என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தடை செய்த புகையிலை பொருட்களை எஸ்கேஎம் வளாகம் அருகில் உள்ள கடைகளில் வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண் டேவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது குப்பக்குடியைச்சேர்ந்த சரலப்பள்ளம் நடராஜன் மகன் சண்முகம் (வயது 52) தனது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை பார்த்த, தனிப்படை போலீசார் அவரை பிடித்தனர். மேலும் கடையில் இருந்த ரூ.2600 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீசில் ஒப்படைத்தனர்.ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×