search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bathing"

    • சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும்.
    • கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும்.

    பெண்களின் கர்ப்ப காலம் என்பது 37 வாரங்கள் கொண்டதாகும். இந்த காலம் முழுவதுமாக பூர்த்தியடைந்து பிரசவிக்கப்படும் குழந்தைகள், சீரான உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தோடு பிறக்கிறார்கள். ஆனால் பிரசவ தேதிக்கு சில மாதங்கள் முன்பாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை தடுக்க அந்த குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பு வழங்குவது முக்கியமானதாகும்.

    குறைமாதத்தில் பிறந்த குழந்தையை மட்டுமில்லாமல், பிரசவித்த தாயின் ஆரோக்கியத்திலும் போதுமான கவனம் செலுத்த வேண்டும். குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தகுந்த பாதுகாப்பும். உரிய சிகிச்சையும் வழங்கப்படும். வீட்டிற்கு வந்த பின்பு அந்த குழந்தைகளை முறையாக கவனித்துக்கொள்வதற்கான சில வழிகள்.

     சீரான வெப்பநிலை:

    குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் இருக்கும் அறையில், சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாகவே மருத்துவமனைகளில் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கின்றனர். எனவே வீட்டிற்கு வந்த பின்னும், குழந்தைக்கு சீரான வெப்பநிலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

    வீட்டில். துணிகளை அடுக்கடுக்காக விரித்து அதன்மேல் கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும். முடிந்தவரை, கனமான போர்வைகளை தவிர்த்து காட்டன் புடவைகளை தேர்வு செய்யுங்கள். தெர்மாமீட்டர் கொண்டு, குழந்தையின் உடல் வெப்பநிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் உடல் வெப்பநிலை 36.5 முதல் 37.4 டிகிரி செல்சியஸ் வரையும், அறையின் வெப்பநிலை 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்க வேண்டும்.

     சீரான தூக்கம்:

    பிறந்த குழந்தைகளுக்கு சீரான தூக்கம் அவசியமானது. அதிலும், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எவ்வித தொந்தரவும் இன்றி சீராக உறங்க தேவையான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களை படுக்க வைக்கும் அறையில், சீரான வெப்பநிலையும், மங்கலான வெளிச்சமும் இருக்க வேண்டும். மற்ற குழந்தைகளை விட இவர்களுக்கு இரவு நேரத்தில் பசி அதிகமாக இருக்கும். எனவே, அடிக்கடி பாலூட்ட வேண்டும்.

     குளியல்:

    குறைமாத குழந்தைகளை குளிக்க வைக்கும்போது உபயோகிக்கும் தண்ணீர், சோப்பு, லோஷன் ஆகிய அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தண்ணிரின் வெப்பநிலை குறைந்தபட்சம் 100 டிகிரி பாரன் ஹீட்டாக இருக்க வேண்டும். குழந்தையின் தலையை சுத்தம் செய்ய, தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த ரசாயனம் நிறைந்த பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது.

    குழந்தையின் எடை 2.5 கிலோ அளவுக்கு வரும் வரை கடற்பாசி கொண்டு குளிக்க வைக்கலாம். குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை கடைகளில் கிடைக்கும் லோஷன் பவுடர், எண்ணெய் உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது.

    பயணத்தை தவிர்க்கவும்:

    குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுற்றுச் சூழல் காரணமாக எளிதில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் நுரையீரல் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்பதால், காற்று மாசு காரணமாக எளிதில் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படலாம். எனவே, குறைந்தபட்சம் ஓராண்டு வரை பயணங்களை தவிர்ப்பது சிறந்தது.

    • அம்மன்நகர் பகு தியில் செல்லும் ஓடையின் குறுக்கே மழை நீரை சேமிக்க வைக்கும் வகையில் ஒரிரு மாதங்களுக்கு முன்பு ரூ 15 லட்சத்தில் தடுப்பணை கடப்பட்டது.
    • தொடர்ந்து மழை பெய்தத தால் ஓடையின் வழியாக தடுப்பணை நீர்தேக்கம் பகுதிக்கு மழை நீர் வந்து சேர்ந்தது. தற்போது முழு மையாக நிரம்பி விட்டது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த சவுதா புரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்மன்நகர் பகு தியில் செல்லும் ஓடையின் குறுக்கே மழை நீரை சேமிக்க வைக்கும் வகையில் ஒரிரு மாதங்களுக்கு முன்பு ரூ 15 லட்சத்தில் தடுப்பணை கடப்பட்டது.

    கடந்த சில வாரமாக தொடர்ந்து மழை பெய்தத தால் ஓடையின் வழியாக தடுப்பணை நீர்தேக்கம் பகுதிக்கு மழை நீர் வந்து சேர்ந்தது. தற்போது முழு மையாக நிரம்பி விட்டது. நிரம்பி தடுப்பணை நீர் தேக்கத்தை பார்த்தால் கடல் போல காணப்படுகிறது. கொடிவேரி போல தடுப்பணை வழியாக தண்ணீர் செல்கிறது.

    கடந்த சில நாட்களாக தொடர் விடுமுறை என்ப தால், சுற்று வட்டாரத்தைv சேர்ந்த ஏராளமான பொது மக்கள், சிறுவர்கள தடுப்ப ணையில் உற்சாகமாக குளித்தனர். தற்போது இந்த தடுப்பணை நீர் தேக்கம், அந்த பகுதியின் பொழுது போக்கு இடமாக மாறியுள்ளது.

    • பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும்.
    • சரும பராமரிப்புக்கு வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். ரசாயனம் கலந்த சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தும்போது, சருமத்துக்கு அவை பாதிப்பை ஏற்படுத்தலாம். சில தலைமுறைகள் வரை, பிறந்த குழந்தைகளின் சரும பராமரிப்புக்கு வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    மசாஜ் செய்வதற்கும், சருமப் பொலிவை அதிகரிப்பதற்கும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை உபயோகப்படுத்தினார்கள். இவை குழந்தையின் மென்மையான சருமத்தை பூப்போல் பாதுகாக்கும். சருமப் பிரச்சினைகள் வராமல் தடுத்து, இயற்கையான நிறத்தை மெருகேற்றும். இந்தக் குளியல் பொடி செய்முறை பற்றி பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் ரோஜா இதழ்கள் - 100 கிராம்

    ஆவாரம் பூ - 50 கிராம்

    துளசி இலை - ஒரு கைப்பிடி

    வேப்பிலைக் கொழுந்து - ஒரு கைப்பிடி

    பச்சைப் பயறு - 300 கிராம்

    சிவப்பு சந்தனம் - 50 கிராம்

    பச்சரிசி - ஒரு கைப்பிடி

    கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம் (ஆண் குழந்தையாக இருந்தால் இதைத் தவிர்க்கவும்)

    தரமான பொருட்களை வாங்கவும். பூக்கள் மற்றும் இலைகளை தனித்தனியாக சுத்தப்படுத்தி நன்றாக உலர வைக்கவும். பச்சைப் பயறு மற்றும் கஸ்தூரி மஞ்சளை ஒரு மணி நேரம் வெயிலில் காயவைக்கவும். பின்னர் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து அரவை இயந்திரத்தில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

    இந்தப் பொருட்களை அரைப்பதற்கு முன்பாக அரை கிலோ பச்சரிசியை கொடுத்து மாவாக அரையுங்கள். இயந்திரத்தில் இதற்கு முன்பு ஏதேனும் காரத்தன்மை கொண்ட பொருளை அரைத்திருந்தாலும் அல்லது அசுத்தங்கள் இருந்தாலும் நீங்கி குளியல் பொடி சுத்தமானதாக இருக்கும். இந்தப் பொடியை சலித்துப் பயன்படுத்துவது நல்லது. பிறகு சுத்தமான காற்றுப் புகாத பெரிய பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைக்கவும். சிறிது பொடியை, சிறிய டப்பாவில் போட்டு தினசரி பயன்படுத்திக்கொள்ளலாம். 2 அல்லது 3 மாதத்துக்கு ஒரு முறை அரைத்தால் போதும்.

    பயன்படுத்தும் முறை: சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு குழந்தையின் உடல் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிக்க வைக்கும் போது இந்தப் பொடியை நீரில் குழைத்துக் குழந்தையின் உடலில் தடவி, மென்மையாக கைகளால் தேய்த்துக் குளிக்க வைக்கலாம். முகத்துக்கும் பயன்படுத்தலாம். மசாஜ் செய்யாதபோதும் இதை நீரில் குழைத்துப் பயன்படுத்துங்கள்.

    நன்மைகள்: ரோஜா இதழ் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். பச்சைப் பயறு, பச்சரிசி ஆகியவை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையாக்கும். ஆவாரம் பூ, துளசி மற்றும் வேப்பிலை மூன்றும் கிருமிநாசினியாக செயல்படும். மஞ்சள், குழந்தையின் உடலில் இருக்கும் தேவையற்ற முடியை உதிரச் செய்யும். சிவப்பு சந்தனம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.

    • குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது.
    • குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.

    பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பச்சிளம் குழந்தைகளை எத்தனை நாள்களுக்கொரு முறை தலைக்கு குளிப்பாட்ட வேண்டும்? எத்தனை வயதுவரை வெந்நீரில் குளிப்பாட்ட வேண்டும்? கோடைக்காலத்தில் பச்சைத்தண்ணீரில் குளிப்பாட்டலாமா? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    பச்சிளம் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு தலைக்குக் குளிப்பாட்ட வேண்டியது அவசியம். குழந்தைகளை ரொம்ப நேரம் குளிக்க வைக்க வேண்டாம். அதிகபட்சமாக 5 நிமிடங்களுக்குள் குளிக்க வைத்துவிடுவது சிறப்பு. பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.

    குழந்தைகளை அதிக நேரம் குளிப்பாட்டுவதால் நன்றாகத் தூங்குவார்கள் என்றெல்லாம் நினைத்து அப்படிச் செய்யத் தேவையில்லை. குழந்தைக்கேற்ற ஷாம்பூ மற்றும் சோப் உபயோகித்துக் குளிப்பாட்ட வேண்டியதும் அவசியம்.

    குழந்தையைக் குளிப்பாட்ட ஆவி பறக்கும் வெந்நீர் தேவையில்லை. சரியான சூடுதானா என்பதை முதலில் உங்கள் முழங்கையில் ஊற்றி சரி பாருங்கள். குழந்தையின் சருமம் அந்தச் சூட்டைத் தாங்குமா என்றும் பாருங்கள்.

    வெதுவெதுப்பான சூடு இருந்தால் போதுமானது. கோடைக்காலத்திலும் குழந்தையின் சருமம் பொறுக்கும் அளவு சூட்டில் உள்ள நீரில் குளிப்பாட்டலாம்.

    ரொம்பவும் சூடான நீரை ஊற்றிக் குளிப்பாட்டினால் அவர்களுக்குத் தாங்க முடியாது. எப்போதுமே குழந்தையைக் குளிப்பாட்ட ரொம்பவும் குளிர்ந்த நீரும் வேண்டாம், அதிக சூடான நீரும் வேண்டாம்.

    குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோ தான் பால் புகட்ட வேண்டும்.

    • குழந்தைகளை மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும்.
    • தூங்கும் குழந்தையை எழுப்பி குளிக்க வைக்கக்கூடாது.

    குதூகலமாக கொஞ்சி விளையாடும் பல குழந்தைகள், குளிக்கும் நேரம் வந்தாலே அழுவதற்கு ஆரம்பித்துவிடுவார்கள். அடம்பிடிக்கும் அவர்களை சமாளித்து குளிக்க வைப்பது தாய்மார்களுக்கு மிகப்பெரும் சவாலாகிவிடும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, உடலில் தண்ணீர் படும்போது வெப்பநிலை மாறுவதால் ஒருவித அச்சம் ஏற்படும். அதனால் அழுவார்கள். சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கு குளிக்கும்போது சோப்பு நுரை கண்களில் படுவதால் உண்டாகும் எரிச்சல் மற்றும் அசவுகரியத்தின் காரணமாக குளியல் பிடிக்காமல் போகிறது. இவற்றை தவிர்த்து, குழந்தைகளை மகிழ்ச்சியாக குளிக்கச் செய்யும் வழிகள் இதோ…

    குழந்தைகளை மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். அதிக சூடு அல்லது குளிர்ச்சியான நீரில் குளிப்பாட்டும்போது திடீர் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். அடுத்த முறை குளிக்கும்போதும் இதே நிலை ஏற்படுமோ என்ற பயமே, அவர்களுக்கு குளியல் மீது வெறுப்பு உண்டாகக் காரணமாகிவிடும்.

    குழந்தைகளை தலைக்கு குளிக்க வைக்கும்போது ஷாம்பு கலந்த தண்ணீர் கண்களில் படுவதால் எரிச்சல் ஏற்பட்டு அழுவார்கள். இதனைத் தவிர்க்க 'ஹெட் விசர்' எனும் தடுப்பான்களை பயன்படுத்தலாம். இதனால் தண்ணீர் கண்களில் படுவதைத் தவிர்க்க முடியும்.

    குழந்தைகளின் சருமம் மென்மையானது. அவர்களுக்கு பயன்படுத்தும் பராமரிப்பு பொருட்களில் உள்ள ரசாயனக் கலவைகளால் சருமத்தில் அலர்ஜி அல்லது புண்கள் உண்டாகலாம். இது குளிக்கும் போது குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையின்படி அவர்களுக்கான சோப்பு, ஷாம்பு மற்றும் லோஷன்களை தேர்வு செய்து உபயோகிக்கவும்.

    பசியால் அழும் குழந்தைகளை 'குளிக்கவைத்துவிட்டு பசியாற்றலாம்' என்பது தவறான எண்ணம். உணவு கொடுத்து அரை மணி நேரம் கழித்தே அவர்களை குளிக்க வைக்க வேண்டும். இல்லையேல் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். தூங்கும் குழந்தையை எழுப்பி குளிக்க வைக்கக்கூடாது. இது குழந்தையின் தூக்கத்தை பாதிப்பதோடு, குளியல் மீதும் வெறுப்பை உண்டாக்கும்.

    வேகமாக 'மட மட' வென்று தண்ணீர் ஊற்றி குளிக்க வைக்கக்கூடாது. இது அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். அலர்ஜி அல்லது புண்கள் இருக்கும் இடத்தில் வேகமாக தண்ணீர் ஊற்றுவதையும், சோப்பு போடுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை தூக்கும்போது உங்கள் கைகளை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

    • காலை குளியல், மாலை குளியல் இரண்டிலும் சாதாரண குழாய் நீரில் குளித்தாலே போதும்.
    • எல்லோருக்கும் எளிதான ஒன்றாக 'ஷவர்' முறை குளியல் சிறந்தது.

    'ஜில்' என்று சொன்னவுடன் ஐஸ் போன்ற குளிர்ந்த நீர் என்று பொருள் கொள்ள வேண்டாம். காலை குளியல், மாலை குளியல் இரண்டிலும் சாதாரண குழாய் நீரில் குளித்தாலே போதும். பொதுவில் நகரத்தில் இருப்பவர்கள் ஆறு, நதி, அருவி என்று செல்ல முடியாது. எல்லோருக்கும் எளிதான ஒன்றாக 'ஷவர்' முறை குளியல் சிறந்தது.

    இப்படி குளிக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தலைக்கும் நீர் ஊற்றி குளிக்கலாம். சைனஸ் தொந்தரவு மற்றும் ஒத்துக் கொள்ளாது என்று கூறுபவர்கள் 'ஷவர் கேப்' போட்டு குளிக்கலாம். உடலில் 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை நிதான முறையில் நீர் ஊற்றப்படும் போது

    * மன உறுதி ஏற்படும்.

    * ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் நீங்கும்

    * குளூட்டதியோன் அளவு கூடும். எளிதல் ஸ்ட்ரெஸ் ஆக மாட்டீர்கள்.

    * விழிப்புணர்வு கூடும்.

    * சருமம், முடி ஆரோக்கியம் கூடும்.

    * கொழுப்பு குறைந்து எடை குறையும்.

    * ரத்த ஓட்டம் சீர்படும்.

    * நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    * நிணநீர் மண்டலம் சுத்தப்படும்.

    * தசைகளில் வலி சீக்கிரம் சீர்படும்.

    * தூக்கம், விழிப்பு, சீராய் இருக்கும்.

    * நன்கு இயல்பாய் ஆழ்ந்து மூச்சு எடுப்பீர்கள்.

    உடல் நலக்குறைவானவர்கள், மருத்துவ கவனிப்பில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், இளம் தாய்மார்கள் இவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று செய்யலாம். மிக அதிக வெப்பம் இருக்கும் இந்த கோடையில் இம்மாதிரி குளியல் முறை, தகுந்த உணவு முறை இவற்றின் மூலம் ஒருவர் தன்னை காத்துக் கொள்ள முடியும்.

    • குழந்தைகளை குளிப்பாட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.

    பிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.

    பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.

    * குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோ தான் பால் புகட்ட வேண்டும்.

    * பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.

    * குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றைப் பயன்படுத்துவதுண்டு. அவையெல்லாம் அவசியமில்லை. மென்மையான சோப் சொல்யூஷனை பயன்படுத்தினாலே போதும்.

    * குளிப்பாட்டும் போது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.

    * தினமும் உடல் முழுவதும் சிறிதளவு எண்ணெய் பூசி குளிப்பாட்டலாம்.

    * வாரம் 2 முறை தலைக்குக் குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.

    * தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும்.

    * குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.

    * குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின் ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.

    * குளித்து முடித்த பின் சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

    குளிர்காலத்தில் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் ஸ்பாஞ்ச் மூலம் உடலை துடைத்து சுத்தம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஒருவேளை குளிப்பாட்ட வேண்டும் என்று முடிவு செய்தால் சூடான வெந்நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் குழந்தையின் தோல் சூடான வெந்நீரால் சேதமடையும். எனவே சூடான வெந்நீரில் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிப்பாட்ட பயன்படுத்த வேண்டும்

    பெரும்பாலும் குழந்தையை குளிர்ந்த தண்ணீரில் குளிப்பாட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தால் குழந்தைக்கு சளி காய்ச்சல் உள்பட சில உபாதைகள் வரலாம்.

    குழந்தையின் உடல்நிலை பேணுவதற்கு அவ்வப்போது எண்ணெய் மசாஜ் செய்யலாம் குழந்தைகளுக்கான தரமான எண்ணெய் வாங்கி குழந்தைகளுக்கு மசாஜ் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்

    அதே போல் குழந்தைகளை பாதுகாக்க சரியான ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்ததந்த பருவ நிலைக்கு ஏற்ற ஆடைகளையே குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

    - மேலே கூறிய இந்த முறைகளை பின்பற்றி பிறந்த குழந்தையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.

    • அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
    • குளிக்கும்போது சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

    தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.

    எத்தனை முறை குளிக்கலாம்?

    வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.

    அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?

    பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

    குளிக்கும் நேரத்தை குறையுங்கள்

    ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும்.

    சூடான நீரை தவிருங்கள்:

    அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்:

    குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும்.

    உடலை உலர வையுங்கள்:

    குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

    • அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
    • குளிக்கும்போது சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

    தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.

    எத்தனை முறை குளிக்கலாம்?

    வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம்.

    அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்?

    பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

    அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

    குளிக்கும் நேரத்தை குறையுங்கள்

    ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும்.

    சூடான நீரை தவிருங்கள்:

    அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்:

    குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும்.

    உடலை உலர வையுங்கள்:

    குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

    • தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது.
    • குழந்தையை தலைகீழாக பிடித்து ஆட்டுவார்கள்.

    பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பதில், மருத்துவர் ஆலோசனைப்படி நடப்பது இல்லை. அதற்கு பதிலாக, மற்றவர்கள் சொல்லும் அனுபவ வைத்தியத்தையும், மேலோட்டமான ஆலோசனைகளையும் பலர் பின்பற்றுகிறார்கள். முக்கியமாக, நாட்டு மருந்து மற்றும் பொதுவான மருந்துகளைத் தருகிறார்கள்.

    அவ்வாறு செய்யும்போதுதான் தவறு ஆரம்பிக்கிறது. தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது. அதிலும், முதல் இரண்டு நாட்கள் வருகிற பால்(Clostrum) நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கொண்டு இருக்கும். எனவே, இதைத் தவறாமல் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம் புகட்ட வேண்டும்.

    சில வீடுகளில் குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்ற பெயரில், குளிக்க வைத்த பிறகு, வாயோடு வாயாக வைத்து ஊதுவார்கள். பால் எடுக்கிறோம் என்ற பெயரில், நெஞ்சை அழுத்துவார்கள். மூக்கில் எண்ணெய் விடுவார்கள். குழந்தையை தலைகீழாக பிடித்து ஆட்டுவார்கள். இவை எல்லாம் தவறான வழிமுறைகள். எனவே, இவற்றை மறந்தும் செய்யக் கூடாது.

    பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில், இளம் தாய்மார்களின் உடல்நலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்கள் தண்ணீர் குடிப்பதைக் குறைத்து விடுவார்கள். பத்திய சாப்பாடு சாப்பிடுவார்கள். பால் புகட்ட வேண்டும் என்பதற்காக, சரியாக தூங்க மாட்டார்கள். இளம் தாய்மார்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    சத்தான உணவுவகைகளை நிறைய சாப்பிட வேண்டும். பத்திய சாப்பாடு என்ற பெயரில் களி சாப்பிடக் கூடாது. சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் அடிக்கடி எரிச்சல் படுவார்கள். தூக்கம் இன்மையால் வரும் இடையூறுகளுக்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.

    பச்சிளம் குழந்தை பராமரிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிற இந்த நிலையில், இது எல்லாக் குழந்தைகளையும் சென்றடைய வேண்டும். பெரியவர்கள், குழந்தைகளுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் பற்றி பலவிதமான ஆலோசனைகள் கூறுவார்கள்.

    ஆனால், டாக்டரிடம் குழந்தையைக் காண்பித்து, அந்தப் பாதிப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வயது வரை தேவையில்லாத மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசிகளைத்தவறாமல் போட வேண்டும்.

    • பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும்.
    • ஒவ்வொரு குழந்தையின் சருமமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

    குழந்தைகளைக் குளிப்பாட்ட நிச்சயம் நலங்குமாவு பயன்படுத்தக்கூடாது. நலங்குமாவில் சேர்க்கப்படுகிற பொருள்கள் யாருக்கு, எந்தவித ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.

    பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையின் சருமமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். சில குழந்தைகள் அலர்ஜி தன்மையோடு பிறப்பார்கள். குழந்தையின் சருமம் ஓரளவு முதிர்ச்சியடையும்வரை அந்த ஒவ்வாமை தொடரும். ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் அது சரியாகும்.

    ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளை அதற்குள் குழந்தையின் சருமத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டாமே.... குறிப்பாக மஞ்சள்... இது குழந்தையின் சருமத்துக்கு பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இப்படி நலங்கு மாவில் சேர்க்கப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வாமை தன்மை இருந்தால் அது குழந்தையின் சருமத்தை பாதிக்கக்கூடும் என்பதால்தான் நலங்குமாவு வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    • இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல்.
    • காலங்காலமாக, நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் எண்ணெய் குளியல் முறை உள்ளது.

    இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளில் எண்ணற்ற பலன்கள் உள்ளன. நீர், நெருப்பு, பூமி, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களின் சக்தியை கொண்டு இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்தவகையில் நீராவி குளியல் மற்றும் எண்ணெய் குளியலின் நன்மைகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி காண்போம்.

    இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவு டாக்டர் கல்யாணி கூறியதாவது:

    "இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல். இந்த நீராவி குளியல் சிகிச்சை எடுப்பதால் உடலின் தேவையற்ற கழிவுகளான யூரியா, யூரிக் அமிலம் போன்றவை வியர்வையின் வழியாக வெளியேறும். அதனால் உடல் சோர்வு நீங்குவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள அனைத்து மூட்டு மற்றும் எலும்புகளுக்கும் நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும்.

    நீராவி குளியல் உடல் பருமனை குறைக்க உதவும். உடல் வலியை நீக்கும். இதுதவிர வாதநோய், தோல் வியாதிகள், ஆஸ்துமா போன்ற நோய்களை குணமாக்க உதவும். சர்க்கரை, உயர்ரத்த அழுத்த நோயாளிகள் டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே நீராவி குளியல் சிகிச்சை பெறவேண்டும். கர்ப்பிணிகளும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் டாக்டர் அனுமதி பெற்று இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.

    முந்தைய காலத்தில், நீராவி குளியல் எடுப்பவரை கயிற்று கட்டிலின் மேல் அமர வைப்பார்கள். அதன்பிறகு போர்வையால் அவரை போர்த்தி விடுவார்கள். அதற்கு முன்பே, ஒரு சட்டியில் தண்ணீரை ஊற்றி, நொச்சி இலையை போட்டு மூடி அதை நன்கு கொதிக்க வைத்து தயார்நிலையில் வைத்திருப்பார்கள். அதன்பிறகு அந்த சட்டியை கயிற்று கட்டிலின் கீழ் வைத்து சட்டியின் மூடியை அகற்றி விடுவார்கள். அந்த சட்டியில் இருந்து நீராவி கயிற்று கட்டிலின் வழியே போர்வைக்குள் போகும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து போர்வையை நீக்கினால் போதும். நீராவி குளியல் எடுப்பவருக்கு நன்கு வியர்த்து உடலின் கழிவுகள் வெளியேறி விடும்.

    தற்போது நவீன முறையில் எளிதாக நீராவி குளியல் சிகிச்சை எடுக்கலாம். இதற்கென நவீன எந்திரம் உள்ளது. அந்த நவீன எந்திரத்தில் உள்ள நாற்காலியில் நீராவி குளியல் சிகிச்சை எடுப்பவரை அமர வைக்க வேண்டும். அவரின் தலை வெளியே தெரியும்படி அந்த நாற்காலியை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ சரி செய்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அந்த எந்திரத்தில் மூலிகை தைலம் அல்லது நொச்சி தைலம், யூக்கலிப்டஸ் தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி எந்திரத்தை இயக்கி விடலாம். அதிலிருந்து வரும் நீராவி உடல் முழுவதும் நன்கு பரவும். அப்போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் மூலம் கழிவுகள் வெளியேறும். பொதுவாக நீராவி குளியலின் பலனை 8 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பெறலாம்.

    காலங்காலமாக, நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் எண்ணெய் குளியல் முறை உள்ளது. இதுவே இன்றளவில் 'ஆயில் மசாஜ்' என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து எண்ணெய் குளியலை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பொதுவாக வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அதனால் உடலின் வெப்பநிலை சமச்சீராக இருக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    ஆயில் மசாஜ்க்கு பதிலாக 'பார்சியல் மசாஜ்' என்பதையும் மேற்கொள்ளலாம். இதன்படி கை, கால், முகம், வயிறு, முதுகு, நெஞ்சுப்பகுதி என உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். இதுதவிர பழைய முறைப்படி உச்சி முதல் பாதம் வரை முழு உடல் எண்ணெய் குளியல் முறையையும் மேற்கொள்ளலாம்.

    எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். இதில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அதிக பலன் தரும். சிலருக்கு இது ஒத்துக்கொள்ளாது. எண்ணெய் குளியலில் அறிவியல் பூர்வமாக தற்போது நிறைய முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. எண்ணெய் தேய்த்து உடலின் தசைகளை தட்டுவதால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தோல் சுரப்பிகளின் பணி சீராக நடக்கும். உடலின் கொழுப்பு குறையும். உடலில் வலி நீங்கும். நன்கு தூக்கம் வரும். முகத்திற்கு பொலிவு கிடைக்கும். வயிற்றின் கழிவுகள் நீங்கும். செரிமான சக்தி அதிகரிக்கும்" என்றார், அவர்.

    ×