search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "singampunari"

    • சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் இடத்தை ப.சிதம்பரம் ஆய்வு செய்தார்.
    • காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை களில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை போன்ற மருத்துவமனை களில் மட்டுமே டயாலிசிஸ் பிரிவு சிகிச்சைக்கான தனி பிரிவு உள்ளது.

    ஆனால் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் டயாலிசிஸ் சிகிச்சை முறை செய்து கொள்ள வேண்டிய நோயாளிகள் மதுரை, சிவகங்கை போன்ற நகரங்க ளுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர்.

    எனவே சிங்கம்புணரி பகுதியில் உள்ள டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளி களுக்காக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையில் டயாலிசிஸ் பிரிவு சிகிச்சை கொண்டுவர அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

    அதன்அடிப்படையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்க ளவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் பொது நிதியின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொள்ள மாநிலங்கள் அவை உறுப்பினர் ப.சிதம்பரம் தலைமையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணி நடைபெற்றது.

    முன்னதாக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் அய்யன்ராஜ் வரவேற்றார். மருத்துவ மனை வளாகத்தை ஆய்வு செய்த ப.சிதம்பரம் டயாலிசிஸ் சிகிச்சைக்கான புதிய கட்டிடம் கட்டப்படும் இடம் குறித்து தலைமை மருத்துவர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை செய்தார்.

    ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி, பேரூராட்சி கவுன்சிலரும் சிங்கம்புணரி நகர காங்கிரஸ் தலைவரு மான தாயுமானவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் காங்கி ரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • சிங்கம்புணரி அருகே சித்த மருத்துவ முகாம் நடந்தது.
    • வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி,

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாரம், சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மருதிப்பட்டியில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த இந்த முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேசன், துணைத் தலைவர் கமலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார். சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆதித்யா, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சரவணன், சிங்கம்புணரி மருத்துவமனை சித்த மருத்துவர் ரஹீமா பானு ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 225 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மருந்தாளுநர் சோலைசாமி, சுகாதார ஆய்வாளர் எழில் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

    சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    சிங்கம்புணரி:

    உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி சிங்கம்புணரி பகுதியில் உள்ள கடைகளில் சுகாதார துறையினர் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். சுகாதார துறை துணை இயக்குனர் அருள்மணி தலைமையிலும், பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு முன்னிலையிலும் இந்த ஆய்வு நடைபெற்றது. சிங்கம்புணரியில் உள்ள பல்பொருள் அங்காடி கடைகளில் சோதனை அதிகாரிகள் சோதனை செய்தபோது அங்கு சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான, முத்திரை இல்லாத உணவுப்பொருட்கள் அழிக்கப்பட்டன. ஆய்வின்போது டாக்டர் பரணிதரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், இளநிலை உதவியாளர் செயல்தரன், துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று எஸ்.புதூரிலும் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி உத்தரவின் பேரில் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் அருள்மணி தலைமையில் சுகாதார ஆய்வாளர் கேசவராமன் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 
    ×