என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tobacco products"

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தடை செய்த புகையிலை பொருட்களை எஸ்கேஎம் வளாகம் அருகில் உள்ள கடைகளில் வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண் டேவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது குப்பக்குடியைச்சேர்ந்த சரலப்பள்ளம் நடராஜன் மகன் சண்முகம் (வயது 52) தனது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை பார்த்த, தனிப்படை போலீசார் அவரை பிடித்தனர். மேலும் கடையில் இருந்த ரூ.2600 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீசில் ஒப்படைத்தனர்.ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
    • 300 அடி தூரத்துக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாகராஜபுரத்தில் உள்ள பெட்டிக்கடையில் கள்ளக்குறிச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ராஜா உத்தரவின்பேரில் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் மேற்பார்வையில் சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ், பொன்னுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாலசேகர், பாசில், குணதீபன்(பயிற்சி) ஆகியோரை கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து 300 அடி தூரத்துக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். தொடர்ந்து எஸ்.வி. பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பெட்டிக்கடைகளின் உரிமையாளர்களக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக தகவல் வந்தது
    • டீக்கடையில் சோதனை செய்து 36 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தன

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா உள்ளிட்ட புகையிலை விற்பனை, லாட்டரி விற்பனை கள்ளச் சந்தையில் மது விற்பனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக தகவல் வந்தது.

    இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட டீக்கடையில் சோதனை செய்து 36 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    • துறையூர் அருகே பெரம்பலூர் சாலை பகுதியில் துறையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் பின் தொடர்வதை கண்டு கடத்தல் புள்ளிகள் மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்றனர்.

    திருச்சி

    பெங்களூருவில் இருந்து காரில் கடத்த முயன்ற ரூ.2லட்சம் மதிப்பிலான குட்காவை மண்ணச்சநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    துறையூர் அருகே பெரம்பலூர் சாலை பகுதியில் துறையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்தப்போது, வாகனம் நிற்காமல் சென்றது. இதில் சந்தேகமடைந்த துறையூர் போலீசார் வாகனத்தை பிடிக்க துரத்தினர். போலீசார் பின் தொடர்வதை கண்டு கடத்தல் புள்ளிகள் மின்னல் வேகத்தில் காரை ஓட்டி சென்றனர். பின்னர் போலீசார் நெருங்கியதால் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

    இதையடுத்து காரில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 50 மூட்டை குட்கா இருந்தது தெரியவநதது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். தொடர்ந்து குட்கா மற்றும் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த குட்கா பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே பூதாமூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஜெயபாண்டியன். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற விருத்தாசலம் காவல்துறையினர் சோதனை செய்ததில் அவரது மாருதி ஆம்னி வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து பூதாமூர் கிராம நிர்வாக அலுவலர் அசோக் தலைமையிலான வருவாய்த்துறையினர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக ஜெயபாண்டியணின் கடைக்கு சீல் வைத்தனர். சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படையினர் காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திக் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படையினர் காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வேனில் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலைப் பொருட்கள் எடுத்து வந்த 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி வந்ததாகவும் அதனை தனித்தனி குடோன்களில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் கோடங்கிபாளையம் பகுதியில் வேனில் வைத்திருந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் பாப்பம்பட்டி, பெரியகுயிலி மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியம் பூசாரிபாளையம் ஆகிய பகுதிகளில் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் 5 வேன்களை கைப்பற்றினர்.இதில் சம்பந்தப்பட்ட பல்லடம் மாணிக்காபுரம் கோல்டன் சிட்டி சுயம்புலிங்கம் மகன் அரவிந்த்ராஜ்(25) , கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஜான்சன் மகன் ஜான் சஜு(30), திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டியை சேர்ந்த மணி மகன் கவின்(24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 2109 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பேரையூர் அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 57 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருமங்கலம்

    பேரையூர் பகுதியில் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டியை சேர்ந்த ஞானபிரகாசம் (வயது41), லட்சுமிபுரம் பெருமாள் (55) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஞான பிரகாசத்தின் கடைக்கு புகையிலை பொருட்களை இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம்இருந்து 57 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

    • புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் சிலர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமை யிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சங்கராபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

    சோதனையில் கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, அரசு ஆண்கள் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 5 பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 5 கடைகளின் உரிமையா ளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்ததோடு, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமை யாளர்களை எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாசில், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் குணதீபன், ஜனார்த்தனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புகையிலை பாக்கெட்டுகளை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • காமராஜர் சாலையில் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள்.

    மதுரை

    மதுரை தெப்பக்குளத்தில் புகையிலை பொருட்கள் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், மீனாட்சி கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான தனிப்படை அமைக்க ப்பட்டது.

    அவர்கள் காமராஜர் சாலையில் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

    எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில், அந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் 502 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரூ.41 ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். புகையிலை கடத்திய 3 பேரையும் விசாரித்த போது அவர்கள் கிருஷ்ணாபுரம் குறுக்கு தெரு ராஜேஷ்குமார்வியாஸ் (வயது 49), புது மீனாட்சி நகர், அம்ஜத் தெரு ரமேஷ்குமார் (44), எல்லிஸ் நகர் சுரேஷ் பிஷ்னோய் (27) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    காமராஜர் சாலை, அலங்கார் தியேட்டர் அருகே தெப்பக்குளம் போலீசார் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள். அப்போது 48 புகையிலை பாக்கெட்டுகளுடன் லட்சுமிபுரம் குறுக்கு தெருவை சேர்ந்த சிவச்சந்திரன்சிங் (47), பாலரங்காபுரம் முப்தராம் (43), தெற்குமாசி வீதி, வெங்கடாஜலபதி சந்து நிதிஷ்குமார் (39), பிரகாஷ் (31) ஆகிய 4 பேரை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.

    • வாலிபர் கருப்பு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
    • கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மைசூர்-சக்தி ரோடு ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே ஆசனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.

    அப்போது பஸ் நிலையம் அருகே ஒரு வாலிபர் கருப்பு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து போலீசார் சோதனை செய்ததில் கருப்பு பையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் என 9 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் சத்தியமங்கலம் அடுத்த கோட்டு வீராம்பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அல்லாபகஸ் (38) என தெரிய வந்தது.

    இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 9 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.6,500 ரொக்க பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • புகையிலை மற்றும் குட்கா புழக்கத்தை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
    • ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை மாநகரில் புகையிலை மற்றும் குட்கா புழக்கத்தை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை தெற்குவாசல் தெற்கு வெளிவீதி பாண்டிய விநாயகர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அந்த வீட்டில் இருந்த விக்னேஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து தெற்குவாசலில் வீட்டை வாடகை எடுத்து அதை குடோனாக மாற்றியுள்ளார்.வட மாநிலங்களில் இருந்து புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை வாங்கி, வீட்டுக்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்று கைதான விக்னேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 6 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை

    கீரைத்துறை போலீசார் பீடா கடை அருகே ரோந்து சென்றனர். அப்போது 25 குட்கா பாக்கெட்டுகளுடன் டவுன்ஹால் ரோடு, கிளாஸ்கார தெரு திருமலை நம்பி (வயது 47) என்பவர் பிடிபட்டார்.

    செல்லூர் போலீசார் 50 அடி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது 11 புகையிலை பாக்கெட்டுகளுடன் ஜீவா ரோட்டை சேர்ந்த அங்கப்பன் என்ற பாண்டி (33) என்பவர் கைது செய்யப்பட்டார். அதே பகுதியில் 3 புகையிலை பாக்கெட்டுகளுடன் தாகூர் நகரை சேர்ந்த பூமாரி (50) என்பவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.

    கூடல்புதூர் போலீசார் மகாத்மா காந்தி நகர் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அங்கு 7 குட்கா பாக்கெட்டுகளுடன் பதுங்கி இருந்த முல்லை நகர், கண்ணப்பர் தெரு கோவிந்தராஜன் (67) என்பவரை கைது செய்தனர். ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த ஹரிராஜன் (26) வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 16 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×