என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
கோடை வெப்பத்தை குறைக்க எப்படி குளிக்கலாம்...
- காலை குளியல், மாலை குளியல் இரண்டிலும் சாதாரண குழாய் நீரில் குளித்தாலே போதும்.
- எல்லோருக்கும் எளிதான ஒன்றாக 'ஷவர்' முறை குளியல் சிறந்தது.
'ஜில்' என்று சொன்னவுடன் ஐஸ் போன்ற குளிர்ந்த நீர் என்று பொருள் கொள்ள வேண்டாம். காலை குளியல், மாலை குளியல் இரண்டிலும் சாதாரண குழாய் நீரில் குளித்தாலே போதும். பொதுவில் நகரத்தில் இருப்பவர்கள் ஆறு, நதி, அருவி என்று செல்ல முடியாது. எல்லோருக்கும் எளிதான ஒன்றாக 'ஷவர்' முறை குளியல் சிறந்தது.
இப்படி குளிக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தலைக்கும் நீர் ஊற்றி குளிக்கலாம். சைனஸ் தொந்தரவு மற்றும் ஒத்துக் கொள்ளாது என்று கூறுபவர்கள் 'ஷவர் கேப்' போட்டு குளிக்கலாம். உடலில் 10 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை நிதான முறையில் நீர் ஊற்றப்படும் போது
* மன உறுதி ஏற்படும்.
* ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் நீங்கும்
* குளூட்டதியோன் அளவு கூடும். எளிதல் ஸ்ட்ரெஸ் ஆக மாட்டீர்கள்.
* விழிப்புணர்வு கூடும்.
* சருமம், முடி ஆரோக்கியம் கூடும்.
* கொழுப்பு குறைந்து எடை குறையும்.
* ரத்த ஓட்டம் சீர்படும்.
* நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
* நிணநீர் மண்டலம் சுத்தப்படும்.
* தசைகளில் வலி சீக்கிரம் சீர்படும்.
* தூக்கம், விழிப்பு, சீராய் இருக்கும்.
* நன்கு இயல்பாய் ஆழ்ந்து மூச்சு எடுப்பீர்கள்.
உடல் நலக்குறைவானவர்கள், மருத்துவ கவனிப்பில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், இளம் தாய்மார்கள் இவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று செய்யலாம். மிக அதிக வெப்பம் இருக்கும் இந்த கோடையில் இம்மாதிரி குளியல் முறை, தகுந்த உணவு முறை இவற்றின் மூலம் ஒருவர் தன்னை காத்துக் கொள்ள முடியும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்