என் மலர்
நீங்கள் தேடியது "குளியல்"
- குளியல் தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
- மூலிகை மருந்துகளை கொண்டு காய்ச்சிய தண்ணீரில் குளிக்கலாம்.
மூட்டு வலியால் தற்போது அதிகப்படிப்பான மக்கள் அவதியுறுகிறார்கள். இதற்காக நிறைய மருத்துவமுறைகளை பின்பற்றி அதிக கால விரையத்தையும், பொருளாதார செலவுகளையும் எதிர்கொள்கின்றனர். அதிலும் பல சிறப்பு மருத்துவர்கள் இதற்காக உள்ளனர். இப்படி சூழ்நிலை இருக்கையில் ஒரு சாதாரண குளியல் எப்படி மூட்டு வலிக்கு உகந்ததாகயிருக்கும் என்று கருதலாம்.
இதுபோன்று கேள்வி எழும் போது அதற்கான பதிலையும் ஆயுர்வேதம் வழங்குகிறது.
ஆயுர்வேத பொது மருத்துவத்துறையின் தந்தை சரக மாமுனிவர் என்பவர், ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர் மேற்கொள்ளும் சிறிய மாற்றம் கூட அந்த வியாதியை குணமாக்க வழிவகைச் செய்யும் என்று கூறியுள்ளார். ஆக நாம் மேற்கொள்ளும் சிறிய மாற்றம் பெரிய மருத்துவ மாற்றத்திற்கு வழிகோலும் என்பது நிதர்சனமான உண்மை.
இதற்கு பல நோயாளிகளே சாட்சி. ஆம் பல மருத்துவர்கள் பார்த்தும் குணமாகாத நீண்ட நாட்களாகயிருக்கும் வியாதிக் கூட, நோயாளியை எதார்த்தமாக அணுகும் மருத்துவர்கள், மிக எளிதாக குணமாக்கிவிடுவார்கள். காரணம் நோயாளிகளின் நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் ஏற்படுத்தும் சிறிய மாற்றம் கூட காரணமாக இருக்கலாம். இதனை யுக்தி அனுசரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது
அந்த வகையில் குளியல் எப்படி மூட்டு வலிக்கு பயனாகயிருக்கும் என்பதை பார்ப்போம்.
குளியல் பற்றி சென்ற தொடரில் பார்த்தோம் அல்லவா... அதில் நோயுற்றவருகளுக்கு ஒரு விதமான குளியல், நோயற்றவருகளுக்கு ஒரு விதமான குளியல் என இரு வகையாக பிரித்து பார்ப்போம். அவ்வகையில் மூட்டு வலிக்கு உண்டான மூலிகை குளியல் எவ்வாறு பலனளிக்கும் என்பதை பார்பதற்கு முன்பு சிகிச்சை குறித்து சற்று பார்ப்போம்.
சிகிச்சைக்கு வேறு பெயர்கள் நிறைய கொடுக்கப்பட்டுயிருகின்றன. அதில் ஒரு பெயர் கிரியா கர்மா என்பதாகும். கிரியா கர்மா என்றால் வியாதியை போக்க மேற்கொள்ளப்படும் அனைத்தும் சிகிச்சை என்பதே இதன் பொருள். அந்த வகையில் வலியை போக்க மேற்கொள்ளப்படும் குளியலும் ஒரு வித சிகிச்சை தான்.
மேலும் சிகிச்சை என்பதை பல வகைப்படுத்தப்பட்டாலும் மிக முக்கியமாக இரண்டு வகையில் கூறப்பட்டுள்ளது. அவை ஆப்யந்தர சிகிச்சை எனும் உள்ளுக்கு கொடுக்கும் மருந்தைப் பற்றியது. மற்றொருன்று பாஹ்ய சிகிச்சை எனும் வெளிப்பிரயோக மருந்தை பொருத்தது. உள்மருந்துகள் நிறைய கூறப்பட்டுயிருந்தாலும், குளியல் வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் நடைமுறை என்பதால் வெளிப்பிரயோக மருத்துவ சிகிட்சைகளை குறித்து பார்ப்போம்.
உள்ளுக்குள் கொடுக்கும் மருந்து எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதே அளவு வெளிப்புற மருந்தும் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு வெளிப்புறத்தில் பயன்படுத்தப்படும் பசை போன்ற மேற்பூச்சு மருந்துகளே சாட்சி [ointment}.
வெளிப்புறத்தில் எண்ணெய் தேய்த்தல், மூலிகை பொடிகளை தேய்த்தல், பற்றுயிடுதல், கட்டுக் கட்டுதல், மர்ம புள்ளிகளை இயக்குதல், மர்ம புள்ளிகளை குத்துதல், மூலிகை மருந்துகளை கொண்டு ஒற்றடம் கொடுத்தல், மூலிகை மருந்துகளை தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து அல்லது எண்ணெய்யிலிட்டு கொதிக்க வைத்து மேலுக்கு ஊற்றுதல் போன்று வெளிப்புற சிகிட்சை நீள்கிறது. இதில் தண்ணீரில்யிட்டு கொதிக்க வைத்து ஊற்றும் சிகிட்சையே மூலிகை குளியல் என்று அழைக்கிறோம். உண்மையில் இது ஒரு சிகிட்சை முறை, அதை சற்று மாற்றி அன்றாடும் குளியலாக பயன்படுத்தலாம்.
தினமும் காலைப்பொழுதில் மலசலம் கழித்தப் பின்பு, பல் துலக்கி, வாய்க் கொப்பளித்து பின்பு நல்லெண்ணெய் அல்லது மூலிகை மருந்துகளால் செறிவூட்டப்பட்ட மூலிகை எண்ணெய்களை சிறிதளவு சூடுச் செய்து தேய்த்து, மூலிகை மருந்துகளை கொண்டு காய்ச்சிய தண்ணீரில் குளிக்கலாம். அல்லது அந்த தண்ணீரை மூட்டு வலி உள்ள இடத்தில் மட்டும் ஊற்றிக் கொள்ளலாம். ஆனால் தலைக்கு ஊற்றிக் கொள்ளக்கூடாது. தலைக்கு ஊற்றும் போது தலை முடிக்கு உகந்த மூலிகை தண்ணீரை மட்டும் ஊற்ற வேண்டும். அதுவும் மூட்டு வலிக்கு குளியல் மேற்கொள்ளும் போது தண்ணீர் சூடு உள்ளதாக மட்டும் இருக்க வேண்டும். குளியல் தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது என்று ஆயுர்வேதம் கூறுகிறது... சும்மா தண்ணீரில் கொதிக்க வைத்து ஊற்றினால், குணம் கிடைக்காதா என்றால், குணம் கிடைக்கும். ஆனால் முழுமையான பயனை அடையவேண்டும் என்றால் முறையாக தயாரித்து ஊற்றினால் தான் நல்லது. அது எப்படி முறையாக தயாரிப்பது...?
மூலிகை இலை அல்லது கஷாய சூரணங்களை எடுத்துக் கொண்ட அளவுக்கு 16 மடங்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இலையின் நிறம் மாறும் வரையிலும் நன்றாக வேக வைத்து, அல்லது கஷாய சூரணகள் பயன்படுத்தினால் அவை நன்றாக வெந்த பின்பு வடிக்கட்டி மூலிகை குளியலுக்கு பயன்படுத்தலாம்.
எந்தந்த மூலிகை எந்தந்த நோய்களுக்கு சிறந்தது...?
சிற்றாமுட்டி வேர் - மூட்டு வலிக்கு மற்றும் மூட்டு எலும்பு தேய்மானத்திற்கு என பிரத்யேக மூலிகை இது. இதனை கொதிக்க வைத்து மூட்டுகளில் ஊற்றி வரலாம்.
ஆமணக்கு வேர் மற்றும் இலை - இவை மூட்டு வலிக்கு மட்டுமில்லை, இடுப்பு வலிக்கும் உகந்தது.
நொச்சி - இடுப்பு வலி, இடுப்பு பிடிப்பு.
புளியிலை - இடுப்பு வலி, மூட்டு வலி மற்றும் வீக்கம்.
எருக்கிலை - குதிகால் வலி, கெண்டைக்கால் வலி.
தழுதாழை - உடல் வலி, மூட்டு வலி மற்றும் வீக்கம்.
சதக்குப்பை கஷாயம் - மூட்டுகளில் ஏற்படும் வலி, பிடிப்பு மற்றும் வீக்கம்.
வாதநாராயணன் இலை - இடுப்பு, மூட்டு வலி மற்றும் வீக்கம், நடக்க முடியாமை.
சீந்தில் கொடி இலை - மூட்டு வலியுடன் கூடிய எரிச்சல்.
பாரிஜாத இலை - உடல் வலி, இடுப்பு வலி.
ஓதிய மரப்பட்டை - கழுத்து வலி மற்றும் பிடிப்பு.
இவற்றை தனித்தனியே பயன்படுத்த வேண்டுமா அல்லது ஒன்றாக பயன்படுத்த வேண்டுமா என்றால் மேற்குறிப்பிட்ட சில மூலிகை பரவலாக கிடைப்பின் அவற்றை ஒன்றாக பயன்படுத்தலாம் அல்லது ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவை.
- வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும்.
- குளிர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும்.
மழை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சி நிலைக்கு மாறிவிடும். அந்த குளிர் நீரில் குளியல் போடுவதற்கு பலரும் விரும்புவார்கள். ஆனால் குளிர்ந்த நீரை விட சுடு நீரில் குளியல் போடுவதுதான் மழைக்காலத்திற்கு சிறந்தது என்று ஒரு சிலர் கருதுவார்கள். இந்த இரண்டு குளியல் முறையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுடு நீர் குளியல்:
தண்ணீரை சூடுபடுத்தி மேற்கொள்ளும் இந்த குளியல் மூலம் வெளிப்படும் வெப்பம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
தசை வலி, மூட்டு வலியை குறைக்க உதவும்.
வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும். அதில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் தன்மை மற்றும் நச்சுக்களை நீக்குவதை எளிதாக்கும்.
தூங்க செல்வதற்கு முன்பு சுடுநீரில் குளிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும். பின்னர் உடல் குளிர்ச்சி நிலைக்கு மாற்றமடையும்போது தூக்கத்தை வரவழைக்கும். நன்றாக தூங்குவதற்கு வழிவகை செய்யும்.
குளிர் நீர் குளியல்:
குளிர்ந்த நீர் நரம்பு மண்டலத்தை தூண்டி சுவாசத்தின் வழியே ஆக்சிஜனை உள்ளிழுப்பதை அதிகரிக்க செய்யும். உடலுக்குள் ஆக்சிஜன் செயல்பாட்டை மேம்படுத்தும். காலையில் சீக்கிரம் எழுவதற்கு வழிவகுக்கும்.
இந்த குளிர் குளியல் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தலாம். ரத்த நாளங்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
குளிர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும். உடற்பயிற்சி செய்த பிறகு குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்த பலனை அளிக்கும்.
- உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு குளியல் என்று கூறக்கூடாது.
- தலைக்கு குளிர்ந்த தண்ணீர் அல்லது இளம்சூடான தண்ணீரை பயன்படுத்தலாம்.
தீபாவளி கொண்டாடப்படும் இந்த மகிழ்ச்சியான வேளையில் ஆரோக்கியமாக வாழ தினமும் காலை பொழுதில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து பார்த்து வருகிறோம். இத்தொடரில் குளியல் பற்றிய கட்டுரை தீபாவளி திருநாள் வரும் வேளையில் அமைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.
தீபாவளிக்கும் குளியலுக்கும் என்ன சம்பந்தம் என்றால், தீபாவளி பண்டிகை அன்று அனைத்து நீர்நிலைகளிலும் கங்கா வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே தீபாவளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் என்பார்கள்.
தமிழ் மொழி நல்லொழுக்க நெறிமுறைகளை ஆரோக்கிய வாழ்விற்காக பலவற்றை நூல்கள் மூலமாகவும் பழமொழிகள் மூலமாகும் வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று "கந்தையானாலும் கசக்கி கட்டு, கூழானாலும் குளித்துக் குடி என்பது ஆகும். அதாவது அழுக்கான கந்தை ஆடையாகயிருந்தாலும் அதனை துவைத்து தான் உடுத்த வேண்டும். அதேப்போல் கூழ் என்ற எளிமையான உணவாக இருந்தாலும் அதனை குளித்துப் பின்பு தான் உண்ணவேண்டும் என்பதே அதன் பொருள்.
ஒப்பற்ற மருத்துவ முறையான ஆயுர்வேதம் தினமும் குளிக்க வேண்டும் என்றும் மேலும் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் மிக தெளிவாக விளக்கி கூறுகிறது. உடலை குளிர்விப்பதே குளியல் என்று மருவிற்று. குளியல் என்பது தலைக்கு சேர்த்து தான். உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு குளியல் என்று கூறக்கூடாது. குளியலால் உடல் தூய்மை மட்டுமல்ல, உள்ளமும் தூய்மை அடைகிறது. ஆம் குளியலால் அகமும் புறமும் பசுமை அடைகிறது.
குளிப்பதால் தூக்கம் போகும், சிரமம் குறையும், உடல் எரிச்சல் போகும், வியர்வை, அரிப்பு, இவற்றை போக்க வல்லது. மனதில் ஒருவித உற்சாகம், புத்துணர்ச்சி பிறக்கும். மேலும் உடம்பில் உள்ள அழுக்குகளை போக்குகிறது. ஐம்புலன்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்குகிறது. சோம்பலை போக்குகிறது. ஆண்மையை அதிகரிக்கிறது. பசி தீயை அதிகரித்து நன்றாக ஜீரணம் செய்ய வழிவகைச்செய்கிறது. ரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.
இவ்வளவு நன்மைகளை கொண்ட குளியலை எவ்வாறு மேற்கொள்ளுவது. இது என்ன கேள்வி, கோடை காலம் என்றால் குளிர்ந்த தண்ணீர், குளிர் காலம் என்றால் வெந்நீர் கொண்டு குளிக்க வேண்டியது தானே என்று என்ன தோன்றுகிறதா... ஆனால் இது முற்றிலும் தவறு. ஆம் இதற்கு ஆயுர்வேதம் ஒரு வழிகாட்டுதலை வழங்குகிறது.
தற்போது மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தலைவலியோ அல்லது மூக்குஒழுகுதல் போன்ற பிரச்சனை இருந்தால் தலைக்கு சுட சுட தண்ணீர் ஊற்றுதல் நன்மை தரும் என கருதுகிறார்கள். ஆனால் இதனை தப்பான நடைமுறை என்று ஆயுர்வேதம் கண்டிக்கிறது. ஆம் தலைக்கு சுடுதண்ணீர் ஊற்றினால் தலைமுடிக்கும் கண்ணுக்கும் ஆபத்து. எனவே சுடுத்தண்ணீர் தலைக்கு கீழே மட்டும் பயன்படுத்த வேண்டும். தலைக்கு குளிர்ந்த தண்ணீர் அல்லது இளம்சூடான தண்ணீரை பயன்படுத்தலாம்.

Dr. ரா. பாலமுருகன், அரசு ஆயுர்வேத மருத்துவர், 9025744149
முக வாதம், கண் வலி, கண்ணில் நீர்வடிதல், காது வலி, காதில் நீர் வடிதல், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அஜீரணம் உள்ளவர்கள் அந்த தொந்தரவுகள் சரியாகும் வரை தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். சரி எவ்வாறு குளிக்க வேண்டும் என்பதை காண்போம்.
இதுநாள் வரையிலும் குளியலறைக்கு சென்று இருக்கிற தண்ணீரில் குளித்து விட்டு அவசரமாக தலையை துவட்டி செல்லுவது வழக்கம். இதற்கும் வழிகாட்டுதலை வழங்குகிறது ஆயுர்வேதம். அதாவது முதலில் தலையை நனைக்காமல் உடலில் தண்ணீர் ஊற்றக்கூடாது. இது எதனால் கூறப்பட்டு இருக்கலாம் என்றால் முதலில் தண்ணீரை உடலுக்கு ஊற்றும்போது ஏற்கனவே சூடாகயிருக்கும் உடலில் தண்ணீர் பட்டவுடன் சூடு எழும்பி அது தலையை தாக்க வாய்ப்புள்ளது. எனவே முதலில் குளியலுக்கு சிறிதளவு தண்ணீரைக்கொண்டு தலையை நனைத்து குளியலுக்கு உடலை தயார் செய்ய வேண்டும்.
அடுத்தபடியாக மிகுந்த குளிர்ச்சியான நீரில் குளிக்கக்கூடாது. ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது. ஒற்றை ஆடையுடன் குளிக்க வேண்டும். குளித்தபின்பு வேகமாக உடலையும் தலைமுடியையும் துவட்டிக்கொள்ளக்கூடாது. அவசரமாக துவட்டினால் தோலின் வனப்பும், முடியின் உறுதி தன்மை கேள்விக் குறியாகிவிடும்.
ஒரு நாளைக்கு ஆண்கள் இரண்டு வேளையும், பெண்கள் ஒரு வேளையும் குளிக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஏன் இந்த பாலின வேறுபாடு என்று பார்ப்போமேயானால் அக்காலத்தில் ஆண்கள் பணி நிமித்தமாக வெளியே சென்று வீட்டுக்கு திரும்பினார்கள். அதனால் இரு வேளை குளிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அக்கால பெண்கள் அவ்வாறு இல்லை. அதன் காரணமாக ஒரு வேளை குளிக்க சொல்லியிருக்கலாம். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு முடி அதிகம் என்பதினால், முடியை உலர்த்துவது கடினம் என்ற காரணத்தினால் கூட இருக்கலாம். ஆனால் இக்காலத்தில் அனைவரும் சமம் என்றாகிவிட்டது. எனவே அனைவரும் இருவேளை குளிக்க வேண்டும். இதில் விதியை சற்று தளர்த்தி தேவைப்படுவோர் மட்டும் ஒரு தடவை உடலுக்கும் தலைக்கும், மற்றொரு தடவை உடலுக்கு மட்டும் குளிக்கலாம்.
குளியலின் வகைகள் - ஒன்னு சுடுத் தண்ணீர் குளியல் மற்றொன்று குளிர்ச்சியான தண்ணீர் குளியல் என்று தான் அனைவரும் அறிந்தது. ஆனால் சாஸ்திரங்கள் பல குளியல்களை கூறுகின்றன. அவற்றில் ஒன்று தான் ஐவகை குளியல். 1. நிலம் சார்ந்த குளியல் உதாரணத்திற்கு மண் குளியல். 2. நீர் சாந்த குளியல் - இது தான் நடைமுறையில் உள்ள குளியல். 3. நெருப்பு சார்ந்த குளியல் - நீராவி குளியல், சூர்ய ஒளியில் இருந்துக்கொண்டு வியர்வை மூலமாக குளித்தல். 4. வாயு சார்ந்த குளியல் - வெளிக்காற்று உடலில் படும்படியிருத்தல் அல்லது மூலிகைக்கொண்டு புகை எழுப்பி அப்புகை உடலில் படும்படி செய்தல். 5. ஆகாயம் சார்ந்த குளியல் - வெட்ட வெளியில் உலாவுதல். இதற்கும் மேல் மற்றொரு குளியல் இருக்கிறது. அது தான் மானசீக குளியல். இவை தான் மனதளவில் உள்ள அழுக்குகளை போக்க வல்லது.
இவை இருக்கட்டும். நாம் தற்போது நடைமுறையில் நோயற்றவர்களுக்கு உள்ள குளியல், நோயுள்ளவர்களுக்கு உள்ள குளியல் என இரண்டாக பிரித்து பார்ப்போம். ஆம் இன்றைய காலகட்டத்தில் நீண்ட நாள் நோயினால் அவதியுறுபவர்கள் ஏராளம். அவர்களுக்கு மூலிகை குளியல் எவ்வாறு நன்மையளிக்கும் என்பதை வரும் தொடரில் காண்போம்.
- மண் சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது.
- குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் முழுதும் தெளிக்க வேண்டும்.
இயற்கை மருத்துவத்தில் மண் சிகிச்சை முறை மிகவும் எளிமையானது. நிலத்தில் 3 முதல் 4 அடி ஆழத்தில் தோண்டி மண் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் கற்கள், துண்டுகள், ரசாயன கலவைகள் கண்டிப்பாக இருக்கக்கூடாது. இயற்கையின் பஞ்ச பூத சக்திகளில் மண் ஒன்று ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்களை குணப்படுத்தவும் துணைசெய்யும்.
மண் சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது. குளிர்ந்த மண்ணை உடலில் தடவி வெகு நேரம் உலராமல் இருப்பதன் மூலம் உடலின் வெப்பம் தணிந்து உடல் சம் நிலை அடைகிறது.
உடலில் பூசிய மண்ணுடன் நீரையும் சேர்ப்பதால் தேவையான அடர்த்தியும் , உருவமும் எளிதாக கிடைக்கிறது.
மண் சிகிச்சைக்கு தயார் செய்யும் முன்பே மண்ணை உலர வைத்து, கற்கள், மண்ணில் கலந்துள்ள இதர பொருட்களை பிரித்து விட்டு பயன்படுத்த வேண்டும்.
சலித்த, மெல்லிய மண்ணை ஈரமான துணியில் நோயாளியின் வயிற்று அளவுக்கு ஏற்றவாறு கட்டி, செங்கல் வடிவ அளவில் நோயாளியின் வயிற்றின் மேல் வைக்க வேண்டும். குளிர்ந்த காற்று வீசினால் குளிர்ந்த காற்று படாதவாறு மேலே போர்த்த வேண்டும். மண்கட்டியினை அடிவயிற்றில் பயன்படுத்தும் பொழுது ஜீரணகோளாறுகளை போக்குகிறது. உடல் சூட்டை குறைக்கிறது.
மொத்தமாக தயாரிக்கப்பட்ட மண்கட்டிகளை தலையில் வைத்து பயன்படுத்தும்பொழுது அதிகப்படியான தலைவலியும் உடனடியாக சரிசெய்கிறது. இதை கண்கள் மீது பயன்படுத்தும் பொழுது கண் மற்றும் பார்வை பிரச்சினைகளான இமைப்படல அழற்சி, கண்விழி அரிப்பு, ஒவ்வாமை, கண்விழி அழுத்தம், கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை முதலிய பிரச்சினைகளை சரிசெய்கிறது.
சுத்தம் செய்யப்பட்ட மண் 30 நிமிடத்திற்கு வைத்திருப்பதனால் தோல்நிறம் அதிகரிக்கின்றது. கடும்புள்ளிகள், சிறுசிறு பொத்தல்கள் ஆகியவை சரிசெய்யப்படுகின்றது. மேலும் இது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை சரிசெய்வதற்கும் பயன்படுகிறது. 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.
மண் குளியல் என்பது நோயாளி அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்திருக்கும் நிலையிலோ மண்ணை பூச வேண்டும். இது தோலில் ரத்த சுழற்ச்சியையும் வலிமையையும் அளிக்கின்றது. மண் குளியலின் போது நோயாளிக்கு சளிபிடிக்காதவாறு கவனமாக கடைபிடிக்கவேண்டும். குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் முழுதும் தெளிக்க வேண்டும். நோயாளி மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால் சுடுநீர் பயன்படுத்தலாம், உடனடியாக நோயாளியின் உடலினை துவட்டி உஷ்ணப்படுத்திக் கொள்ள வேண்டும். 45 முதல் 60 நிமிடங்கள் வரை மண் குளியல் செய்யலாம்.
மண் குளியலின் பயன்கள்
உடல் மற்றும் தோல் காயங்களை சரிசெய்வதில் மண்குளியல் சிறந்தபலனை தருகிறது.
உடலிற்கு குளிர்ச்சியூட்ட பயன்படுகிறது.
உடலில் உள்ள விஷத்தன்மையை நீர்க்கச்செய்து, உறிஞ்சி வெளியே எடுத்து விடுகிறது.
பசியின்மை, மனஉளைச்சலினால் ஏற்படும் தலைவலி, அதிக ரத்த அழுத்தம், தோல் நோய்கள் முதலியவற்றிற்கு சிறந்தமுறையில் சிகிச்சை பயன்படுகிறது.
மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு காந்தி மண்குளியலையே பயன்படுத்தினார்.
- பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
- 2 பேர் சாவு எதிரொலி
நாகர்கோவில்:
ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 வாலிபர்கள் இறந் ததை தொடர்ந்து, நீர்நி லைகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக் டர் அரவிந்த் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப் பாட்டில் உள்ள குளங்களில் துறை தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வும், பெருவெள்ள காலங் களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக்கரை களை சீரமைக்கும்பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது.
மேலும் பருவமழையை யொட்டி அதற்கான முன் னெச்சரிக்கை நடவடிக்கை கள் மற்றும் மீட்பு பணிகளும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மாத்தூர் தொட்டிபாலம் அருகே ஆற்றில் அடித்துசெல் லப்பட்ட இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் வேண்டும். (நீர்வள அமைப்பு) உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் அப்ப குதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீச்சல் மற்றும் குளிக்கும் எல்லா இடங்களிலும் எச்சரிக்கை செய்திகள் அல் லது பலகைகள் வைக்க வேண்டும் என்பதை உறுதிப்ப டுத்தவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.
தற்போது மழை காலம் என்பதால் அணைகளின் நீர் மட்டத்திற்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. எனவே அனைத்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆறுகள், குளங்கள், தாழ் வான பகுதிகளில் குளிப்பது மற்றும் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது.
- குழந்தையை தலைகீழாக பிடித்து ஆட்டுவார்கள்.
பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பதில், மருத்துவர் ஆலோசனைப்படி நடப்பது இல்லை. அதற்கு பதிலாக, மற்றவர்கள் சொல்லும் அனுபவ வைத்தியத்தையும், மேலோட்டமான ஆலோசனைகளையும் பலர் பின்பற்றுகிறார்கள். முக்கியமாக, நாட்டு மருந்து மற்றும் பொதுவான மருந்துகளைத் தருகிறார்கள்.
அவ்வாறு செய்யும்போதுதான் தவறு ஆரம்பிக்கிறது. தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது. அதிலும், முதல் இரண்டு நாட்கள் வருகிற பால்(Clostrum) நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கொண்டு இருக்கும். எனவே, இதைத் தவறாமல் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம் புகட்ட வேண்டும்.
சில வீடுகளில் குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்ற பெயரில், குளிக்க வைத்த பிறகு, வாயோடு வாயாக வைத்து ஊதுவார்கள். பால் எடுக்கிறோம் என்ற பெயரில், நெஞ்சை அழுத்துவார்கள். மூக்கில் எண்ணெய் விடுவார்கள். குழந்தையை தலைகீழாக பிடித்து ஆட்டுவார்கள். இவை எல்லாம் தவறான வழிமுறைகள். எனவே, இவற்றை மறந்தும் செய்யக் கூடாது.
பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில், இளம் தாய்மார்களின் உடல்நலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்கள் தண்ணீர் குடிப்பதைக் குறைத்து விடுவார்கள். பத்திய சாப்பாடு சாப்பிடுவார்கள். பால் புகட்ட வேண்டும் என்பதற்காக, சரியாக தூங்க மாட்டார்கள். இளம் தாய்மார்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
சத்தான உணவுவகைகளை நிறைய சாப்பிட வேண்டும். பத்திய சாப்பாடு என்ற பெயரில் களி சாப்பிடக் கூடாது. சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் அடிக்கடி எரிச்சல் படுவார்கள். தூக்கம் இன்மையால் வரும் இடையூறுகளுக்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.
பச்சிளம் குழந்தை பராமரிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிற இந்த நிலையில், இது எல்லாக் குழந்தைகளையும் சென்றடைய வேண்டும். பெரியவர்கள், குழந்தைகளுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் பற்றி பலவிதமான ஆலோசனைகள் கூறுவார்கள்.
ஆனால், டாக்டரிடம் குழந்தையைக் காண்பித்து, அந்தப் பாதிப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வயது வரை தேவையில்லாத மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசிகளைத்தவறாமல் போட வேண்டும்.
- அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
- குளிக்கும்போது சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.
எத்தனை முறை குளிக்கலாம்?
வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.
அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?
பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.
குளிக்கும் நேரத்தை குறையுங்கள்
ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும்.
சூடான நீரை தவிருங்கள்:
அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்:
குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும்.
உடலை உலர வையுங்கள்:
குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.
- கோரையாற்றில் மக்கள் உற்சாக குளியல் போட்டனர்.
- குழந்தைகள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்
பெரம்பலூர்
காணும் பொங்கலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிலர் தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிறுவர் அறிவியல் பூங்காவில் நேற்று மாலை கூடி பொழுதை கழித்தனர். அதில் குழந்தைகள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூர் கல்மரப்பூங்கா, விசுவக்குடி அணை, கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம், கோரையாறு உள்ளிட்ட இடங்களில் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் சென்று பார்வையிட்டனர்.
விசுவக்குடி அணை, கோரையாற்றில் பொதுமக்கள் உற்சாக குளியலிட்டனர். மேலும் அந்த இடங்களில் தங்களது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அந்த இடங்களில் நேற்று வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் பெரம்பலூரில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் படம் பார்க்க கூட்டம் நிரம்பி வழிந்தது.
- அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
- குளிக்கும்போது சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.
எத்தனை முறை குளிக்கலாம்?
வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.
அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?
பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.
குளிக்கும் நேரத்தை குறையுங்கள்
ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும்.
சூடான நீரை தவிருங்கள்:
அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்:
குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும்.
உடலை உலர வையுங்கள்:
குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.
- குழந்தைகளை குளிப்பாட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.
பிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.
* குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோ தான் பால் புகட்ட வேண்டும்.
* பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.
* குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றைப் பயன்படுத்துவதுண்டு. அவையெல்லாம் அவசியமில்லை. மென்மையான சோப் சொல்யூஷனை பயன்படுத்தினாலே போதும்.
* குளிப்பாட்டும் போது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.
* தினமும் உடல் முழுவதும் சிறிதளவு எண்ணெய் பூசி குளிப்பாட்டலாம்.
* வாரம் 2 முறை தலைக்குக் குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.
* தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும்.
* குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.
* குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின் ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.
* குளித்து முடித்த பின் சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
குளிர்காலத்தில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் ஸ்பாஞ்ச் மூலம் உடலை துடைத்து சுத்தம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை குளிப்பாட்ட வேண்டும் என்று முடிவு செய்தால் சூடான வெந்நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் குழந்தையின் தோல் சூடான வெந்நீரால் சேதமடையும். எனவே சூடான வெந்நீரில் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிப்பாட்ட பயன்படுத்த வேண்டும்
பெரும்பாலும் குழந்தையை குளிர்ந்த தண்ணீரில் குளிப்பாட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தால் குழந்தைக்கு சளி காய்ச்சல் உள்பட சில உபாதைகள் வரலாம்.
குழந்தையின் உடல்நிலை பேணுவதற்கு அவ்வப்போது எண்ணெய் மசாஜ் செய்யலாம் குழந்தைகளுக்கான தரமான எண்ணெய் வாங்கி குழந்தைகளுக்கு மசாஜ் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்
அதே போல் குழந்தைகளை பாதுகாக்க சரியான ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்ததந்த பருவ நிலைக்கு ஏற்ற ஆடைகளையே குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
- மேலே கூறிய இந்த முறைகளை பின்பற்றி பிறந்த குழந்தையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.
- காலை குளியல், மாலை குளியல் இரண்டிலும் சாதாரண குழாய் நீரில் குளித்தாலே போதும்.
- எல்லோருக்கும் எளிதான ஒன்றாக 'ஷவர்' முறை குளியல் சிறந்தது.
'ஜில்' என்று சொன்னவுடன் ஐஸ் போன்ற குளிர்ந்த நீர் என்று பொருள் கொள்ள வேண்டாம். காலை குளியல், மாலை குளியல் இரண்டிலும் சாதாரண குழாய் நீரில் குளித்தாலே போதும். பொதுவில் நகரத்தில் இருப்பவர்கள் ஆறு, நதி, அருவி என்று செல்ல முடியாது. எல்லோருக்கும் எளிதான ஒன்றாக 'ஷவர்' முறை குளியல் சிறந்தது.
இப்படி குளிக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தலைக்கும் நீர் ஊற்றி குளிக்கலாம். சைனஸ் தொந்தரவு மற்றும் ஒத்துக் கொள்ளாது என்று கூறுபவர்கள் 'ஷவர் கேப்' போட்டு குளிக்கலாம். உடலில் 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை நிதான முறையில் நீர் ஊற்றப்படும் போது
* மன உறுதி ஏற்படும்.
* ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் நீங்கும்
* குளூட்டதியோன் அளவு கூடும். எளிதல் ஸ்ட்ரெஸ் ஆக மாட்டீர்கள்.
* விழிப்புணர்வு கூடும்.
* சருமம், முடி ஆரோக்கியம் கூடும்.
* கொழுப்பு குறைந்து எடை குறையும்.
* ரத்த ஓட்டம் சீர்படும்.
* நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
* நிணநீர் மண்டலம் சுத்தப்படும்.
* தசைகளில் வலி சீக்கிரம் சீர்படும்.
* தூக்கம், விழிப்பு, சீராய் இருக்கும்.
* நன்கு இயல்பாய் ஆழ்ந்து மூச்சு எடுப்பீர்கள்.
உடல் நலக்குறைவானவர்கள், மருத்துவ கவனிப்பில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், இளம் தாய்மார்கள் இவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று செய்யலாம். மிக அதிக வெப்பம் இருக்கும் இந்த கோடையில் இம்மாதிரி குளியல் முறை, தகுந்த உணவு முறை இவற்றின் மூலம் ஒருவர் தன்னை காத்துக் கொள்ள முடியும்.
- குழந்தைகளை மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும்.
- தூங்கும் குழந்தையை எழுப்பி குளிக்க வைக்கக்கூடாது.
குதூகலமாக கொஞ்சி விளையாடும் பல குழந்தைகள், குளிக்கும் நேரம் வந்தாலே அழுவதற்கு ஆரம்பித்துவிடுவார்கள். அடம்பிடிக்கும் அவர்களை சமாளித்து குளிக்க வைப்பது தாய்மார்களுக்கு மிகப்பெரும் சவாலாகிவிடும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, உடலில் தண்ணீர் படும்போது வெப்பநிலை மாறுவதால் ஒருவித அச்சம் ஏற்படும். அதனால் அழுவார்கள். சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கு குளிக்கும்போது சோப்பு நுரை கண்களில் படுவதால் உண்டாகும் எரிச்சல் மற்றும் அசவுகரியத்தின் காரணமாக குளியல் பிடிக்காமல் போகிறது. இவற்றை தவிர்த்து, குழந்தைகளை மகிழ்ச்சியாக குளிக்கச் செய்யும் வழிகள் இதோ…
குழந்தைகளை மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். அதிக சூடு அல்லது குளிர்ச்சியான நீரில் குளிப்பாட்டும்போது திடீர் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். அடுத்த முறை குளிக்கும்போதும் இதே நிலை ஏற்படுமோ என்ற பயமே, அவர்களுக்கு குளியல் மீது வெறுப்பு உண்டாகக் காரணமாகிவிடும்.
குழந்தைகளை தலைக்கு குளிக்க வைக்கும்போது ஷாம்பு கலந்த தண்ணீர் கண்களில் படுவதால் எரிச்சல் ஏற்பட்டு அழுவார்கள். இதனைத் தவிர்க்க 'ஹெட் விசர்' எனும் தடுப்பான்களை பயன்படுத்தலாம். இதனால் தண்ணீர் கண்களில் படுவதைத் தவிர்க்க முடியும்.
குழந்தைகளின் சருமம் மென்மையானது. அவர்களுக்கு பயன்படுத்தும் பராமரிப்பு பொருட்களில் உள்ள ரசாயனக் கலவைகளால் சருமத்தில் அலர்ஜி அல்லது புண்கள் உண்டாகலாம். இது குளிக்கும் போது குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையின்படி அவர்களுக்கான சோப்பு, ஷாம்பு மற்றும் லோஷன்களை தேர்வு செய்து உபயோகிக்கவும்.
பசியால் அழும் குழந்தைகளை 'குளிக்கவைத்துவிட்டு பசியாற்றலாம்' என்பது தவறான எண்ணம். உணவு கொடுத்து அரை மணி நேரம் கழித்தே அவர்களை குளிக்க வைக்க வேண்டும். இல்லையேல் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். தூங்கும் குழந்தையை எழுப்பி குளிக்க வைக்கக்கூடாது. இது குழந்தையின் தூக்கத்தை பாதிப்பதோடு, குளியல் மீதும் வெறுப்பை உண்டாக்கும்.
வேகமாக 'மட மட' வென்று தண்ணீர் ஊற்றி குளிக்க வைக்கக்கூடாது. இது அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். அலர்ஜி அல்லது புண்கள் இருக்கும் இடத்தில் வேகமாக தண்ணீர் ஊற்றுவதையும், சோப்பு போடுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை தூக்கும்போது உங்கள் கைகளை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.






