றும் அஸி என்ற இரு ஆறுகள் சங்கமமாகி கங்கையில் கலப்பதால்தான் இந்த நகரத்துக்கு வாரணாசி என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

    பண்டைய புராணங்களிலும் இலக்கியங்களிலும் காசியின் புனிதத்தைப் பற்றி புகழ்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், காசியில் ஓடிக்கொண்டிருக்கும் புனிதமான, அப்பழுக்கற்ற கங்கை நதி!

    காசியில் கங்கா ஸ்நானம் செய்தால் போதும், நம் பாவங்கள் எல்லாம் தொலைந்துவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதற்குக் கட்டியம் கூறுவதுபோல இங்கு தடையின்றி ஓடிக்கொண்டே இருக்கிறாள் கங்கை. காசிக்குச் செல்பவர்கள் கங்கையில் ஸ்நானம் (கங்கையில் முழுகிக் குளிப்பதை) செய்வதை பிரதானமாகக் கடைப்பிடிக்கிறார்கள். கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரையும், அன்னபூரணியையும், விசாலாட்சியையும் வழிபடுவது வழக்கம்.

    படகுப் பயணம்: காசி நகரின் மையத்தில் கங்கை பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறாள். கங்கை நதியைச் சுற்றியும் சுமார் 84 படித்துறைகள் (அவற்றை `காட்'கள் என்கிறார்கள்!) உள்ளன. தசஸ்வமேத காட், மணிகர்னிகா காட், கேதார் காட், அரிச்சந்திரா காட், லலிதா காட், மானசரோவர் காட், அகல்யாபாய் காட், சேட் சிங் காட், அஸி காட், பஞ்சகங்கா காட், ராஜேந்திர பிரசாத் காட் என்று ஒவ்வொரு படித்துறைக்கும் ஒவ்வொரு பெயர். இதில், தசஸ்வமேத காட், மணிகர்னிகா காட், அரிச்சந்திரா காட் போன்றவை மிகவும் முக்கியமானவை.

    இந்தப் படித்துறைகள் முழுவதையும் படகில் அழைத்துப் போய் சுற்றிக் காட்டுகிறார்கள். இதற்கெனக் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட `காட்'களை மட்டும் பார்த்தால் போதும் என்றால் அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கிறார்கள். நமது நேரத்தையும், செலவிடும் தன்மையையும் பொருத்து படகை அமர்த்திக் கொள்ளலாம். கங்கையில் படகு சவாரி செய்வது மிகவும் ரம்மியமானது.

    மணிகர்னிகா காட்: மணிகர்னிகா என்பதற்கு காதுகளில் அணியப்பட்ட ஆபரணம் என்று பொருள். சதி தேவியின் (பார்வதி தேவியின் மறுபெயர்!) உடலை சிவபெருமான் தன் இரு கைகளிலும் ஏந்தி ருத்ர தாண்டவம் ஆடியபோது, அவளது காதுகளில் இருந்த ஆபரணம் விழுந்த இடம்இது என்பது ஐதீகம். காதுகளில் அணியப்பட்ட ஆபரணம் விழுந்த இடம் என்பதால் இதற்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. இந்தப் படித்துறையில் நீராடிவிட்டு, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுபவர்களும் உள்ளனர். காசி மாநகரில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இந்த படித்துறைக்கு அருகில்தான் எரியூட்டப்படுகின்றன. நாள்தோறும் சுமார் 200 சடலங்கள் எரிக்கப்படுகிறதாம்.

    நாம் படகில் செல்லும்போதே மணிகர்னிகா காட்டிலும், அரிச்சந்திரா காட்டிலும் (அரிச்சந்திர மகாராஜாவின் பெயரால் இந்தப் படித்துறை அழைக்கப்படுகிறது) சடலங்கள் எரிந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

    கேதார் காட்டில் கௌரி குண்ட் என்ற சிறிய குளம் உள்ளது. இங்கு கேதாரேஸ்வரர் என்ற சிவன் கோயில் இருக்கிறது. இங்கு சென்று வழிபட்டால், 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான கேதார்நாத்தில் வழிபட்ட பலன் கிடைக்குமாம்.

    தசஸ்வமேத காட் என்பது பிரம்மாவுடன் தொடர்புடையது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற யாகத்துக்கு பிரம்மா தன்னுடைய 10 குதிரைகளை அளித்தார் என்பதால் இதற்கு தச (பத்து) – அஸ்வமேத (குதிரைகள்)காட் என்று பெயர்.

    இப்படி… ஒவ்வொரு படித்துறையின் பெயருக்குப் பின்னும் ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது.

    முன்பெல்லாம் கங்கை நதி மாசுபட்டு, குளிக்கவே முடியாத அளவுக்கு கருநிறமாக இருக்கும் என்றும், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு சார்பில் கங்கையை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், தூய்மையான நீர் சலசலத்து ஓடுகிறது என்றும் காசிக்கு அடிக்கடி வருபவர்கள் சொல்கிறார்கள். அது உண்மைதான் என்பது தூய்மையான கங்கையைப் பார்க்கும்போதே புரிகிறது. கங்கா ஸ்நானம் செய்தபின், அங்கே சிறு காகிதத் தட்டுகளில் வைத்து விற்கப்படும் அகல் விளக்கை வாங்கி தீபமேற்றி நதியில் தவழவிட்டு, கங்கா மாதாவை வணங்குவது வழக்கம். மலர்களுக்கு நடுவே சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அகல் விளக்கு, தண்ணீரில் மிதந்து செல்வது கண்கொள்ளாக் காட்சி.

    கங்கா ஸ்நானம் ஆன பிறகு, காசி விஸ்வநாதரைத் தரிசிக்கச் செல்வது சிறப்பு. இரண்டு பேருக்கு மேல் போக முடியாதபடி மிகக் குறுகலாக இருக்கும் காசியின் சிறிய சந்துகள் (வீதிகளில்) வழியாக நடந்து செல்ல வேண்டும்.

    கோயிலுக்கு நான்கு புறமும் வாயில்கள் உள்ளன. பிரதான வாயிலுக்கு அருகில் பால், பிரசாத இனிப்புகள் விற்கப்படுகிறது. ஒரு டம்ளர் பால் ரூ.10- க்கு கிடைக்கிறது. அதை வாங்கி நம் கைகளாலேயே விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யலாம்.

    கோயிலின் பிரதான வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெண்ணிறப் பளிங்குத் தரை முற்றம். நடுநாயகமாக காசி விஸ்வநாதரின் கருவறை. வாயிலிலிருந்தே தொடங்குகிறது பக்தர்களின் நீண்ட வரிசை. கருவறைக்கும் நான்கு வாசல்கள் உள்ளன. எந்த வரிசையில் வேண்டுமானாலும் நிற்கலாம். கடைசியில் அந்த வரிசை கருவறையில்தான் முடியும். கருவறையின் கீழே, தரையோடு தரையாக நடுநாயகமாக, வெள்ளி நாகாபரணம் அணிவிக்கப்பட்ட மிகச்சிறிய லிங்க வடிவில், வண்ண மலர்களுக்கு நடுவே காசி விஸ்வநாதர் அருள்பாலிக்கிறார். அவரைச் சுற்றிலும் நான்கு புறங்களிலும் மழைநீர்ப் போக்கி போல குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. நாம் கொண்டு சென்றிருக்கும் பாலை அந்தக் குழாய்களில் ஊற்றினால், அவை நேரே விஸ்வநாதரின் திருவடிகளை அடைந்துவிடுகிறது.

    மிகச்சிறிய கருவறையில் இரண்டு மூன்று பூசாரிகள் நின்றுகொண்டு ஆரத்தி காட்டுகிறார்கள். `ஜெய் விஸ்வநாத் ஜி' என்ற பக்தர்களின் கோஷம் காதுகளை நிறைக்கிறது.

    விஸ்வநாதரைத் தரிசித்த பிறகு சுற்றிலும் அருள்பாலிக்கும் பிள்ளையார், ஆஞ்சநேயர், ராமர் சந்நிதிகளை வலம் வருகிறோம். அங்கிருக்கும் நந்தி தேவரின் சிலைக்கும் சிறப்பு ஆராதனைகள், பூஜைகள் நடைபெறுகிறது. சுற்றிலும் உள்ள சந்நிதிகளில் பல்வேறு பெயர்களில் அமைந்த சிவலிங்கங்கள், காசி விஸ்வநாதரைப் போன்றே தரையில் அமைந்திருக்கின்றன. வழிபாடு முடிந்தபின் எந்த வழியில் வந்தோமோ அதே பிரதான வாயில் வழியே வெளியே வந்தால், பேடா, லட்டு போன்ற இனிப்புப் பிரசாதங்களை வாங்கிக் கொள்ளலாம்.

    விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து இரண்டே நிமிட நடை தூரத்தில் அன்னபூரணி கோயில். தங்கக் கவசத்தில் தகதகவென ஜொலிக்கிறாள் அன்னை. கைகளில் அன்னப் பாத்திரமும், கரண்டியும் ஏந்தி, உலக உயிர்களுக்கெல்லாம் குறைவின்றி உணவு வழங்கும் தாயாக, கருணையே வடிவாகக் காட்சியளிக்கும் அன்னபூரணியை மனம் குளிர வணங்கிவிட்டு வெளியே வருகிறோம்.

    மீண்டும் குறுகலான பல சந்துகள் வழியாகப் பயணித்தால், காசி விசாலாட்சி கோயில் வருகிறது. தெருவில் யாரைக் கேட்டாலும் வழி சொல்கிறார்கள்.

    விசாலாட்சி குடிகொண்டிருக்கும் ஆலயமும் மிகச் சிறியதுதான். பக்தர்கள் பலர் அன்னைக்கு, விதவிதமான வண்ணப் புடவையை சார்த்தி வழிபடுகிறார்கள். அன்னையின் மீது சார்த்திய புடவைகளை ஆலயத்துக்குள்ளேயே விற்பனையும் செய்கிறார்கள்.

    விசாலாட்சியை தரிசித்துவிட்டு வெளியே வந்து, மீண்டும் குறுகிய பல சந்துகள் வழியாகப் பயணித்தால் பிரதான சாலையை அடையலாம். காசி வீதிகளில் ஆங்காங்கே சுடச்சுட தேநீர் விற்கப்படுகிறது. சிறிய மண் குவளைகளில் நிறைத்துத் தருகிறார்கள். விலை ரூ.5 மட்டுமே. குமிட்டி அடுப்பில் உடனுக்குடன் தயாரித்து வழங்குகிறார்கள்.

    காசிக்குச் செல்வோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய நிகழ்வுகளில் முக்கியமானது, மாலையில் நடைபெறும் கங்கா ஆரத்தி. காலை முதல் மாலை வரை காசியிலிருக்கும் கோயில்கள், கடைகளுக்கெல்லாம் சென்றுவிட்டு, மாலை சரியாக 5 மணிக்குள் தசஸ்வமேத காட்டுக்கு அருகே இருக்கும் மேடைக்கு பக்தர்கள் வரத் தொடங்கி விடுகிறார்கள். அங்குதான் மாலை சுமார் 6.30 மணியளவில் கங்கா ஆரத்தி தொடங்குகிறது. கங்கா ஆரத்தியை படித்துறை மேடையில் போடப்படும் நாற்காலிகளில் அமர்ந்தும் பார்க்கலாம், கங்கையில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகளில் (படகுகளில் அமர்ந்து பார்க்க நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணம்!) அமர்ந்தும் பார்க்கலாம்.

    கங்கா ஆரத்தி தொடங்குவதற்கு முன் பக்திப் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுகிறது. படித்துறையிலும், படகுகளிலும் நம் நாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பயணிகள் என்று பலரும் திரளாகக் கூடுகிறார்கள். வானத்தில் கருமை படர ஆரம்பிக்கும் நேரத்தில், படித்துறை மேடைக்கு வருகிறார் தலைமை பூசாரி. அவரைத் தொடர்ந்து மேலும் 6 பூசாரிகள் மேடையேறுகிறார்கள்.

    பூசாரிகள் முதலில் கங்கைக் கரைக்கு வந்து, அன்றைய தினம் யாருடைய சார்பில் பூஜை நடைபெறுகிறதோ அந்தக் குடும்பத்தினரை அழைத்து சில மந்திரங்களைக் கூறி, கங்கைக்கு தீப தூப ஆராதனை காட்டுகிறார்கள். பிறகு ஆரத்தி காட்டுகிறார்கள். பிறகு மீண்டும் மேடைக்குச் சென்று பலவிதமான வழிபாடுகளைச் செய்கிறார்கள்.

    இதில் வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், பூசாரிகள் எல்லோருமே ஒரே மாதிரியாக, கொஞ்சமும் பிசகாமல் ஒரே தாள கதியில் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து பூஜை செய்வதுதான்.

    கருமை பூத்த வானமும், கங்கையின் பிரவாகமும், மணியோசையும், பூஜைப் பொருட்களின் நறுமணமும் சேர்ந்து நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது நிஜம். ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் நம் மனதை இறைவனுடன் ஒன்று கலக்கச் செய்துவிடும் அற்புத அனுபவம் இந்த கங்கா ஆரத்தி. கங்கா ஆரத்தி முடிந்ததும், பூஜை நடந்த மேடைக்குப் போய் ஆரத்தியைத் தொட்டு கண்களில் ஒத்திக் கொள்ளலாம். சிறு சிறு வெண்ணிற மணிகளைப் போன்ற இனிப்புருண்டைகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    அந்த இரவில் படகுப் பயணம் செய்ய விரும்புபவர்கள், படகில் ஏறிப் பயணிக்கலாம். இரவு நேரத்தில் கங்கையைச் சுற்றிக்காட்ட தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பகலில் கங்கையைப் பார்த்து ரசிப்பது ஒருவித அனுபவம என்றால், இரவில் மெய் சிலிர்க்க பவனி வருவது வேறொரு வகையான அனுபவம். உண்மையில், `எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்றுதான் நினைக்கத் தோன்றியது.

    காசியில் மேற்கூறிய இடங்களைத் தவிர, சற்றே தொலைவில் இருக்கும் கால பைரவர் கோயிலும் வெகு பிரசித்தம். போக வர ஒரு மணி நேரம் ஆகலாம். ஆட்டோ அல்லது ரிக்‌ஷாவில் பயணிக்க முடியும். நேரமிருப்பவர்கள் காசியில் இருக்கும் சங்கர மடம், அங்கு எழுந்தருளியிருக்கும் சிவன் கோயிலுக்கும் போய் வரலாம். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், மகாகவி பாரதியார் தங்கியிருந்த வீடு என்று சில முக்கிய இடங்களும் உள்ளன.

    காசியில் முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்க்க இரண்டு தினங்கள் போதுமானது. காசியிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) சென்று, திரிவேணி சங்கமத்தில் நீராடி, அங்கிருக்கும் சில ஆலயங்களைத் தரிசித்துவிட்டு, பாரதத்தின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இல்லமான ஆனந்த பவனத்தைச் சுற்றிப் பார்க்க விரும்பினால், மேலும் ஒரு நாள் தேவைப்படும். வாரணாசி நகரம் முழுவதும் அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப சுற்றுலா விடுதிகள், தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் இங்கு தங்கியிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம். சென்னையில் இருந்து காசிக்கு ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதியும் உள்ளது.

    - ஜி.மீனாட்சி

    • காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காசிக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை காசி தமிழ் சங்கம எக்ஸ்பிரஸ்களாக ரயில்வே நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது. காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, சேலத்தில் இருந்து காசி தமிழ் சங்கம விழாவிற்கு ஆன்மீகவாதிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செல்ல வசதியாக எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரசில் (22669) சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில், கோவையில் இருந்து 81 பயணிகளும், சேலத்தில் இருந்து 51 பயணிகளும் என 132 பேர் புறப்பட்டு சென்றனர். சேலம் ஜங்ஷன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு இன்று காலை 7.20 மணிக்கு காசி தமிழ் சங்கம சிறப்பு எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து 51 பேர் புறப்பட்டனர்.

    ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணு, காசியில் பிந்து மாதவராக வீற்றிருந்து அருள்புரிகிறார்.
    ‘மாதவா’ என்பது மகாவிஷ்ணுவை குறிப்பதாகும். ‘மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் குறிக்கும். ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணு, காசியில் பிந்து மாதவராக வீற்றிருந்து அருள்புரிகிறார்.

    இவரது ஆலயம் பஞ்ச கங்கா காட்டில் அமைந்திருக்கிறது. பிரம்மா வழிபட்ட சிறப்புக்குரியவர், இந்த பிந்து மாதவர். சங்கு, சக்கரத்துடன் கதாயுதம் ஏந்தி காட்சி தருகிறார். ஆலயத்திற்கு வெளியே விஷ்ணு பாதம் இருக்கிறது.

    அதற்கு கங்கை நீரை அபிஷேகம் செய்து, மலர்களைத் தூவி மக்கள் வழிபடுகின்றனர்.
    முக்தியை வழங்கும் தலங்களில் சிறப்பு மிக்கதாகவும், புண்ணியம் மிகுந்த ஆலயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது, காசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில்.
    முக்தியை வழங்கும் தலங்களில் சிறப்பு மிக்கதாகவும், புண்ணியம் மிகுந்த ஆலயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது, காசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில். காசி யாத்திரை என்பது இன்றளவும் ஆன்மிக பயணமாக மட்டுமின்றி, புனிதம் மிகுந்த பயணமாகவும் இருக்கிறது.

    இங்குள்ள ஈசனின் அருளால் தான், சனீஸ்வர பகவான், நவக்கிரகங்களில் ஒருவராக ஆனதுடன், ஈஸ்வர பட்டத்தை யும் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. காசியில் உயிர் நீத்தவர்களின், காதில் இத்தல சிவபெருமானே பிரணவ மந்திரமான ‘ஓம்’ என்ற மந்திரத்தை ஓதி முக்தியடையச் செய்வதாக சொல்லப்படுகிறது.

    காசியில் கங்கை நதிக்கரையில் 64 படித்துறைகள் இருக்கின்றன. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்புறம் ஆதி விஸ்வநாதர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிறிய கருவறைக்குள் உள்ள இறைவனுக்கு பக்தர்கள், தாங்களே கங்கை நீரை எடுத்து அபிஷேகம் செய்து வழிபடலாம்.
    இறைவன் ஒருவனே கதி என மனதில் தியானித்து இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான், பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்றார்கள்.
    காசி, ராமேஸ்வரம் என்றதுமே, அது வயதானப் பின் செல்ல வேண்டிய இடம் என்பது பொதுவாக பெரும்பாலான மக்களின் எண்ணம். வாழ்க்கையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றியவர்கள், இதற்கு மேல் தங்களுக்கு வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று காசி, ராமேஸ்வரப் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த கடமைகளை முடித்தவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற நியதி ஏதுமில்லை. காசியும், ராமேஸ்வரமும் ஆன்மிக அதிர்வலைகள் அதிகமுள்ள திருத்தலங்கள். இன்றைக்கும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனைத்து வயதினரையும் காசி, ராமேஸ்வர தளங்களில் பார்க்க முடியும்.

    காசி என்பது முக்தி தலமாக போற்றப்படுகிறது. பிறவா வரம் வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்லும் பக்தர்கள், புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டுதல் செய்வர். காசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும் என்பது நமது இந்து மத நம்பிக்கை.இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் ஓடும் கங்கையில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    கங்கையில் நீராடிவிட்டு பாபங்கள் நீங்கி புது மனிதனாக பிறப்பெடுக்கும் போது, மீண்டும் இவ்வுலக சுக போகங்களில் பற்று கொண்டு  விடக் கூடாது. மீண்டும் அழியும் பொருளின் மீதும் அதிகப் பற்றோ அல்லது விருப்பமோ வந்துவிடக் கூடாது. இனி இறைவன் ஒருவனை கதி என மனதில் தியானித்து இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான், பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்  என்றார்கள். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழப் பழகுபவனுக்கு, ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்து விடும்.

    இதன் பொருட்டு தான் காசிக்குச் சென்றால், அழியும் பொருட்களின் மீது தங்களுடைய பிடிப்பை விட்டுவிட்டு வர வேண்டும் என்பார்கள். இதுவே நாளடைவில் காசிக்குச் சென்றால் எதையாவது விட்டு வர வேண்டும் என்று மாறியது. விட வேண்டியது பிடித்த உணவுகளையோ அல்லது காய் கனிகளையோ மட்டுமல்ல. காமக்குரோத மனமாச்சர்யங்களை அக அழுக்குகளை விட்டு வந்து மீண்டும் பிறவாத பெரும் வரம் பெறுவோம்.

    ஓம் நமச்சிவாய

    தென்னாடு உடைய சிவனேப் போற்றி!
    காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. காரணம் பின்வருமாறு:-

    ராமர், ராவண வதம் செய்தபின் சேதுவில் சிவ பூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி ஏவினார்.

    அனுமார் காசியை அடைந்து பார்த்தார். எங்கும் லிங்கங்கள்; எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமார் அந்தச் சிவலிங்கத்தைப் பேர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

    காசியின் காவலராகிய காலபைரவர் அதுகண்டு கோபித்தார். “என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்?” என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும், அனுமாருக்கும் கடும் போர் நடந்தது.

    அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி, “உலக நன்மைக்காக இந்தச் சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொடுத்தனுப்பினார்.

    தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமாருக்குத் துணை புரிந்த கருடன் காசிநகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார்.

    அந்தச் சாபத்தின்படி இன்றும் கருடன் பறப்பதில்லை. பல்லி ஒலிப்பதில்லை.

    காசிக்குப் போகும் போது, அன்னபூரணியை வழிபடும் போது, மறக்காமல் அந்த அட்சய பாத்திரத்தையும் கண் குளிரப் பார்த்து வழிபடுங்கள். உங்கள் செல்வம் அட்சயமாக வளரும்.
    வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும்பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தாள்.

    திருமாலே ‘அட்சய’ என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது. பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் கரத்தில் அந்த கபாலம் ஒட்டிக்கொண்டது.

    எங்கெங்கோ சிவபெருமான் பிட்சாடனராக பிச்சை பெற்றபோதும் அந்த கபாலம் அவருடைய கையை விட்டு நீங்கவே இல்லை. இறுதியில் அன்னபூரணி தமது பாத்திரத்தில் இருந்து பிச்சை இட்டதும் அவரது கரத்தில் இருந்து கபாலம் நீங்கியது.



    அன்னபூரணியின் அட்சயப் பாத்திரம் அள்ள அள்ளக்குறையாத அருளை வழங்கக்கூடியது. அன்னபூரணியை வணங்கும் பக்தர்கள் இந்த அட்சயப் பாத்திரத்தையும் சேர்த்தே வணங்குகிறார்கள்.

    அன்னை விசாலாட்சியின் கோயில் காசி விசுவநாதர் கோயிலில் இருந்து சுமார் இரண்டு பர்லாங்குகள் தூரத்தில் அமைந்துள்ளது. தன்னை வணங்கி வழிபட வருவோரின் கஷ்டங்களை போக்கி, வேண்டுவனவற்றை அருளும் விசாலாட்சி, கருவறை நடுவில் திருவருள் சுரக்கும் திருநோக்குடன் திருக்காட்சி அருள்கின்றாள்.

    அனைத்து உயிர்களின் களைப்பையும் நீக்கி இறுதியில் உறுதுணையாக இருந்து, வினைப் பிணிகளாகிய முடிச்சுகளை அவிழ்த்து, நம் தீவினைகளைத் திருவருட் பார்வையால் போக்கி, என்றும் மீளாத இன்பத் திருவடியை அளிக்கின்றாள் அன்னபூரணி.

    ஞானம், வைராக்கியம் என்ற மோட்ச சாதனங்கள் இரண்டையும் நமக்குப்பிச்சையிடுகின்றாள் அன்னபூரணி. இந்த அன்னபூரணி, ஒரு திருக்கரத்தில் கரண்டியையும் ஒரு திருக்கரத்தில் அன்ன பாத்திரத்தையும் தாங்கியவளாகத் திகழ்கின்றாள்.

    கேட்டதைக் கொடுக்க கூடிய கற்பக விருட்சம் போன்றது அன்னபூரணியின் கரத்தில் இருக்கும் அட்சய பாத்திரம். காசியில் வீற்றிருக்கும் அன்னை அட்சய பாத்திரம் தாங்கியிருக்கிறாள்.

    காசிக்குப் போகும் போது, அன்னபூரணியை வழிபடும் போது, மறக்காமல் அந்த அட்சய பாத்திரத்தையும் கண் குளிரப் பார்த்து வழிபடுங்கள். உங்கள் செல்வம் அட்சயமாக வளரும்.
    ×