search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kuladeivam"

    • கோவை நகரத்தில் உள்ள சிவாலயம் கோனியம்மன் ஆலயத்திற்கு தெற்கிலே உள்ளது.
    • கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாக விளங்குகின்றாள்.

    ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு குல தெய்வம் உண்டு. அந்த குலதெய்வம் வழிகாட்டுதலில் தான் ஒருவரது வெற்றி- தோல்வி அமையும். எனவே குலதெய்வம் என்பது மிக, மிக முக்கியமானது.

    அந்த வகையில் கோவை நகரின் காவல் தெய்வமான கோனியம்மன் 60-க்கும் மேற்பட்ட இனத்தவர்களுக்கு குலதெய்வமாக திகழ்கிறார். குறிப்பாக கவுடர்கள், இருளர்கள், போயர்கள், சோழிய வேளாளர்கள் கோனியம்மனை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    எந்தவொரு விஷயமாக இருந்தா லும் இவர்கள் கோனியம்மனிடம் வந்து பூ கட்டிப்போட்டு பார்த்து உத்தரவை பெற்ற பிறகே செயல்படுவார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள நெசவுத்தொழில் செய்யும் மக்களுக்கும் கோனியம்மன் தான் குலதெய்வமாக உள்ளாள். மைசூர், பெங்களூரில் இருந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனை மனதார குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    சேலம், திருப்பூர், ஈரோடு பகுதியில் உள்ளவர்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தவறாமல் வந்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இப்படி கோனியம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட வருபவர்களில் வால்பாறையில் இருந்து வருபவர்கள் அனைவரையும் கவரும் வகையில் தனித்துவம் கொண்டவர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் வசதி வாய்ப்பு பெற்றவர்கள் அல்ல. தினக்கூலி ரகத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் நடக்கும் பெருவிழாவின்போது இவர்கள் வால்பாறையில் இருந்து புறப்பட்டு வந்து விடுவார்கள்.

    குறைந்தபட்சம் 100 பக்தர்கள் மொத்தமாக குழுவாக வருவார்கள். எவ்வளவு நேரமானாலும் அவர்கள் காத்திருந்து வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி அவ ர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வமான கோனியம்மனுக்கு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட தவறுவதில்லை. இந்த வழிபாட்டை அவர்கள் மிகவும் பயபக்தியுடன் செய்து வருகிறார்கள்.

    இதுபற்றி வால்பாறையில் இருந்து வரும் மூத்த பக்தர் ஒருவர் கூறுகையில் ஒரு ஆண்டு நாங்கள் கோனியம்மனை வழிபட வராவிட்டால் எங்கள் உறவுகளிடையே ஏதாவது சண்டை வந்து பிரச்சினை ஆகி விடுகிறது. இல்லையெனில் யாருக்காவது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுகிறது. எனவே நாங்கள் ஆண்டுதோறும் மொத்தமாக வந்து வழிபட்டு விடுவோம். எங்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போடுவது வழக்கம் என்றார்.

    • குலதெய்வம் என்பது மிக, மிக முக்கியமானது.
    • ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு குல தெய்வம் உண்டு.

    ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு குல தெய்வம் உண்டு. அந்த குலதெய்வம் வழிகாட்டுதலில் தான் ஒருவரது வெற்றி- தோல்வி அமையும். எனவே குலதெய்வம் என்பது மிக, மிக முக்கியமானது.

    அந்த வகையில் கோவை நகரின் காவல் தெய்வமான கோனியம்மன் 60-க்கும் மேற்பட்ட இனத்தவர்களுக்கு குலதெய்வமாக திகழ்கிறார். குறிப்பாக கவுடர்கள், இருளர்கள், போயர்கள், சோழிய வேளாளர்கள் கோனியம்மனை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    எந்தவொரு விஷயமாக இருந்தா லும் இவர்கள் கோனியம்மனிடம் வந்து பூ கட்டிப்போட்டு பார்த்து உத்தரவை பெற்ற பிறகே செயல்படுவார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள நெசவுத்தொழில் செய்யும் மக்களுக்கும் கோனியம்மன் தான் குலதெய்வமாக உள்ளாள். மைசூர், பெங்களூரில் இருந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனை மனதார குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    சேலம், திருப்பூர், ஈரோடு பகுதியில் உள்ளவர்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தவறாமல் வந்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இப்படி கோனியம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட வருபவர்களில் வால்பாறையில் இருந்து வருபவர்கள் அனைவரையும் கவரும் வகையில் தனித்துவம் கொண்டவர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் வசதி வாய்ப்பு பெற்றவர்கள் அல்ல. தினக்கூலி ரகத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் நடக்கும் பெருவிழாவின்போது இவர்கள் வால்பாறையில் இருந்து புறப்பட்டு வந்து விடுவார்கள்.

    குறைந்தபட்சம் 100 பக்தர்கள் மொத்தமாக குழுவாக வருவார்கள். எவ்வளவு நேரமானாலும் அவர்கள் காத்திருந்து வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி அவ ர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வமான கோனியம்மனுக்கு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட தவறுவதில்லை. இந்த வழிபாட்டை அவர்கள் மிகவும் பயபக்தியுடன் செய்து வருகிறார்கள்.

    இதுபற்றி வால்பாறையில் இருந்து வரும் மூத்த பக்தர் ஒருவர் கூறுகையில் ஒரு ஆண்டு நாங்கள் கோனியம்மனை வழிபட வராவிட்டால் எங்கள் உறவுகளிடையே ஏதாவது சண்டை வந்து பிரச்சினை ஆகி விடுகிறது. இல்லையெனில் யாருக்காவது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுகிறது. எனவே நாங்கள் ஆண்டுதோறும் மொத்தமாக வந்து வழிபட்டு விடுவோம். எங்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போடுவது வழக்கம் என்றார்.

    • உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் காவல் தெய்வமே குலதெய்வம்தான்.
    • ஆடி மாதமே குலதெய்வ வழிபாட்டுக்கு விசேஷ தீர்வாக அமைகிறது.

    குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் காவல் தெய்வமே குலதெய்வம்தான். குலதெய்வத்தை திருப்திப்படுத்துவது ஆடி மாதத்தில்தான்.

    அவரவர் குல வழக்கத்தின்படி குலதெய்வத்தை வணங்கும் முறையை கடைபிடிப்பதுதான் சிறப்பு. பலர் தங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று, தங்களின் தெய்வத்திற்கு பிடித்த உணவை சமைத்து படைப்பார்கள்.

    சிலருக்கோ தங்கள் குலதெய்வம் எங்கே இருக்கிறது என்று தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும், வருடா வருடம் அவர்களால் குலதெய்வ கோயிலுக்கு சென்று வணங்க முடியாத சூழ்நிலை இருக்கும். இதற்கு தீர்வு என்ன? ஆடி மாதமே குலதெய்வ வழிபாட்டுக்கு விசேஷ தீர்வாக அமைகிறது.

    ஒவ்வொருவரின் குல வழக்கம் வெவ்வேறு விதமாக இருக்கும். சிலர் கடா வெட்டி பூஜை செய்வார்கள். அல்லது மீன், முட்டை, கருவாடு போன்றவற்றை சமைத்து படைப்பார்கள். இது அந்த குலதெய்வத்தின் ஸ்தல வரலாறு படித்தால் தெரியும்.

    ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு சிறப்பு பூஜைமுறை இருக்கிறது. உடல் பிணி போக வேண்டும் என்றால், கும்பகோணத்தில் இருக்கும் வலங்கைமான் மாரியம்மனிடம் வேண்டுவார்கள்.

    வேண்டிக்கொண்டவரின் உடல்நிலை சரியானதும் பாடைகட்டி அதன் மீது அந்த நபரை படுக்க வைத்து ஆலயத்தை வலம் வருவார்கள் என்கிறது ஸ்தல புராணம். அதுபோல, கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனிடம், புத்திர பாக்கிய தடை உள்ளவர்கள், தங்களுக்கு பிள்ளை வரம் வேண்டும் என்று வேண்டுவார்கள். பிள்ளை வரம் கிடைத்ததும், அந்த குழந்தையை கோயிலுக்கு அழைத்து வந்து நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

    அந்த நேர்த்தி கடன் விசித்திரமாக இருக்கும். கோயிலின் திருவிழா நாட்களில் வந்து 40 அடி உயரம் கொண்ட வில்லில் இரண்டு தூக்கக்காரர்கள், அதாவது ஒரு வில்லில் தொங்கியபடி குழந்தைகளை தூக்கி கீழே இறக்குவார்கள். இவர்களை தூக்கக்காரர்கள் என்று அழைக்கிறார்கள்.

    அந்த குழந்தையை தூக்கும் முன் தூக்ககாரர்கள் விலாப்புறத்தில் வெள்ளி ஊசியால் குத்தி ஒரு துளி உதிரம் எடுத்து, அதை ஊசியுடன் ஒரு தண்ணீருள்ள பாத்திரத்தில் போடுவார்கள். இப்படி ஆயிரம் தூக்கக்காரர்களின் இரத்தத்தை விழா முடிந்ததும் தூக்கும் வண்டியின் அருகில் கொட்டுகிறார்கள்.

    இந்த பூஜையின் பெயர், "குருதி தர்ப்பணம்" என்று ஆலய ஸ்தல புராணத்தில் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பூஜைமுறைகள் இருப்பதுபோல, அவரவர்களின் குலதெய்வத்திற்கும் பூஜைமுறைகள் இருக்கிறது. நம் முன்னோர்கள் அசைவம் படைத்து வேண்டி இருந்தால் அதை பின்பற்றுவதில் தவறு இல்லை.

    ஒருவேலை இப்போது இருக்கும் தலைமுறை அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி இருந்தால் குலதெய்வத்திற்கு சைவம் படைக்கலாம். ஆனால் வாரா வாரம் அசைவத்தை மூக்கு பிடிக்க சாப்பிட்டு, வருடத்திற்கு ஒருமுறை உங்கள் குலவழக்கப்படி குலதெய்வத்திற்கு படையல் போடவில்லை என்றால் அது மிகப்பெரிய தெய்வ குற்றம்.

    ஈசனின் சாபத்தால் பார்வதிதேவி பூலோகத்தில் தண்டுறைப்பாக்கம் என்ற ஊரில் புன்னை மரத்தின் நிழலில் பெண் குழந்தையாக தோன்றி அழுதபோது, அந்த ஊரின் மீனவ தலைவர் சுதர்மன் அக்குழந்தையை தன் குழந்தையாக எண்ணி "கயற்கண்ணி" என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார்.

    கயற்கண்ணி, மீன் வலையை தொட்டு கொடுத்தால் அன்று கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில் நிறைய மீனகள் அகப்படும் என்று திருவிளையாடல் புராணத்தில் இருக்கிறது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் பக்தன் வீரா என்ற மீன் பிடிக்கும் தொழிலாளி, கடலில் வலை விரித்து அதில் சிக்கிய மீன்களில் ஒரு மீனை அன்னைக்கு படையலாக படைத்தார் என்கிறது மேல்மலையனூர் ஸ்தல புராணம்.

    அசைவத்தை காளி ரூபத்தில் அம்மன் ஏற்றுக்கொள்கிறாள் என்று தெரிகிறது. உங்கள் குலதெய்வத்தின் ஸ்தல புராணம் தெரியவில்லை என்றால், உங்கள் சொந்தத்தில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து, பூஜை செய்யுங்கள். அதுவும் இந்த ஆடி மாதம் பூஜை செய்தால் வம்சம் செழிக்கும்.

    • குலதெய்வ வழிபாட்டை தினம் தினம் நாம் செய்ய வேண்டும்.
    • குலதெய்வ வழிபாடு செய்வது பெரியதாக கஷ்டம் ஒன்றுமில்லை.

    குலதெய்வம் குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். உங்கள் குடும்பத்திற்கு தீராத துன்பங்களோ துயரங்களோ ஒருபோதும் வராது.

    இது தவிர ஒரு சின்ன பரிகாரம். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வ வழிபாடு செய்து முடித்துவிட்டு, குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப தலைவனின் கையால் ஒரு கைப்பிடி மண், குடும்பத் தலைவியின் கையால் ஒரு கைப்பிடி மண், இரண்டையும் எடுத்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து முடிந்து கொள்ளுங்கள்.

    இதை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். சுத்தபத்தமாக பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதில் சிறிதளவு மஞ்சள் தூளை மட்டும் கலந்து கொள்ளுங்கள் போதும். ஒரு செம்புத்தகட்டில் உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை எழுதி அந்த சின்ன செம்பு தகடை இந்த மண்ணோடு வைத்து மஞ்சள் துணையிலேயே முடிச்சு போட்டு, கட்டி வீட்டில் பத்திரமான ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

    யார் கைக்கும் படாமல் இந்த மண் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும். கொஞ்சம் உயரமாக வீட்டிற்கு உள் பக்கத்தில் ஆணி அடித்து அதில் இதை மாட்டி வைத்தால் கூட போதும். தினம் விளக்கு ஏற்றும் போது ஊதுவத்தியை இந்த முடிச்சுக்கும் காண்பித்து விடுங்கள். அவ்வளவுதான். வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது புதிய மண்ணை எடுத்து வரலாம். பழைய மண்ணை உங்களுடைய வீட்டிற்கு உள்ளேயே ஏதாவது ஒரு மண் பாங்கான இடத்தில் கொட்டி விடுங்கள்.

    இப்படி குலதெய்வ கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணில் குலதெய்வமே குடியிருக்கும். உங்களுடைய முன்னோர்கள் காலடித்தடம் பட்ட மண் அது. இனி உங்களுடைய அடுத்த அடுத்த சந்ததியர்கள் செல்லக்கூடிய இடம்தான் அது. அப்படிப்பட்ட பொக்கிஷமான அந்த ஒரு கைப்பிடி மண் உங்கள் வீட்டில் இருப்பது அந்த குலதெய்வமே உங்கள் வீட்டில் வாசம் செய்வதாக அர்த்தம்.

    விதியின் கட்டாயத்தில் நம் குடும்பத்திற்கு வரக்கூடிய துன்பத்திலிருந்து துயரத்திலிருந்து காப்பாற்றுவது நம்முடைய குலதெய்வம் தான். அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டை தினம் தினம் நாம் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடு செய்வது பெரியதாக கஷ்டம் ஒன்றுமில்லை. வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றும் போது குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி 'நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்'. என்று குலதெய்வத்தை தினம் தினம் நினைவுகூர்ந்தாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காக்கும். குலதெய்வத்தின் பெயரை ஒரு நாளும் உச்சரிக்காமல் இருக்காதீங்க.

    பெண்கள் மட்டும் தான் இப்படி குலதெய்வத்தை நினைவு கூற வேண்டும் என்று அவசியம் கிடையாது. அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என்று எல்லோரும் தினமும் குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு, அவரவர் வேலையை தொடங்கினால், அந்த நாள் நல்லபடியாக செல்லும்.

    • குலதெய்வம் ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியம்.
    • நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வம் குலதெய்வம் என்கிறோம்.

    நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வம் குலதெய்வம் என்கிறோம். நம்முடைய முன்னோர்களாகிய இவர்கள் தெய்வமாக மாறி பின் ஒவ்வொரு சந்ததியினரையும் தொடர்ந்து பாதுகாக்கிறார்கள். அவர்களை வழிநடத்தி சென்று நன்மை செய்கிறார்கள். எல்லா தெய்வங்களை காட்டிலும் குலதெய்வம் ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியம். அந்த குலதெய்வம் அறியாதவர்கள் என்ன வழிபாட்டு முறையை செய்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ஏதாவது ஒரு பெளர்ணமி அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்யவேண்டும்.

    மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு தலைவாழை இலை போட்டு வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், இனிப்பு, பலகாரம், காதோல கருகமணி, காரவகை, பொரிகடலை மற்றும் சர்க்கரை அல்லது வெண் பொங்கல் வைத்து படையல் போடவேண்டும்.

    செம்பு நிறைய தண்ணீர்வைத்து மாவிலை வைத்து மேலே தேங்காய் வைக்கவேண்டும். தேங்காய் வைத்த செம்பை சுற்றி பிள்ளையார் துண்டினை சுற்றிவிடவும்.

    மஞ்சள் தூள் மூலம் பிள்ளையார் பிடித்துவைத்து அதற்கு குங்குமம் பொட்டிடவேண்டும். இதன் மீது ஜவ்வாது, புனுகு சந்தனம், பச்சைக்கற்பூரம் தெளிக்க வேண்டும். இவைகளை செய்து முடித்தபிறகு எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டாக வெட்டி குங்குமம் தடவி நான்கு பக்கம் வைக்கவேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து பின் வரும் மந்திரம் சொல்லவேண்டும்.

    ஓம்ஸ்ரீம் அம்உம் வம்லம்சிங்

    ஐயும் கிலியும் சவ்வும்ஜம்ஜம்

    பம் யம் ரம் மஹா குலதெய்வமே

    எங்கு நீ இருந்தாலும் உன் ரூபத்தை என் கண்முன் காட்டு. எதிரிகள் உன்னை கட்டிஇருந்தாலும் கட்டை உடைத்து குலம் காக்க ஓடிவா முப்பாட்டன், பாட்டன், தந்தைவழி குலதெய்வமே குலம் காக்க ஓடிவா

    சர்வதனமே சர்வஜனமே வா வா

    குலதெய்வமே வசிவசி ஹீம்பட் சுவாகா

    இதை 48 முறை சொல்லி பிறகு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கி பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

    இதை மூன்று பெளர்ணமி நாட்களில் செய்துவர குலதெய்வம் ஏதோ வழியில் கனவில் கூட தெரியவரும் நம்பிக்கையுடன் செய்யவேண்டும்.

    • சிலருக்கு பிறப்பிலே குலதெய்வ தோஷம் இருக்கும்.
    • குலதெய்வத்தை அந்தெந்த பங்காளி வகையறாக்களுக்கு ஏற்றபடி வணங்குவார்கள்.

    ஜோதிடத்தில் லக்கினத்திற்கு ஐந்தாம் இடம் பூர்வ,புண்ணிய ஸ்தானம். இதை வைத்துதான் ஓருவரின் தந்தை வழி பாட்டனார், தாய்மாமன், புத்திர பாக்கியம், கர்ம வினை, புகழ், இப்பிறவியில் அனுபவிக்கப்போகும் நன்மைகள் என அனைத்தையும் தெரிந்துக்கொள்ள முடியும். இந்த இடத்தை வைத்து ஓரளவு நம்முடைய குல தெய்வத்தை அறியலாம்.இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா, நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த தெய்வம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம். நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் குலதெய்வம் இருக்கும். நில ராசியில் வந்தால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், அவர்களின் குலதெய்வம் மலை மேல் இருக்கும்.

    இவ்வாறு குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின் ஜாதகத்தைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். சிலருக்கு பிறப்பிலே குலதெய்வ தோஷம் இருக்கும். இதை பூர்வ புண்ணிய தோஷம் என்பார்கள். அதாவது ஐந்தாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும் லக்கினத்திற்கு தீய கிரகங்கள் இருந்தாலும் அது குலதெய்வ தோசத்தை கொடுக்கும்.மேலும் இது புத்திர தோசத்தையும் கொடுக்கும்.

    ஐந்தாமிடம் என்பது நம்முடைய முற்பிறவியை குறிக்கக்கூடிய இடம்! யார் ஒருவர் இப்பிறவியில் தாய்,தந்தையற்கு உரிய மரியாதை அளிக்காமல் அவர்களை மனம் நோக செய்தாலும், அதே போல் குல தெய்வத்தை வணங்காமல் இருந்தாலும் மறு பிறவியில் அவர்கள் குல தெய்வ தோசத்துடன் பிறப்பார்கள். இதுதான் புத்திர தோசத்தையும் கொடுக்கும். அதாவது போன பிறவியில் செய்யும் கர்ம வினைகளே நமக்கு வரக்கூடிய தோசங்கள்.

    இந்த மாதிரி குலதெய்வ தோசம் இருப்பவர்கள் கண்டிப்பாக தனக்குரிய குலதெய்வத்தை கெட்டியாக பிடித்து கொண்டால் அனைத்து தோசங்களும் நிவர்த்தியாகும். குலதெய்வத்தை அந்தெந்த பங்காளி வகையறாக்களுக்கு ஏற்றபடி வணங்குவார்கள். அதை அறிந்து கொண்டு அதற்குரிய வழிமுறைகளில் வணங்குவது சிறப்பாகும்.

    "சார் எனக்கு ஜாதகமே இல்லை!எங்க வீட்டுல எழுதி வைக்கல அல்லது தொலைந்துவிட்டது"என சிலர் சொல்வார்கள்.

    அவர்கள் எப்படி குலதெய்வ வழிபாடு செய்வது?

    இவர்கள் திருச்செந்துர் முருகனை குலதெய்வமாக வணங்கலாம்! அதாவது புத்திரக்காரகன் குரு பகவான். இந்த குரு பகவானின் ஸ்தலம்தான் திருச்செந்தூர்! எனவே குல தெய்வம் தெரியாதவர் திருச்செந்தூர் முருகனை அன்றைய நாளில் குலதெய்வமாக வணங்க ஆரம்பிக்கலாம். அதேபோல் குலதெய்வ வழிபாடு,பெண் திருமணம் செய்து சென்றால் கணவனின் குலதெய்வத்தையே தன் குலதெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும்.
    • குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

    மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி பவுர்ணமி தினத்தன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும். பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.

    குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குலதெய்வ கோவில் இருக்கும்.

    எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். கிராமங்களில் இருந்து வெளியேறி நகர்ப்பகுதிகளில் குடியேறியவர்களுக்கு குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம். அத்தகையவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது.

    உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். எனவே பங்குனி பவுர்ணமி அன்று மறக்காமல் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

    • பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு.
    • பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர்.

    பங்குனி உத்திரப் பெருவிழா தமிழ்நாடு முழுவதும் ஆலயங்களில் சீரும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று (5-ந் தேதி) பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நன்னாளாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவார்கள். விரதம் மேற்கொள்வார்கள். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்பதுதான்.

    இன்னொரு சிறப்பு... தமிழில், 12வது மாதம் பங்குனி. அதேபோல், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம்.

    ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- சிருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம்!

    முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம்.

    தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள்.இந்த நாளில் விரதம் மேற்கொண்ட சந்திரன், அழகுமிக்க 27 பெண்களை மனைவியாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறது புராணம்!

    இந்த நாளில் விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். ஸ்ரீபிரம்மா, தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர்.

    ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது சாஸ்தா புராணம். .

    அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான்!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.

    தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து அருளினார். அது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக் கோலத்தில் பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

    காஞ்சியில், பவுர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத் தன்று, ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா இனிதே நடைபெறும். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோவில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலை யாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்றான சந்திர பரிகாரத் தலம் திங்களூர் திருத்தலம். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும் மறு நாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன என்பது இயற்கையின் அற்புதம். அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும். சந்திர பலம் பெற்று, மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

    பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங் குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம் , மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

    சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனிஉத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது . இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை .

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெரு மாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். எனவே பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர் . இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

    பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால், திருமணப்பேறு உண்டாகும் , பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம் . இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகம் தான் .அது போல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி , எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.*

    • குலதெய்வம் வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும்.
    • பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

    நாம் நினைக்கும் போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும். நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும்.

    குலதெய்வம் வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து விட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும்,சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.

    நீங்கள் எந்த சுப காரியங்கள் செய்யும் முன், குலதெய்வத்தை நேரில் தரிசிக்க முடியாவிட்டால், ஒரு தேங்காயை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டின் வாசலுக்கு வந்து சூரியனை கும்பிட்டுவிட்டு உங்க வீட்டிற்கு எந்த திசையில் உங்கள் குலதெய்வம் இருக்கிறதோ, அந்த திசையை பார்த்து குலதெய்வத்தை மனதுக்குள் துதித்துக்கொண்டே தேங்காயை உடைத்து விட்டு நீங்க செய்யப்போகும் சுப காரியத்தை செய்யுங்கள். கண்டிப்பாக குலதெய்வம் உங்களை எப்போதும் பாதுகாக்கும். இதை, குலதெய்வ ஆலயத்திற்கு தொலை தூரத்தில் இருப்பவர்கள் செய்யலாம். மற்றபடி குல தெய்வ ஆலயங்களின் அருகில் இருப்பவர்கள் கட்டாயம் எந்த சுப காரியங்களை செய்வதற்கு முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு செய்வது தான் நல்லது.

    பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.. மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

    குலதெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்வார்கள். இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

    இந்த ஆண்டு 2023,ஏப்ரல் / 5 ஆம் நாள் ( 5-4-2023) பங்குனி உத்திர நட்சத்திர நாள் ஆகும். அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் வழிபட, மிகமிக உகந்த நாளாகவும் அமைகிறது. மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதுடன், பங்குனி உத்திரம் நாளில் சென்று வழிபடுவது மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது !

    பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி வீடு திரும்புவதும், குலதெய்வத்தை திருப்திப்படுத்தும்.

    பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம். குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.

    மேலும் இந்த பங்குனி உத்திர தினம் ஒரு அற்புதமான தினம். இந்த தினத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் திருமணம் நடந்தது. குறிப்பாக சபரி சாஸ்தா என சொல்லக்கூடிய ஐயப்பன் அவதரித்தது பங்குனி உத்திர தினம் அன்றுதான். முருகப்பெருமான் திருமணமும் அன்றுதான். இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!

    தொடர்புக்கு:- 9442729693

    • குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம்.
    • குடும்பப் பெரியவர்களிடம் குலதெய்வம் பற்றி தெரிந்துகொண்டு வழிபடலாம்.

    ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு மூன்று தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள் புரிவதாக ஐதீகம். அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அடுத்தது, குலதெய்வம். பிறகு காவல் தெய்வம் ஆகியவையாகும். அந்த அடிப்படையில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் குலம் தழைத்து, சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.

    படிப்பு, தொழில் என்று பல்வேறு காரணங்களினால் பிறந்த மண்ணைவிட்டு, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாழவேண்டிய நிலை பலருக்கும் உள்ளது. எப்போதேனும் ஒருமுறை பிறந்த ஊருக்குச் சென்றாலும்கூட, குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபடமுடியாத நிலை காணப்படுகிறது. முன்பெல்லாம் குடும்பப் பெரியவர்கள் நம்முடைய குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரிந்துகொள்ளமுடியாத நிலையில், குடும்பப் பெரியவர்களிடம் குலதெய்வம் பற்றி தெரிந்துகொண்டு வழிபடலாம்.

    குல தெய்வம் பற்றி எதுவுமே அறிய இயலாத நிலையில் இருப்பவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொண்டு, வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத்துணி சாற்றி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படிக்கு பூஜை செய்து வேண்டிக் கொண்டால், குடும்பத்தின் குல தெய்வம் பற்றிய தகவல் விரைவில் தெரியவரும் என்ற தகவலை ஆன்மிக சான்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    • குலதெய்வத்தின் அருள் இருந்தால் எந்த பிரச்சனைகளும் நம்மை அண்டாது.
    • கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    'ஓம் பவாய நம,

    ஓம் சர்வாய நம,

    ஓம் ருத்ராய நம,

    ஓம் பசுபதே நம,

    ஓம் உக்ராய நம,

    ஓம் மஹாதேவாய நம,

    ஓம் பீமாய நம,

    ஓம் ஈசாய நம'

    என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.

    • கலசம் முழுவதும் நூலைச் சுற்ற வேண்டும்.
    • நூல் சுற்றத் தெரியாதவர்கள், பட்டுத் துணியை சுற்றலாம்.

    நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் குடியிருக்க, வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பார்கள். மேலும் மனதில் தீய எண்ணங்கள் இன்றி, நேர்மறையான வார்த்தைகளைப் பேசி வாழ்பவர்களின் வீட்டில் லட்சுமி குடியேறுவாள் என்பது நம்பிக்கை. அதே போல் நம்முடைய குலதெய்வ சக்தியையும், நாம் நம்முடைய வீட்டில் குடியேற்றலாம் என்கிறார்கள்.

    அதற்கு மஞ்சள், மண், சந்தனம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி போன்றவற்றை சிறிதளவு எடுத்து, அதை ஒரு சிவப்பு துணியில் வைத்து முடிச்சுப் போட்டு, வீட்டின் வாசல்படி உட்புறம் நிலைப்படியின் மையத்தில் மேல் பகுதியில் ஆணி அடித்து மாட்டி வைக்க வேண்டும். பின்னர் தினமும் அதற்கு தூப, தீபம் காட்டி வழிபட்டு வந்தால், குலதெய்வ சக்தியை வீட்டில் வரவழைக்கலாம் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து.

    ஒரு கலச சொம்பில், சிறிதளவு வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய், பன்னீர் ஆகியவற்றை போட வேண்டும். பன்னீர் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் அந்த கலசம் முழுவதும் நூலைச் சுற்ற வேண்டும். நூல் சுற்றத் தெரியாதவர்கள், பட்டுத் துணியை சுற்றலாம்.

    பின்னர் வீட்டின் பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதன் மீது வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி பரப்பி, அதன் மீது கலச சொம்பை வைக்க வேண்டும். கலசத்தின் மீது வாழைப்பூவை, நுனிப் பகுதி மேல்நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். வாழைப்பூவுக்கும், கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைக்க வேண்டும்.

    பின்னர் கலசத்திற்கு வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். கலசத்தின் மீது வைத்திருக்கும் வாழைப்பூ, மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பூஜை செய்வதற்கு அந்த மூன்று நாட்களே போதுமானது. தொடர்ந்து பூஜை செய்ய விரும்புவர்கள், வாழைப்பூவை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

    கலசத்தில் உள்ளவற்றை வீட்டைச் சுற்றி தெளித்தும், குளிக்கும் நீாில் விட்டு நீராடவும் செய்ய வேண்டும். அதோடு 'ஓம் பவாய நம, ஓம் சர்வாய நம, ஓம் ருத்ராய நம, ஓம் பசுபதே நம, ஓம் உக்ராய நம, ஓம் மஹாதேவாய நம, ஓம் பீமாய நம, ஓம் ஈசாய நம' என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.

    ×