என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95492"

    அன்பு மற்றும் பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்களைப் போன்று, அறிவு நெறியை வளர்த்த நால்வர், சந்தானக்குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
    சைவநெறியை வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும். தேவாரம், திருவாசகம் பாடி அன்பையும், பக்தி நெறியையும் வளர்த்த இவர்களை சமயக்குரவர்கள் என்றும் அழைப்பார்கள். அன்பு மற்றும் பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்களைப் போன்று, அறிவு நெறியை வளர்த்த நால்வர், சந்தானக்குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். (இவர்களில் அகசந்தானக் குரவர்கள், புற சந்தானக்குரவர்கள் என்று இருவகை உண்டு. நாம் இங்கே பார்க்கப்போவது புற சந்தானக்குரவர்கள்.) சமயக்குரவர்கள் மற்றும் சந்தானக் குரவர்களின் அவதார தலம் மற்றும் முக்தி தலங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சமயக்குரவர்கள்

    திருஞானசம்பந்தர்:
    அவதார தலம் - சீர்காழி
    முக்தி தலம் - ஆச்சாள்புரம்

    திருநாவுக்கரசர்:

    அவதார தலம் - திருவாமூர்
    முக்தி தலம் - திருப்புகலூர்

    சுந்தரமூர்த்தி சுவாமிகள்:

    அவதார தலம் - திருநாவலூர்
    முக்தி தலம் - திருவஞ்சைக்களம்

    மாணிக்கவாசகர்:

    அவதார தலம் - திருவாதவூர்
    முக்தி தலம் - தில்லை (சிதம்பரம்)

    சந்தானக் குரவர்கள்

    மெண்கண்டார்:

    அவதார தலம் - திருப்பெண்ணாடகம்
    முக்தி தலம் - திருவண்ணாமலை

    அருள் நந்திதேவநாயனார்:

    அவதார தலம் - திருத்துறையூர்
    முக்தி தலம் - சீர்காழி

    மறைஞானசம்பந்தர்:

    அவதார தலம் - பெண்ணாடகம்
    முக்தி தலம் - சிதம்பரம்

    உமாபதி சிவம்:

    அவதார தலம் - சிதம்பரம்
    முக்தி தலம் - சிதம்பரம்
    இறைவனுக்கு, அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டதும் மணியடித்து தீபாராதனை காட்டுவதற்கான நோக்கம் என்ன? என்பது பற்றி, காஞ்சி மகா பெரியவர் அளித்த விளக்கத்தை இங்கே பார்ப்போம்..
    ஆலய கருவறையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு, அலங்காரம் முடியும் வரை திரையிடப்படும். அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டதும் மணி அடிக்கப்பட்டு, தீபாராதனை காட்டுவார்கள். இப்படி மணியடித்து தீபாராதனை காட்டுவதற்கான நோக்கம் என்ன? என்பது பற்றி, ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கத்தை இங்கே பார்ப்போம்..

    "வழிபாட்டின் போது நம்மனம் பக்தியில் நிலைத்திருக்க வேண்டும். அதை விடுத்து கவனத்தை எங்கோ சிதறவிட்டு விட்டு, இறைவனை வணங்குவதால் எந்த பலனும் இல்லை. மந்திரம் ஜெபிக்கும் போதும், தியானம் செய்யும் போதும் மனம் மந்திரத்திலேயே கருத்தூன்றி இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ , இறை தரிசனத்தின்போதும் மனஒருமைப்பாடு அந்த அளவுக்கு முக்கியமானது.

    கோவிலில் வழிபடும் போது, இறைவனைத் தவிரவேறு எந்த எண்ணமும் மனதில் நிழலாடக் கூடாது. ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், உடல் அனைத்தும், நம்மனதை திசை திரும்பும் சக்தி படைத்தவை. அவற்றை இறைவனை நோக்கி திருப்புவதுதான் வழிபாட்டின் நோக்கம் ஆகும். அலங்காரம் முடித்து மூலவர் சன்னிதி முன்புள்ள திரையை விலக்கும்போது, கடவுளின் திருமேனி அழகில் கண்கள் ஈடுபடுகின்றன.

    கோவிலில் பிற சப்தங்கள் நம் கவனத்தை ஈர்க்காத வகையில், அந்த சப்தங்களை அடக்குவதற்காகவே மணியோசை ஒலிக்கப்படுகிறது. திரை விலகி, இறை தரிசனத்தைக் கண்டவுடன், நம்முடையவாய் இறைவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். பூ மாலை, கற்பூர ஆரத்தி, தீபம், தூபம் போன்றவற்றால் வெளிப்படும் தெய்வீக நறுமணம், மற்ற எந்த வாசைனையையும் நுகர விடாமல் மூக்கை தடுக்கிறது.

    கரங்கள் இரண்டும் குவிந்து இறைவனை வணங்கும்போது, உடல் பணிவுடன் இறைவனின் அருளை வேண்டுகிறது. இப்படி ஐம்புலன்களும் வழிபாட்டில் ஈடுபட்டால்தான் ஒருவரின் மனம் ஒருமுகப்படும். அந்த நிலையில் பக்தனின் உள்ளமும் கூட கோவிலாக மாறும். அதுதான் வழிபாட்டின் தத்துவம்" என்று பதிலளித்தார் காஞ்சி சங்கராச்சாரியார்.

    குமாரபாளையத்தில் வைகாசி மாத வெள்ளிக்கிழமையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    வைகாசி வெள்ளிக்கிழமையையொட்டி   குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. 

    இதேபோல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன்   கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. 

    பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • சாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
    • அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பல்வேறு தலபெருமைகளை உடைய இந்த கோவிலில் அபிராமி அம்மன் ஆடிப்பூர மகோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. 10 நாள் உற்ச்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் அபிராமி அம்மன் எழுந்தருளிய தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.வீடுகள் தோறும் தீபாரதனை, அர்ச்சனை செய்து குடியிருப்பு வாசிகள் வழிபாடு செய்தனர்.

    அறுபடை முருகன் கோவில்களுக்கும் 27 உயரவேல் வழிபாடு யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றது.
    திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வழிபாட்டிற்காக 27 அடி உயரமுள்ள 1800 எடை கொண்ட ஒருவேல் யாத்திரையாக எடுத்துவரப்பட்டது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து தமிழ் கட்சி மாநிலத் தலைவர் ராம.ரவிக்குமார், பிரதமரின் மக்கள் நலத்திட்ட பிரசார இயக்க மாநிலத் தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்துதமிழ் கட்சி தலைவர் ராம். ரவிக்குமார் கூறும்போது, தமிழ்நாட்டில் வழிபாட்டின் மூலமாக மக்களிடம் ஆன்மிக எழுச்சியை உருவாக்க வேண்டும். பக்தி உடையவர்களை இந்து சக்தியாக ஒருங்கிணைக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஊரிலும் வேல் வழிபாட்டு மன்றங்கள் உருவாக்க வேண்டும். அதர்ம சக்தி அழிந்து தர்ம சக்தி மேலோங்க வேண்டும்.

    இதற்காக அறுபடை முருகன் கோவில்களுக்கும் 27 உயரவேல் வழிபாடு யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றது. தற்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து பூஜை செய்யப்பட்டது. நாளை (இன்று) பழனி முருகன் கோவிலில்பூஜை செய்யப்படுகிறது. மேலும் மற்ற முருகபெருமானின் படை வீடுகளுக்கும் வேல் வழிபாடு யாத்திரை செல்ல உள்ளோம் தெரிவித்தார்.
    பழமையான அகத்தீசுவரர் கோவிலின் பாதாள ரகசிய அறையை பூட்டை உடைத்து திறந்து, அதன் உள்ளே இருந்த சிலைகளை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். அந்த நேரத்தில் கோவிலின் வெளியே பக்தர்கள் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.
    மதுரை மாவட்டம் திருச்சுனை கிராமத்தில் பழமையான அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை மதுரை மண்டல அறநிலையத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதற்காக கோவிலை ஆய்வு செய்தபோது உற்சவர்கள் சிலைகள் இல்லாமல் இருந்ததும், கோவில் கருவறை அருகே ரகசிய பாதாள அறை ஒன்று இருந்ததும் தெரியவந்தது.

    இந்த அறை பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் கோவிலின் ரகசிய அறை பூட்டை உடைத்து திறந்தனர். அங்கு பழமை வாய்ந்த மூஷிக வாகன விநாயகர் மற்றும் சண்டிகேசுவரர், அம்மன் சிலைகளும், சூலாயுதம், விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களும் அங்கிருந்தன. அவை எடுக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டன.

    கோவிலின் ரகசிய பாதாள அறை திறக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பக்தர்கள் கோவில் முன் திரண்டனர். ஆனால் பாதுகாப்பு கருதி அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    ஆந்தையை தன்னுடைய வாகனமாக கொண்டு, அதன் மேல் வீற்றிருக்கும் இந்த யோகினி, போர்க்களத்திற்கு தயாராவது போல் காணப்படுகிறார். கைகளில் வாள், கேடயம் தாங்கியிருக்கிறார்.
    இந்துமத வழிபாடுகளில் முக்கியமானது, சக்தி எனப்படும் அம்பாளுக்குரிய ‘சாக்தம்’ வழிபாடு. அந்த சக்தி வழிபாட்டில், பரிவார தேவதைகளாக விளங்கும் யோகினிகள் மிகவும் முக்கியமானவர்கள். அன்னை பராசக்தி தன்னுடைய உடலில் இருந்து, 8 யோகினிகளை தோற்றுவித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    அந்த 8 யோகினிகளும், தலா 8 பேர் வீதம் 64 யோகினிகளாக மாறினர். இவர்கள் அனைவரும் 64 கலைகளை குறிப்பிடுவதாகவும் சொல்வதுண்டு.

    அதில் ஒரு வித்தியாசமான யோகினி தேவியின் வடிவத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். ஆந்தையை தன்னுடைய வாகனமாக கொண்டு, அதன் மேல் வீற்றிருக்கும் இந்த யோகினி, போர்க்களத்திற்கு தயாராவது போல் காணப்படுகிறார். கைகளில் வாள், கேடயம் தாங்கியிருக்கிறார்.

    இரண்டு விரல்களால் ‘விசில்’ அடிக்கும் தொனியில் காணப்படுகிறார். போர் தொடங்குவதற்கு முன்பாக எழுப்பப்படும் ஒலியை, இப்படி விரல்கள் மூலம் இந்த யோகினி எழுப்புவதாக கருதப்படுகிறது.

    உத்தரபிரதேசம் அல்லது மத்திய பிரதேசத்தில் இருந்த, 10-11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலை, தற்போது அமெரிக்காவின் சான் அன்டனியோ கலை அருங்காட்சியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
    எந்தப் பெண் தனது சகோதரரை எம துவிதியை நாளில் நல்ல உணவு, உடை, தாம்பூலம் முதலியவைகளால் சந்தோஷப்பட செய்கின்றாளோ, அந்த பெண் கணவனை இழக்கும் தன்மையை ஒருபோதும் அடைய மாட்டாள் என்று கூறுகிறது பிரம்மாண்ட புராணம்.
    இன்று (சனிக்கிழமை) எம துவிதியை தினமாகும். இந்த தினத்தை சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை தினமாக ஆதி காலத்தில் இருந்து கொண்டாடுவதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. சூரியனின் குழந்தைகளான எமனும், யமுனையும் அண்ணன், தங்கையாகும்.

    இவர்களது அண்ணன், தங்கை பாசம் மிக உயர்வானதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யமுனாதேவி ஒரு சமயம் தனது சகோதரன் எமனை தனது வீட்டிற்கு வரவழைத்தாள். எமனும் தனது சகோதரியின் அழைப்பை ஏற்று நிறைய உடைகள், நகைகள் முதலிய சீர்களுடன் யமுனையின் வீட்டிற்குச் சென்றார்.
    யமுனையும் தனது கையாலேயே பலவிதமான உணவு வகைகளை தயார் செய்து சாப்பிடச் செய்து சகோதரனை உபசரித்தாள்.

    எமனும் பரிசுகளை கொடுத்து சகோதரியை மகிழ்வித்தார். அந்த திருநாள்தான் தீபாவளிக்குப் பிறகு வரும் எம துவிதியை ஒற்றுமையை வளர்க்கும் நன்னாள் என்று மரமாகி உள்ளது.

    இந்த நாளில் ஆணாக பிறந்த ஒவ்வொருவரும் தனது வீட்டில் சாப்பிடக் கூடாது. தனது உடன்பிறந்த சகோதரியின் வீட்டில் தான் சாப்பிட வேண்டும். சகோதரிக்கு நிறைய பரிசு பொருட்கள் கொடுத்து மகிழ்விக்க வேண்டும். பெண்ணாகப் பிறந்தவர்கள் தனது சகோதரனை வீட்டுக்கு அழைத்து விருந்து சாப்பாடு போட வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    இதனால் ஒருவருக்கொருவர் அன்பு வளரும். இருவருக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், உடல் வலிமை, செல்வம் முதலிய நன்மைகள் உண்டாகும். எந்தப் பெண் தனது சகோதரரை எம துவிதியை நாளில் நல்ல உணவு, உடை, தாம்பூலம் முதலியவைகளால் சந்தோஷப்பட செய்கின்றாளோ, அந்த பெண் கணவனை இழக்கும் தன்மையை ஒருபோதும் அடைய மாட்டாள் என்று கூறுகிறது பிரம்மாண்ட புராணம்.

    சகோதரிகளின் வீட்டிற்கு செல்ல முடியாதவர்கள் தனது சகோதரிக்கு சிறிய பணம், பொருட்கள் ஆகியவற்றை சீராக அனுப்பி வைக்கலாம். உடன்பிறந்த சகோதரி இல்லாதவர்கள் தனது சித்தப்பா பெண், மாமா பெண், பெரியம்மா பெண், சின்னம்மா பெண் முதலியவர்களை உடன் பிறந்த சகோதரியாக பாவிக்கலாம். எந்த ஒரு உபவாசமோ, பூஜையோ, மந்திரமோ இல்லாத சுலபமாக செய்யப்படும் இந்த எம துவிதியை விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். ஒற்றுமையை வளர்த்துக் கொண்டு நன்மையை அடைவோம்.
    இறைவனின் திருவருளானது தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. அது பணிவு உள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும்
    ஆன்மிகத்தில் ‘பணிவு’க்கு முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பணிவு வாழ்க்கையை உயர்த்துகிறது. பணிவின்மை வாழ்க்கையை அழித்து விடுகிறது. பணிவு இல்லாவிட்டால், கணவன் - மனைவி உறவு, பெற்றோர் - பிள்ளை உறவு, ஆசிரியர் - மாணவர் உறவு, அதிகாரி - பணியாளர் உறவு என அனைத்தும் சிதறிப்போய்விட வாய்ப்பிருக்கிறது. அதன் மூலம் சமுதாயத்திலும், குடும்பத்திலும் குழப்பங்கள், போராட்டங்கள், பிரச்சினைகள் உருவாகும். எனவே எங்கும், எவ்விடத்திலும், எப்போதும் பணிவோடு இருங்கள்.

    ‘சைவ சமயம்’ என்பதற்கு ‘தாழ்வு என்னும் தன்மையோடு சைவமாம் சமயம் சார்தல்’ என்று சைவ சமயத்தினர் இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறார்கள். தாழ்வு, அடக்கம், பணிவு போன்றவை, சைவ சமயத்திற்கு உரிய சிறப்பு என்று அந்த சமயம் வலியுறுத்துகிறது. பணிவு என்ற ஒன்று அமையும்போதுதான், ஒரு சைவனின் வாழ்க்கை முழுமை பெறுவதாகவும் அந்த சமயம் சுட்டிக்காட்டுகிறது. “புல்லைப் போன்று பணிவுடையவனாக இரு” என்பது கிருஷ்ண சைதன்யரின் முக்கியமான உபதேசமாகும்.

    விவேகானந்தரின் குருவாக இருந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், பணிவு குறித்து இவ்வாறு சொல்கிறார். “மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. அது பள்ளமான இடத்துக்கு ஓடிவந்து விடுகிறது. அதுபோல், இறைவனின் திருவருளானது தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. அது பணிவு உள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும்” என்கிறார்.

    நெற்கதிர்கள் முதிர்ச்சி அடைந்தால், அதுவாகவே தலையை சாய்க்கும். அதுபோல் வாழ்க்கையில் உயர உயர மனிதர்களிடமும் பணிவு வளர வேண்டும். வாழ்க்கையில் உயர்வுபெற விரும்புபவன், பணிவுடையவனாக இருக்க வேண்டியது அவசியம். எல்லோருக்கும் பணிவு இருக்க வேண்டும் என்பதைத்தான், திருவள்ளுவர் தன்னுடைய குறளில், எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து” என்று கூறுகிறார்.
    திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று பொருள். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பதாகும்.
    1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.

    அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப, அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.

    நற்பலன் தரும் திதிகள்:

    ஞாயிறு-அஷ்டமி,
    திங்கள்-நவமி,
    செவ்வாய்-சஷ்டி,
    புதன்-திரிதியை;
    வியாழன்-ஏகாதசி,
    வெள்ளி-திரயோதசி,
    சனி-சதுர்த்தசி திதி.

    இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதில் வெற்றியே கிட்டும்.

    சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்:

    ஞாயிறு-சதுர்த்தசி,
    திங்கள்-சஷ்டி,
    செவ்வாய்-சப்தமி,
    புதன்-துவிதியை,
    வியாழன்-அஷ்டமி,
    வெள்ளி-நவமி,
    சனி-சப்தமி.

    மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது.
    ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்தில் சாம்பராணி புகை போட்டு வந்தால் பல வகையான நன்மைகள் கிடைக்கும். எந்தக் கிழமையில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
    குங்கிலியம் என்னும் சாம்பராணி புகை போட்டு இறைவனுக்கு காட்டுவது, தூபம் என்று பொருள். இதனை ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்தில் செய்து வந்தால் பல வகையான நன்மைகளை அடைய முடியும். எந்தக் கிழமையில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    குங்கிலியம் என்னும் சாம்பராணி புகை போட்டு இறைவனுக்கு காட்டுவது, தூபம் என்று பொருள். இதனை ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்தில் செய்து வந்தால் பல வகையான நன்மைகளை அடைய முடியும். எந்தக் கிழமையில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    * ஞாயிற்றுக்கிழமை - ஆத்ம பலம், செல்வாக்கு, புகழ் உயரும். ஈஸ்வர அருள் கிடைக்கும்.

    * திங்கட்கிழமை - தேக, மன ஆரோக்கியம், மன அமைதி கிடைக்கும். அம்பாள் அருளைப் பெறலாம்.

    * செவ்வாய்க்கிழமை - எதிரிகளின் போட்டி, பொறாமை நீங்கும். தீய - எதிர்மறை எண்ணங்களின் மூலம் உண்டான கண் திருஷ்டி கழியும். கடன் நிவர்த்தியாகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். முருகப்பெருமான் அருள் கிடைக்கும்.

    * புதன்கிழமை - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல சிந்தனை வளரும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். சுதர்சனரின் அருளைப் பெறுவீர்கள்.

    * வியாழக்கிழமை - அனைத்து விதமான சுப பலன் களையும் பெறுவீர்கள். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும். முன்னேற்றம் அதிகரிக்கும்.

    * வெள்ளிக்கிழமை - லட்சுமி கடாட்சம் இல்லத்தில் நிறையும். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும்.

    * சனிக்கிழமை - சோம்பல் நீங்கும். துன்பங்கள் அனைத்தும் விலகும். சனீஸ்வரன் மற்றும் பைரவரின் அருளைப் பெறலாம்.

    மிக அரிதான வல்லகி யோகமான இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பெருந்தன்மையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். நற்குணங்கள் காரணமாக, பல வகை நன்மைகளை வாழ்வில் பெறுவார்கள்.
    செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

    ஒருவரது சுய ஜாதகத்தில் ராகு, கேது கிரகங்களை தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களும், ஏழு ராசிகளில், ஒரு ராசிக்கு ஒரு கிரகம் வீதம் இருப்பது வல்லகி யோகத்தை ஏற்படுத்துகிறது. மிக அரிதான யோகமான இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பெருந்தன்மையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    நற்குணங்கள் காரணமாக, பல வகை நன்மைகளை வாழ்வில் பெறுவார்கள். சுய முயற்சியால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வதுடன், தாம் வசிக்கும் பகுதியில் பிரபலம் பெற்றவர்களாக இருப்பார்கள். பெற்ற அன்னையிடமிருந்து பல உதவிகளை பெறும் யோகமும் இவர்களுக்கு உண்டு. திருமண வாழ்க்கை இனிமையாக அமையப்பெற்றவர்களில் இவரும் ஒருவர்.

    உழைப்பால் உயர்ந்து, வீடு, வாகனம், அசையும் சொத்து மற்றும் அசையா சொத்து என்று வளர்ச்சி காண்பார்கள். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டதால், சிலர் இசைக்கலைஞர்களாகவும் இருப்பார்கள். சிலர் நாடகம், திரைப்பட துறைகளில் ஈடுபட்டு பொருள் மற்றும் புகழ் பெறுவார்கள்.

    ×