search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளியல்"

    • தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார்.
    • பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மாசிமக தீர்த்தவாரி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கு மங்களம் என பெயர் சூட்டி உள்ளனர். இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது.

    வயது அதிகமாவதை போல யானையின் சுட்டித்தனமும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு உள்ளது. இதனால் யானை தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்வதில்லை. சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகை மருந்துகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    வெயில் சுட்டெரித்து வருவதால், பாகன் அசோக்குமார் தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார். அதன்படி, வழக்கம்போல் யானை மங்களம் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டது. தொட்டியில் இறங்கிய யானை மங்களம் சுமார் ஒரு மணிநேரம், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சியும், இதனை வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    மேலும், சிலர் இதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும்.
    • கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும்.

    பெண்களின் கர்ப்ப காலம் என்பது 37 வாரங்கள் கொண்டதாகும். இந்த காலம் முழுவதுமாக பூர்த்தியடைந்து பிரசவிக்கப்படும் குழந்தைகள், சீரான உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தோடு பிறக்கிறார்கள். ஆனால் பிரசவ தேதிக்கு சில மாதங்கள் முன்பாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை தடுக்க அந்த குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பு வழங்குவது முக்கியமானதாகும்.

    குறைமாதத்தில் பிறந்த குழந்தையை மட்டுமில்லாமல், பிரசவித்த தாயின் ஆரோக்கியத்திலும் போதுமான கவனம் செலுத்த வேண்டும். குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தகுந்த பாதுகாப்பும். உரிய சிகிச்சையும் வழங்கப்படும். வீட்டிற்கு வந்த பின்பு அந்த குழந்தைகளை முறையாக கவனித்துக்கொள்வதற்கான சில வழிகள்.

     சீரான வெப்பநிலை:

    குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் இருக்கும் அறையில், சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாகவே மருத்துவமனைகளில் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கின்றனர். எனவே வீட்டிற்கு வந்த பின்னும், குழந்தைக்கு சீரான வெப்பநிலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

    வீட்டில். துணிகளை அடுக்கடுக்காக விரித்து அதன்மேல் கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும். முடிந்தவரை, கனமான போர்வைகளை தவிர்த்து காட்டன் புடவைகளை தேர்வு செய்யுங்கள். தெர்மாமீட்டர் கொண்டு, குழந்தையின் உடல் வெப்பநிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் உடல் வெப்பநிலை 36.5 முதல் 37.4 டிகிரி செல்சியஸ் வரையும், அறையின் வெப்பநிலை 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்க வேண்டும்.

     சீரான தூக்கம்:

    பிறந்த குழந்தைகளுக்கு சீரான தூக்கம் அவசியமானது. அதிலும், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எவ்வித தொந்தரவும் இன்றி சீராக உறங்க தேவையான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களை படுக்க வைக்கும் அறையில், சீரான வெப்பநிலையும், மங்கலான வெளிச்சமும் இருக்க வேண்டும். மற்ற குழந்தைகளை விட இவர்களுக்கு இரவு நேரத்தில் பசி அதிகமாக இருக்கும். எனவே, அடிக்கடி பாலூட்ட வேண்டும்.

     குளியல்:

    குறைமாத குழந்தைகளை குளிக்க வைக்கும்போது உபயோகிக்கும் தண்ணீர், சோப்பு, லோஷன் ஆகிய அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தண்ணிரின் வெப்பநிலை குறைந்தபட்சம் 100 டிகிரி பாரன் ஹீட்டாக இருக்க வேண்டும். குழந்தையின் தலையை சுத்தம் செய்ய, தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த ரசாயனம் நிறைந்த பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது.

    குழந்தையின் எடை 2.5 கிலோ அளவுக்கு வரும் வரை கடற்பாசி கொண்டு குளிக்க வைக்கலாம். குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை கடைகளில் கிடைக்கும் லோஷன் பவுடர், எண்ணெய் உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது.

    பயணத்தை தவிர்க்கவும்:

    குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுற்றுச் சூழல் காரணமாக எளிதில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் நுரையீரல் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்பதால், காற்று மாசு காரணமாக எளிதில் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படலாம். எனவே, குறைந்தபட்சம் ஓராண்டு வரை பயணங்களை தவிர்ப்பது சிறந்தது.

    • அம்மன்நகர் பகு தியில் செல்லும் ஓடையின் குறுக்கே மழை நீரை சேமிக்க வைக்கும் வகையில் ஒரிரு மாதங்களுக்கு முன்பு ரூ 15 லட்சத்தில் தடுப்பணை கடப்பட்டது.
    • தொடர்ந்து மழை பெய்தத தால் ஓடையின் வழியாக தடுப்பணை நீர்தேக்கம் பகுதிக்கு மழை நீர் வந்து சேர்ந்தது. தற்போது முழு மையாக நிரம்பி விட்டது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த சவுதா புரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்மன்நகர் பகு தியில் செல்லும் ஓடையின் குறுக்கே மழை நீரை சேமிக்க வைக்கும் வகையில் ஒரிரு மாதங்களுக்கு முன்பு ரூ 15 லட்சத்தில் தடுப்பணை கடப்பட்டது.

    கடந்த சில வாரமாக தொடர்ந்து மழை பெய்தத தால் ஓடையின் வழியாக தடுப்பணை நீர்தேக்கம் பகுதிக்கு மழை நீர் வந்து சேர்ந்தது. தற்போது முழு மையாக நிரம்பி விட்டது. நிரம்பி தடுப்பணை நீர் தேக்கத்தை பார்த்தால் கடல் போல காணப்படுகிறது. கொடிவேரி போல தடுப்பணை வழியாக தண்ணீர் செல்கிறது.

    கடந்த சில நாட்களாக தொடர் விடுமுறை என்ப தால், சுற்று வட்டாரத்தைv சேர்ந்த ஏராளமான பொது மக்கள், சிறுவர்கள தடுப்ப ணையில் உற்சாகமாக குளித்தனர். தற்போது இந்த தடுப்பணை நீர் தேக்கம், அந்த பகுதியின் பொழுது போக்கு இடமாக மாறியுள்ளது.

    • பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும்.
    • சரும பராமரிப்புக்கு வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். ரசாயனம் கலந்த சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தும்போது, சருமத்துக்கு அவை பாதிப்பை ஏற்படுத்தலாம். சில தலைமுறைகள் வரை, பிறந்த குழந்தைகளின் சரும பராமரிப்புக்கு வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    மசாஜ் செய்வதற்கும், சருமப் பொலிவை அதிகரிப்பதற்கும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை உபயோகப்படுத்தினார்கள். இவை குழந்தையின் மென்மையான சருமத்தை பூப்போல் பாதுகாக்கும். சருமப் பிரச்சினைகள் வராமல் தடுத்து, இயற்கையான நிறத்தை மெருகேற்றும். இந்தக் குளியல் பொடி செய்முறை பற்றி பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் ரோஜா இதழ்கள் - 100 கிராம்

    ஆவாரம் பூ - 50 கிராம்

    துளசி இலை - ஒரு கைப்பிடி

    வேப்பிலைக் கொழுந்து - ஒரு கைப்பிடி

    பச்சைப் பயறு - 300 கிராம்

    சிவப்பு சந்தனம் - 50 கிராம்

    பச்சரிசி - ஒரு கைப்பிடி

    கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம் (ஆண் குழந்தையாக இருந்தால் இதைத் தவிர்க்கவும்)

    தரமான பொருட்களை வாங்கவும். பூக்கள் மற்றும் இலைகளை தனித்தனியாக சுத்தப்படுத்தி நன்றாக உலர வைக்கவும். பச்சைப் பயறு மற்றும் கஸ்தூரி மஞ்சளை ஒரு மணி நேரம் வெயிலில் காயவைக்கவும். பின்னர் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து அரவை இயந்திரத்தில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

    இந்தப் பொருட்களை அரைப்பதற்கு முன்பாக அரை கிலோ பச்சரிசியை கொடுத்து மாவாக அரையுங்கள். இயந்திரத்தில் இதற்கு முன்பு ஏதேனும் காரத்தன்மை கொண்ட பொருளை அரைத்திருந்தாலும் அல்லது அசுத்தங்கள் இருந்தாலும் நீங்கி குளியல் பொடி சுத்தமானதாக இருக்கும். இந்தப் பொடியை சலித்துப் பயன்படுத்துவது நல்லது. பிறகு சுத்தமான காற்றுப் புகாத பெரிய பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைக்கவும். சிறிது பொடியை, சிறிய டப்பாவில் போட்டு தினசரி பயன்படுத்திக்கொள்ளலாம். 2 அல்லது 3 மாதத்துக்கு ஒரு முறை அரைத்தால் போதும்.

    பயன்படுத்தும் முறை: சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு குழந்தையின் உடல் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிக்க வைக்கும் போது இந்தப் பொடியை நீரில் குழைத்துக் குழந்தையின் உடலில் தடவி, மென்மையாக கைகளால் தேய்த்துக் குளிக்க வைக்கலாம். முகத்துக்கும் பயன்படுத்தலாம். மசாஜ் செய்யாதபோதும் இதை நீரில் குழைத்துப் பயன்படுத்துங்கள்.

    நன்மைகள்: ரோஜா இதழ் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். பச்சைப் பயறு, பச்சரிசி ஆகியவை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையாக்கும். ஆவாரம் பூ, துளசி மற்றும் வேப்பிலை மூன்றும் கிருமிநாசினியாக செயல்படும். மஞ்சள், குழந்தையின் உடலில் இருக்கும் தேவையற்ற முடியை உதிரச் செய்யும். சிவப்பு சந்தனம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.

    • குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது.
    • குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.

    பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பச்சிளம் குழந்தைகளை எத்தனை நாள்களுக்கொரு முறை தலைக்கு குளிப்பாட்ட வேண்டும்? எத்தனை வயதுவரை வெந்நீரில் குளிப்பாட்ட வேண்டும்? கோடைக்காலத்தில் பச்சைத்தண்ணீரில் குளிப்பாட்டலாமா? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    பச்சிளம் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு தலைக்குக் குளிப்பாட்ட வேண்டியது அவசியம். குழந்தைகளை ரொம்ப நேரம் குளிக்க வைக்க வேண்டாம். அதிகபட்சமாக 5 நிமிடங்களுக்குள் குளிக்க வைத்துவிடுவது சிறப்பு. பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.

    குழந்தைகளை அதிக நேரம் குளிப்பாட்டுவதால் நன்றாகத் தூங்குவார்கள் என்றெல்லாம் நினைத்து அப்படிச் செய்யத் தேவையில்லை. குழந்தைக்கேற்ற ஷாம்பூ மற்றும் சோப் உபயோகித்துக் குளிப்பாட்ட வேண்டியதும் அவசியம்.

    குழந்தையைக் குளிப்பாட்ட ஆவி பறக்கும் வெந்நீர் தேவையில்லை. சரியான சூடுதானா என்பதை முதலில் உங்கள் முழங்கையில் ஊற்றி சரி பாருங்கள். குழந்தையின் சருமம் அந்தச் சூட்டைத் தாங்குமா என்றும் பாருங்கள்.

    வெதுவெதுப்பான சூடு இருந்தால் போதுமானது. கோடைக்காலத்திலும் குழந்தையின் சருமம் பொறுக்கும் அளவு சூட்டில் உள்ள நீரில் குளிப்பாட்டலாம்.

    ரொம்பவும் சூடான நீரை ஊற்றிக் குளிப்பாட்டினால் அவர்களுக்குத் தாங்க முடியாது. எப்போதுமே குழந்தையைக் குளிப்பாட்ட ரொம்பவும் குளிர்ந்த நீரும் வேண்டாம், அதிக சூடான நீரும் வேண்டாம்.

    குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோ தான் பால் புகட்ட வேண்டும்.

    • இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல்.
    • காலங்காலமாக, நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் எண்ணெய் குளியல் முறை உள்ளது.

    இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளில் எண்ணற்ற பலன்கள் உள்ளன. நீர், நெருப்பு, பூமி, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களின் சக்தியை கொண்டு இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்தவகையில் நீராவி குளியல் மற்றும் எண்ணெய் குளியலின் நன்மைகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி காண்போம்.

    இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவு டாக்டர் கல்யாணி கூறியதாவது:

    "இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல். இந்த நீராவி குளியல் சிகிச்சை எடுப்பதால் உடலின் தேவையற்ற கழிவுகளான யூரியா, யூரிக் அமிலம் போன்றவை வியர்வையின் வழியாக வெளியேறும். அதனால் உடல் சோர்வு நீங்குவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள அனைத்து மூட்டு மற்றும் எலும்புகளுக்கும் நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும்.

    நீராவி குளியல் உடல் பருமனை குறைக்க உதவும். உடல் வலியை நீக்கும். இதுதவிர வாதநோய், தோல் வியாதிகள், ஆஸ்துமா போன்ற நோய்களை குணமாக்க உதவும். சர்க்கரை, உயர்ரத்த அழுத்த நோயாளிகள் டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே நீராவி குளியல் சிகிச்சை பெறவேண்டும். கர்ப்பிணிகளும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் டாக்டர் அனுமதி பெற்று இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.

    முந்தைய காலத்தில், நீராவி குளியல் எடுப்பவரை கயிற்று கட்டிலின் மேல் அமர வைப்பார்கள். அதன்பிறகு போர்வையால் அவரை போர்த்தி விடுவார்கள். அதற்கு முன்பே, ஒரு சட்டியில் தண்ணீரை ஊற்றி, நொச்சி இலையை போட்டு மூடி அதை நன்கு கொதிக்க வைத்து தயார்நிலையில் வைத்திருப்பார்கள். அதன்பிறகு அந்த சட்டியை கயிற்று கட்டிலின் கீழ் வைத்து சட்டியின் மூடியை அகற்றி விடுவார்கள். அந்த சட்டியில் இருந்து நீராவி கயிற்று கட்டிலின் வழியே போர்வைக்குள் போகும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து போர்வையை நீக்கினால் போதும். நீராவி குளியல் எடுப்பவருக்கு நன்கு வியர்த்து உடலின் கழிவுகள் வெளியேறி விடும்.

    தற்போது நவீன முறையில் எளிதாக நீராவி குளியல் சிகிச்சை எடுக்கலாம். இதற்கென நவீன எந்திரம் உள்ளது. அந்த நவீன எந்திரத்தில் உள்ள நாற்காலியில் நீராவி குளியல் சிகிச்சை எடுப்பவரை அமர வைக்க வேண்டும். அவரின் தலை வெளியே தெரியும்படி அந்த நாற்காலியை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ சரி செய்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அந்த எந்திரத்தில் மூலிகை தைலம் அல்லது நொச்சி தைலம், யூக்கலிப்டஸ் தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி எந்திரத்தை இயக்கி விடலாம். அதிலிருந்து வரும் நீராவி உடல் முழுவதும் நன்கு பரவும். அப்போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் மூலம் கழிவுகள் வெளியேறும். பொதுவாக நீராவி குளியலின் பலனை 8 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பெறலாம்.

    காலங்காலமாக, நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் எண்ணெய் குளியல் முறை உள்ளது. இதுவே இன்றளவில் 'ஆயில் மசாஜ்' என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து எண்ணெய் குளியலை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பொதுவாக வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அதனால் உடலின் வெப்பநிலை சமச்சீராக இருக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    ஆயில் மசாஜ்க்கு பதிலாக 'பார்சியல் மசாஜ்' என்பதையும் மேற்கொள்ளலாம். இதன்படி கை, கால், முகம், வயிறு, முதுகு, நெஞ்சுப்பகுதி என உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். இதுதவிர பழைய முறைப்படி உச்சி முதல் பாதம் வரை முழு உடல் எண்ணெய் குளியல் முறையையும் மேற்கொள்ளலாம்.

    எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். இதில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அதிக பலன் தரும். சிலருக்கு இது ஒத்துக்கொள்ளாது. எண்ணெய் குளியலில் அறிவியல் பூர்வமாக தற்போது நிறைய முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. எண்ணெய் தேய்த்து உடலின் தசைகளை தட்டுவதால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தோல் சுரப்பிகளின் பணி சீராக நடக்கும். உடலின் கொழுப்பு குறையும். உடலில் வலி நீங்கும். நன்கு தூக்கம் வரும். முகத்திற்கு பொலிவு கிடைக்கும். வயிற்றின் கழிவுகள் நீங்கும். செரிமான சக்தி அதிகரிக்கும்" என்றார், அவர்.

    ×