search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southewest Monsoon"

    • 15 விமானங்கள் தாமதமானதல் பயணிகள் அவதி அடைந்தனர்.
    • வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நள்ளிரவில் மழை பெய்தது.

    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நேற்று முதல் வருகிற 23-ந்தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. ராயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், பெசன்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    இதே போல் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நள்ளிரவில் மழை பெய்தது.

    பகல் முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், நள்ளிரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதனிடையே சென்னையில் நள்ளிரவில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 15 விமானங்கள் தாமதமானதல் பயணிகள் அவதி அடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமீப கால ஆண்டுகளில் மாநிலத்தில் பெய்ததை போன்று மிக வலுவான மழையாக இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொச்சி, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் அங்கு கோடை வெப்பம் தணிந்து குளர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. மாநிலத்தில் கோடைமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில், வருகிற 31-ந் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் நாளை(29-ந்தேதி) மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்களும், இடுக்கியில் 31-ந்தேதியும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் வருகிற 31-ந்தேதி முதல் கேரள மாநிலத்தில் அதிகனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப கால ஆண்டுகளில் மாநிலத்தில் பெய்ததை போன்று மிக வலுவான மழையாக இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    ×