search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Slokas"

    • அம்மனை ஆடி மாதம் விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்கள் பறந்தோடும்.
    • ஆடி மாதம் இந்த போற்றியை சொன்னால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    ஓம் அன்னையே போற்றி

    ஓம் அன்னை மாரியே போற்றி

    ஓம் அக்கினி சட்டி வளர்ந்தாய் போற்றி

    ஓம் அகிலம் ஆண்ட ஈஸ்வரியே போற்றி

    ஓம் அம்மை முத்தின் மூலமே போற்றி

    ஓம் அபிராமி அன்னையே போற்றி

    ஓம் அஷ்டலட்சுமியும் நீயே போற்றி

    ஓம் ஆயிரம் கண்ணுடை போற்றி

    ஓம் ஆதியின் பாதியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி

    ஓம் இமயத்தரசியே போற்றி

    ஓம் இளநீர்ப் பிரியை போற்றி

    ஓம் ஈஸ்வரன் துணைவி போற்றி

    ஓம் ஊஞ்சல் விழா உமையே போற்றி

    ஓம் ஊத்துக்காடு அன்னையே போற்றி

    ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி

    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

    ஓம் ஐயப்பன் மாதா போற்றி

    ஓம் ஓங்காரப்பெருமாளே போற்றி

    ஓம் கனக துர்க்கா போற்றி

    ஓம் கன்னி வல்லித்தாயே போற்றி

    ஓம் கன்னிகா பரமேஸ்வரி போற்றி

    ஓம் கருமாரித்தாயே போற்றி

    ஓம் கங்கா தேவி தாயே போற்றி

    ஓம் கன்னியாகுமரியே போற்றி

    ஓம் கற்பூர நாயகியே போற்றி

    ஓம் கண்ணின் மணியே போற்றி

    ஓம் கன்னபுரத்தாளே போற்றி

    ஓம் கலைமகளும் நீயே போற்றி

    ஓம் கரகத்தழகியே போற்றி

    ஓம் காத்யாயன்யளே போற்றி

    ஓம் காயத்திரி தேவி நீ போற்றி

    ஓம் காசி விசாலாட்சி போற்றி

    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் குங்கும அர்ச்சனை பிரியை போற்றி

    ஓம் கூஷ்மாண்டினி தேவியே போற்றி

    ஓம் காஞ்சி காமாட்சி போற்றி

    ஓம் கோட்டை மாரி போற்றி

    ஓம் கோபிநாதன் தங்காய் போற்றி

    ஓம் கவுமாரி கவுரி போற்றி

    ஓம் சமயபுர சக்தி போற்றி

    ஓம் சங்கரன் துணைவி போற்றி

    ஓம் சர்வேஸ்வரி போற்றி

    ஓம் சந்திரகண்டினி போற்றி

    ஓம் சாம்பிராணி வாசகி போற்றி

    ஓம் சாமுண்டீஸ்வரி போற்றி

    ஓம் சிவகாம சுந்தரி போற்றி

    ஓம் சவுபாக்கியம் அருள்வாய் போற்றி

    ஓம் கொடியேற்றம் விழைவாய் போற்றி

    ஓம் ஞானப் பிரசன்னாம்பிகை போற்றி

    ஓம் தட்சிணி தேவி போற்றி

    ஓம் தண்டினி தேவி போற்றி

    ஓம் தாழங்குறைக்கூடை தழைப்பாய் போற்றி

    ஓம் திண்டி நகருறை தேவி போற்றி

    ஓம் திருவிளக்கின் ஒளியே போற்றி

    ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

    ஓம் திருமகள் உருவே போற்றி

    ஓம் திருமாலழகன் தங்காய் போற்றி

    ஓம் துர்க்கையும் நீயே போற்றி

    ஓம் துலக்கணத்தீஸ்வரி போற்றி

    ஓம் தெப்போற்சவம் விழைந்தனை போற்றி

    ஓம் நல்லமுத்துமாரி போற்றி

    ஓம் நவகாளி அம்மா போற்றி

    ஓம் நவதுர்க்கா தேவியே போற்றி

    ஓம் நாரணார் தங்காய் போற்றி

    ஓம் நாககுடைக்கொள் நாயகியே போற்றி

    ஓம் நான்முகி போற்றி

    ஓம் நாராயிணி போற்றி

    ஓம் நீலிகபாலி போற்றி

    ஓம் பர்வதபுத்திரி போற்றி

    ஓம் நீலாம்பிகை போற்றி

    ஓம் பவானி தேவி போற்றி

    ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி

    ஓம் பவளவாய் கிளியே போற்றி

    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

    ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

    ஓம் பிரம்மராம்பிகை போற்றி

    ஓம் புவனேஸ்வரி போற்றி

    ஓம் பூச்சொறிதல் பெற்றனை போற்றி

    ஓம் பெரியபாளையத்தம்மை போற்றி

    ஓம் மணிமந்தர சேகரி போற்றி

    ஓம் மஹேஸ்வரி போற்றி

    ஓம் மங்கள ரூபணி போற்றி

    ஓம் மஞ்சள் நீராடல் மகிழ்ந்தனை போற்றி

    ஓம் மகிஷா சூரமர்த்தினி போற்றி

    ஓம் மஞ்சள் மாதா போற்றி

    ஓம் மாளி மகமாயி போற்றி

    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

    ஓம் மாங்காடு போற்றி

    ஓம் மாசி விழா மாதா போற்றி

    ஓம் மாவிளக்குப் பிரியை போற்றி

    ஓம் மீனாட்சித் தாயே போற்றி

    ஓம் முண்டினி தேவி போற்றி

    ஓம் முனையொளி சூலி போற்றி

    ஓம் முக்கண்ணி போற்றி

    ஓம் முக்கோண சக்கர மூலமே போற்றி

    ஓம் மூகாம்பிகையே போற்றி

    ஓம் ராஜராஜேஸ்வரி போற்றி

    ஓம் லலிதாம்பிகை போற்றி

    ஓம் வஜ்ரமணித்தேராள் போற்றி

    ஓம் வளம் சேர்க்கும் தாயே போற்றி

    ஓம் விராட் புரவி மலி போற்றி

    ஓம் விஷ்ணு துர்க்கா போற்றி

    ஓம் வேப்பம்பால் உண்டவளே போற்றி

    ஓம் வேப்பிலைக்காரியே போற்றி

    ஓம் வேலவனுக்கு வேல் தந்த வித்தகி போற்றி.

    • அருணகிரி நாதரின் இந்த இரண்டு பாடல்களை நாள்தோறும் பாராயணம் செய்யுங்கள்
    • அருணகிரிநாதரின் அந்தப் பாடல்கள்:-

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்னது; அவர் தினந்தோறும் பூஜையில் சொன்னது; "அருணகிரி நாதரின் இந்த இரண்டு பாடல்களை நாள்தோறும் பாராயணம் செய்யுங்கள்! மன சஞ்சலம் தீரும்! அமைதியை அருள்வார் ஆறுமுகன்" என்பார். அருணகிரிநாதரின் அந்தப் பாடல்கள்:-

    1)எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ!

    சிந்தாகுலம் ஆனவை தீர்த்தெனையாள்!

    கந்தா! கதிர் வேலவனே! உமையாள்

    மைந்தா! குமரா! மறை நாயகனே! (கந்தர் அனுபூதி)

    2)அதிருங்கழல் பணிந்துன் அடியேனும்

    அபயம் புகுவதென்று நிலை காண

    இதயந் தனிலிருந்து க்ருபையாகி

    இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

    எதிரங்கொருவர் இன்றி நடமாடும்

    இறைவன் தனது பங்கின் உமை பாலா!

    பதியெங்கிலும் இருந்து விளையாடி

    பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே - திருப்புகழ்

    (இதயந்தனில் இருந்து கிருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே-என்று நிறைவு செய்யவும்)

    • மலைமகளான பார்வதி தேவியை போற்றி இயற்றப்பட்ட துதி இது.
    • அம்மன் கோவிலுக்கு சென்று இந்த திதியை பாடி வழிபட வேண்டும்.

    அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் காலையில் பாடி வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும்.

    அழகிய மதுரையில் மீனாட்சி

    அகிலம்போற்றும் அன்னை அரசாட்சி

    நான்மாடக் கூடலிலே அருளாட்சி

    தேன்மொழி தேவியின் தேனாட்சி

    சங்கம் முழங்கிடும் நகரிலே

    சங்கரி மீனாளின் கருணையிலே

    மீன்கொடி பறக்கும் மதுரையிலே

    வான்புகழ் கொண்டாள் தாயவளே

    அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பாள்

    ஆதிசிவன் அருகில் அமர்ந்திருப்பாள்

    வைரமணி மகுடம் அணிந்திருப்பாள்

    கருணையுடன் நம்மை காத்து நிற்பாள்

    முத்து பவளம் மரகத மாணிக்கம்

    பொன் ஆபரணம் பூண்டாள்

    சக்தி மனோகரி சந்தர கலாதரி

    தென் மதுராபுரி ஆண்டாள்

    சித்திரை மாதம் தேவி மீனாட்சி

    சொக்க நாதரை மணந்தாள்

    பக்தர்கள் மனமும் பரவசம் பொங்கிட

    அற்புத லீலைகள் புரிந்தாள்

    மலைமகளான பார்வதி தேவியை போற்றி இயற்றப்பட்ட துதி இது. இந்த பாடலை அனைத்து நாட்களிலும் பாடி வழிபடலாம் என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்தவுடன், அருகிலிருக்கும் ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த திதியை பாடி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும். அதிலும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகளும் ஒன்று சேருவார்கள்.

    இந்த பாடலை தினமும் சொல்லி அம்மனை வழிபாடு செய்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக தீரும்.

    • சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம்.
    • சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம்.

    பிரபஞ்சத்தில் சூரிய சக்தி அளப்பரியது. இயற்கையான சூரியனை வணங்குவதும் வழிபடுவதும் சாலச்சிறந்தது என்கிறார்கள் முன்னோர்கள்.

    வருடந்தோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். கிட்டத்தட்ட அது சூரியனுக்கு நாம் செலுத்தும் வணக்கம். அதேபோல, வருடம் 365 நாளும் சூரிய வணக்கம் செய்வதும் சூரிய பகவானை வணங்குவதும் நம்மையும் நம் இல்லத்தையும் செழிப்பாக்கவல்லது.

    எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம்தானே. அதேபோல, ஒவ்வொருநாளும் சூரியனைப் பார்த்து நமஸ்கரிக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    இந்த ஞாயிறு நாளில், நம் முதல் வணக்கம், சூரிய பகவானுக்கு என இருக்கட்டும். சூரிய பகவானை கிழக்கு நோக்கி தரிசிப்போம். இந்த உலகத்துக்காகவும் உலக மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.

    கிழக்கு நோக்கி நிற்பதும் அமர்வதும் அமர்ந்து சாப்பிடுவதும் உன்னதமான விஷயங்கள். கிழக்கு என்பது விடியலின் குறியீடாகியிருக்கிறது. கிழக்கில் உதிக்கும் சூரிய பகவானும் நம் வாழ்வின் விடியலுக்கான வரப்பிரசாதி.

    எனவே, சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். ஞாயிறு நாளில், சூரிய நமஸ்காரம் செய்வோம். சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வோம்.

    இயலாதவர்கள், ஆதித்ய ஹ்ருதயத்தை காதாரக் கேட்பதே பலம் சேர்க்கும். வலு கொடுக்கும். வளமாக்கும்.

    ஆதித்ய ஹ்ருதயம் சொல்லச் சொல்ல, கேட்கக் கேட்க, தீய சக்திகளின் தாக்கம் குறையும். நல்ல நல்ல கதிர்வீச்சுகள் நம்மைச் சூழும். அரணெனக் காக்கும். ஆயுள் பலம் தந்தருளும். செய்யும் காரியங்கள் யாவும் வீரியமாகும்.

    • தினமும் மகாலக்ஷ்மியின் மூல மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.
    • தினமும் 11 முறை அல்லது 16 முறை சொல்லலாம்.

    வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நாள். விரதம் இருந்து சக்தியை வணங்க வேண்டிய அற்புதமான நாள். அதனால்தான் வெள்ளிக்கிழமையை, மங்கலகரமான செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டு அம்பிகையைக் கொண்டாடுகிறோம்.

    வெள்ளிக்கிழமை என்றில்லாமல், தினமும் மகாலக்ஷ்மியின் மூல மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.

    வீட்டில் விளக்கேற்றுங்கள். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் சூட்டி அலங்காரம் செய்யுங்கள்.

    ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

    மஹாலக்ஷ்மி ஏய்யேஹி

    ஏய்யேஹி சர்வ

    ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

    எனும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.

    இதேபோல்,

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே

    கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத

    ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம;

    என்கிற மந்திரத்தைச் சொல்லுங்கள்.

    அம்பாள் படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். கோலமிடுங்கள். நெய் தீபமேற்றுங்கள்.

    அம்பாள் படத்துக்கு முன்னே, கண்கள் மூடி அமர்ந்து, இந்த மந்திரங்களைச் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 16 முறை சொல்லலாம். 108 முறையும் சொல்லலாம். அப்போது குங்குமம் கொண்டும் அர்ச்சிக்கலாம். இன்னும் விசேஷம். மாங்கல்ய பலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

    • ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு.

    மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த காசை சிறுக சிறுக சேமித்து வைத்து, அதிலிருந்து சிறு தொகையை எடுத்து ஒரு பொருளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அதையும் அடகு வைக்கும் நிலைமை வரும் பொழுது நமது மனதிற்குள் ஏற்படும் மனக் குமுறல்களை சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற பெண்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறார்கள்.

    நகையை அடகு வைப்பதாக இருந்தால் அதற்கான சரியான காரணம் இருந்தால் மட்டுமே அடகு வைக்க வேண்டும். ஏனென்றால் ஜோதிடத்தின் படி பொன், பொருள் இவற்றிற்கு அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் மற்றும் குரு. இவர்களுடைய ஸ்தானம் ஜாதகத்தில் பாதகமாக இருந்தது என்றால் அந்த நேரத்தில் நகையை அடகு வைக்க வேண்டிய நிலைமை உண்டாகும். இவற்றை அறிந்து கொள்ள நம்மை நாமே சற்று கவனமாக சிந்திக்க வேண்டும். அதிகமாகக் கோபப்படுவது, குழப்பம் அடைவது, அதிக ஆசை கொள்வது, வருகின்ற கோபம் உச்சத்தை அடைவது இவ்வாறான வெளிப்பாடுகள் இருந்தது என்றால் அது நமது ஜாதகத்தில் சரியான நிலைமை இல்லை என்பதை தெரிந்து கொள்வதாக அமைகிறது.

    ஜாதகத்தில் நான்கு திசைகள் நடக்கின்ற பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலாவதாக ராகு திசை நடக்கிற பொழுது நகையை வைத்து ஏதேனும் தொழிலில் முதலீடு செலுத்துவதாக இருந்தால் அந்தப் பணம் விரையம் தான் ஆகும். இரண்டாவதாக குரு திசை நடக்கின்ற பொழுது அடகு வைக்கின்ற நகை நூற்றுக்கு 70 சதவிகிதம் மறுபடியும் நமது கைக்கு வராமல் போய்விடும்.

    அவ்வாறு நூற்றுக்கு 70 சதவீதம் சுக்ர திசை நடப்பவர்களுக்கும், நூற்றுக்கு ஐம்பது சதவிகிதம் கேது திசை நடப்பவர்களும் பாதிப்பு ஏற்படும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு நகை ஒரு முறை அடகிற்க்கு சென்று விட்டது என்றால் அது மீண்டும் மீண்டும் அடகு வைக்க சென்றுகொண்டே இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக நகையைக் முதன் முதலில் வாங்கி அணிகின்ற பொழுது ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லி அணிய வேண்டும்.

    மந்திரம்

    "ஓம் சொர்ண காஞ்சன மாதங்கி

    வசம் வசம் வசம் வா ஸ்ரீம் மம

    தநூகரன புவாய நமோ நம".

    அதேபோல் நகையை அடகு வைத்தவர்கள் இந்த மந்திரத்தைதினமும் சொல்லி வந்தால் விரைவில் அடகு வைத்த நகையை மீட்டெடுக்கலாம்.

    • வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி.
    • கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.

    சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வராஹி புராணம். வலிமை மிக்கவள். நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள்.

    வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. வராஹியை வழிபடுவதும் தரிசிப்பதும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வதும் உன்னதப் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    வீட்டில் விளக்கேற்றி வராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.

    ஓம் ஐம் க்லெளம் ஐம்

    நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி

    வராஹி வாராஹமுகி வராஹமுகி

    அந்தே அந்தினி நம :

    ருத்தே ருந்தினி நம :

    ஜம்பே ஜம்பினி நம :

    மோஹே மோஹினி நம :

    ஸதம்பே ஸ்தம்பினி நம:

    ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

    ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

    ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

    சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

    ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

    என்று சொல்லி வழிபடலாம்.

    ஓம் வாம் வராஹி நம:

    ஓம் வ்ரூம் ஸாம் வராஹி கன்யகாயை நம:

    எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வராஹி தேவ்யை நம:

    க்லீம் வராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்

    தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

    எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல்,

    லூம் வராஹி லூம் உன்மத்த பைரவீம்

    பாதுகாப்பாம். ஸ்வாஹா

    எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.

    வராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும். வராஹி தேவியை போற்றுவோம். துதிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களைத் தருவாள். மங்காத செல்வங்களையெல்லாம் வழங்குவாள்.

    • ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
    • 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

    திருமண தடை பெற்றோரை மட்டுமல்லாமல், பிள்ளைகளையும் மன ரீதியாக மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. சரியான வயதில் திருமணம் நடக்காதவர்கள், சில தோஷங்களால் திருமண தடையை எதிர் கொள்ளக்கூடியவர்கள் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரித்தால் திருமண தோஷம் நீங்கும். ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.

    ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் நடந்தால் தான், அவரின் வாழ்க்கையை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். திருமண தடைக்கான தோஷத்தை நீக்கக்கூடிய 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

    மேஷம் :

    தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    ரிஷபம் :

    தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மிதுனம் :

    தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கடகம் :

    தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    சிம்மம் :

    தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கன்னி :

    தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    துலாம் :

    தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    விருச்சிகம் :

    தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    தனுசு :

    தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மகரம் :

    தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் 'ஓம் சோம் சோமாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கும்பம் :

    தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மீனம் :

    தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    • இந்த மந்திரத்தை தினமும் 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
    • கணவர் - மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள்.

    கணவன் - மனைவி ஒற்றுமை ஏற்பட தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம். ராமர் - சீதையை சேர்த்து வைத்தது போல் பிரிந்திருக்கும் கணவர் - மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள். கீழே உள்ள மந்திரத்தை தினமும் காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை எத்தனை முறை முடியும் அத்தனை முறை சொல்வதால் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும்

    ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாபீய சாதராத்

    புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

    பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

    புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

    ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ

    க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந், புபுஜே ப்ரியயாஸஹ

    இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் 7 பேருக்கு சுந்தரகாண்ட புத்தகத்தை வாங்கி கொடுக்கவும்

    தடைகள் நீங்கவும், சகல காரியங்கள் வெற்றி அடையவும் அம்மனுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களுடன் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி இஷ்ட சித்திகளைப் பெறுவோமாக
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி!
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!
    ஓம் அருமறையின் வரம்பே போற்றி!
    ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி!
    ஓம் அரசிளங்குமரியே போற்றி!
    ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி!
    ஓம் அமுதநாயகியே போற்றி!
    ஓம் அருந்தவநாயகியே போற்றி!
    ஓம் அருள் நிறை அம்மையே போற்றி!
    ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி!
    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி!
    ஓம் ஆதியின் பாதியே போற்றி!
    ஓம் ஆலால சுந்தரியே போற்றி!
    ஓம் ஆனந்த வல்லியே போற்றி!
    ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி!
    ஓம் இமயத்தரசியே போற்றி!
    ஓம் இடபத்தோன் துணையே போற்றி!
    ஓம் ஈசுவரியே போற்றி!
    ஓம் உயிர் ஓவியமே போற்றி!
    ஓம் உலகம்மையே போற்றி!
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!
    ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி!
    ஓம் ஏகன் துணையே போற்றி!
    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி!
    ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி!
    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி!
    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி!
    ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி!
    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி!
    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி!
    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி!
    ஓம் கனகமணிக்குன்றே போற்றி!
    ஓம் கற்பின் அரசியே போற்றி!
    ஓம் கருணை ஊற்றே போற்றி!
    ஓம் கல்விக்கு வித்தே போற்றி!
    ஓம் கனகாம்பிகையே போற்றி!
    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி!
    ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி!
    ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி!
    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி!
    ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி!
    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி!
    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி!
    ஓம் கூடற்கலாப மயிலே போற்றி!
    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி!
    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி!
    ஓம் சக்தி வடிவே போற்றி!
    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி!
    ஓம் சிவகாம சுந்தரியே போற்றி!
    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி!
    ஓம் சிவயோக நாயகியே போற்றி!
    ஓம் சிவானந்தவல்லியே போற்றி!
    ஓம் சிங்காரவல்லியே போற்றி!
    ஓம் செந்தமிழ் தாயே போற்றி!
    ஓம் செல்வத்துக்கரசியே போற்றி!
    ஓம் சேனைத்தலைவியே போற்றி!
    ஓம் சொக்கர் நாயகியே போற்றி!
    ஓம் சைவ நெறி நிலைக்கச்செய்தோய் போற்றி!
    ஓம் ஞானாம்பிகையே போற்றி!
    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி!
    ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி!
    ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி!
    ஓம் திருவுடையம்மையே போற்றி!
    ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி!
    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி!
    ஓம் திருநிலை நாயகியே போற்றி!
    ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி!
    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி!
    ஓம் தென்னவன் செல்வியே போற்றி!
    ஓம் தேன்மொழி அம்மையே போற்றி!
    ஓம் தையல் நாயகியே போற்றி!
    ஓம் நற்கனியின் சுவையே போற்றி!
    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி!
    ஓம் நல்ல நாயகியே போற்றி!
    ஓம் நீலாம்பிகையே போற்றி!
    ஓம் நீதிக்கரசியே போற்றி!
    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி!
    ஓம் பழமறையின் குருந்தே போற்றி!
    ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி!
    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி!
    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி!
    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி!
    ஓம் பசுபதி நாயகியே போற்றி!
    ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி!
    ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி!
    ஓம் பார்வதி அம்மையே போற்றி!
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி!
    ஓம் பெரிய நாயகியே போற்றி!
    ஓம் பொன்மயில் அம்மையே போற்றி!
    ஓம் பொற்கொடி அன்னையே போற்றி!
    ஓம் மலையத்துவசன் மகளே போற்றி!
    ஓம் மங்கள நாயகியே போற்றி!
    ஓம் மழலைக்கிளியே போற்றி!
    ஓம் மனோன்மணித்தாயே போற்றி!
    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி!
    ஓம் மாயோன் தங்கையே போற்றி!
    ஓம் மாணிக்கவல்லியே போற்றி!
    ஓம் மீனவர்கோன் மகளே போற்றி!
    ஓம் மீனாட்சி அம்மையே போற்றி!
    ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி!
    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி!
    ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி!
    ஓம் வடிவழகு அம்மையே போற்றி!
    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி!
    ஓம் வேதநாயகியே போற்றி!
    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி!
    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி! போற்றி!!
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி! போற்றி!!
    பொருளாதாரம், வியாபாரத்தில் முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மாற்றத்தை காணலாம்.
    "ஓம் கம் கணபதயே, உத்யோகலாபம், வித்யா லாபம் குருதே நமக''

    - என்று 108 தடவை ஜபம் செய்தபின் கையில் மலர்கள் எடுத்துக் கொண்டு தன்னையே சுற்றி வருகின்ற ஆத்ம பிரதட்சிணம் செய்து- கலசம் மற்றும் வைக்கப்படும் சிறு சிலை மேல் (பிரதீமை என்றும் சொல்வர்) போட்டு விழுந்து வணங்குதல் வேண்டும்.

    அடுத்தபடியாக, விநாயகருக்கு மங்கள ஆரத்தியை செய்யலாம்.

    ஓம் தத்புருஷாய வித்மகே வக்ர துண்டாய தீமகி
    தந்தோ கணேச ப்ரசோதயாத்- கற்பூர ஜோதிம் தர்சயாமி
    - என்றோ அல்லது அழகு தமிழில்

    ஜோதி ரூபனே கணேஸ்வரா ஜோதி மைந்தனே சர்வேசா!
    ஆனை முகத்தவா கணேஸ்வரா ஆனந்த ஜோதி கணேஸ்வரா!
    அழகன் அண்ணா கணேஸ்வரா!
    ஆதி நாதனே ஆனைமுக! மங்கள ஜோதி கணேஸ்வரா!
    பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா! தீப மங்கள் கணேஸ்வரா!
    என்றும் மங்களம் கணேஸ்வரா!

    பிறகு ஆரத்தி, விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு வந்திருப்பவர்கள் யாராயினும் இருந்தால் கொடுக்கவும். முதல் விரத பூஜை காலத்தில் ஒரு 7 வயது சிறுவனை மனைப் பலகையில் அமர வைத்து மஞ்சள், சந்தனம் கொடுத்து தட்டில் மூன்று பழங்கள், பாயாசம் தாம்பூலம் முடிந்த அளவு 5, 10 ரூபாய் காசுகள் வைத்து விநாயகராக அந்த சிறுவனை நினைத்து வணங்கி தானம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரத பூஜையில் தவறு இருந்தால் அவர் ஏற்றுக் கொள்வதாக ஐதிகம்.

    என் நாவில் நீ தங்கி குடியிருந்து சொற்பிழை பொருட்பிழை நீக்கி நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு சாஸ்வதமான சரஸ்வதி தாயே உன் திருவடி சரணம் போற்றி... போற்றியே .....
    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா...
    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என் அம்மை -தூய
    உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
    இருப்பளிங்கு வாராது இடர்.

    ஓம் கலைவாணியே போற்றி
    ஓம் கல்வியறிவு தருபவளே போற்றி
    ஓம் நான்முகனின் நாயகியே போற்றி
    ஓம் நான்முகனின் நாநுனியில் வசிப்பவளே போற்றி
    ஓம் சகல கலா வல்லித்தாயே போற்றி
    ஓம் ஏகவல்லி நாயகியே போற்றி
    ஓம் பிரம்மதேவரின் பத்தினியே போற்றி
    ஓம் பரசுராமரைப் பெற்றவளே போற்றி
    ஓம் கல்வியறிவிற்கு அதிபதியே போற்றி
    ஓம் மஹா மாயா சக்தியும் நீயே போற்றி
    ஓம் தாமரை மலரில் வாசம் செய்பவளே போற்றி
    ஓம் கேட்கும் வரமனைத்தும் தருபவளே போற்றி
    ஓம் ஞானமுத்திரை தருபவளே போற்றி
    ஓம் புத்தகம் கரத்தில் கொண்டவளே போற்றி
    ஓம் மஹா வித்தை நீயே தாயே போற்றி
    ஓம் மஹா பாதகங்களை துவம்சம் செய்பவளே போற்றி
    ஓம் அனைத்து யோகங்களையும் தருபவளே போற்றி
    ஓம் மஹாகாளி மஹாதுர்கா மஹாலஷ்மி நீயே போற்றி
    ஓம் உயரிய கல்வியை கேட்டபடி தருபவளே போற்றி
    ஓம் கற்றதற்கு ஏற்ற உயர்வாழ்வை வரமாய்த் தருபவளே போற்றி
    ஓம் சர்வ மந்த்ரங்களின் மூலாதாரப் பொருள் நீயே போற்றி
    ஓம் சர்வ மங்கள மந்திரங்கள் சித்தி யளிப்பவளே போற்றி
    ஓம் சர்வ மங்கள மாங்கல்ய பலம் தருபவளே போற்றி
    ஓம் சர்வ சாஸ்த்திரங்களின் உற்பத்தி ஸ்தலம் நீயே போற்றி
    ஓம் கற்றோரை சென்ற இடமெல்லாம் சிறப்பிக்கும் தாயே போற்றி
    ஓம் நல்லவர் நாவில் இருந்து நல்வாக்கு சொல்பவளே போற்றி
    ஓம் அற்புத மந்திரம் எழுதும் வாணியே போற்றி
    ஓம் அழகுவீணை இசைப்பவளே போற்றி
    ஓம் கலைகள் மூன்றிற்கும் மூலாதாரச் சுடரே போற்றி
    ஓம் கல்வியை உனது ரூபமாகக் கொண்டவளே போற்றி
    ஓம் யந்திர தந்திர மந்த்ரம் கற்றுத் தருபவளே போற்றி
    ஓம் தொழிற் கல்வி அனைத்தும் தருபவளே போற்றி
    ஓம் அனைத்து வாகனங்களின் சூட்சுமம் நீயே போற்றி
    ஓம் கணிதம் தந்த கலைவாணித் தாயே போற்றி
    ஓம் கணிப்பொறி யியலின் காரணி போற்றி
    ஓம் காலம் நேரம் வகுத்தவளே போற்றி
    ஓம் விஞ்ஞானத்தின் மூலாதாரமே போற்றி
    ஓம் அண்ட சராசரங்களின் இருப்பிடம் கணித்த தாயே போற்றி
    ஓம் வான சாஸ்திர அறிவின் பிறப்பிடம் நீயே போற்றி
    ஓம் வறுமையை போக்கும் கல்வித் தாயே போற்றி
    ஓம் இயல் இசை நாடகம் போதித்த கலைமகளே போற்றி
    ஓம் வீணை யொலியில் மந்த்ரம் மீட்டும் தாயே போற்றி
    ஓம் மூவுலகும் மயங்கும் வீணை மீட்டும் வீணா கான வாணி போற்றி
    ஓம் முத்தமிழும் தழைக்கச் செய்த அன்னையே போற்றி
    ஓம் வாக்கிற்கு அதிதேவதை நீயே தாயே போற்றி
    ஓம் சௌபாக்ய செல்வம் தரும் மந்த்ரம் நீயே போற்றி
    ஓம் வாழ்வைப் புனிதமாக்கும் மந்திரமே போற்றி
    ஓம் கலைவாணித் தாயே சரஸ்வதியே போற்றி
    ஓம் ரக்தபீஜ சம்ஹார மந்த்ரம் தந்த வாணீ போற்றி
    ஓம் அம்பிகை சாமுண்டி வராஹி யாவரும் நீயே போற்றி
    ஓம் முக்காலங்களிலும் முகிழ்ந்து உறைந்தவளே போற்றி
    ஓம் சுபாஷிணி சுபத்ரை விஷாலாட்சி மூவரும் நீயே போற்றி
    ஓம் பிரஹ்மி வைஷ்ணவி சண்டி சாமுண்டி நீயே போற்றி
    ஓம் பாரதி கோமதி நாயகி நாண்முகி தாயே போற்றி
    ஓம் மகாலஷ்மி மஹாசரஸ்வதி மகாதுர்கா நீயே போற்றி
    ஓம் விமலா மாகாளி மாலினி யாவரும் நீயே போற்றி
    ஓம் விந்திய விலாசினி வித்யா ரூபினி போற்றி
    ஓம் மஹா சக்தியினுள்ளே உறைபவள் போற்றி
    ஓம் சர்வ தேவியருள்ளும் உறைபவள் நீயே போற்றி
    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் கல்வியினால் அருள்பவளே போற்றி
    ஓம் திருமால் உந்தியில் உதித்தவனின் துணைவி போற்றி
    ஓம் உலகின் எல்லா எழுத்திற்கும் மூலமே போற்றி
    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மந்திர எழுத்துகளின் ரூபமே போற்றி
    ஓம் மந்திர ராஜ்யத்தின் தேவி பீஜாட்ஸரி போற்றி
    ஓம் சர்வாம்பிகையே சத்தியவாசினி புத்தகவாசினியே போற்றி
    ஓம் சர்வ அபாயங்களையும் துவம்சிப்பவளே போற்றி
    ஓம் சாற்றுக் கவி நாநுனி யுரையும் அன்னையே போற்றி
    ஓம் காற்றில் கலந்த மந்திர ஒலியே போற்றி
    ஓம் வித்யா திருஷ்டா யுத்மா போற்றி
    ஓம் வாக்கின் தலைவியான வாக்தேவி போற்றி
    ஓம் விஞ்சு பகவதி உயர்புகழ் பிராம்ஹி போற்றி
    ஓம் சொல்லும் சொல்லின் மெய்ஞானப் பொருளே போற்றி
    ஓம் நீதித்துறை நடுநின்ற நாயகி போற்றி
    ஓம் பண் பரதம் கல்வி தருபவளே போற்றி
    ஓம் கற்றவர் நாவில் உறைபவளே போற்றி
    ஓம் யந்திர வாகன ஆயுதங்களின் அதிதேவதையே போற்றி
    ஓம் தேகத்தின் புத்திப் பகுதியில் உறைபவளே போற்றி
    ஓம் வேத தர்ம நீதி சாஸ்திரங்கள் வகுத்தவளே போற்றி
    ஓம் பூஜிப்போர் மனம் மகிழ்விப்பவளே போற்றி
    ஓம் அனைத்து புண்ய தீர்த்தங்களின் ரூபத்தவளே போற்றி
    ஓம் யமுனை நதி தீரத்தின் மையங் கொண்டவளே போற்றி
    ஓம் சர்வ ஜீவ காருண்ய மனம் கொண்ட மாதரசி போற்றி
    ஓம் பிரம்மா லோகத்தை மையம் கொண்ட பிரம்ம நாயகி போற்றி
    ஓம் உச்ச நிலை வறுமையையும் கற்ற வித்தை கொண்டு அழிப்பவளே போற்றி
    ஓம் சரணடைந்தவர்க்கு சாஸ்வத மானவளே போற்றி
    ஓம் வேதாந்த ஞானிகளின் ரூபத்தவளே போற்றி
    ஓம் எழு தாமரை யுறை புகழ் முன்றக் கரவுருள் போற்றி
    ஓம் பின்னமேதுமில்லாமல் தேவையானதை தருபவளே போற்றி
    ஓம் இடது ஒரு கையில் சுவடி கொண்டவளே போற்றி
    ஓம் இடது மறு கையில் ஞானாமிர்த கலசம் கொண்டவளே போற்றி
    ஓம் வலது ஒரு கையில் சின் முத்ரா கொண்டவளே போற்றி
    ஓம் வலது மறு கையில் சிருஷ்டியின் அட்சரமாலை கொண்டவளே போற்றி
    ஓம் பத்மாசனம் உறைபவளே போற்றி
    ஓம் புத்திப் பிரகாசம் தருபவளே போற்றி
    ஓம் வாக்கு வன்மை தருபவளே போற்றி
    ஓம் மனதில் தூய்மை சாந்தி அமைதி தருபவளே போற்றி
    ஓம் தத்துவ எழுத்து ரூபம் தாங்கிய தேவி போற்றி
    ஓம் மஹா நைவேத்யம் உவந்தவள் போற்றி
    ஓம் கற்பூர நீராஜனம் உவந்தவள் போற்றி
    ஓம் ஸ்வர்ண புஷ்பம் உவந்தவளே போற்றி
    ஓம் யுக தர்மம் கணித்தவளே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் ஸ்ரீசக்கர பூஜையின் மந்திர ரூபிணியே போற்றி
    ஓம் பதாம் புயத்தவளே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் கற்றறிஞர் கவிமழை தரும் கலாப மயிலே போற்றி
    ஓம் கண்ணும் கருத்தும் நிறை சகலாகலாவல்லியே போற்றி
    ஓம் வெள்ளோதிமைப் பேடே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் கண்கண்ட தெய்வமே சகலகாவல்லியே போற்றி
    ஓம் கல்விச் செல்வம் தந்தருள்வாய் கலைவாணியே
    போற்றி ... போற்றி ... போற்றி ... போற்றியே ....

    வாணி சரஸ்வதி என் வாக்கில் நீ குடியிருந்து  
    தாயே சரஸ்வதியே சங்கரி நீ என் முன் நடந்து
    என் நாவில் குடியிருந்து நல்லோசை தந்துவிட்டு
    கமலாசனத்தாலே எமைக் காத்து
    என் குரலில் நீயிருந்து கொஞ்சிடனும் பெற்றவளே ...

    என் நாவில் நீ தங்கி குடியிருந்து
    சொற்பிழை பொருட்பிழை நீக்கி
    நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து
    மங்கல வாழ்விற்கு வழி வகுத்து
    தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு
    சாஸ்வதமான சரஸ்வதி தாயே
    உன் திருவடி சரணம் போற்றி...
    உன் மலரடி சரணம் போற்றி ...போற்றியே .....
    ×