என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேக்கடி"

    • பருவமழையை கையாள தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தொடர் மழை காரணமாக கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தவாறு வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. 16 வருடங்களுக்கு பின் முன்கூட்டியே 8 நாட்களுக்கு முன்பு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

    5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 3 நாட்கள் தேக்கடி படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மண் சரிவு ஏற்படும் இடங்கள், மரங்கள் முறிந்து விழும் பகுதி ஆகியவற்றை கண்காணித்து அங்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் பருவமழையை கையாள தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 585 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 114.90 அடியாக உள்ளது.

    1710 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. வைகை அணை நீர் மட்டம் 52.85 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் 72 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. அணையில் 2389 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.40 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 94.46 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 43.10 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    அரண்மனைப்புதூர் 2, வீரபாண்டி 13.8, பெரியகுளம் 4.6, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 2, வைகை அணை 1.4, போடி 3.2, உத்தமபாளையம் 4.6, கூடலூர் 2, பெரியாறு அணை 27.6, தேக்கடி 21.4, சண்முகாநதி 1.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவு கட்டணம் ரூ.70ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.

    கூடலூர்:

    சர்வதேச சுற்றுலா தலமான கேரள மாநிலம் தேக்கடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். தேக்கடியில் யானை சவாரி, டைகர் வியூ, மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் படகு சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள் , மான்கள், காட்டு யானைகள், காட்டு எருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணவே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

    அதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களில் படகு சவாரியே முதலிடம் வகிக்கிறது. இங்கு படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவு கட்டணம் ரூ.70ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் கரை பகுதிக்கு வருகின்றன. இதனை படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று தேக்கடி ஏரி மனக்கவலை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக்கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது. அப்போது சுற்றுலா பயணிகள் படகை நிறுத்தி நீண்டநேரம் இக்காட்சியை கண்டு ரசித்தனர்.

    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தபோதும் தேக்கடி ஏரியில் 6-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • சீதோஷ்ணநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    கூடலூர்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்குள்ள வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வனவிலங்குகளை பார்ப்பதற்கு வருகின்றனர். மேலும் ஏரியில் படகுசவாரி செய்தபடி இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தேக்கடிக்கு வருகின்றனர்.

    பனிப்பொழிவை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் குடும்பத்துடன் மலைத்தலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்தபோதும் தேக்கடி ஏரியில் 6-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகுசவாரி செய்து வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கல்வி சுற்றுலாவுக்காக இங்கு அழைத்துவரப்படுகின்றனர். இதமான சீதோஷ்ணநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    கோடைகாலம் தொடங்கிய நிலையில் மழை பெய்தால் தேக்கடி ஏரியில் நீர்வரத்து அதிகரிக்கும். மேலும் வனப்பகுதியில் இருந்து அதிகளவு வனவிலங்குகள் ஏரி பகுதிக்கு வரும் என சுற்றுலா வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.

    ×