என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவம்"

    • 1953 இல் 'இரட்டை ஹெலிக்ஸ்' மாதிரியை கண்டறியப்பட்டது.
    • மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் என்பவரால் 1869 ஆம் ஆண்டு டிஎன்ஏ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் டிஎன்ஏவின் கட்டமைப்பு 1953 ஆம் ஆண்டு அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் 'டபுள் ஹெலிக்ஸ்' டிஎன்ஏ கட்டமைப்பை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். கடந்த வியாழக்கிழமை நியூயார்க்கின் கிழக்கு நார்த்போர்ட்டில் அவர் உயிர் பிரிந்தது.

    அவரது மகன் டங்கன் வாட்சன் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் இதை உறுதிப்படுத்தி உள்ளார். நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் நிம்மதியாக இறந்தார் என டங்கன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

    ஏப்ரல் 6, 1928 அன்று சிகாகோவில் பிறந்த வாட்சன், தனது 24 வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரான்சிஸ் கிரிக்குடன் டிஎன்ஏவின் அமைப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தினார்.

    1953 இல் அவர்கள் முன்மொழிந்த 'இரட்டை ஹெலிக்ஸ்' மாதிரி, உயிரினங்களில் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரம்பரை தகவல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை விளக்கியது, இது அறிவியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறியது.

    இந்தக் கண்டுபிடிப்புக்காக வாட்சன், கிரிக் மற்றும் மற்றொரு விஞ்ஞானி மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு 1962 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    மரபியல், தடயவியல் மற்றும் பரம்பரை நோய்கள் பற்றிய ஆய்வுகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பேருதவியாக அமைந்தது. 

    • ரத்தத்தில் கொழுப்பு சத்து அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
    • முதல் மாடிக்கு செல்வதற்குக் கூட லிப்ட் பயன்படுத்த வேண்டாமே.

    * நடுத்தர வயதாக இருந்தாலும், நன்கு ஆரோக்கியமாகவே இருந்தாலும் வருடம் ஒரு முறை உடல் முழு பரிசோதனை செய்து கொள்கின்றீர்களா? இதெல்லாம் தேவையில்லாத செலவு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது காலத்தின் கட்டாயம். சில கூடுதல் கவனங்கள் தேவைப்படுகின்றது.

    * இளவயதாக இருந்தாலும் வருடத்திற்கு 2-3 முறை உங்கள் ரத்த அழுத்தத்தினை பரிசோதித்துக் கொள்ளலாம்.

    * வயது 30 ஆகி விட்டதா? ரத்த சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குடும்ப ரத்த உறவுகளில் யாருக்கேனும் இருந்தால் இதில் கூடுதல் கவனம் அவசியமாகின்றது.

    * ரத்தத்தில் கொழுப்பு சத்து அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    * தேவையான தடுப்பூசிகளை போட்டு உள்ளீர்களா?

    * நம்மை பற்றிய மருத்துவ குறிப்புகள் கொண்ட ஒரு சிறிய நோட்டு புத்தகம் வைத்துக் கொள்ளலாம்.

    * கையை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவுதல் (அ) சிறிய கிருமி நாசினி கையில் அவ்வப்போது போடுவது நல்லது.

    * சுய வைத்தியம் கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.

    * டாக்டர் எழுதும் மருந்தினை குறைத்து எடுத்துக் கொள்வதும் (அ) அதே சீட்டினை வருடக் கணக்கில் காட்டி மருந்து வாங்கி சாப்பிடுவதும் தவறு.

    * தண்ணீரினை வடிகட்டி காய்ச்சி குடிக்கின்றீர்களா? இவற்றையெல்லாம் முறைப்படி ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும்.

    உடலுக்காக செய்ய வேண்டியவை

    * தினம் 30 நிமிடம் நடப்பது கட்டாயமாகும்.

    * முதல் மாடிக்கு செல்வதற்குக் கூட லிப்ட் பயன்படுத்த வேண்டாமே.

    * யோகா அவசியம்

    * மூச்சு பயிற்சி அவசியம்.

    * பயிற்சியாளர் மூலம் உடலை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை கற்று பயில வேண்டும்.

    * சீரான எடை பராமரிப்பு அவசியம் என்பது அனைவரும் அறிந்ததுதானே.

    * தூங்கி எழுந்தது முதல் தூங்கப் போகும் வரை ஓயாது டி.வி. ஓடுவதும், ஒலிப்பதும், போன் பார்ப்பதும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

    * காலை, மாலை நேரத்து வெயில் 30 நிமிடங்களாவது உங்கள் மீது படுகின்றதா?

    உட்காரும் பொழுதும், நடக்கும் பொழுதும் வளைந்து நெளிந்து இல்லாமல் நேராய், கம்பீரமாய் இருக்கின்றீர்களா?

    * எந்த மூட்டில் வலி இருந்தாலும் உடனடியாக உரிய கவனம் கொடுப்பது நல்லது.

    உணவு-சத்துணவு

    * காய்கறி, பழங்கள் இவைகளை ஒரு நாளைக்கு 5 முறை பரிமாறிக் கொள்ளலாம்.

    * அன்னாசி, கொய்யா, வாழை, ஆரஞ்சு, தர்பூசணி இப்படி பழ வகைகளை சிறிதளவாக எடுத்துக் கொள்ளலாம். உணவில் காய்கறிகள் ஏதேனும் இல்லாது இருக்கக் கூடாது. சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு இந்த நிறங்களில் உங்கள் உணவு தட்டு, பருப்பு, காய்கறி இவற்றினால் தேவையான அளவு இருக்க வேண்டும்.

    * முழு தானியம், பிரவுன் அரிசி, சீரக சம்பா, தூயமல்லி அரிசி என வகை வகையாய் உள்ளன.

    * அதிக உப்பு, ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், வடாம்-இவை 'நோ' தான்.

    * புரதம் இல்லாத உணவு உணவாகாது - பருப்பு, முட்டை, பால் இவற்றினை பயன் படுத்தலாமே.

    கமலி ஸ்ரீபால்


     

    * காலை உணவினை தவிர்ப்பது, சீக்கிரம் ஒருவரை நோயாளி ஆக்கும்.

    * பொரித்த, வறுத்த போன்ற எண்ணை பலகாரங்களுக்கும் 'நோ' தான்.

    * இரவு 7 மணிக்குள் உணவினை முடிக்க முடிந்தால் ஆரோக்கியம் கூடும்.

    இருதயம்

    * புகை பிடிப்பதனை நிறுத்தி விட்டீர்களா? எப்போதாவது என்பதும் தீங்கு தான்.

    * குடி என்பதே வேண்டாமே

    * ஒமேகா-3 நிறைந்த வால்நட், சியா விதை, ஆளி விதை, மீன் நன்கு எடுத்துக் கொள்கின்றீர்களா?

    * வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

    * 40 வயதிற்குப் பிறகு இருதய பரிசோதனை கூட அவசியப்படலாம்.

    * மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி இவற்றினை உடனடியாக கவனிக்க வேண்டும்.

    * ஸ்ட்ரெஸ் இருதய பாதிப்பினை கூட்டும்.

    பல்லும்-கண்ணும்

    * தினம் ஒரு முறை பல் துலக்குவதும், ஒரு முறை பிரஸ் செய்வதும் அவசியம்.

    * 6 மாதத்திற்கு ஒருமுறை பல் டாக்டரிடம் செல்வது புத்திசாலித்தனம்.

    * எதனை சாப்பிட்டாலும் குறிப்பாக இனிப்பு சாப்பிட்டால் வாய் கொப்பளித்து விடுங்கள்.

    * மாதம் ஒரு முறை பிரஷ் மாற்றுவது மிக சிறந்தது.

    * கண் பாதுகாப்பிற்காக வெயிலில் கறுப்பு கண்ணாடி அணிவது சிறந்த கண் பாதுகாப்பு.

    * படிக்கும் போதும், எழுதும் போதும், டி.வி. பார்க்கும் போதும் கண்ணை மூடி மூடி திறக்க வேண்டும்.

    * காரட், பால், பழங்கள், வைட்டமின் 'ஏ' சத்து கண் ஆரோக்கியத்திற்கு அவசியம்.

    * 40 வயதிற்குப் பிறகு கண் பரிசோதனை தேவையே.

    * கண்களை கைகளால் தாறுமாறாகத் தேய்க்காதீர்கள்.

    * சுத்தமான துவாலைகளை (டவல்) பயன்படுத்துங்கள்.

    மனநிம்மதி

    * 8 மணி நேரம் நன்கு தூங்க வேண்டும்.

    * பிராணாயாமம், 10 நிமிடமாவது தியானம் அவசியம்.

    * இயற்கையோடு இருங்கள்.

    * அதிகமாக டி.வி., யூடியூப் பார்க்க வேண்டாம்.

    * சிறிது நேரமாவது வாய் விட்டு சிரியுங்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள்.

    * வேலை பளுவில் சற்று நேரம் 'பிரேக்' எடுங்கள்.

    சுகாதாரம்

    * தினமும் இருவேளை நன்கு குளியுங்கள். உடலை நன்கு துடைக்க வேண்டும்.

    * உங்கள் மருத்துவர் அறிவுரைப்படி உங்கள் சருமத்திற்கென 'சன்ஸ்கிரீம்' அவசியம்.

    * மிகவும் வறட்சி தரும் சோப்புகள் வேண்டாம்.

    * 'மாய்ச்சரைசர்' உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி குளித்ததும் எடுத்துக் கொள்ளுங்கள்.

    * பருத்தி ஆடையே அணியுங்கள். நகங்களை சீராய் வெட்டி விடுங்கள்.

    * கொசுவிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    * உங்கள் தனி உபயோகப் பொருட்களை பிறருடன் பங்கிடக் கூடாது.

    பாதுகாப்பு

    * வீட்டில் அவசியம் ஒரு முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்.

    * அவசர உதவி எண்கள் போனில் இருக்க வேண்டும்.

    * மருந்துகள் பாதுகாப்பாய், குழந்தைகள் கையில் எட்டாதவாறு இருக்க வேண்டும்.

    * குடும்ப மருத்துவர் என்பது நமக்கு தேவையான ஒன்று.

    வீடு

    * காற்றோட்டம் அவசியம். சூரிய வெளிச்சம் வேண்டும்.

    * வீட்டினுள் குப்பை, புகைகள் இருக்கக் கூடாது.

    * அன்றாடம் குப்பைகளை முறையாய் பையில் போட்டு அகற்றுங்கள்.

    * அதிக காரத்தன்மை உடைய சுத்தம் செய்யும் சோப்பு, திரவங்கள் வேண்டாம். அது நுரையீரலை பாதிக்கும்.

    * தண்ணீர் தேங்குதல் கூடாது.

    * உணவுகள் மூடி வைக்கப்பட வேண்டும். பல்லி, கரப்பான் போன்றவை இருக்கக் கூடாது.

    * பிளாஸ்டிக் உபயோகத்தினை முடிந்த வரை நீக்கி விடுங்கள். இவையெல்லாம் முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்.

    * புற்றுநோய் சோதனைகள்: மார்பகம், கருப்பப்பைகள், பிராஸ்ேடட், குடல் பரிசோதனைகள் அவசியம் செய்யுங்கள்.

    உயர் சர்க்கரை கட்டுப்பாடு, உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு அவசியம்.

    * கல்லீரல், சிறுநீரக செயல்பாடுகள் குறித்த பரிசோதனைகள் எடுக்க வேண்டும்.

    * ப்ளூ, டெட்டனஸ், ஹெப்படைடிஸ்-3 வாக்சின்கள் அவசியம் எடுக்கவும்.

    * மாஸ்க் அணிவது எப்பொழுதுமே நல்லது.

    இவை அனைத்தும் சரியாக செய்தாலே வாழ்க்கை முறையாய் இருக்கும். எந்த ஒரு விழாவிலும் அதிக உணவு உண்பது என கொண்டாடினால் வாழ்க்கை நம்மை நோயாளி ஆக்கிவிடும்.

    ஆகவே இவைகளை செய்கின்றீர்களா? என்பதை நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள்.

    மேலும்

    * நடைபயிற்சி செல்லும் போது கையில் போன் இல்லாது செல்லலாமே.

    * போனை அடுத்த அறையில் வைத்து விட்டு தூங்க செல்கின்றீர்களா? குறைந்தது மாணவர்களாவது இதனைச் செய்யலாமே.

    * ½ நிமிடமாவது சூடு இல்லாத நீரில் ஷவர் முறை குளியல் தலை முதல் கால் வரை எடுக்கின்றீர்களா? இதனை வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் முன் செய்யலாம்.

    * கார் சாவி, வீட்டு சாவி, ஸ்கூட்டர் சாவி இவற்றினை தினமும் முறையாக ஒரே இடத்தில் வைக்கின்றீர்களா?

    * பிறருடைய நேரத்திற்கு மதிப்பு கொடுக்கின்றீர்களா?

    * ஒரு நல்ல தரமான 'ஜோக்' தெரியுமா?

    * அனைவரிடமும் ஒன்றினை கற்றுக் கொள்ள முடியும். குறைந்தபட்சம் இப்படி இருக்கக் கூடாது என்பதனையாவது கற்றுக் கொள்ளலாம்.

    * அக்கம் பக்கம் உள்ளவர்களை நட்பாக அறிந்து வைத்திருங்கள்.

    * இயற்கை பேசுவதை காது கொடுத்து கேட்டிருக்கின்றீர்களா?

    * புன்னகை, சிரிப்பு இவை உங்களிடம் உள்ளதா?

    * அப்பா, அம்மாவோடு சிறிது நேரம் செலவழித்து மனம் விட்டு பேசுகின்றீர்களா?

    * புதிர், குறுக்கெழுத்து போட்டி இதில் பழக்கம் இருக்கிறதா?

    * நிலவையும், நட்சத்திரங்களையும் கொஞ்ச நேரம் முடிந்த பொழுது பார்க்கின்றீர்களா?

    இவையெல்லாம் நம் அன்றாட பழக்கத்தில் இயற்கையாக வர வேண்டியவை ஆகும். இப்படி எதுவும் இல்லாமல் மனநோய், உடல்நோயுடன் வாழ்கின்றோம். இன்றே மாறுவோம்.

    • இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
    • ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.

    மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். இது சுத்தமான சுவையான பானம் ஆகும். இளநீரில் செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன.

    அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தை தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச்சத்து குறையும் நிலையில் அதை சரி செய்யும்.

    ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களை குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

    இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்பு தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு மூலம் செலுத்தலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்று பொருளாக இளநீர் பயன்படுத்த ப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.

    இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரை சத்துடன் தாது பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத்தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.

    • கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும்.
    • பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

    விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

    சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

    நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

    கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

    பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

    முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

    பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

    • மண் சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது.
    • குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் முழுதும் தெளிக்க வேண்டும்.

    இயற்கை மருத்துவத்தில் மண் சிகிச்சை முறை மிகவும் எளிமையானது. நிலத்தில் 3 முதல் 4 அடி ஆழத்தில் தோண்டி மண் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் கற்கள், துண்டுகள், ரசாயன கலவைகள் கண்டிப்பாக இருக்கக்கூடாது. இயற்கையின் பஞ்ச பூத சக்திகளில் மண் ஒன்று ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்களை குணப்படுத்தவும் துணைசெய்யும்.

    மண் சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது. குளிர்ந்த மண்ணை உடலில் தடவி வெகு நேரம் உலராமல் இருப்பதன் மூலம் உடலின் வெப்பம் தணிந்து உடல் சம் நிலை அடைகிறது.

    உடலில் பூசிய மண்ணுடன் நீரையும் சேர்ப்பதால் தேவையான அடர்த்தியும் , உருவமும் எளிதாக கிடைக்கிறது.

    மண் சிகிச்சைக்கு தயார் செய்யும் முன்பே மண்ணை உலர வைத்து, கற்கள், மண்ணில் கலந்துள்ள இதர பொருட்களை பிரித்து விட்டு பயன்படுத்த வேண்டும்.

    சலித்த, மெல்லிய மண்ணை ஈரமான துணியில் நோயாளியின் வயிற்று அளவுக்கு ஏற்றவாறு கட்டி, செங்கல் வடிவ அளவில் நோயாளியின் வயிற்றின் மேல் வைக்க வேண்டும். குளிர்ந்த காற்று வீசினால் குளிர்ந்த காற்று படாதவாறு மேலே போர்த்த வேண்டும். மண்கட்டியினை அடிவயிற்றில் பயன்படுத்தும் பொழுது ஜீரணகோளாறுகளை போக்குகிறது. உடல் சூட்டை குறைக்கிறது.

    மொத்தமாக தயாரிக்கப்பட்ட மண்கட்டிகளை தலையில் வைத்து பயன்படுத்தும்பொழுது அதிகப்படியான தலைவலியும் உடனடியாக சரிசெய்கிறது. இதை கண்கள் மீது பயன்படுத்தும் பொழுது கண் மற்றும் பார்வை பிரச்சினைகளான இமைப்படல அழற்சி, கண்விழி அரிப்பு, ஒவ்வாமை, கண்விழி அழுத்தம், கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை முதலிய பிரச்சினைகளை சரிசெய்கிறது.

    சுத்தம் செய்யப்பட்ட மண் 30 நிமிடத்திற்கு வைத்திருப்பதனால் தோல்நிறம் அதிகரிக்கின்றது. கடும்புள்ளிகள், சிறுசிறு பொத்தல்கள் ஆகியவை சரிசெய்யப்படுகின்றது. மேலும் இது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை சரிசெய்வதற்கும் பயன்படுகிறது. 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.

    மண் குளியல் என்பது நோயாளி அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்திருக்கும் நிலையிலோ மண்ணை பூச வேண்டும். இது தோலில் ரத்த சுழற்ச்சியையும் வலிமையையும் அளிக்கின்றது. மண் குளியலின் போது நோயாளிக்கு சளிபிடிக்காதவாறு கவனமாக கடைபிடிக்கவேண்டும். குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் முழுதும் தெளிக்க வேண்டும். நோயாளி மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால் சுடுநீர் பயன்படுத்தலாம், உடனடியாக நோயாளியின் உடலினை துவட்டி உஷ்ணப்படுத்திக் கொள்ள வேண்டும். 45 முதல் 60 நிமிடங்கள் வரை மண் குளியல் செய்யலாம்.

    மண் குளியலின் பயன்கள்

    உடல் மற்றும் தோல் காயங்களை சரிசெய்வதில் மண்குளியல் சிறந்தபலனை தருகிறது.

    உடலிற்கு குளிர்ச்சியூட்ட பயன்படுகிறது.

    உடலில் உள்ள விஷத்தன்மையை நீர்க்கச்செய்து, உறிஞ்சி வெளியே எடுத்து விடுகிறது.

    பசியின்மை, மனஉளைச்சலினால் ஏற்படும் தலைவலி, அதிக ரத்த அழுத்தம், தோல் நோய்கள் முதலியவற்றிற்கு சிறந்தமுறையில் சிகிச்சை பயன்படுகிறது.

    மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு காந்தி மண்குளியலையே பயன்படுத்தினார்.

    • விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.
    • ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.

    மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தாயும், மகளும் வந்திருந்தனர். முதலில் மகளுக்காக தாய் உடன் வந்திருக்கிறார் என நினைத்திருந்த நிலை அப்படியே மாறி, கலந்தாய்வில் மகள் உதவியுடன் தாய் மருத்துவப்படிப்பை தேர்வு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமுதவல்லி (வயது 49) என்ற பெண்தான், மருத்துவம் படிக்க இருக்கிறார். 'நீட்' தேர்வுக்காக மகள் படிக்க தயாராகி கொண்டிருந்தபோது அந்த புத்தகத்தை தானும் படித்து நீட் தேர்வை மகளுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.

    நீட் தேர்வில் தாய் அமுதவல்லி 147 மதிப்பெண் எடுத்திருந்தாலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்து இருக்கிறார்.

    இதுகுறித்து அமுதவல்லியிடம் கேட்டபோது, 'நான் 'பிசியோதெரபிஸ்ட்டாக' இருக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மருத்துவம் படிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அப்போது எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய மகள் மூலம் அந்த கனவு நிறைவேறி உள்ளது. ஆனால் ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதி எடுத்துள்ளோம்' என்றார்.

    மருத்துவம் படிக்க இருக்கும் அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாளினியும் நீட் தேர்வில் 460 மதிப்பெண் எடுத்து, பொது கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.

    அவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், தாயும், மகளும் ஒரே ஆண்டில் மருத்துவப்படிப்பில் நுழைவார்கள்.

    • டிரான்ஸ்கேத்தர் இதய வால்வு சிகிச்சைகளில் ஒரு புதுமை கண்டுபிடிப்பாளராக நாட்டை நிலைநிறுத்துகிறது.
    • கல்லீரல் பிரச்சினைகள் போன்ற ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் காரணமாக அறுவை சிகிச்சைக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.

    உலகளாவிய முன்னணி மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மெரில் லைஃப் சயின்சஸ், ஜூன் 14 அன்று இந்தியாவின் முதல் டிரான்ஸ்கேதட்டர் விளிம்பு-முதல்-விளிம்பு வரை பழுதுபார்க்கும் (TEER) அமைப்பான MyClip ஐ அறிமுகப்படுத்தி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

    ஜூன் 13–15 வரை வாபி (குஜராத்) மெரில் அகாடமியில் நடைபெற்ற இந்த மைல்கல் இதய கட்டமைப்பு புதுமை நிகழ்வு, 150-க்கும் மேற்பட்ட இந்திய இருதயநோய் நிபுணர்களையும், இதய இமேஜிங் நிபுணர்கள் மற்றும் சர்வதேச பிரபலங்களையும் ஒன்றிணைத்தது.

    இதில் பேராசிரியர் ஒட்டாவியோ அல்ஃபியேரி, பேராசிரியர் பிரான்செஸ்கோ மைசானோ மற்றும் பேராசிரியர் அக்ரிகோலா ஆகியோர் அடங்குவர்.

    மைவல் THV-இன் வெற்றியைத் தொடர்ந்து மெரில் தற்போது உலகின் முன்னணி TAVI குழுமமாகவும், TEER அமைப்பை அறிமுகப்படுத்திய முதல் இந்திய நிறுவனமாகவும் உள்ளது. இது டிரான்ஸ்கேத்தர் இதய வால்வு சிகிச்சைகளில் ஒரு புதுமை கண்டுபிடிப்பாளராக நாட்டை நிலைநிறுத்துகிறது.

    MyClip TEER அமைப்பானது, கடுமையான மிட்ரல் பின்னோக்கிய பாய்வு (MR) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், முதுமை, உடல் பலவீனம், பெரிதான அல்லது பலவீனமான இதயம் மற்றும் சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் போன்ற ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் காரணமாக அறுவை சிகிச்சைக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.

    குறிப்பாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், MR ஒரு பேரழிவு தரும் இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது - 50% க்கும் அதிகமான நோயாளிகள் சரியான நேரத்தில் தலையீடு இல்லாமல் உயிர்வாழ முடியாது, மேலும் 1 வருடத்திற்குள்ளான இறப்பு 57% வரை அதிகமாக இருக்கலாம்.

    MyClip TEER அமைப்பு மிட்ரல் வால்வு மடிப்புகளை துல்லியமாக மூட உதவுகிறது, இது நுரையீரலுக்குள் சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தின் பின்னோக்கிய ஓட்டத்தைத் திறம்படத் தடுக்கிறது.

    இந்த செயல்முறை மிகக் குறைவான ஊடுருவல் கொண்டது, தோராயமாக ஒரு மணி நேரம் எடுக்கிறது, அத்துடன் நோயாளிகள் 3-5 நாட்களுக்குள் வீடு திரும்ப அனுமதிக்கிறது.

    வீடு திரும்பிய பிறகு, நோயாளிகள் செயல்முறைக்குப் பிந்தைய ஒரு குறுகிய காலத்திற்குள் நடைபயிற்சி மற்றும் கடினமற்ற வேலை போன்ற அன்றாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம்.

    • வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும்.
    • புடலங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, முருங்கைக்கீரை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆண்களுக்கு தாம்பத்திய குறைபாடு, ஆர்வமின்மை ஏற்படுவது போன்று பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வமும் இல்லாத நிலை காணப்படும். 'பிரிஜிடிட்டி' என்று மருத்துவ ரீதியாக இது அழைக்கப்படுகிறது. மூளைக்கும், பெண்ணுறுப்பிற்கும் இடையிலான தொடர்பு தடைபடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

    மாதவிடாய்க்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தால், பாலியல் ஆசையும், இனப்பெருக்க உறுப்புகளில் ரத்த ஓட்டமும், வழுவழுப்பான திரவம் சுரப்பதும் குறைகிறது. பிரசவத்திற்குப் பிறகும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் உடலின் ஹார்மோன் அளவுகள் மாறுவதால் தாம்பத்ய விருப்பம் பாதிக்கும்.

    புற்றுநோய், நீரிழிவு நோய், சிறுநீரக செயலிழப்பு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ், இதய நோய், மனச்சோர்வு மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் ஆகிய நோய் பாதிப்புகள் மற்றும் சில மருந்துகள் பாலியல் ஆசையைக் குறைத்து, உச்சக்கட்டத்தை அடைவதை கடினமாக்கும். யோனி தசைகள் நீட்சி குறைவாக இருப்பது (டிஸ்பெரூனியா) வலிமிகுந்த தாம்பத்தியத்திற்கு வழிவகுக்கும். நீண்டகால மன அழுத்தம், மனப்பதற்றம், மனச்சோர்வு, கவலைகள் இவை பாலியல் விருப்பமின்மையை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் பிரச்சனைகள் தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கலாம்.

    வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும். மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். இது தாம்பத்ய உறவில் கவனம் செலுத்தவும் அதை அனுபவிக்கவும் உதவும். சைக்கிளிங், நீச்சல், நடைப்பயிற்சி, விளையாட்டு பயிற்சிகள், ஹெகல் பயிற்சிகள் இனப்பெருக்க உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

    தாம்பத்தியத்தின்போது யோனி வறட்சி அல்லது வலி ஏற்பட்டால், இதற்கான மாய்ஸ்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெய், சோற்றுக் கற்றாழை ஜெல் இவைகளை பயன்படுத்தலாம்.

    முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், அவகோடா, அடர் சாக்லெட், மாம்பழம், பலாப்பழம், மாதுளம்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம், செவ்வாழைப்பழம், எள்ளுருண்டை, வெந்தயக்களி, முட்டை, கோழிக்கறி, கடல் உணவுகள், பால்பொருட்கள், முருங்கைக்காய், புடலங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, முருங்கைக்கீரை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ சிகிச்சைகள்

    * சதாவரி லேகியம் காலை, இரவு இரு வேளை ஐந்து கிராம் வீதம் சாப்பிட வேண்டும்.

    * குமரி லேகியம் காலை, இரவு ஐந்து கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    * மலச்சிக்கல் இருந்தால் கடுக்காய் பொடியை இரவு நேரத்தில் 1 கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    • தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.
    • சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவகல்லூரியிலும், ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவகல்லூரியில் இடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி- ராணி தம்பதிக்கு ஸ்ரீபரன் (வயது 21) என்ற மகனும், சுபஸ்ரீ (18) என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் இருவரும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளனர்.

    பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். மூட்டை தூக்கும் தொழில் செய்யும் போது விபத்து ஏற்பட்டு அதில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.

    இவரது மனைவி ராணி அதன்பிறகு தையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இந்த ஏழ்மையான சூழ்நிலையில் தன் மகன் மகள்களை மருத்துவராக பார்க்க வேண்டும் என பெற்றோர் கனவு கண்டனர்.

    இதற்காக இரவு பகல் பாராது ராணி தையல் வேளையிலும் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.

    மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீபரன், சுபஸ்ரீ இருவரும் மருத்துவக் கல்லூரியின் கனவுகளோடு தஞ்சாவூரிலே பயிற்சியில் சேர்ந்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர்.

    இதில் சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 

    • இளையான்குடியில் அரசு அலுவலர்களுக்கான மருத்துவ முகாமை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர் குடும்பத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    • காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • சிறப்பு மருத்துவ சேவைகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமை நடைபெற்றது.

    முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் வரவேற்று பேசினார்.

    ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் முன்னிலை வைத்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தனர்.

    முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், அயன் முறை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம், உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    முகாமில் மருத்துவ அலுவலர்கள் ஜெகன், அனிதா, அழகு சிலம்பரசி, பாரதி, பிரியங்கா, சித்த மருத்துவர் கனிமொழி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், சுகாதார அலுவலர்கள் நாடிமுத்து, செல்லப்பா, சாமிநாதன், உள்பட கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் சிறப்பு மருத்துவ சேவைகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.

    முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    10 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

    • குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா 21-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனர் பிரேமலதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா கடந்த 21-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவுரையின்படி ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் டாக்டருமான பிரேமலதா, குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரதம் மூலம் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சையின் சிறப்பம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் ராஜேஷ், மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வெள்ளைச்சாமி, மகப்பேறு பிரிவு முதன்மை குடிமை மருத்துவர் புனிதவதி, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் ஸ்வர்ணலதா, கார்த்திக், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் டேவிட் ஞானசேகர், புள்ளி விபர உதவியாளர் வேலு, வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர்கள் , செயின்ட் மேரி செவிலியர் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் மாணவிகள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×