என் மலர்
நீங்கள் தேடியது "panguni festival"
- செண்பகவல்லி அம்பாள் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாளை (15-ந்தேதி) வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி யளிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் விழாகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான நேற்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. 9-ம் திருநாள் மண்டகப்படி வணிக வைசிய சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் நேற்று இரவு நடைபெற்றது. மெயின் ரோட்டில் உள்ள வணிகவைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட 9-ம் திருநாள் மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு வானவேடிக்கைகள் முழங்க யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
இதில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், சங்கத் துணைத் தலைவர் பரமசிவம், மணிமாறன், மாதவராஜ், கருப்பசாமி, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினவேல், மகாலிங்கம், குன்னிமலை ராஜா, முனிய செல்வம், தங்கமாரியப்பன், செல்வம், மாரிச்செல்வம், மாரி செல்வகுமார், சுந்தர், சுபாஷ், காளிதாஸ், மதன், மாரிமுத்து, செல்வா, முன்னாள் சங்கத் தலைவர்கள் காளியப்பன், பூவலிங்கம், பழனி குமார், ஆயில் மில் சுரேஷ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
10-ம் திருநாளான இன்று மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு ரிஷப வானத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 11-ம் திருநாளான நாளை இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் வானவேடிக்கைகள் முழங்க மலர்களால் அலங்கரிக்கபட்ட தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
- திருவிழா 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 11-ம் திருநாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலின் துணைக்கோவில் ஆகும்.
மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும்.
விழாவில் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் காலை, இரவு ஆகிய இரண்டு வேளைகளும் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ம் திருநாளான நேற்று மாலை நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாதர் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தேர் நிலையத்தில் இருந்து தொடங்கி ரதவீதிகள் வழியாக மீண்டும் இரவு 7.45 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.
இதில் கரிவலம் வந்தநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
- திருவிழா கடந்த 4 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.
சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் பங்குனித்தேர்த் திருவிழா கடந்த 4 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று மாலை 6.30 மணிக்கு முப்புடாதி அம்மன் வழிபாடு குழுவினரின் பஜனை மற்றும் ஆயிரத்தி 8 திருவிளக்கு பூஜை நடந்தது.
2-ம் நாள் இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, 3-ம் நாள் இரவு 8 மணிக்கு ஆன்மீக பட்டிமன்றம், 4-ம் நாள் இரவு 8 மணிக்கு மெல்லிசை கலந்த நவீன வில்லிசை 5-ம் நாள் இரவு 8 மணிக்கு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.
6-ம் நாள் மாபெரும் நகைச்சுவை மற்றும் இசைபட்டிமன்றம், 7-ம் நாள் இன்னிசை கச்சேரி நடந்தது. இரவு ஒரு மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாதி அம்மன் எழுந்தருளி வீதி உலா, தொடர்ந்து காமராஜர் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்டம் நடந்தது.
தேரோட்டம்
8-ம் நாள் இரவு 7 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. 9-ம் நாளான நேற்று முன்தினம் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது.
பிற்பகல் 4 மணிக்கு தேர் ரதத்தில் முப்பிடாறி அம்பாள் எழுந்தருளி கிழக்கு ரத வீதி, தெற்கு ரதவீதி வழியாக சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவில் வந்து அடைந்தது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு மேல ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் 7 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது. அங்கு தேர் நிலைக்கு நிற்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடந்தது.
10-ம் நாளான நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாறி அம்பாள் எழுந்தருளி சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவிலுக்கு வந்து சேர்தல் நடந்தது. அங்கு அம்பாள் ஊஞ்சல் காட்சி மற்றும் விசேஷ பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இரவில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைப்பெற்றது.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் வீரபாகு சேனைத்தலைவர் இளைஞர் அணி சார்பில் 3-ம் திருநாள் மண்டகப்படி நடைபெற்றது.
இதைமுன்னிட்டு அம்பை நகராட்சி கலையரங்கம் அருகே மாணவ- மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரவில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைப்பெற்றது. ஏற்பாடுகளை இளைஞரணி தலைவர் துரை, செயலாளர் செல்வராஜ், துனைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் ரவி மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
- பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது
நெல்லை:
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாளை ராஜ கோபாலசுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேரோட்டம்
ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபாலசுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவில் 10- ம் திருநாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது.
இதற்காக காலை 7 மணிக்கு ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபாலசுவாமி தேருக்கு எழுந்தருளினார். 4 ஆயிர திவ்ய பிரபந்தத்தில் பெரிய திருமொழி பிரபந்த குழுவினரால் அருளப் பாடல் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.
தொடர்ந்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கோவிந்தா... கோபாலா... கோஷம்
இதில் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகி மிக்கேல் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்ற கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகளை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தை யொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.
- பங்குனி உத்திர திருநாளுக்கு தனிச்சிறப்பு உண்டு.
- உத்திர நட்சத்திரத்தின் நாயகன் சூரியன்.
தெய்வங்களின் பிறந்த நாள், திருமணநாள் என பங்குனி உத்திரம் நாள் மகிழ்ச்சியை ஊட்டக்கூடியது. இந்த நாளில் தான் சிவ விஷ்ணுவின் புதல்வராகக் தர்மசாஸ்தா அவதரித்தார். தென் மாவட்டங்களில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் காடுகளில் உள்ள சாஸ்தா கோவில்களுக்குச் செல்வர். சாஸ்தாவின் அவதார தினமான பங்குனி உத்திரநாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விசேஷ பூஜை உண்டு.
இந்நாளில் தான் லட்சுமிதாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவரித்தரித்தாள்.
கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது. இந்த திருமணக் கோலத்தைத் தான் சித்திரை விசுவன்று பொதிகையில் அகத்தியருக்கு தரிசனமாக்கினர்.
ராமன் சீதாதேவியையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கனன் சுருதகீர்த்தியையும் கைப்பிடித்த நாளும் இது தான். முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்த நாளும் இதுவே.
பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து தம்பதிகளாய் தினழும் தெய்வங்களை வழிபட்டால் பாவங்கள் விலகி மாங்கல்ய பலம் பெருகும் எனப்புராணங்கள் கூறுகின்றன.
- பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
- பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள்.
1. மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்தது பங்குனி நாளில்தான். ஆண்டுதோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.
2. சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.
3. முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.
4. மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.
5. மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.
6. இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.
7. காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.
8. தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன் - சீதை, லட்சுமணன் - ஊர்மிளா, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - சுருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
9. அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.
10. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.
11. பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக் கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான்.
12. காரைக்கால் அம்மையார் முக்தி யடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம்.
13. திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாசேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல் வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திரு மழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.
14. பங்குனி உத்திரவிரதம் மேற்கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.
15. பங்குனி உத்திரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இன்று ( 5-ந்தேதி) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங் குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக் கல்யாணம் நடக்க உள்ளன.
16. நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் தொடுத்த லீலை பங்குனி உத்திரம் நடைபெற உள்ளது.
17. பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.
18. பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும். பனிதரும் குளிர்ச்சியும், சூரிய ஒளிதரும் வெப்பமும் இதமாகவும், பதமாகவும் உள்ளன. தமிழ் நூல்கள் இம்மாதத்தைப் பங்குனிப் பருவம் என்றும், இதில் கொண்டாடப்படும் வசந்த விழாவைப் பங்குனி விழா என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.
19. பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வரமளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று புராணங்கள் சொல்கின்றன.
20. கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபுலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்றுதான் பூக்கும்.
- இரவு வழக்கமாக நடைபெறக்கூடிய ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
- பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்துக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களில் பங்குனி உத்திர நாளில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
பிழைப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் இன்று ஒருநாளாவது தங்கள் குல தெய்வங்களான சாஸ்தா கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.
குலதெய்வம் எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் உள்ளவர்கள் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமியை குலதெய்வமாக நினைத்து அங்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.
குலதெய்வம் கோவில்களுக்கு செல்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேர்ச்சை கடனாக குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது, ஆடு, கோழி, வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் இன்று பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
பங்குனி உத்திரம் பெரும்பாலான கோவில்களில் நேற்று பகல் 11 மணிக்கு மேல் இன்று காலை 11 மணி வரை உத்திர நட்சத்திரம் உள்ளதால் ஏராளமானவர்கள் நேற்று தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் அதன் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தில் அமைந்துள்ள குன்று மலை சாஸ்தா கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவெகு விமர்சையாக நடைபெற்றது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு வள்ளியம்மன் தபசு காட்சிக்கு புறப்படுதல் நடைபெற்றது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்றும் அதிகாலை முதலே திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரா தனையும், 5 மணிக்கு மேல் தவசு காட்சிக்குச் சென்ற வள்ளியம்மனை அழைத்து வர சுவாமி புறப்படுதல், அங்கு வள்ளியம்மனுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
இரவு வழக்கமாக நடைபெறக்கூடிய ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு 10 மணிக்கு மேல் 108 மகாதேவர் சன்னதி முன்பு வள்ளி திருக்கல்யாணம் விமர்சையாக நடக்கிறது.
- பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரத்தையொட்டி சாஸ்தா கோவில்களில் குலதெய்வ வழிபாடு இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாஸ்தாவுக்கு மாலைசாத்தி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதற்காக வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் இன்று குலதெய்வ கோவிலுக்கு வந்தனர். சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது. முக்கிய சாஸ்தா கோவில்களில் அன்னதானம், தொடர் கச்சேரிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக முந்தைய நாளே பக்தர்கள் அங்கு கூடாரம் அமைத்து தங்குவது வழக்கம்.
அதன்படி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று காலை முதலே கார், வேன், இருசக்கர வாகனங்கள், சிறப்பு பஸ்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
இந்நிலையில் பக்தர்கள் இன்று அங்குள்ள ஆற்றில் புனித நீராடி, பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
மேலும் சொரிமுத்து அய்யனார், பட்டவராயன், பேச்சியம்மன், சங்கிலி பூதத்தார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் ஆரியங்காவு சாஸ்தா கோவில், சீவலப்பேரி அருகே உள்ள மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், கங்கைகொண்டான் அனைத்தலையூர் தென்னூர் அய்யனார் சாஸ்தா கோவில் உள்ளிட்ட சாஸ்தா கோவில்களில் இன்று பங்குனி உத்திரத்திருவிழா நடைபெற்றது.
இதுபோல வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் தென்கரை மகாராஜா சாஸ்தா கோவில், வீரவநல்லூர் அருகே உள்ள பொட்டல் பாடலிங்க சாஸ்தா கோவில், மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
பங்குனி உத்திர நட்சத்திரம் நேற்று தொடங்கி இன்று வரை நடக்கிறது. நேற்று பல கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
இதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி-கல்லூரிகளும் இன்று செயல்படவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவிலான சாஸ்தா கோவிலுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு, அதிகமாக பக்தர்கள் செல்கிறார்களோ, அந்த ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.
இதுதவிர இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் நெல்லை வந்து, கார் மற்றும் வேன்களிலும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் இன்று கார்-வேன்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.
- சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலாகும். இக்கோவில் மதுரையை அடுத்த அழகர்கோவில் மலை உச்சியில் அமையப் பெற்றுள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர திருவிழா நடைபெறுவது தனிச் சிறப்புடையதாகும். இந்த விழாவானது நேற்று நடைபெற்றது. இதில் காலையில் அழகர் மலை அடிவாரத்தில் உள்ள 18-ம் படி கருப்பணசுவாமி ராஜகோபுரம் முன்பு இருந்து பக்தர்கள் 108 பால் குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சோலைமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் பகல் 12 மணிக்கு மூலவர் சுவாமிக்கு உச்சிகால பூஜைகள்நடைபெற்றது. தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் உற்சவர் சுவாமிக்கு, சந்தனம், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.
இதில் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி மயில் வாகனத்தில் பல்லக்கில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் வெளி பிரகாரங்களின் வழியாக புறப்பாடாகி பின்னர் அதே பரிவாரங்களுடன் வந்து இருப்பிடம் சேர்ந்தது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.
மேலும் திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி ஊராட்சியில் ஊருணி கரையில் உள்ள ஸ்ரீஊர்க்காவலன் சேவுகப்பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவிழாவின் சிறப்பு அம்சமாக 5 கரைதாரர்கள் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தின் கீழ் 2 நாட்கள் நாடகம் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் .திருவிழாவின் முத்தாய்ப்பாக 9 நாட்கள் தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திக்கடன், நாடகம் விடிய, விடிய நடந்தது.