search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shop Seals"

    • கெல்வின் (வயது37) ‌‌என்பவர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
    • ரூ.5,50 00மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வடலூர் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆபத்தாரணபுரம் பகுதியில் கெல்வின் (வயது37) ‌‌என்பவர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

    இதனையொட்டி அவர்கடையிலிருந்து ரூ.5,50 00மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செய்தனர். இதே போல் ராகவேந்திரா சிட்டியில் சபியுல்லா பெட்டி க்கடையில் ரூ.1500, மதிப்பிலான, புகையிலை பொரு ட்களை பறிமுதல் செய்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர் 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே பூதாமூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஜெயபாண்டியன். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற விருத்தாசலம் காவல்துறையினர் சோதனை செய்ததில் அவரது மாருதி ஆம்னி வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து பூதாமூர் கிராம நிர்வாக அலுவலர் அசோக் தலைமையிலான வருவாய்த்துறையினர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக ஜெயபாண்டியணின் கடைக்கு சீல் வைத்தனர். சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×