search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயக்குரவர்களும்.. சந்தானக்குரவர்களும்...
    X
    சமயக்குரவர்களும்.. சந்தானக்குரவர்களும்...

    சமயக்குரவர்களும்.. சந்தானக்குரவர்களும்...

    அன்பு மற்றும் பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்களைப் போன்று, அறிவு நெறியை வளர்த்த நால்வர், சந்தானக்குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
    சைவநெறியை வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும். தேவாரம், திருவாசகம் பாடி அன்பையும், பக்தி நெறியையும் வளர்த்த இவர்களை சமயக்குரவர்கள் என்றும் அழைப்பார்கள். அன்பு மற்றும் பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்களைப் போன்று, அறிவு நெறியை வளர்த்த நால்வர், சந்தானக்குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். (இவர்களில் அகசந்தானக் குரவர்கள், புற சந்தானக்குரவர்கள் என்று இருவகை உண்டு. நாம் இங்கே பார்க்கப்போவது புற சந்தானக்குரவர்கள்.) சமயக்குரவர்கள் மற்றும் சந்தானக் குரவர்களின் அவதார தலம் மற்றும் முக்தி தலங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சமயக்குரவர்கள்

    திருஞானசம்பந்தர்:
    அவதார தலம் - சீர்காழி
    முக்தி தலம் - ஆச்சாள்புரம்

    திருநாவுக்கரசர்:

    அவதார தலம் - திருவாமூர்
    முக்தி தலம் - திருப்புகலூர்

    சுந்தரமூர்த்தி சுவாமிகள்:

    அவதார தலம் - திருநாவலூர்
    முக்தி தலம் - திருவஞ்சைக்களம்

    மாணிக்கவாசகர்:

    அவதார தலம் - திருவாதவூர்
    முக்தி தலம் - தில்லை (சிதம்பரம்)

    சந்தானக் குரவர்கள்

    மெண்கண்டார்:

    அவதார தலம் - திருப்பெண்ணாடகம்
    முக்தி தலம் - திருவண்ணாமலை

    அருள் நந்திதேவநாயனார்:

    அவதார தலம் - திருத்துறையூர்
    முக்தி தலம் - சீர்காழி

    மறைஞானசம்பந்தர்:

    அவதார தலம் - பெண்ணாடகம்
    முக்தி தலம் - சிதம்பரம்

    உமாபதி சிவம்:

    அவதார தலம் - சிதம்பரம்
    முக்தி தலம் - சிதம்பரம்
    Next Story
    ×