search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் நிரம்பிய தடுப்பணைநீர் தேக்கத்தில் மக்கள் உற்சாக குளியல்
    X

    மழையால் நிரம்பிய தடுப்பணைநீர் தேக்கத்தில் மக்கள் உற்சாக குளியல்

    • அம்மன்நகர் பகு தியில் செல்லும் ஓடையின் குறுக்கே மழை நீரை சேமிக்க வைக்கும் வகையில் ஒரிரு மாதங்களுக்கு முன்பு ரூ 15 லட்சத்தில் தடுப்பணை கடப்பட்டது.
    • தொடர்ந்து மழை பெய்தத தால் ஓடையின் வழியாக தடுப்பணை நீர்தேக்கம் பகுதிக்கு மழை நீர் வந்து சேர்ந்தது. தற்போது முழு மையாக நிரம்பி விட்டது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த சவுதா புரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்மன்நகர் பகு தியில் செல்லும் ஓடையின் குறுக்கே மழை நீரை சேமிக்க வைக்கும் வகையில் ஒரிரு மாதங்களுக்கு முன்பு ரூ 15 லட்சத்தில் தடுப்பணை கடப்பட்டது.

    கடந்த சில வாரமாக தொடர்ந்து மழை பெய்தத தால் ஓடையின் வழியாக தடுப்பணை நீர்தேக்கம் பகுதிக்கு மழை நீர் வந்து சேர்ந்தது. தற்போது முழு மையாக நிரம்பி விட்டது. நிரம்பி தடுப்பணை நீர் தேக்கத்தை பார்த்தால் கடல் போல காணப்படுகிறது. கொடிவேரி போல தடுப்பணை வழியாக தண்ணீர் செல்கிறது.

    கடந்த சில நாட்களாக தொடர் விடுமுறை என்ப தால், சுற்று வட்டாரத்தைv சேர்ந்த ஏராளமான பொது மக்கள், சிறுவர்கள தடுப்ப ணையில் உற்சாகமாக குளித்தனர். தற்போது இந்த தடுப்பணை நீர் தேக்கம், அந்த பகுதியின் பொழுது போக்கு இடமாக மாறியுள்ளது.

    Next Story
    ×