search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை வெப்பம்"

    • கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
    • அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் கொளுத்தும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் குளிர்பானங்களை நாடி செல்கிறார்கள். இதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு தர்பூசணி, இளநீர், மோர், கம்பங்கூழ், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காலை 7.30 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் நிலவி வந்தது. கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீர் இன்றி வறண்டது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதலே நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்ச நல்லூர், டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நேற்று மதியம் சுமார் ½ மணி நேரம் மழை பெய்த நிலையில் இன்று காலை மீண்டும் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதேபோல களக்காடு, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, சேர்வலாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்தது. காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது.

    அந்த வகையில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    இதேபோல் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகள் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலன இடங்களின் இன்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான கால நிலையை ஏற்படுத்தியது. இதனால் வெப்பத்தில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மொடக்குறச்சி, கொடுமுடி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
    • மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    சென்னிமலை:

    அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஈரோடு மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனல் காற்று வீசியது. சென்னிமலை பகுதியில் நேற்று மாலை திடீரென வெயில் குறைந்த வானில் கருமேங்கள் திரண்டு காணப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் திடீரென இடியுடன் கனமழை கொட்டியது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டியது.

    இதே போல் மொடக்குறச்சி, கொடுமுடி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. ஈரோடு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    தாளவாடி-2.40, கொடுமுடி-3.20, மொடக்குறிச்சி-15.20, சென்னிமலை-22.

    • காய்ச்சல் சளி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.
    • சென்னையில் இன்று 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இன்று 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், ஒரு நர்சு, ஒரு உதவியாளர். சுகாதார பணியாளர் ஒருவர் உள்ளனர். காய்ச்சல் சளி மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

    • காரின் முன்னால் அமர்ந்து பயணம் செய்த சாலிகிராமத்தை சேர்ந்த சுப்பு என்ற 65 வயது முதியவர் பலத்த காயம் அடைந்தார்
    • அசோக்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகர் முழுவதும் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதில் சுமார் 20 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. இந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், பேரிடர் மீட்பு குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு அசோக்நகர் போஸ்டல் காலனி 3-வது தெருவில் சாலையோர காய்ந்த மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது மரக்கிளை விழுந்து முன்பகுதி நொறுங்கியது.

    இதில் காரின் முன்னால் அமர்ந்து பயணம் செய்த சாலிகிராமத்தை சேர்ந்த சுப்பு என்ற 65 வயது முதியவர் பலத்த காயம் அடைந்தார். பிரபல தனியார் ஓட்டலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர் நேற்று தி.நகரில் நடந்த அந்த ஓட்டலின் புதிய கிளை திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு காரில் திரும்பியபோது தான் மரக்கிளை முறிந்து விழுந்து அவரது மார்பில் குத்தியது.

    பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரில் பயணம் செய்த முதியவர் சுப்புவின் நண்பர் ஹாரிஸ் காயமின்றி தப்பினார். இதுதொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டது.

    சென்னை மந்தைவெளி நாட்டான் தெருவிலும் சாலையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இதேபோன்று பல இடங்களிலும் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன.

    • மரம் விழுந்தது பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக ஊழியர்கள் விரைந்து மரங்களை வெட்டி அகற்றினார்கள்.
    • ஆபத்தான நிலையில் இருக்கும் மரக்கிளைகளையும் வெட்டி வருகிறார்கள்.

    மழையால் சென்னையில் ஈக்காட்டு தாங்கல், கொளத்தூர், அடையாறு பகுதிகளில் 6 பெரிய மரங்கள் உள்பட 30 மரங்கள் விழுந்தன. மரங்களை வெட்டி அகற்ற 6 மின் வாகனங்கள் மற்றும் 200 சிறிய மர அறுவை எந்திரங்களை மாநகராட்சி தயார் நிலையில் வைத்துள்ளது.

    மரம் விழுந்தது பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக ஊழியர்கள் விரைந்து மரங்களை வெட்டி அகற்றினார்கள். ஆபத்தான நிலையில் இருக்கும் மரக்கிளைகளையும் வெட்டி வருகிறார்கள். பாரம் தாங்காமல் சாய்வதை தடுக்க இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
    • அதிகாலையில் மழை பெய்ததால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.

    கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.அதிகாலையில் மழை பெய்ததால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் இன்று காலை வெறிச்சோடியது. தக்காளி, கத்தரிக்காய், முட்டை கோஸ், சுரக்காய், காலி பிளவர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் மூட்டை, மூட்டையாக தேங்கியது. இதனால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்தனர். கடந்த சில நாட்களாக மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற பீன்ஸ் இன்று ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் கிலோ ரூ80-க்கு விற்ற அவரைக்காய் ரூ.50-க்கும், ரூ70-க்கு விற்ற உஜாலா கத்தரிக்காய் ரூ.45-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் இஞ்சி இன்று ஒரு கிலோ ரூ.175-க்கு விற்பனையானது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை(கிலோவில்) :- தக்காளி-ரூ.30, நாசிக் வெங்காயம்-ரூ.19, சின்ன வெங்காயம்-ரூ.80, ஊட்டி கேரட்-ரூ.60, வெண்டைக்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.25, பாகற்காய்-ரூ.40, பீட்ரூட்-ரூ.28, முட்டை கோஸ்-ரூ.13, புடலங்காய்-ரூ.25, பட்டை கொத்தவரங்காய்-ரூ.30, சுரக்காய்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.15.

    • வெயில் சுட்டெரிப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்
    • தண்ணீர் தொடர்பான நோயால் உயிரிழந்திருக்கலாம் என விசாரணைக்குழு தகவல்

    உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் திடீரென அங்குள்ள மக்களுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.

    மருத்துவமனையில சிகிச்சை பலனளிக்காமல் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15-ந்தேதி 23 பேரும், 16-ந்தேதி 20 பேரும், நேற்று முன்தினம் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பநிலை 100 டிகிரியை தாண்டிய வண்ணம் உள்ளது. இதுதான் உயிரிழப்பிற்கு காரணம் என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனால், இதுகுறித்து விசாரணை நடத்த லக்னோவில் இருந்து சீனியர் டாக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, கடும் வெயில் காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் முதலில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அதிக வெயில் தாக்கத்திற்கான முதல் அறிகுறி இல்லை. தண்ணீர் தொடர்பான நோய் பாதிப்பாக இருக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளது.

    லக்னோ குழுவில் இடம் பிடித்துள்ள சீனியர் டாக்டர் ஏ.கே. சிங் கூறுகையில் ''உயிரிழப்புகள் தண்ணீர் தொடர்பான நோயால் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமாக ஏற்பட்டதா? என விசாரணை நடத்தப்படும். மேலும், அதிகாரிகள் தண்ணீர் மாதிரியை பரிசோதனை செய்ய வர இருக்கிறார்கள்'' என்றார்.

    பொதுமக்கள் உயிரிழப்புக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதியநாத் ஆட்சியை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ''அரசின் கவனக்குறைவால் உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிக வெப்பம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கனும். கடந்த 6 வருடங்களில் ஒரு மாவட்ட மருத்துவமனை கூட கட்டப்படவில்லை. உயிரிழந்தவர்கள் மிகவும் ஏழை விவசாயிகள். அவர்கள் சரியான நேரத்தில் உணவு, மருந்துகள், சிகிச்சை பெற முடியாததுதான் அதற்கு காரணம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணி முதல் இடிமின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • மழையினால் கோடை வெப்பம் இன்று தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    சென்னை:

    சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்றினால் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாதபடி தவித்தனர்.

    பகலில் வெயிலினாலும் இரவில் வெப்பத்தின் தாக்குதலினாலும் மிகவும் அவதி அடைந்து வந்தனர். சென்னையில் சராசரியாக 106 டிகிரி முதல் 108 டிகிரி வரையும் பூந்தமல்லியில் 111 டிகிரி வரையும் வெயில் தனது அகோரமுகத்தை காட்டியது.

    இந்நிலையில் இன்று சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணி முதல் இடிமின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. எழும்பூர், கோயம்பேடு, அம்பத்தூர், விருகம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, ஆழ்வார்பேட்டை, கொரட்டூர், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    மழையினால் கோடை வெப்பம் இன்று தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. வறுத்தெடுத்த வெயிலினால் அவதியடைந்து வந்த பொது மக்கள் மழை பெய்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

    வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது.
    • அந்த வகையில், நடப்பாண்டு கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நீடித்தது.

    சேலம்:

    தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் அக்னி நட்சத்திர நாட்கள் கத்திரிவெயில் காலமாக கருதப்படுகிறது.

    அந்த வகையில், நடப்பாண்டு கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நீடித்தது. சேலத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், அக்னி வெயில் காலம் முடிந்த பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 3 நாட்களாக சேலத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இன்றும் காலை முதல் கடும் வெப்பம் நிலவியது. தகிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

    • கடலோர பகுதிகளில் வீசும் கடல் காற்றால் சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது.
    • அடுத்த வாரத்தில் மே 26-ந்தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலம் என்பதால் மேற்கு திசை கடல் காற்று குறையும்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவெயில் வாட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாகவே உள்ளது.

    இனிவரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றே வானிலை மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தை தாக்கிய புயலின்போது 240 கி.மீ வேகத்தில் கடுமையான காற்று வீசியது. இது தமிழகத்துக்கு வர வேண்டிய மேகங்களை இழுத்துச்சென்றுள்ளது. இதன் காரணமாகவே இயல்பை விட அதிக வெயில் காணப்படுகிறது. இதனால் தான் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.

    கடலோர பகுதிகளில் வீசும் கடல் காற்றால் சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது. உதாரணத்துக்கு சென்னையில் பகல் 11 மணிக்கு கடல் காற்று வீசினால் அது நகர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை பகல் நேரத்தில் ஓரளவுக்கு குறைக்கலாம். ஆனால் புறநகர் பகுதிகளை இந்த காற்று சென்றடைய மாலையில் ஆகி விடும். இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் அதிகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

    அடுத்த வாரத்தில் மே 26-ந்தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலம் என்பதால் மேற்கு திசை கடல் காற்று குறையும். அப்போது தரைக்காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வெயில் ஜூன் மாதம் 4-ந்தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று தனியார் வானிலை நிபுணர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளது.
    • கோடை வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 19.5.2023 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டில் இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக வேலூர் பகுதியில் 41.8 டிகிரி சென்டிகிரேடும், கரூர்-பரமத்தி பகுதியில் 41.5 டிகிரி சென்டிகிரேடும் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் நிலவக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் இது தொடர்பாக 15.5.2023 அன்று செய்தி வெளியீடு மூலமாக பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

    திறந்த இடங்களில் பணிபுரியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் தங்களது பணியை காலை முன்கூட்டியே தொடங்கி, வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன்னர் முடித்திடும் வகையில் உரிய ஏற்பாடுகளை தொடர்புடைய இப்பணியாளர்களுக்கு போதுமான குடிநீர், முதலுதவி வசதி செய்வதுடன், ஓ.ஆர்.எஸ். செய்ய இருப்பு, நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போதுமான குடிநீர் வசதி, இளைப்பாறுவதற்கான நிழற்கூடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளுக்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களும் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    தொழிற்சாலைகளில் அமர்ந்து வேலை செய்யும் வசதி மற்றும் கூடுதல் வெப்பம் உற்பத்தி ஆகும் தொழிற்கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான ஓய்வு வழங்கவும், அவசர உதவிக்காக அருகில் உள்ள அரசு மற்றும் கால தனியார் மருத்துவமனைகளுடன் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய சேவைக்கான முன்னேற்பாடுகளை உறுதி செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளில், போதுமான அளவு ஓ.ஆர்.எஸ். இருப்பு வைப்பதுடன், வெப்ப அலையின் தாக்கத்திற்கு உள்ளாகும் நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான மருந்து இருப்பு வைக்கவும், கால்நடைகளுக்கு தேவையான குடிநீர், நிழற்கூடங்கள், தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்யவும், அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க போதுமான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகங்கள், முகாம்கள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள், தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும் விழிப்புணர்வில் அரசு தெரிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
    • நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

    தாராபுரம் :

    வாட்டி வதைக்கும் வெயிலால் தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:- வெய்யில் காலத்தில், சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தண்ணீர் குறைந்தளவு குடிப்பதால், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதே இதற்கு காரணம்.அனைத்து காலங்களிலும், சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். மிகவும் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீரிழப்பு ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரிக் ஆசிட் அதிகளவு உள்ள பழங்களை உட்கொள்ளலாம். ஜூஸ் ஆக குடிக்காமல், நேரடியாக பழங்களாக உட்கொள்வது நல்லது.

    தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் போது, அதிக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டி இருக்கும். எனவே அதைத் தவிர்க்கலாம்.

    மாமிச உணவுகளை வாரம் ஒரு முறை உட்கொள்ளலாம். கோழி இறைச்சி, மீன் உட்கொ ள்ளலாம். அனைத்து விதமான பேக்கரி உணவு, உப்பு அதிகம் இருக்கும் சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் தவிர்க்க வேண்டும்.

    சிறுநீரக கற்கள் ஏற்படுத்தும் ஒரு சில கீரைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர் ஆகியவற்றை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். உலர் பழங்களை குறைவாக எடுக்க வேண்டும்.பிளாக் டீ, காபி, கிரீன் டீ, ஆகியவற்றை தவிர்க்கலாம். சுடு தண்ணீர், குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்வதற்குபதில், சாதாரணதண்ணீர் குடிப்பது சிறந்தது.கார்பன், செயற்கை நிறமிகள் நிறைந்த குளிர்பா னங்களை, முற்றி லும் தவிர்க்க வே ண்டும். முக்கி யமாக மது அருந்துவது கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.உணவியல் நிபுணர்(டயட்டி சியன்) கவிதா கூறியதாவது:

    வெய்யில் காலத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம்எடுத்துக் கொள்ளலாம். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள், கம்மங்கூழ், கேப்பைக்கூழ் உட்கொள்ளலாம். இனிப்பு வகைகள், அதிக காரம் உள்ள உணவு, எண்ணெயில் பொறித்த உணவு, துரித உணவு, உப்பு அதிகம் உள்ள உணவு, காபி, டீ, செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். கம்மங்கூழ், கேப்பைக்கூழ் ஆகியவற்றை, 200 மி.லி., அளவு எடுக்க வேண்டும். நீர் மோர் குடிக்க லாம். இவையனைத்துக்கும் மேல், தண்ணீர் குடிப்பதே சிறந்தது.செயற்கை குளிர்பானங்களில், சர்க்கரை அதிகம் இருப்ப தால், அவற்றால் எந்த பயனும் இல்லை. சர்க்கரை நோயாளிகள், நீர்ச்சத்து காய்கறி எடுத்துக் கொள்ள லாம்.இவ்வாறு அவர் கூறினார். 

    ×