search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garuda"

    • மேலும் தற்போது நான் நடிக்கும் 'கருடன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.
    • இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.

    இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் தேசிங்கு ராஜா, ஜீவா,வேதாளம், ஜில்லா உள்ளிட்ட படங்கள் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து கதாநாயகனாக நடித்தும் வெற்றி பெற்றார்.மேலும் 'விடுதலை' படத்தில் ஹிட் ஆனது. கடும் உடற்பயிற்சி செய்து 'சிக்ஸ் பேக்' உடலில் போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசனாக நடித்தார்.

    இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது.இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி கூறியதாவது :-

    விடுதலை- 2 படத்தில் என்னுடைய படப்பிடிப்புக்கான காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால், இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் தற்போது நான் நடிக்கும் 'கருடன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.

    'விடுதலை- 2' படத்திற்கு முன்னதாக 'கருடன்' படம் ரிலீஸ் ஆகி விடும். விடுதலை- 2 படம் போலவே 'கருடன்' படமும் ஒரு நல்ல படமாகும். இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது.

    தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு என்னை யாரும் அழைக்க வில்லை.படம் நடிப்பில் நான் 'பிஸி' ஆக இருக்கிறேன்''.என தெரிவித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பக்தர்கள் 5 ஆயிரம் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • சுவாமிக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆடி சுவாதி திருவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் கருடனுக்கு திருமஞ்சனம், திருவாய்மொழி சேவாகாலத்துடன் நடைபெற்று வந்தது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் ஆடி சுவாதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    காலையில் பெருமாளுக்கு கலச திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ஏராளமான பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. கோவில் வடக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு 2 ஆயிரம் லிட்டா் பால் அபிஷேகம் செயப்பட்டது. தொடா்ந்து மாவுப்பொடி, மஞ்சள், திரவியம், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தனம் கொண்டு நவ கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.

    பக்தர்கள் 5 ஆயிரம் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னா் சுவாமிக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து பிரபந்தகோஷ்டியாரின் திருவாய்மொழி சாற்றுமுறை நடைபெற்று தீர்த்த விநியோகம் நடைபெற்றது.

    விழாவில் கோவில் செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருடாழ்வாரை தாிசனம் செய்தனா்.

    • கருடனை வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும்.
    • யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    கருடாழ்வாரை பெரிய திருவடி என்றும் ஸ்ரீஅனுமனை சிறிய திருவடி என்றும் சொல்வார்கள். பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் என்கிறது புராணம் இன்று ஆடி சுவாதி அனுஷ்டிக்கப்படுகிறது.

    இந்த நன்னாளில், விரதம் இருந்து கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும்!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும். இன்று ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், நாச்சியார்கோயில் திருவல்லிக்கேணி போன்ற அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.

    யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும்?

    1. ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நக்ஷத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள்.

    2. ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புண்ணியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு/ கேது அமைய பெற்றவர்கள்.

    3. ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்

    4. சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு/கேது சேர்க்கை பெற்றவர்கள்

    5. கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள்

    6. பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள்.

    7. கோசார ராகு/கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள்

    8. ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள்

    கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

    • நம்முடைய வாழ்க்கையில் எது நடக்க வேண்டுமோ அது நடந்துதான் தீரும்.
    • வாழ்வின் முடிவை விதிவசம் ஒப்படைத்து, செய்வதை சிறப்புடன் செய்வோம்.

    ஒரு முறை கருட பகவான் ஓய்வாக ஒரு மரக்கிளையில் போய் அமர்ந்தார். அந்த மரத்தின் எதிரே இருந்த ஒரு மரத்தில், குருவி ஒன்று அமர்ந்து கிளைக்கு கிளை தாவி விளையாடிக்கொண்டிருந்தது. அந்தக் குருவியின் விளையாட்டில் லயித்துப் போய் இருந்த கருட பகவானுக்கு, அந்தக் குருவியை யாரோ, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரியவே, சுற்றும் முற்றும் தன்னுடைய பார்வையை சுழற்றினார். அப்போது குருவி இருந்த மரத்தின் அருகே இருந்த மற்றொரு மரத்தில் இருந்து எமதர்மன், அந்தக் குருவியையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இப்போதுவரை மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கும் இந்தக் குருவிக்கு, எமதர்மனின் பார்வையால் கேடு காலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். சற்றும் யோசிக்காத கருட பகவான், உடனடியாக பறந்து, குருவியை தன்னுடைய காலால் பற்றிக்கொண்டு, நொடிப் பொழுதில் பல்லாயிரம் மைல்கள் கடந்து, பசுமை போர்த்தி நின்ற பழங்கள் நிறைந்த ஒரு மரத்தின் கிளையில் போய் வைத்தார்.

    'அப்பாடா.. குருவியை, எமதர்மனிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்' என்று கருடபகவான் நினைத்துக் கொண்டிருந்த அதே தருணத்தில், குருவி அமர்ந்திருந்த கிளையின் அருகில் இருந்த ஒரு மரப்பொந்தில் இருந்து வெளிப்பட்ட பாம்பு ஒன்று, சட்டென்று அந்த குருவியைக் கவ்வி விழுங்கியது. அதைப் பார்த்து திகைத்துப் போன கருட பகவான், 'குருவியை காப்பாற்ற நினைத்து, அதற்கு தானே எமனாக மாறிப்போய் விட்டோமே' என்று எண்ணி வருந்தினார்.

    அப்போது அங்கு வந்து சேர்ந்தார், எமதர்மன். அவரைப் பார்த்ததும் கருடன் தன்னுடைய தலையை தாழ்த்திக்கொண்டார். எமதர்மன் கருடனை பார்த்து "கருட தேவா.. நான் அந்தக் குருவியை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, நான் அதைக் கொல்லப் போகிறேன் என்று நீங்கள் கருதி விட்டீர்கள். அதனால்தானே.. அதை காப்பாற்றும் விதமாக இங்கு தூக்கி வந்தீா்கள்?" என்று கேட்டார்.

    அதற்கு 'ஆம்' என்பது போல் தலையை அசைத்தார் கருடன்.

    "நீங்கள் என்னை தவறாக புரிந்துகொண்டீர்கள். அந்தக் குருவியின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்பது உண்மைதான். ஆனால் ஒரு சில நொடியிலேயே அது வீற்றிருந்த மரக்கிளையில் இருந்து, பல ஆயிரம் மைல்கள் தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் பொந்தில் இருக்கும் பாம்பினால், அதற்கு ஆயுள் முடியும் என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பறவை பறந்து சென்றால், பாம்பு இருக்கும் இடத்தை அடைய ஒரு சில நாட்களாவது பிடிக்கும். வேறு எந்தப் பறவை தூக்கிச் சென்றாலும் கூட அவ்வளவு காலம் தேவைப்படத்தான் செய்யும். ஆனால் அதன் ஆயுள் முடியப் போவதோ சில நொடிகளுக்குள் ஆயிற்றே என்ற ஆழ்ந்த சிந்தனையில்தான், அந்தக் குருவியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் விதிப் பயன் எப்படியும் நிறைவேறியேத் தீரும் என்பதை நான் உடனடியாகவே புரிந்துகொண்டேன். ஏனெனில் காற்றை விட வேகமாக பறக்கும் நீங்கள், அந்தக் குருவியை காப்பாற்றுவதாக நினைத்து, சில நொடிகளிலேயே, அதை பல ஆயிரம் தூரத்திற்கு கொண்டு சென்று வைத்துவிட்டீர்கள். அதனால் விதிப்படியே அனைத்தும் நடந்தேறி விட்டது" என்று சொல்லி முடித்தார்.

    ஆம்.. நம்முடைய வாழ்க்கையில் எது நடக்க வேண்டுமோ அது நடந்துதான் தீரும். அதுகுறித்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், இப்போது செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர செய்ய முடியாது. எனவே வாழ்வின் முடிவை விதிவசம் ஒப்படைத்து, செய்வதை சிறப்புடன் செய்வோம்.

    • இன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
    • கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

    அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியான அன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு தீங்கி ழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் விரதம் இருந்து வழிபட சிறந்த நாள் நாக/கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர்.

    பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். சனி, வியாழக்கிழமை, பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திர நாட்களில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும்.

    விபத்து, நோய் நீக்கும், மருத்துவராகவும், பட்சிகளின் ராஜாவாக திகழும் கருட பகவானுக்கு கருட ஜயந்தி, கருட பஞ்சமி அன்று கருட ஹோமம் செய்வது நலம் தரும். கருட பஞ்சமியன்று விரதமிருந்து கருட வழிபாடு செய்ய தீர்க்க முடியாத கோர்ட்டு, கேஸ் பிரச்சினை, சட்ட நெருக்கடி, கடன் தொல்லை, உயிர்கொல்லி நோயான கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம். பலன் இரட்டிப்பாகும்.

    • மகாவிஷ்ணு கருடனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
    • மகாவிஷ்ணு. கருடனின் மதிநுட்பத்தை எண்ணி மிகவும் பாராட்டினார்.

    ஒரு முறை மகாவிஷ்ணு, தன்னுடைய வாகனமான கருடனின் மீது அமர்ந்து, இந்த பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வந்தார். பூமியின் மேற்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, மகாவிஷ்ணு கருடனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

    "கருடா.. இந்த உலகத்தில் எத்தனை வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?"

    எல்லாம் அறிந்த இறைவன் ஏதோ ஒரு விளையாட்டை உண்டாக்கும் நோக்கில், தன்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்பதாக புரிந்துகொண்ட கருடன், "இந்த உலகத்தில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள், இறைவா" என்று பதிலளித்தார்.

    ஆச்சரியம் அடைவதுபோல் புருவத்தை உயர்த்திய மகாவிஷ்ணு, "என்ன சொல்கிறாய் கருடா?. இத்தனை கோடி மனிதர்கள் வாழும் பூமியில், மூன்று வகையான மனிதர்கள் தான் இருக்கிறார்களா?" என்றார்.

    "இறைவா.. எல்லாம் அறிந்த நீங்கள்.. என் மூலம் இந்த உலகுக்கு எதையோ சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இல்லை. இருந்தாலும் நீங்கள் கேட்பதற்கு என்னால் பதில் கூறாமல் இருக்க முடியாது.. அதனால் சொல்கிறேன்.. இந்த உலகில் பறவையும் அதன் குஞ்சுகளும் போல் வாழும் மனிதர்கள் ஒரு வகை. பசுவும் அதன் கன்றும் போல் வாழும் மனிதர்கள் மற்றொரு வகை. கணவன்- மனைவி போல் வாழும் மனிதர்கள் இன்னொரு வகை. இப்படி மூன்று வித மனிதர்கள்தான் இருக்கிறார்கள்" என்றார், கருடன்.

    "இப்படி சுருக்கமாக சொன்னால் எப்படி.. விரிவான விளக்கம் வேண்டும் கருடா.." என்றார் மகாவிஷ்ணு..

    கருடனும் சொல்லத் தொடங்கினார். "இறைவா.. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையானது, தன் குஞ்சுகளுக்காக பகலில் இரை தேடிச்செல்லும். அந்த தாய் பறவை வருவதற்குள், சில குஞ்சுகள் பாம்புக்கு இரையாகிவிடும். இரவு கூடு திரும்பும் தாய் பறவை, தான் இழந்து விட்ட குஞ்சுகளுக்காக வருதப்படாது. மாறாக, கூட்டில் இருக்கும் மற்ற குஞ்சுகளுக்கு இரை கொடுக்கும். அந்த குஞ்சுகளுக்கும் கூட, தன் பசிதான் தெரியுமே தவிர, தாயின் வேதனை புரியாது. அதைப் பற்றிய சிந்தனை அவற்றிக்கு வராது. வளர்ந்ததும் குஞ்சுகள் பறக்க முயற்சிக்கும். அவற்றில் மரத்தில் இருந்து கீழே விழும் சில மடிந்து போகும். மற்றவை உயிர்வாழும்.

    இந்த வகை மனிதர்கள், வறுமையுடன் போரிடுவார்கள். கிடைத்த வருமானத்தில் வாழ்க்கை நடத்த போராடுவார்கள். எனவே இவர்களுக்கு இறைவனைப் பற்றிய சிந்தனை இருப்பதில்லை. இரை தேடும் பறவையைப் போல எந்திரமயமான வாழ்க்கை இருக்கும்.

    மாட்டு தொழுவத்தில் பசுவும், கன்றும் வேறுவேறு இடத்தில் கட்டப்பட்டிருக்கும். பசுவைப் பார்த்து கன்றும், கன்றைப் பார்த்து பசுவும் சத்தம் போடும். தாயிடம் பால் குடித்தால் தன்னுடைய பசி அடங்கிவிடும் என்பது கன்றிற்கு தெரியும். ஆனால் அதை, அதன் கழுத்தின் கட்டியிருக்கும் கயிறு அங்கிருந்து நகர விடாமல் தடுக்கும்.

    இரண்டாம் வகை மனிதர்கள், இந்த பசு, கன்றைப் போன்றவர்கள். அவர்களுக்கு கடவுள் சிந்தனை இருக்கும். அவரை அடைந்தால், நம்முடைய வாழ்வு சுகமாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் குடும்பம், பாசம், பந்தம், ஆசை போன்ற கயிற்றில் சிக்கிக்கொண்டு, இறைவனை அடைய முடியாமல் தவிப்பார்கள்.

    இதற்கு முன்பு யார் என்றே தெரிந்திராத ஒரு பெண்ணை, திருமணம் செய்து கொண்ட கணவன், ஒரு வித கூச்சத்தால் அவளுடைய முகம் பார்த்து பேசாமல் ஒதுங்கிச் செல்வான். புதியதாக வந்த மனைவியும் அப்படித்தான். ஆனால் மனைவி தன்னுடைய கணவரை தன் பக்கம் ஈர்ப்பதற்காக, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரிப்பாள். பிடித்ததை சமைப்பாள். அவனுக்காகவே பிறந்தவள் நான் என்பதை, கணவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள். நாளடைவில் மனைவியின் அன்பில் கணவன் கரைவான். அவளைவிட்டு பிரிய அவனுக்கு மனம் இருக்காது.

    மூன்றாம் வகை மனிதர்கள் இப்படிப்பட்டவர்கள்தான். அவர்கள் கடவுள் சிந்தனனயிலேயே காலத்தை கழிப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களை சோதித்த கடவுள், பின்னர் அவர்களை தன்னுடன் ஐக்கியமாக்கிக்கொள்வார். அதன்பின் அவர்களை பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது" என்று கூறி முடித்தார் கருடன்.

    அதைக் கேட்டு அகமகிழ்ந்த மகாவிஷ்ணு. கருடனின் மதிநுட்பத்தை எண்ணி மிகவும் பாராட்டினார்.

    கருட மாலா மந்திரத்தை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். பகை விலகும். ஆபத்து அகலும்.
    ஓம் நமோ பகவதே, கருடாய;
    காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
    கால நல லோல ஜிக்வாய பாதய
    பாதய மோஹய மோஹய
    வித்ராவய வித்ராவய ப்ரம
    ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ
    கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
    கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே
    வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே
    ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
    ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
    பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
    ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
    தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா
    இந்தோனேஷியாவில் உள்ள மிக கனமான சிலையாக இது கருதப்படுகிறது. இந்த சிலையை தயாரிக்க செம்பு, பித்தளை விரிப்பு, துருபிடிக்காத இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
    இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் அமைந்துள்ள, இந்த கருட விஷ்ணு சிலை, 122 மீட்டர் உயரமும், 66 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த சிலையை அமைக்க 28 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது. இது 4 ஆயிரம் டன் எடை கொண்டது. இந்தோனேஷியாவில் உள்ள மிக கனமான சிலையாக இது கருதப்படுகிறது. இந்த சிலையை தயாரிக்க செம்பு, பித்தளை விரிப்பு, துருபிடிக்காத இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    கான்கிரீட் தூண்கள் கொண்டும் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலைப் படைப்பை செய்து முடிக்க 21 ஆயிரம் இரும்பு பாளங்களும், 1 லட்சத்து 70 ஆயிரம் நட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான செலவு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.740 கோடி என்கிறார்கள்.
    இத்துதியை நோயுற்றவர்களோ அல்லது அவர்கள் சார்பில் யாராவது ஒருவர் 1008 முறை விபூதியில் ஜபம் செய்து அதை தினமும் பூசிக்கொண்டால் நோய்கள் படிப்படியாக விலகும்.
    அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
    ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
    விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
    ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.
    க்ஷிப ஓம் ஸ்வாஹா:

    பொதுப் பொருள்:

    அம்ருத கலசத்தை கையில் ஏந்தியவர். தேக காந்தி மிக்கவர். அனைத்து தேவதேவியர்களாலும் வணங்கப்படுபவர். இவருடைய பெருமையை யாராலும் விவரிக்க இயலாது. இவரது இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுங்கச்செய்யும். இவரை உபாசித்தால் பாம்பு விஷம் நீங்கும். சகல விஷ வியாதிகளும் விலகும். பக்ஷிராஜரான கருடபகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.
    கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

    ஓம் நமோ பகவதே, கருடாய;
    காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
    கால நல லோல ஜிக்வாய
    பாதய பாதய மோஹய
    மோஹய வித்ராவய வித்ராவய
    ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய
    ஹந ஹந தஹ
    காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர் கருடன். இவர் மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர். மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார்.
    மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர் கருடன். இவர் காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர். இவர் பிறக்கும் போது இவரின் இறக்கைகள் பிரகாசமாக மின்னியது. இதனால் இவரை அக்னி தேவரின் அவதாரமாக நினைத்தனர்.

    நாகதேவர்களின் தாயான கத்ருவிடம் அடிமையாக இருந்த தன் தாயை மீட்பதற்காக, தேவலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டு வர முடிவு செய்தார். அமிர்தத்தை மீட்க வேண்டுமானால் தேவர்களுடன் போர்புரிய வேண்டியதிருந்தது.

    இந்திரன் முதலான தேவர்களுடன் போரிட்டு வென்று, அமிர்தம் கொண்டு வந்து தாயை மீட்டார். இருப்பினும் அந்த அமிர்தத்தை நாகர்கள் சாப்பிட முடியாதபடி, மீண்டும் தேவர்களிடமே கொண்டுபோய் சேர்த்தார். இதனால் மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார். அவருக்கு வாகனமாக இருக்கும் பெரும்பேற்றை அடைந்தார்.
    ×