search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்
    X

    சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

    • புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் சிலர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமை யிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சங்கராபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

    சோதனையில் கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, அரசு ஆண்கள் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 5 பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 5 கடைகளின் உரிமையா ளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்ததோடு, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமை யாளர்களை எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாசில், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் குணதீபன், ஜனார்த்தனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×